வியாழன், 24 டிசம்பர், 2015

பெரியாரோடு முற்றிலும் முரண்படும் இடம்

#டிசம்பர்25‬ 
 ‪#‎கீழவெண்மணிப்‬ படுகொலை

சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் அயோக்கியனால் தஞ்சை மண்ணில் 44 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.

பெரியாரோடு நான் முற்றிலும் முரண்படும் இடமும் இதுதான். இறுதிவரையில் நாயுடுவை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் கம்யூனிஸ்டுகளை வசைபாடுவதில் குறியாய் இருந்திருக்கிறார் பெரியார்.

திராவிட அமைப்புகள் ஏன் இந்தப் படுகொலையை அனுசரிப்பதில்லை? என்கிற காரணத்தை யாரேனும் சொல்லுங்க.. தஞ்சை மண்ணில் உதித்த செங்கொடி புரட்சியை ஒடுக்கியதில் திமுக கண்ணீர்த்துளிகளுக்கு பெரும்பங்கு உண்டு..

பாட புத்தகத்தில் வரலாறாகப் பதியப்பட்டு சாதி மற்றும் முதலாளித்துவத்தின் ஆபத்து குறித்து விளக்கப்படவேண்டிய நிகழ்வு கீழ்வெண்மணிப் படுகொலை. அப்படியான ஒரு நிகழ்வை தமிழர்களுக்கு தெரியாத வண்ணம் செய்துவிட்டார்கள் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும்.

‎சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் கூட்டாளிகள் திமுகவும், மூப்பனாரும்...

உலகமே திரும்பிப் பார்த்த நிகழ்வு 'கீழவெண்மணிப் படுகொலை'. ஆனால் உள்ளூரு தமிழனுக்கு  தெரியாமல் மறக்கடிக்கப்பட்டது.. தமிழன் வரலாறு எவ்வளவு மோசமாக இருக்குது பாருங்க..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பார்ப்பான் அதை செய்தான், இதை செய்தான் என பார்ப்பானுக்கு  எதிராக அட்டைக்கத்தி வீசுபவர்கள் நாயுடுவின் சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி பற்றி எங்கேயும் பேசுவதில்லை..
தமிழா! நீ பேசு!! செவிட்டுக் காதுகள் கிழியும் வரை பேசு!

பின்குறிப்பு: நாயுடுவை போட்டுத் தள்ளியதில் தி.க தோழர்களும் உண்டு.

#உண்மை உறங்காது.

சனி, 12 டிசம்பர், 2015

குப்பை அள்ளும் தொழிலாளி எவ்விதத்தில் குறைந்து போனார்?

வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு கிரிக்கெட் அணி  வருகை புரியும்போது விமான நிலையத்திலும், ஓட்டலிலும் மாலை மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்..

அதே போல வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் பணிக்காக சென்றால் உண்ணும் உணவு, பேருந்து வசதி, தங்குமிடம் என அனைத்தையும் மிகுந்து தரத்துடன் அளிப்பார்கள். சிறப்பு ஊதியமும் கொடுப்பார்கள்.


சென்னை  வெள்ளத்தின் விளைவாக குவிந்த குப்பைகளை அள்ள  வெளி மாவட்டங்களிலிருந்து  துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்திருக்கிறது அரசு. அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் அழைத்து வந்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன். எங்கள் பகுதியில் சில பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 ஆனால் அவர்களுக்கான தங்குமிடம், உணவு, குப்பை அள்ளும் கருவிகள், பாதுகாப்பு உறைகள் எவையும் முறையாக வழங்கப்படவில்லை. அவர்களுக்கான சிறப்பு ஊதியம் எவ்வளவு வழங்கப்பட்டது என தெரியவில்லை. மிகவும் குறைவாகத்தான் வழங்கியிருப்பார்கள்.
அந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களா? என்பதும் தெரியவில்லை.

ஒரு கிரிக்கெட் வீரரை விடவும், ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரை விடவும் எந்த விதத்தில் குறைந்து போனார் துப்புரவு தொழிலாளி?

குப்பை குவிகிறது என அரசைக் குறை சொல்லும் நாம் இந்த தொழிலாளர்கள் பற்றி சிந்திப்பதுண்டா? மக்கள் அவரவர் தெருவை சுத்தம் செய்து கொள்வோம் என்கிற மனப்பக்குவமும் நமக்கு வருவதில்லை. சில தன்னார்வ குழுக்களும், அரசியல் கட்சிகளும் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது பாராட்டத்தக்கது.

இந்த ஏற்றத்தாழ்வுக்கான காரணம் என்ன? இதனைப் போக்க என்ன வழி? என்பவை பற்றி அறியாமல் ஓட்டு அரசியலின் வழியாக தீர்வு கண்டுவிடலாம் என்கிற நினைப்பில்  இந்த சமுதாயம் ஓட்டு  அரசியல் நோக்கி நகர்கிறது.

சனி, 5 டிசம்பர், 2015

பாபர் மசூதியைக் கட்டியெழுப்ப இந்துக்களே முன்வாருங்கள்...

#டிசம்பர்6 #பாபர்மசூதி இடிப்பு நாள் தொடர்பாக பேஸ்புக்கில் பதிந்த பதிவு:

மசூதியை இடித்து மனிதத்தை நொறுக்கியவர்கள் ராமனைத் தூக்கிக்கொண்டு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆயத்தமாகிறார்கள்..
மசூதியை பறிகொடுத்தவர்கள், அதனைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லாமல் வெள்ள நிவாரணப் பணியில் இரவும் பகலுமாக களத்தில் உள்ளார்கள்.





மீண்டும் கட்டியெழுப்பப்படும் பாபர் மசூதியில் முதல் செங்கல்லும், இறுதி செங்கல்லும் இந்துக்களின் பங்களிப்பாக, அதுவும் தமிழ் மண்ணிலிருந்து இருக்க வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு உண்டு..

 *****************

"பாபர் மசூதிக்கு முன் அங்க என்ன இருந்தது? ராமர் கோவில்லா? ஆம் எனில் அதை இடித்து யார்? நீ அவர்களை பற்றி பேசாசது ஏன்?" என்று ஒரு நண்பர் கேள்வி எழுப்பிருந்தார்.. 
அவருக்கு எழுதிய சிறு பதில் பின்வருமாறு:

It's a big story.

அங்கே மொகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்ட மசூதி மட்டுமே இருந்தது... இந்தியா முழுக்க அவர்கள் கட்டிய மசூதிகளும் கோட்டைகளும் இன்றும் பல உள்ளன.. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற புராணக் கதையோடு இவர்கள் தொடர்புபடுத்திக்கொண்டு அங்கே ராமர் கோவில் இருந்ததாக சொல்லி ஒரு சிலையைக் கொண்டு உள்ளே வைத்து விட்டார்கள்... இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்து ஆட்களைத் திரட்டி டிசம்பர் ஆறாம் நாள் இடித்துவிட்டார்கள்.. இந்து-முஸ்லிம் ஒற்றுமையே இருக்க கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் இடிக்கப்பட்டது.. இதில் பங்கேற்ற சிலர் மனம் திருந்தி ஒப்புதல் வாக்குமூலம் கூட அளித்துள்ளார்கள்..

பாபர் வெளிநாட்டுக்காரர், பாபர் மசூதி நாட்டின் அவமானம் என்கிற பிரச்சாரமும் செய்கிறார்கள்.. செங்கோட்டை, தாஜ்மஹால், செயின்ட் ஜார்ஜ் கோட்டை என பலவும் மொகலாய, ஆங்கிலேய மன்னர்களால் கட்டப்பட்டவையே! அதில் ஏதேனும் ஒன்றில் கை வைத்திருக்கலாமே!! அவ்வாறு செய்ய வில்லை. மசூதியை இடித்தால் மட்டுமே ஒரு பதட்டத்தை தொடர்ந்து நீடிக்கச் செய்ய முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் நன்கு அறிந்திருந்தார்கள்..

அந்த இடத்தில மசூதி கட்டப்படுவதன் மூலம் நீதி வழங்கப்படும். இதனால் இந்து-முஸ்லிம் ஒற்றுமை கூடுமே தவிர எந்த வகையிலும் இந்துக்களுக்கு எந்த தீங்கும், நட்டமும் இல்லை. சவூதி அரேபியாவில் இந்துக் கோவில் கட்ட அந்நாட்டு அரசு நிலம் ஒதுக்குகிறது.. மதவெறி இல்லாத இந்துக்கள் எந்த வகையிலும் பாபர் மசூதிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் தொடர்ச்சியான பொய் பிரச்சாரத்தால் பாபர் மசூதி பற்றி இந்துக்கள் அவ்வளவு பேசுவதில்லை...

அங்கே ராமர் கோவிலுக்குப் பக்கத்தில் பெரிய மாரியம்மன் கோவில் எழுப்ப வேண்டும் என நாம, அதாவது இந்து மதத்தை தழுவிய தமிழர்கள் கோரிக்கை வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... அதுதான் இந்துத்வ அரசியல். அவர்களைப் பொறுத்த வரையில் ராமனை ஒரு தேசிய ஹீரோவாக்கி 'இந்து ராஷ்டிரம்' என்னும் அரசியலை முன்னெடுப்பதே குறிக்கோள்.. இதில் ஆன்மீகம், பக்தி எதுவும் இல்லை.

இந்து பக்கமோ, முஸ்லிம் பக்கமோ இன்று யோசித்தால் இந்தப் பிரச்சினைக்கு எந்த தீர்வும் கிடைக்காது. குழப்பம்தான் வரும். நீதியின் பக்கம் நிற்க வேண்டும்.