வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தூத்துக்குடி தேர்தல் கள நிலவரம்

ஆறுமுனைப் போட்டியால் தூத்துக்குடி தேர்தல் களம் அனல் பறக்கிறது.

மின்சாரத் தட்டுப்பாடு, ஸ்டெர்லைட், அணு உலை ஆகியவைதான் தூத்துக்குடி தொகுதியில்  முன்னணி பிரச்சினைகள்.

                                                      படத்தில்: ஜெயசிங்(அதிமுக),  ஜோயல் (மதிமுக), ஜெகன் (திமுக)

அதிமுக:

மின்சார தட்டுப்பாடு பிரச்சினையால்  ஆளும் கட்சியான அதிமுகவின் நிலைமை பரிதாபம்.

தொகுதிக்கு அறிமுகமில்லாதவரை வேட்பாளரை நிறுத்தியது அதிமுகவுக்கு பின்னடைவு.

கூடங்குளம் பகுதி மக்களை அதிமுக அரசு ஒடுக்கியதை மீனவ மக்கள் மறக்க மாட்டார்கள். அதனால் மீனவர்களின் ஓட்டுகள் இம்முறை அதிமுகவுக்கு கிடைப்பது கடினம்.

அதுபோக அதிமுக அமைச்சர் சண்முகநாதனுக்கு எதிராக கட்சியில் பலர் செயல்படுகிறார்கள்.

குளத்தை ஆக்கிரமித்த அமைச்சர் சண்முகநாதன், அடாவடி மேயர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கிய  சின்னதுரையை மீண்டும் அதிமுகவில் சேர்த்தது, தூத்துக்குடி மாநகராட்சிப் பணிகள் முடங்கி கிடப்பது ஆகியவை அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

ஜெயாவின் வான்வழி பிரச்சாரம் அதிமுகவுக்கு கூடுதல் பின்னடைவு.

திமுக:

தனது இரண்டாவது அரசியல் வாரிசு ஜெகனை வெற்றி பெற செய்ய திமுக முன்னாள் அமைச்சர், கலைஞரின் முரட்டு பக்தன் பெரியசாமி தீயா வேலை செய்யுறார். அதிமுகவினரை விலைகொடுத்து வாங்குகிறாராம். அதனால் அதிமுக பிரச்சாரம் மந்தமாக உள்ளது. வேட்பாளர் ஜெகன் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்கிறார்.

காயல்பட்டிணம் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு பெரும்பலமாக இருக்கும்.

அந்நியமுதலீடு விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு வியாபாரிகளுக்கு எதிராக உள்ளதால் வியாபாரிகளின் வாக்குகளை திமுக பெறுவது கடினம்.

பெரியசாமி குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜெகனுக்கு வாக்களிக்க மக்கள் தயங்குவார்கள்.

அனிதா ராதாகிருஷ்ணன் கோஷ்டி, கனிமொழி கோஷ்டி, ராதிகாசெல்வி கோஷ்டி, தற்போதைய எம்பி ஜெயத்துரை கோஷ்டி என பல கோஷ்டிகள் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பின்னடைவு.


மதிமுக:
தூத்துக்குடி தொகுதி   பாஜகவுக்கு கிடைக்கும் என பாஜகவினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே இத்தொகுதியில் மதிமுகவினர் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீனவர் பிரச்சினை, அணு உலை எதிர்ப்பு, சுங்கசாவடி எதிர்ப்பு என மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கென்று தொகுதியில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மதிமுக மேயர் வேட்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு 30000 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக - 61000, பாஜக - 27000 வாக்குகளை வாங்கியிருந்தார்கள். இம்முறையும் இந்த வாக்குகள் நீடித்தால் ஜோயலின் வெற்றி உறுதி செய்யப்படும்.

காங்கிரஸ்:

வேட்பாளர் ஏபிசிவீ சண்முகம் அவர்களுக்கு தொகுதியில் நல்லபெயர் உள்ளது.

இவர்  தோல்வி அடைவது உறுதி. ஆனால் டெபாசிட் பெறும் அளவுக்கு கணிசமான வாக்குகளைப் பெறுவார்.


ஆம் ஆத்மி:

அண்ணன் புஷ்பராயன் அணு உலை எதிர்ப்பாளர்களின் வாக்குகளைப் பெறுவார்.

புன்னக்காயல், திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு, குலசை பகுதிகளில் அதிக வாக்குகள் பெறுவார். பிற பகுதிகளில் வாக்குகள் கிடைப்பது அரிது.


கம்யூனிஸ்ட்: கோவில்பட்டி பகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவார்.

இந்த ஆறுமுனைப் போட்டியால் வாக்குகள் நன்றாகப் பிரியும்.
வெற்றி பெறுபவர்  20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது என் கணிப்பு.

ஜெகனா? ஜோயலா? என்பதுதான் தற்போதைய நிலவரம்...

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மதவாத தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை என்னும் பெயரில் இந்த சமூகத்தில் மதவாதக் குப்பையை அள்ளி போட்டிருக்கிறது பாஜக.

அறிக்கையிலுள்ள சில விசயங்களை பார்ப்போம்.

ராமர் கோவில் கட்டப் போகிறார்களாம்.

//இருக்கிற கோவில்களை பராமரிப்பு செய்யாமல், ராமனுக்கு கோவில் கட்ட துடிப்பதன் நோக்கம் என்ன?
மனைவியை நெருப்பில் இறங்க சொல்லி கற்பை நிரூபிக்க சொன்ன ராமனுக்கு என்ன ***க்கு கோவில்??
(ராமாயணம் என்பதே கட்டுக்கதை.. அது வேற விடயம்)
அனைத்து இந்துக்களும் சமம் என்றால் பிராமணர் அல்லாதவர்கள் கோவில் அர்ச்சகர் ஆக முடியவில்லையே ஏன்?
சூத்திரனுக்கு கோவிலில் உரிமை கூட தர மாட்டாய்.. ஆனால் சூத்திரன் ஓட்டுக்கள் மட்டும் தேவைப்படுதோ!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை (370) நீக்கப் போகிறார்களாம்.
//காஷ்மீரில் காணாமல் போன பல இளைஞர்கள் நிலை , அதிகமான ராணுவ ஆக்கிரமிப்பு, ராணுவம் செய்யும் அட்டூழியங்கள் இவை எதுகுறித்தும் பேசாமல்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்கணுமாம்.. என்ன ஒரு அயோக்கியத்தனம்!!!

பசுக்களைக் கொல்வதை தடை செய்யப் போகிறார்களாம்.
//அப்படியே ஆடு வெட்ட தடை, கோழி குழம்பு தடை, மீன் பிடிக்க தடை என்ன அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே!!
லூசுப்பயலுக!!
பசியாலும், மழையாலும், வெயிலாலும் மனுசன் சாவுறான்.
அதை தடுக்க முடியாத அயோக்கிய அரசியல் கூட்டம் மாடு குறித்து பேசுது.
த்தூ!!!

பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்போகிறார்களாம்!!
இது குறித்து போதுமான  விவரம் எனக்கு தெரியல.
ஆனால் பல தேசிய இனங்கள்  வாழும் இந்திய ஒன்றியத்தில் பொது சிவில் சட்டம் என்பது ஏற்புடையதல்ல.
மாநில சுயாட்சியை ஏற்கனவே பறித்துவிட்டார்கள்..
இன்னும் என்னென்ன மாநில உரிமைகளை பறிக்கப் போகிறார்களோ!!



இந்த நான்கு விசயங்களும் பாஜகவினால் எழுதப்பட்டவை அல்ல.
மோடியை பிரதம வேட்பாளராக அறிவிக்க ஆர்எஸ்எஸ் என்னும் பிற்போக்கு கும்பல் விதித்த கட்டளைகள்.
இங்கே பார்க்க: http://indiatoday.intoday.in/story/narendra-modi-rss-rss-conditions-for-modi-bjp-pm-candidate-ayodhya/1/309155.html

இந்த கட்டளைகளைத்தான் தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாஜக.
மதத்தை தாண்டி பாஜக கும்பலால் சிந்திக்க முடியாது என்பதை அவர்களின் தேர்தல் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக என்னும் உண்மையை இனிமேலாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் இந்த பிற்போக்கு அரசியல் பிற மதத்தினருக்கு ஆபத்து என்பது சொல்வது சரியல்ல.
உழைக்கும் வர்க்க மக்கள் அனைவருக்கும் எதிரானது.


கோவில் கருவறை போராட்டம் நடத்தினால் முதல் ஆளாக வந்து எதிர்ப்பது பாஜக , இந்து முன்னணி போன்ற கும்பல்கள்தான்.
இவர்கள் பார்ப்பனருக்கு சேவை செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள்..
பார்ப்பனர் அல்லாதோருக்கு கோவிலில் உரிமை மறுப்பவர்கள்.
தமிழையும், தமிழனையும் கோவிலுக்குள் அனுமதிக்காத ஆதிக்க கூட்டத்திற்கு அடியாள் வேலை செய்பவர்கள்.
சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை ஆதரிப்பவர்கள்.
ஆனால் இந்து ராஷ்டிரா, ராம ராஜ்ஜியம் என்று பேசி உழைக்கும் வர்க்க மக்களுக்குள் மனதில்  மதவாதத்தை விதைப்பவர்கள்.

இந்துத்வ கும்பலைப் புறக்கணிப்போம்.

இந்து என்னும் அடையாளம் என் மீது திணிக்கப்பட்டிருப்பதால்  இந்துத்வ பிற்போக்கு அரசியலை எதிர்க்க வேண்டியது என் கடமையாகிறது.

கடமை தொடரும்....