செவ்வாய், 4 நவம்பர், 2014

இப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் தடை கேட்பார்கள்..

நவம்பர் 2, 2014 அன்று கேரளாவில் பெருமளவில் இளைஞர்கள் ஒன்றுகூடி Kiss Of LOve என்னும் பெயரில் முத்தப் போராட்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியா முழுக்க பரவலாக பேசப்பட்டு உள்ளது.



அது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.

பேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/kissoflovekochi
 
அதற்கு எதிராக கலாச்சாரக் காவலர்கள் போராட்டம் செய்துள்ளார்கள்.
யார் இந்தக் கலாச்சாரக் காவலர்கள்?
வேறு யாருமில்லை.. மதத்தைக் கட்டி அழும் மத அடிப்படைவாதிகள்தான்.

கலாச்சாரம், கலாச்சாரம் என்று சொல்லுறாங்களே!
அது என்ன?
அது யாருக்கெல்லாம் உரியது?
எந்த விசயத்தில் எல்லாம் உள்ளது?
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக உள்ளதா?
இன்னும் பல கேள்விகள் உள்ளன. கலாச்சாரக் காவலர்கள் பதில் சொல்வதாகத் தெரியவில்லை.

இந்த மண்ணின் கலாச்சாரம் முக்கியம் என்கிறார்கள்.
பாரம்பரியத்தைக் கடைப்படிக்க வேண்டும் என்கிறார்கள்.

அப்படி இங்கு என்ன பாரம்பரியாக இருந்தது?
  • கீழ்சாதிப் பெண்கள் மார்பை மறைக்க தடை செய்தது,
  • கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்புக்குள் தள்ளிவிடுவது,
  • மனைவி மீது சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்க சொல்லி கற்பை நிரூபிக்க சொன்னது,
  • வேறு சாதி பையனை காதலித்த பெண்ணை பஞ்சாயத்து கூடி பாலியல் பலாத்காரம் செய்தது,
இன்னும் இதுபோன்ற அசிங்கங்கள்தான் இந்த மண்ணில் காலம்காலமாக இருந்தது.
அனைத்திற்கும் மேலாக தாழ்ந்த சாதிப் பெண்களின் மார்புக்கு வரி போட்ட கொடுமையும் இதே சமூகத்தில் நிகழ்ந்து உள்ளது.

இன்னும் இந்த மண்ணில் குடும்ப கவுரவத்தை காக்கிறோம், சாதிக்  கவுரவத்தை காக்கிறோம் என்னும் பெயரில் கொலைகள் நடக்கிறதே!!

இந்த கலாச்சாரத்திற்கு ‪#‎KissOfLove‬ கலாச்சாரம் எவ்வளவோ பரவாயில்லை.

முத்தப்புரட்சி என்பது திட்டமிட்டு நடத்த்தப்பட்ட ஒன்று அல்ல. அது புரட்சியாக நடத்தக்கூடிய ஒரு செயலும் அல்ல.
ஆனால் கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற வேகத்தில் செய்திருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க பேசப்படும் செய்தியாக மாற்றியதே பெரும் வெற்றி.

மாட்டு இறைச்சிக்கு எதிராக, ஜீன்ஸ் ஆடைக்கு எதிராக இந்த  கலாச்சாரக் காவலர்களின் கூச்சல் சற்று அதிகமா கேட்கிறது.

ஆடை, உணவு என தனிநபர் விசயங்களில் மூக்கை நுழைக்கும் சாதிய, மதவாத அடிப்படைவாதிகளும், கலாச்சாரக் காவலர்களும் கண்டிக்கப்பட வேண்டும்.

இப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் இவர்கள் தடை கேட்பார்கள்..

2 கருத்துகள்:

  1. எல்லாம் காசு இருக்கிற கொழுப்பு குருநாதா. இல்லாதவன் இந்த கேளிக்கைய நினைக்க முடியுமா குருநாதா.

    பதிலளிநீக்கு