புதன், 2 மார்ச், 2016

பெரியார் பின்னால் ஒளிந்துகொள்ளும் மார்க்சிஸ்டுகளுக்கு..


இந்திய விடுதலை நாளைக் கருப்புதினமாக அறிவித்த பெரியாரின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இந்திய வரைபட எரிப்பு, இந்திய அரசியலமைப்பு எரிப்பு உள்ளிட்ட செயல்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?

'தமிழ்நாடு தமிழருக்கே' என்கிற முழக்கத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
மேலே சொன்ன அனைத்தும் சாதி ஒழிப்பு மற்றும் பிராமண எதிர்ப்பின் நீட்சியாக பெரியார் செய்த செயல்கள்.
பிராமண எதிர்ப்பில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

கட்சியின் இந்தியத் தலைமை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்க்கிறதே! அதில் தங்கள் நிலைப்பாடு என்ன?

தாங்களும், பெரியாரும் எந்தப் புள்ளியில் ஒன்றுபடுகிறீர்கள்?

தயவு செய்து விளக்குங்கள். சும்மா தற்காப்புக்காக பெரியார் பின்னாடி ஒளியாதீர்.
உங்களைப் பற்றி ஏற்கனவே பெரியார் நிறையவே சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக