வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சாதி எதிர்ப்பு என்பதை ஒரு கட்சி எதிர்ப்பாக மட்டும் மாற்றி பேசும் மலிவான அரசியல் வேண்டாம்

சாதி, மத விவாகரங்களில் கட்டுரை எழுதுகையில் அதிகக் கவனம் தேவை.
கீற்றில் வெளியான இந்தக் கட்டுரையின் ஒரு கருத்து சற்று உறுத்தலாக இருந்தது.
http://keetru.com/…/2014-03-08-12…/29007-2015-08-19-14-17-34


அன்புமணி கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.கவினர் தலித்துகளுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டு, தலித் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வந்ததாக கட்டுரை ஆசிரியர் கூறியிருக்கிறார்.
ஆனால் தாக்குதலை முன்னின்று நடத்தியதாக திராவிடக் கட்சியினர் பெயர்களை அடுக்கியுள்ளார். எது உண்மை???
இவர் குறிப்பட்ட திராவிடக் கட்சிக்காரார்கள் எல்லாம் பாமகவில் ஐக்கியமாகிவிட்டார்களா?
இல்லையேல் வன்னியர் என்றாலே பாமகவை சார்ந்தவர்தான் என்று முன்முடிவுக்கு வந்துவிட்டாரா??

சாதி அரசியல் செய்யும் ராமதாஸ் வன்னிய மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்..
ஆனால் இம்மாதிரியான பதிவுகள் வன்னியர்களை ராமதாஸ் பாக்கம் கொண்டுபோய் நிறுத்தும். ராமதாசின் வியூகமும்/விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும்.

சாதி எதிர்ப்பு என்பதை ஒரு கட்சி எதிர்ப்பாக மட்டும் மாற்றி பேசும் மலிவான அரசியல் வேண்டாம்.
சாதிவெறி என்பது இங்கே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது