வெள்ளி, 12 ஜூலை, 2013

ஹிந்து தேசியவாதி மோடி - இப்பவாவது நம்புங்க



நான் ஒரு ஹிந்து தேசியவாதி... அப்படி என்னைப் பற்றிக் கூறுவதிலும் எந்தத் தவறும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக் சொல்லியுள்ளார் மீடியா புகழ் மோடி..


மோடி மதச்சார்பற்றவர் என அவரது தொண்டர் அடிப்பொடிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ‘டேய் , அப்படியெல்லாம் கிடையாது. மோடி ஹிந்து மதத்தை தூக்கி பிடிப்பவர்’ என்று பலமுறை விவாதம் செய்திருக்கிறேன். ஒருபயலும் ஒத்துக்கொள்ள வில்லை.

இப்போது மோடியே சொல்லிவிட்டார். இப்போது என்ன செய்யப் போகிறார்கள் அவரது அடிப்பொடிகள்? வேறு என்ன!! இன்னொரு கதை எழுதி அடுத்த சினிமாவை அரங்கேற்றுவார்கள்.

மோடி இவ்வாறு சொன்னது சரியா? தவறா? என்ற கேள்விக்கே இடம் கிடையாது. ஒருவன் தன்னை ஹிந்து என்று சொல்லிக் கொள்வதற்கும், ஹிந்து தேசியவாதி என்று சொல்லிக் கொள்வதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. ஒரு தேசத்தையே மதத்தின் பெயரால் அடையாளப்படுத்துகிறது ‘ஹிந்து தேசியவாதி’ என்னும் வார்த்தை.

இதை மோடி சொல்லியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதுதானே அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் கொள்கை.
விஷுவ இந்து பரிஷத், சிவ சேனா, சூ சாமி, இந்து முன்னணி என பல அமைப்புகளும் இதே கொள்கை உடையவை. அனைவரும் ஒரே கூட்டணியில் நிற்கிறார்கள்.

தான் சொல்வது தவறு என்று மோடிக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் மதவெறியூட்டி விட வேண்டுமல்லவா!! மதவாதத்தை விதைத்து ஓட்டு அறுவடை செய்ய வேண்டுமல்லவா!!

தான் இஸ்லாமிய தேசியவாதி என்றோ, கிருஸ்தவ தேசியவாதி என்றோ யாராச்சும் சொல்லியிருந்தால் [எந்த காலத்திலும் அப்படி யாரும் சொல்லக் கூடாது] இந்த நேரத்திற்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியிருக்கும். சொன்னது மோடியாச்சே!! அவர் சொன்ன கருத்தை தான் வெளியிடுகின்றன தவிர அவரைக் கண்டித்து ஒரு செய்தியையும் காணோம்.

பிஜேபி ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. மோடி  பிரதமர் ஆகப் போவதும் இல்லை. ஒருவேளை வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க அச்சமாக இருக்கிறது.
பரிவார் அமைப்புகளும், சேனா அமைப்புகளும் தமிழகத்தில் ஒருபோதும் தலையெடுக்க கூடாது.
காங்கிரசை எதிர்க்கிறோம் என்னும் பெயரில் பலரும் பிஜேபியின்  பிற்போக்கு கொள்கைகளுக்கு ஆதரவு அளித்துக்கொண்டிருப்பது வருத்தம்!!

சாதி வெறி, மத வெறி வேண்டாம்!
எவர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டாம்!
மனிதநேயம் வளர்த்து மனிதர்களாய் இருப்போம்!

10 கருத்துகள்:

  1. அப்போ எதுக்கு உங்க தலைவரு வைகோ பாஜக வுடன் கூட்டணி வைத்தார். ? அவருக்கு கூட்டணி வைக்கும் போது பாஜக மதவாத கட்சி என்பது தெரியாதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைகோ என் தலைவரா?? நான் உங்ககிட்டே சொன்னேனா??

      நீக்கு
  2. "பரிவார் அமைப்புகளும், சேனா அமைப்புகளும் தமிழகத்தில் ஒருபோதும் தலையெடுக்க கூடாது."

    ஆனால் கொலைகார முஸ்லிம் அமைப்புகள் தலைஎடுக்கலாமா ?

    பாபு சிவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த மதவாத அமைப்புகளும் தலையெடுக்க கூடாது என்றுதான் சொல்லுறேன்

      நீக்கு
  3. இன்று வரை கொலைகார இஸ்லாமிய அமைப்புகளால் இந்து முன்னணி அமைப்பு தலைவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள் ? இந்த கொலைகளை நீங்கள் எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த மாதிரி பேசுறீங்க?

      நீக்கு
  4. "தான் இஸ்லாமிய தேசியவாதி என்றோ, கிருஸ்தவ தேசியவாதி என்றோ யாராச்சும் சொல்லியிருந்தால்"

    ஆனால் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்க மாட்டோம் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள் ஆனால் அவர்களை தேசிய வாதிகள் என்று சொல்வீர்கள்..
    இந்து என்று சொல்லிகொள்பவன் தன்னை தேசியவாதி என்று சொன்னால் அவனை திட்டி தீர்ப்பீர்கள்.

    போங்கடா நீங்களும் உங்களின் போலி நடுநிலைமையும்.

    காந்தி கூட தன்னை இந்துவாகத்தான் அறிவித்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களாக என்னைப் பற்றி ஏதாச்சும் கருதிக்கொண்டு பதில் அளிக்கிறீர்கள்..

      கிருஸ்துவ தேசியவாதியை ஆதரிக்கிறேன், இஸ்லாமிய தேசியவாதியை ஆதரிக்கிறேன் என்று நான் உங்ககிட்ட சொன்னேனா??

      நான் மோடி எதிர்ப்பாளர் என்று சொல்லிட்டேன். அப்புறம் என்ன நடுநிலை??

      காந்தி எப்படி அறிவித்தால் எனக்கென்ன?

      நீக்கு
  5. @ நாதுராம் கோட்சே என்ற மகாராஷ்டிரா சித்பவன் பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றான். எதற்கு சுன்னத்? ஏன் பச்சை? பதில் மிகவும் எளிது.

    இந்திய மக்களால் அதிகம். நேசிக்கப்பட்ட காந்தியை ஒரு இசுலாமியன் கொன்றான் என்ற வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் கலவரத்தை விதைத்து இசுலாமிய இனப் படுகொலையை அறுவடை செய்யலாம் என்பதுதான். அடுத்த மதத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக பாயும் இவர்களும் பார்பன பயங்கரவாதிகள் என்பது மிகையில்லை.

    பதிலளிநீக்கு