திங்கள், 20 அக்டோபர், 2014

மஹாராஷ்டிர தேர்தல் முடிவுகள்: தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

மராட்டிய தேசிய இன அரசியலை முன்னெடுக்காமல் பாஜகவுடன் இணைந்து இந்துத்வ அரசியலை முன்னெடுத்தனர் பால்தாக்கரேவும் அவரது வாரிசுகளும்.

வெளிமாநிலத்தவரையும் (குறிப்பாக பீகார் மக்களை), சிறுபான்மையினரையும் தன் எதிரிகளாக சித்தரித்து 'மண்ணின் மைந்தர்கள்' கோஷத்தை முன் வைத்தனர்.

ஆனால் மராட்டிய தேசத்தை இரண்டு மூன்று மாநிலங்களாக துண்டாட நினைத்த பாஜகவின் அயோக்கிய அரசியலை புரிந்துகொள்ள தவறினர்.
மராட்டிய தேசிய இனத்தை படுகுழியில் தள்ளிவிட்டனர் மராட்டிய மாநிலக் கட்சிகள்(குறிப்பாக சிவசேனா).
அடுத்த சில ஆண்டுகளில் மராட்டிய தேசம் உடைவதைக் காண முடியும். 


விதர்பா தனி மாநிலக் கோரிக்கையை பாஜக ஆத்திரிப்பதும், அதற்கு ஆதரவாக பாஜக தலைவர் நிதின் கட்காரி உண்ணாவிரதம் இருந்ததும் பலருக்கும் நினைவு இருக்கலாம்.
தேசிய இனங்களை துண்டாடுவது இந்துத்வ இயக்கங்களின் அறிவிக்கப்படாத அஜெண்டா.

தற்போது பாஜகவுடன் சிவசேனா இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்தால் பாஜகவின் திட்டங்கள் சற்று தாமதமாகும்.

# தமிழகத்தில் பாஜகவுக்கு பல்லக்கு தூக்குபவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக