செவ்வாய், 16 டிசம்பர், 2014

எல்லா குழந்தைகளும் குழந்தைகளே.. - சின்ன ஆதங்கம்

பள்ளி நிர்வாக சீர்கேட்டால் கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

முறையான மருத்துவ சிகிச்சையின்மையால் தர்மபுரியில் இறந்த குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்தினோம்.

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான பாலஸ்தீன குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

தாலிபான் தாக்குதலால் பலியான பாகிஸ்தான் குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்துகிறோம். 

உலகின் எந்த மூலையில் யார் இறந்தாலும் வருந்துகிறானே தமிழன்..

ஆனால் சிங்கள இனவெறி தாக்குதலால் பலியான ஈழத்துக் குழந்தைகளுக்காக நீங்கள் என் கண்ணீர் சிந்தவில்லை??
மனிதாபிமானிகளே! ஏன் கள்ள மௌனம் காத்‌தீர்கள்?

#ஆதங்கம்.



================

ஐ.எஸ்.ஐ.எஸ் காட்டுமிராண்டிகளின் தலை துண்டிப்பு பயங்கரவாதம், ஆஸ்திரேலியா உணவகத்தில் பயங்கரவாதம், பாகிஸ்தான் பள்ளியில் தாலிபான் தீவிரவாதிகளின் பயங்கரவாதம் என சமீபகாலமாக பயங்கரவாதம் கட்டுக்கடங்காமல் போகிறது.

தீவிரவாதத்தின் ஆணிவேரை அறிந்து முழுமையாக ஒழிக்க வேண்டும்.

1 கருத்து: