தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜனவரி, 2016

பஞ்சாப் பதன்கோட் தாக்குதலின் பின்னணி இதுவாக இருக்குமோ??

நிகழ்வு 1: "காலிஸ்தான் தனிநாட்டுக்காக பொதுவாக்கெடுப்பு 2020 "(Khalistan referendum 2020) என்று சீக்கியர்கள் பிரகடனம். உள்ளூர், வெளிநாடு என ஆதரவு திரட்டல். refer: http://www.hindustantimes.com/punjab/referendum-2020-khalistan-divides-unites-sikhs-abroad/story-QBIfntRdW0zF7kVpw9XgmN.html

நிகழ்வு 2: இங்கிலாந்து, அமெரிக்கா என மோடி செல்லுமிடமெல்லாம் மோடி அரசின் இந்துத்வப் போக்கை எதிர்த்து சீக்கியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்,
http://singhstation.net/2015/09/sikhs-and-patels-protest-against-modi-at-un-headquarters/
https://www.sikh24.com/2015/09/28/shiromani-akali-dal-amritsar-stages-protest-against-modi-outside-uno-in-new-york/

நிகழ்வு 3: ஜூலை மாதம் பஞ்சாப் குர்டாஸ்பூரில் போலிஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல், https://en.wikipedia.org/wiki/2015_Gurdaspur_attack

நிகழ்வு 4: சீக்கிய அமைப்புகளை தடை செய்யுமாறு இங்கிலாந்து சென்ற போது டேவிட் கேமரூனிடம் மோடி கோரிக்கை, இது நடந்தது நவம்பரில்.  refer: http://www.thehindu.com/news/national/narendra-modi-to-raise-issue-of-radical-sikh-elements-with-david-cameron/article7834581.ece

நிகழ்வு 5: அதே நவம்பரில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் பஞ்சாபில் 'சற்பாத் கல்சா' என்னும் பெயரில் நடத்திய மாபெரும் மாநாடு. மாநாடு முழுக்க சீக்கிய போராளி பிந்த்ரன்வாலேவின் படங்கள் இடம்பெறுகின்றன. 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம் எழுப்பப்பட்டன. refer: http://khalsaforce.in/5-am-update-pictures-of-sarbat-khalsa-2015


நிகழ்வு 6: இவ்வருடத் தொடக்கத்தில் பஞ்சாப் பதன்கோட் விமானப்படை முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல், https://en.wikipedia.org/wiki/2016_Pathankot_attack

இவை அனைத்தையும் கூட்டி கழித்து பாருங்கள்.
ஏதோ ஒன்று புரியும். புரியாதவர்கள் மண்டைய போட்டு பிச்சிக்க தேவையில்லை.

சீக்கியர்களின் தேசிய இன விடுதலை எழுச்சியை முறியடிக்க இந்திய அரசு செய்த திட்டமிட்ட தாக்குதலாக இருக்குமோ என்பது எனது சந்தேகம்.. வெறும் யூகம் மட்டுமே!! இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்..

எதுக்கு இந்திய அரசு செய்ய வேண்டும்?
ஒவ்வொரு உருப்படாத ஏகாதிபத்தியமும் தனது பொது எதிரி என்று யாரையாவது காட்டி தன் நாட்டு மக்களுக்கு போலித் தேசிய உணர்வை வளர்த்தெடுப்பார்கள். அவ்வகையில் பாகிஸ்தானை எதிரியாக காட்டி போலி இந்திய தேசியம் வளர்க்கிறார்கள்.
"பாகிஸ்தானால் சீக்கிய மக்களுக்கு தொல்லை இருக்கும்,  ஆகவே இந்தியாவோடு இணைந்தே இருங்கள்" என்பது போன்ற மனநிலையை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.. ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்..

பாரத் மாதா கீ ஜெய் :) :)

சனி, 21 நவம்பர், 2015

பேஸ்புக்கின் பிரச்சாரம் தீவிரவாதத்திற்கு எதிராகவா? அரசப் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவா?

சில நண்பர்கள் மூவண்ணத்தில் வாட்டர்மார்க் அடித்த புகைப்படத்தை ப்ரோபைல் படமாக வைத்திருக்கிறார்கள். சில நாட்கள் கழித்து பேஸ்புக் வந்ததால் என்ன காரணம் என்று தெரியவில்லை. டிஜிட்டல் இந்தியா மாதிரி வேறு ஏதேனும் திட்டம் வந்து விட்டதோ என்று எண்ணினேன்.
அப்புறம்தான் தெரிந்தது அது பிரான்ஸ் நாட்டின் கொடியின் வண்ணம் என்று.





இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன.

* இனி எங்கெல்லாம் குண்டு வெடிக்குதோ, அந்தந்த நாடுகளின் கொடியை ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா? அதன் மூலம் தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியுமா?

* தீவிரவாதத்திற்கு மதம், இனம், நாடு என எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் தீவிரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் ஒரு நாட்டின் தேசிய அடையாளத்தை ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

* தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்யாமல் போலி தேசபக்தியையும், அரச பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும் செயலுக்கு பேஸ்புக் உடந்தை போகிறதா?.

* பிரான்ஸ் அரசின் பயங்கரவாதத்தால் சிரியாவில் கொல்லப்படும் அப்பாவிகளுக்காக நான் சிரியாவின் கொடியை எனது ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா?

* சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் பள்ளிக்குழந்தைகளை தீவிரவாதிகள் கொண்டபோது பாகிஸ்தான் கொடியை முகப்பு படமாக வைக்க சொல்லி பேஸ்புக் பிரச்சாரம் செய்ததா?
 

ரொம்ப குழப்பமா இருக்கு.. உருப்படியான பதில் இருந்தா சொல்லுங்க மக்களே!!

செவ்வாய், 16 டிசம்பர், 2014

எல்லா குழந்தைகளும் குழந்தைகளே.. - சின்ன ஆதங்கம்

பள்ளி நிர்வாக சீர்கேட்டால் கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

முறையான மருத்துவ சிகிச்சையின்மையால் தர்மபுரியில் இறந்த குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்தினோம்.

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான பாலஸ்தீன குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

தாலிபான் தாக்குதலால் பலியான பாகிஸ்தான் குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்துகிறோம். 

உலகின் எந்த மூலையில் யார் இறந்தாலும் வருந்துகிறானே தமிழன்..

ஆனால் சிங்கள இனவெறி தாக்குதலால் பலியான ஈழத்துக் குழந்தைகளுக்காக நீங்கள் என் கண்ணீர் சிந்தவில்லை??
மனிதாபிமானிகளே! ஏன் கள்ள மௌனம் காத்‌தீர்கள்?

#ஆதங்கம்.



================

ஐ.எஸ்.ஐ.எஸ் காட்டுமிராண்டிகளின் தலை துண்டிப்பு பயங்கரவாதம், ஆஸ்திரேலியா உணவகத்தில் பயங்கரவாதம், பாகிஸ்தான் பள்ளியில் தாலிபான் தீவிரவாதிகளின் பயங்கரவாதம் என சமீபகாலமாக பயங்கரவாதம் கட்டுக்கடங்காமல் போகிறது.

தீவிரவாதத்தின் ஆணிவேரை அறிந்து முழுமையாக ஒழிக்க வேண்டும்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தீவிரவாதத்தின் ஆணிவேர்

ஒசாமாக்களையும் உசேன்களையும் உருவாக்கிவிடுவது,
பின்னர் 'தீவிரவாதத்தை அழிப்போம்' என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுவது,
போர் என்னும் பெயரில் அப்பாவிகளை கொன்றுகுவித்து விட்டு, எண்ணைய்க் கிணறுகளை தன் வசப்படுத்துவது,
அரபு நாடுகளின் ஆசியோடு அவர்கள் மண்ணில் தன் ஆதிக்கத்தை நிலைக்க செய்வது.
இதுதான் காலம்காலமாக அமெரிக்கா நடத்தும் செயல்.
(இன்னும் 10000 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். ஆப்கனில் அமெரிக்காக்காரனுக்கு என்ன புடுங்குற வேலை??)

தீவிரவாதத்தின் ஆணிவேரைத் தேட முயற்சித்தால் அந்த தேடல் அமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் சென்று முடிவடையும்.


இப்போது புதிதாக ஐஸிஸ்(ISIS) என்னும் மற்றொரு மனிதவிரோதக் கூட்டம் கிளம்பியிருக்கிறது.
( எங்கே இருந்து கிளம்பியதோ! )

ஷியா முஸ்லிம்கள், குர்து மற்றும் யாசிடி இன மக்களைக்(அவர்களும் முஸ்லிம்கள்) கொன்று குவித்தது.
ஊடகவியலாளர்களின் தலையை துண்டிக்கிறது.
(இதுல அல்லா ஹூ அக்பர் கோஷம் வேற.. ).
ஷியாக்களின் மசூதிகளையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் இடித்து நாசமாக்கியது.

அந்தக் காட்டுமிராண்டிகளை அழிக்க அமெரிக்கா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவும் இணையப் போவதாக ஒபாமாவுக்கு மோடி உறுதியளித்துள்ளதாக பொறுக்கி சுசாமி தெரிவித்துள்ளான்.

ஐஸிஸ் காட்டுமிராண்டிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அவர்களின் தோற்றம் மற்றும் பின்னணி குறித்தும், தீவிரவாதத்தில் அமெரிக்காவின் பங்கு என்னவென்பதும் விவாதிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் தீவிரவாதத்தை நிரந்தரமாக அழிக்க முடியாது.