போலித் திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலித் திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 பிப்ரவரி, 2016

சுபவீ-க்கு சில கேள்விகள்

அருந்ததியர்களில் இதுவரை சட்டமன்ற வேட்பாளர்களாக எத்தனை பேரை நிறுத்தியுள்ளீர்கள்? - என்று தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நோக்கி சுபவீ  கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரிய கட்சியான திமுகவை நோக்கி கேட்க வேண்டிய கேள்வியை பத்து சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சிறிய கட்சியான விசிக நோக்கி எழுப்பியிருக்கிறார் சுபவீ.

இப்ப நாமும் சுபவீயிடம் சில கேள்விகள்  கேட்போம்.

1. திமுக கூட்டணியில் இருந்த எத்தனை பொது தொகுதிகளை விசிகவுக்கு திமுக கொடுத்தது?

2. அருந்ததியர் தமிழகத்தில் எங்கு ஒடுக்கப்பட்டாலும் அதனை எதிர்த்து சிறுத்தைகள் களத்தில் நிற்கிறார்கள்.. திமுக என்ன செய்து கொண்டிருந்தது??

3. எத்தனை அருந்ததியர்கள் திமுகவில் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள் ?

4. எத்தனை அருந்ததியர்களுக்கு இதுவரை திமுகவில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது??

இந்த கேள்விகளுக்கு சுபவீ அவர்கள் பதில் வேண்டும்...

விசிக கட்சி - அருந்ததியர் இடையே பகை மூட்டும் விதத்தில் சுபவீ செயல்படுகிறார். பிரித்தாளும் போக்கை ஆரியர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார் போல சுபவீ..

சனி, 21 நவம்பர், 2015

நிதிஷ்குமாருக்கு வக்காலத்து வாங்கும் சுப.வீ

தொலைக்காட்சி விவாதங்களில் பீகார் பற்றிய பேச்சு வரும்போது நிதிஷ்குமாரை இந்துத்வ எதிர்ப்பாளராக காட்ட அதிகம் முயற்சி செய்கிறார் அய்யா சுப.வீரபாண்டியன்.

குஜராத் கலவரத்தை ஆதரித்தது, பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது, மோடியை வளர்ச்சி நாயகனாக பீகாரில் காட்டியது, பீகாரில் பாஜக காலூன்ற வழிவகை செய்தது என அவரின் இந்துத்வ சார்பு பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பின்னர்தான் பாஜக கூடாரத்திலிருந்து வெளிவந்தார் நிதிஷ். ஆக அவர் மோடி எதிர்ப்பாளர்தான் தவிர பாஜக எதிர்ப்பாளரோ, இந்துத்வ எதிர்ப்பாளரோ அல்ல.

நிதிஷ்குமார் போலத்தான் நம்மூரு திராவிடக் கட்சிகளும் இந்துத்வ எதிர்ப்பு என்கிற பெயரில் அட்டைக்கத்தி வீசுவார்கள். ஆனால் திரைக்குப் பின்னால் பாஜகவுடன் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

திராவிடக் கட்சிகளின் இந்த போலித்தனத்தை மூடி மறைக்கத்தான் நிதிஷுக்கு வக்காலத்து வாங்குகிறார் சுப.வீ.
எக்காலத்திலும் பாஜகவை எதிர்த்து வரும் லாலுபிரசாத் தான் பாராட்டப்படவேண்டியவர், நிதிஷ் அல்ல.