சனி, 27 பிப்ரவரி, 2016

"நமக்கு எதுக்கு வம்பு" - நூல் விமர்சனம்


கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் தனது கார்டூன்களைப் பற்றியும், அவற்றின் மீது வந்த விமர்சனங்களையும் தனது நூலில் விவரித்து எழுதியுள்ளார் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் பேஸ்புக்கில் பாலா அவர்கள் எழுதிய கட்டுரை( அவரது மொழியில் கிறுக்கல்)களின் தொகுப்புதான் இந்நூல்.
சிறந்த கிறுக்கல்களைத் தொகுத்து ஒரே இடத்தில் வைத்து படிப்பதும் தனி இன்பம்தான்.



பெரும்பாலான கட்டுரைகள் அவரது அனுபவங்கள் மற்றும் எளிய மக்களின் வாழ்வியல் தொடர்பானவை. அரசியல் கட்டுரைகள் பலவும் சாதி எதிர்ப்பு மற்றும் ஹிந்துத்வ அரசியல் எதிர்ப்பு தொடர்பானவை. திராவிட ஓட்டரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்துகிறார். காவல்துறை அதிகாரி அம்பேத்கர் பற்றி ஒரு சிறப்பான கட்டுரை உள்ளது.

பாலாவின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இந்நூலில் புதிதாய் எதுவும் இல்லை. அதே நேரத்தில் மீண்டும் ஒரு மறுவாசிப்பு செய்ய உதவும். மிகவும் சிறிய நூல்தான்.
சோழிங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து பயணத்திற்குள் படித்து முடித்து விடலாம்..

பாலாவின் கட்டுரைகளைப் புதிதாய் படிப்பவர்களுக்கு இந்நூல் அதிகம் உதவும். பாலாவுக்கு புதிய ரசிகர்கள் இந்நூல் மூலம் கிடைப்பார்கள் என உறுதியாகச் சொல்ல முடியும்.

பாலாவினால் பேஸ்புக்கில் தடை செய்யப்பட்ட நண்பர்கள் அதிகம். அவர்களுக்கும் இந்நூல் பெரும்பாலும் உதவும்.   அவரின் ஏதோ ஒரு பதிவுக்காக அல்லது கார்டூனுக்காக அவரிடம் மல்லு கட்டியிருப்பீர்கள். அவரைத் தனது சாதி, மத, கட்சியின் எதிரியாக சித்தரித்து இருப்பீர்கள். இந்நூலில் அவரது சிறந்த பதிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில இருப்பதால் பாலாவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று படித்து அறிந்துகொள்ள முடியும்.

கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் 'நடுநிலைவாதி' என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அவர் ஒருபக்க சார்பு உடையவர். ஆம், எளிய மக்களின் பக்கமும், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமும் நின்று பேசுபவர். அவரின் கார்டூன்களும், எழுத்துக்களும் எளிய மக்களுக்கானவை.

பின் குறிப்பு: கார்டூன்களை சிறிய அளவில் அச்சடித்துள்ளது நன்றாக இல்லை. அரை பக்க அளவிற்கு பெரிதாக அச்சடித்திருக்கலாம். மேலும் அதிக கார்டூன்களைப் பயன்படுத்தியிருக்கலாம். அதுதான் புத்தகத்தின் ஒரே குறை.
சர்ச்சை கார்டூன்கள் பற்றியும் அதனைக் கடந்து வந்த விதம் பற்றியும் எழுதினால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அடுத்த நூலில் எதிர்பார்க்கிறோம்.

பிராமணரா? பார்ப்பனரா? ஆரியரா?


'பார்ப்பனர் என்பது தங்களின் சாதியைக் குறிக்கும் பெயர். பிராமணர்களைத் திட்ட ஏன் அந்தப் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள்?' என அடிக்கடி ஒரு கேள்வியை முன்வைக்கிறார் நண்பர் கௌதம்.

பார்ப்பனர் என்பதன் பெயர்க்காரணம் என்ன? ஏன் அப்பெயர் வந்தது? யார் முதலில் பயன்படுத்தியது? என சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒருமுறை சுபவீ அவர்கள் தன் பேட்டியில் 'பார்ப்பனர் என்பது இழிவான பெயர் அல்ல.. ஜாதகம் பார்க்கிறான், ஜோதிடம் பார்க்கிறான். அதனால் பார்ப்பான் என பெயர் வந்தது' என்றார். நானும் அதனை நம்பிவிட்டேன்.
ஆனால் ஜாதகம் மற்றும் ஜோதிடம் பார்ப்பதை பிராமணர் அல்லாதவர்களும் செய்கிறார்களே! அவர்களையும் 'பார்ப்பான்' என்று அழைக்கவேண்டுமா?

'பிராமணர் என்றால் உயர்ந்தவன் என்று பொருள். அதனால் சுயமரியாதை கருதி அப்பெயரை உச்சரிக்கக் கூடாது' என்பதுதான் என் நிலைப்பாடு.

பிராமணர் என்னும் பெயரால் அவாள் ஆதிக்கம் செலுத்தும்போது 'பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்போம்' என்றுதானே நாம் எதிர்க்குரல் எழுப்ப வேண்டும்? அல்லது 'ஆரிய ஆதிக்கம்' என்று கூட சொல்லலாமே? ஆரியருக்கு எதிர்ச்சொல் திராவிடர் என்று சொல்பவர்கள் ஆரியர்(அ)பிராமணர் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தாமல் 'பார்ப்பனர்' என்னும் வாரத்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்?

"அவன் நம்மைத் திட்டல, வேறு யாரோ பார்ப்பானாம். அவனைத்தான் திட்டுகிறான்" என்பதுதானே பிராமணர்களின் மனநிலையாக இருக்கக் கூடும்.
இதனால் பிராமணர் என்னும் பெயர் புனிதப்படுத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்.

ஒரே குழப்பமாக இருக்கு.
இதுகுறித்து நன்கு விவரம் அறிந்த திராவிட இயக்க நண்பர்கள் பதில் அறிந்தால் சொல்லவும்.

சனி, 13 பிப்ரவரி, 2016

இனப்படுகொலை கூட்டணிக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நண்பர்களுக்காக

நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்க குஜராத் முஸ்லிம் படுகொலையையும், பாபர் மசூதி இடிப்பையும் அதிகம் பேசினோம்.
இந்த சம்பவங்கள் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு மக்களிடம் ஓரளவு பலனும் கிடைத்தது.

இந்த தேர்தலிலும், தேர்தலுக்கும் பின்னரும் "பாஜக எதிர்ப்பு" என்று வருகையில் அந்த சம்பங்களை பேசித்தான் ஆக வேண்டும்.

"குஜராத்தையும் பாபர் மசூதியையும் இங்கே தமிழ்நாட்டில் ஏன் பேசுறீங்க?" என ஹிந்துத்வ சிந்தனை உள்ளவர்களும், அரசியல் பார்வை இல்லாதவர்களும் கேட்பதுண்டு..

இப்போது அதே வரிசையில் திமுக-காங்கிரஸ் இனப்படுகொலை கூட்டணிக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்.
"ஈழப் படுகொலையை இங்கே ஏன் பேசுறீங்க?" என கேள்வி கேட்கிறார்கள்..


இங்கே இருந்துதான் ஆயுதம் கொடுத்தார்கள். இங்கே அதிகாரத்தில் இருந்தவர்கள்தான் தமிழகத்தில் அடக்குமுறை ஏவினார்கள்.
இங்கே பேசாமல் வேற எங்கே போயி பேசுறது??

"தனது மகளே திருடினாலும் கையை வெட்டுவேன்" என குர்ஆனில் யாரோ சொன்னதாக அடிக்கடி பதிவுகள் போட்டால் மட்டும் போதாது மக்கா..
அதன்படி நடக்கவும் பழகனும்..

வெறும் ஓட்டு அரசியலுக்காக, இனப்படுகொலை செய்த அயோக்கியர்களுக்கு துணை போவோம் என்றுநீங்கள் சொல்வது சரியென்றால் ஹிந்துத்வ அரசியல் சிந்தனை கொண்டவர்களின் செயல்பாடுகளும் சரியென்று ஆகிவிடுமே!!

திங்கள், 1 பிப்ரவரி, 2016

சுபவீ-க்கு சில கேள்விகள்

அருந்ததியர்களில் இதுவரை சட்டமன்ற வேட்பாளர்களாக எத்தனை பேரை நிறுத்தியுள்ளீர்கள்? - என்று தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நோக்கி சுபவீ  கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரிய கட்சியான திமுகவை நோக்கி கேட்க வேண்டிய கேள்வியை பத்து சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சிறிய கட்சியான விசிக நோக்கி எழுப்பியிருக்கிறார் சுபவீ.

இப்ப நாமும் சுபவீயிடம் சில கேள்விகள்  கேட்போம்.

1. திமுக கூட்டணியில் இருந்த எத்தனை பொது தொகுதிகளை விசிகவுக்கு திமுக கொடுத்தது?

2. அருந்ததியர் தமிழகத்தில் எங்கு ஒடுக்கப்பட்டாலும் அதனை எதிர்த்து சிறுத்தைகள் களத்தில் நிற்கிறார்கள்.. திமுக என்ன செய்து கொண்டிருந்தது??

3. எத்தனை அருந்ததியர்கள் திமுகவில் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள் ?

4. எத்தனை அருந்ததியர்களுக்கு இதுவரை திமுகவில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது??

இந்த கேள்விகளுக்கு சுபவீ அவர்கள் பதில் வேண்டும்...

விசிக கட்சி - அருந்ததியர் இடையே பகை மூட்டும் விதத்தில் சுபவீ செயல்படுகிறார். பிரித்தாளும் போக்கை ஆரியர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார் போல சுபவீ..