சனி, 5 டிசம்பர், 2015

பாபர் மசூதியைக் கட்டியெழுப்ப இந்துக்களே முன்வாருங்கள்...

#டிசம்பர்6 #பாபர்மசூதி இடிப்பு நாள் தொடர்பாக பேஸ்புக்கில் பதிந்த பதிவு:

மசூதியை இடித்து மனிதத்தை நொறுக்கியவர்கள் ராமனைத் தூக்கிக்கொண்டு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆயத்தமாகிறார்கள்..
மசூதியை பறிகொடுத்தவர்கள், அதனைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லாமல் வெள்ள நிவாரணப் பணியில் இரவும் பகலுமாக களத்தில் உள்ளார்கள்.





மீண்டும் கட்டியெழுப்பப்படும் பாபர் மசூதியில் முதல் செங்கல்லும், இறுதி செங்கல்லும் இந்துக்களின் பங்களிப்பாக, அதுவும் தமிழ் மண்ணிலிருந்து இருக்க வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு உண்டு..

 *****************

"பாபர் மசூதிக்கு முன் அங்க என்ன இருந்தது? ராமர் கோவில்லா? ஆம் எனில் அதை இடித்து யார்? நீ அவர்களை பற்றி பேசாசது ஏன்?" என்று ஒரு நண்பர் கேள்வி எழுப்பிருந்தார்.. 
அவருக்கு எழுதிய சிறு பதில் பின்வருமாறு:

It's a big story.

அங்கே மொகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்ட மசூதி மட்டுமே இருந்தது... இந்தியா முழுக்க அவர்கள் கட்டிய மசூதிகளும் கோட்டைகளும் இன்றும் பல உள்ளன.. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற புராணக் கதையோடு இவர்கள் தொடர்புபடுத்திக்கொண்டு அங்கே ராமர் கோவில் இருந்ததாக சொல்லி ஒரு சிலையைக் கொண்டு உள்ளே வைத்து விட்டார்கள்... இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்து ஆட்களைத் திரட்டி டிசம்பர் ஆறாம் நாள் இடித்துவிட்டார்கள்.. இந்து-முஸ்லிம் ஒற்றுமையே இருக்க கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் இடிக்கப்பட்டது.. இதில் பங்கேற்ற சிலர் மனம் திருந்தி ஒப்புதல் வாக்குமூலம் கூட அளித்துள்ளார்கள்..

பாபர் வெளிநாட்டுக்காரர், பாபர் மசூதி நாட்டின் அவமானம் என்கிற பிரச்சாரமும் செய்கிறார்கள்.. செங்கோட்டை, தாஜ்மஹால், செயின்ட் ஜார்ஜ் கோட்டை என பலவும் மொகலாய, ஆங்கிலேய மன்னர்களால் கட்டப்பட்டவையே! அதில் ஏதேனும் ஒன்றில் கை வைத்திருக்கலாமே!! அவ்வாறு செய்ய வில்லை. மசூதியை இடித்தால் மட்டுமே ஒரு பதட்டத்தை தொடர்ந்து நீடிக்கச் செய்ய முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் நன்கு அறிந்திருந்தார்கள்..

அந்த இடத்தில மசூதி கட்டப்படுவதன் மூலம் நீதி வழங்கப்படும். இதனால் இந்து-முஸ்லிம் ஒற்றுமை கூடுமே தவிர எந்த வகையிலும் இந்துக்களுக்கு எந்த தீங்கும், நட்டமும் இல்லை. சவூதி அரேபியாவில் இந்துக் கோவில் கட்ட அந்நாட்டு அரசு நிலம் ஒதுக்குகிறது.. மதவெறி இல்லாத இந்துக்கள் எந்த வகையிலும் பாபர் மசூதிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் தொடர்ச்சியான பொய் பிரச்சாரத்தால் பாபர் மசூதி பற்றி இந்துக்கள் அவ்வளவு பேசுவதில்லை...

அங்கே ராமர் கோவிலுக்குப் பக்கத்தில் பெரிய மாரியம்மன் கோவில் எழுப்ப வேண்டும் என நாம, அதாவது இந்து மதத்தை தழுவிய தமிழர்கள் கோரிக்கை வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... அதுதான் இந்துத்வ அரசியல். அவர்களைப் பொறுத்த வரையில் ராமனை ஒரு தேசிய ஹீரோவாக்கி 'இந்து ராஷ்டிரம்' என்னும் அரசியலை முன்னெடுப்பதே குறிக்கோள்.. இதில் ஆன்மீகம், பக்தி எதுவும் இல்லை.

இந்து பக்கமோ, முஸ்லிம் பக்கமோ இன்று யோசித்தால் இந்தப் பிரச்சினைக்கு எந்த தீர்வும் கிடைக்காது. குழப்பம்தான் வரும். நீதியின் பக்கம் நிற்க வேண்டும்.


2 கருத்துகள்: