சனி, 21 நவம்பர், 2015

நிதிஷ்குமாருக்கு வக்காலத்து வாங்கும் சுப.வீ

தொலைக்காட்சி விவாதங்களில் பீகார் பற்றிய பேச்சு வரும்போது நிதிஷ்குமாரை இந்துத்வ எதிர்ப்பாளராக காட்ட அதிகம் முயற்சி செய்கிறார் அய்யா சுப.வீரபாண்டியன்.

குஜராத் கலவரத்தை ஆதரித்தது, பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது, மோடியை வளர்ச்சி நாயகனாக பீகாரில் காட்டியது, பீகாரில் பாஜக காலூன்ற வழிவகை செய்தது என அவரின் இந்துத்வ சார்பு பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பின்னர்தான் பாஜக கூடாரத்திலிருந்து வெளிவந்தார் நிதிஷ். ஆக அவர் மோடி எதிர்ப்பாளர்தான் தவிர பாஜக எதிர்ப்பாளரோ, இந்துத்வ எதிர்ப்பாளரோ அல்ல.

நிதிஷ்குமார் போலத்தான் நம்மூரு திராவிடக் கட்சிகளும் இந்துத்வ எதிர்ப்பு என்கிற பெயரில் அட்டைக்கத்தி வீசுவார்கள். ஆனால் திரைக்குப் பின்னால் பாஜகவுடன் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

திராவிடக் கட்சிகளின் இந்த போலித்தனத்தை மூடி மறைக்கத்தான் நிதிஷுக்கு வக்காலத்து வாங்குகிறார் சுப.வீ.
எக்காலத்திலும் பாஜகவை எதிர்த்து வரும் லாலுபிரசாத் தான் பாராட்டப்படவேண்டியவர், நிதிஷ் அல்ல.

1 கருத்து: