தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 அக்டோபர், 2016

நிசப்தம் மணிகண்டன் அவர்களுக்கு மறுப்பு/விவாத கட்டுரை

அன்புள்ள மணிகண்டன்  அவர்களுக்கு வணக்கம்.
சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் இயங்குவதை  நிறுத்திக் கொண்டாலும் உங்களின் நிசப்தம் தளத்தை தொடர்ந்து  படித்து வருகிறேன். உங்களின் யதார்த்த எழுத்து நடைதான் காரணம்.

தனித் தமிழ்நாடு கோரிக்கையை  விமர்சித்து  நீங்கள் கட்டுரை எழுதும் அளவுக்கு தமிழ்தேசியத் தாகமும் குரலும்  அதிகரித்து விட்டது. ஒரு தமிழ்த்தேசியவாதியாக மகிழ்ச்சி அடைகிறேன்.
கட்டுரையைப் படிக்க: http://www.nisaptham.com/2016/10/blog-post_76.html



உங்களின் கட்டுரைக்கு மறுப்பு எழுத ஆர்வம் உள்ளது. மறுப்பு என்பதை விட விவாதம் என்றே எடுத்துக் கொள்ளலாம். 
விவாதம் என்பதற்காக  தாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.  தமிழ்த்தேசியவாதிகளின் குரலை சற்று கேட்டுப் பாருங்கள் என்றே சொல்ல விழைகிறேன்.

//எந்தவொரு பிரச்சினையிலும் தேசத்தின் மீதான வன்மத்தைக் கக்குவதைப் பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது//
தேசத்தின் பெயரால் அயோக்கியத்தனம் நடைபெறும்போது தேசத்தின் மீது விமர்சனம் எழுப்பப்படுவது இயல்புதான். தேசம் என்பதை புனிதமாகக் காட்டி வழிபாடு செய்ய வேண்டாம். ஏனெனில் இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று எதுவுமில்லை.

//‘இதுதான் தீர்வு’ என்று முதலிலேயே சொல்லிவிட்டு விவாதத்தைத் தொடங்கக் கூடாது. //
அப்படி யாரும் எடுத்த எடுப்பிலேயே தனிநாடு கோரிக்கையோடு கிளம்பவில்லை. 
உதாரணத்திற்கு  தோழர் மணியரசன், தோழர் தியாகு, தோழர் பழ.நெடுமாறன்  போன்ற தமிழ்தேசியவாதிகளின் அரசியல் பயணத்தை திருப்பி பாருங்கள். இந்திய நீரோட்டத்தின் பாதையிலிருந்து விலகி தமிழ்த்தேசியம் நோக்கி வந்திருக்கிறார்கள்.
அண்ணன் சுப.உதயகுமாரால் ஆம் ஆத்மி கட்சியில் நீடிக்க முடியவில்லையே. ஏன் என்று அவரைக் கேட்டுப் பாருங்கள்.
"நோய் நாடி நோய் முதல்நாடி" என்கிற குறள் இங்கு நினைவுக்கு வருகிறது. 
இந்திய தேசியம் நம்மைப் பிடித்த நோயாகவும், தமிழக விடுதலையை அதற்கு நன்மருந்து எனவும் சொல்கிறோம்.

//தமிழகத்தை தனியாக்கி தமிழனை பிரதமராக நியமித்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடுமா என்ன? அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பே இல்லை.//
உலகம் முழுக்க பல நாடுகள் ஏன் உருவாகின என்பதை ஆராய கேட்டுக் கொள்கிறேன். பாலாறும் தேனாறும் ஓடும் என சொல்லவில்லை. ஆனால் தற்போது இருக்கும் நிலையை விட மிகவும் நல்ல முறையில் தமிழ்நாடு அமையும்.
தமிழ்நாட்டுக்கு என்று தனியாக பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை என பலவற்றை உருவாக்க முடியும். அதிகாரத்தைப் பரவலாக்க முடியும். 
மக்களின் நிர்ப்பந்தமே வெற்றி பேரும். சுருங்கச் சொன்னால் மக்களே ஆள்வார்கள். எட்டு கோடி தமிழர்களால் இந்தியப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்க முடியாது. ஆனால் தமிழ்தேசியத் தலைமையை எதிர்த்து நிற்க முடியும். நிர்ப்பந்திக்க முடியும்.

//தமிழனுக்கும் மலையாளத்தானுக்குமான பிரச்சினைக்கு பதில் வன்னியனுக்கும் பறையனுக்குமான பிரச்சினையாக இருக்கும்.//
தனித் தமிழ்நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும்போது பலரும் சாதியச் சிக்கலை முன்னிறுத்துவது இயல்புதான். 
ஆனால் நான் பழகியவரையில் பல தமிழ்த்தேசிய நண்பர்களும் சாதி மறுப்பு கொள்கை கொண்டவர்கள். ஆகவே தமிழ்த்தேசிய உணர்வோடு சாதிமறுப்பு உணர்வும் சேர்ந்தே வருகிறது.
"நாம் தமிழர்" என்கிற உணர்வு மிகவும் வலுப்பெறும்போது சாதி பின்னுக்குத் தள்ளப்பட்டு. ஒழிக்கப்படும்.
சாதி ஒழிப்பை முன்னிறுத்தி தமிழ்தேசியம் பேசினால் மணிகண்டன் ஏற்றுக் கொள்வாரா?
இந்திய அரசியல் சட்டம் சாதியை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறதே! அதனை ஏற்றுக் கொண்டு சாதிஒழிப்பு பற்றி பேசுவது முரண்.

//நம்மிடமே சிக்கல்கள் நிறைந்து கிடக்கின்றன. சாதி, இனம், குலம், கூட்டம் என்று கிணற்றுக்குள் சிக்கிய தவளைகளைப் போல தலையை மேலே எடுக்கிறவனையெல்லாம் இழுத்து இழுத்துக் கீழே எறிந்துவிட்டு இந்த நாடுதான் தமிழனை மேலே வர அனுமதிப்பதில்லை என்று பேசுவதைப் போன்ற அபத்த நகைச்சுவை வேறு இருக்க முடியாது. //
இந்திய தேசியத்தைக் காக்கும் தீவிரம் தவிர வேறு எதுவும் இந்த வார்த்தைகளில் தெரியவில்லை. மக்களைக் குறை சொல்லி தப்பிக்கும் தந்திரமாக உள்ளது.
எட்டு கோடி மக்களின் குரலான தமிழக சட்டசபை தீர்மானங்கள் டெல்லி குப்பைத்தொட்டிக்கு போகிறதே! அதனை நிறுத்துவது எப்படி என்பதை மணிகண்டன் விளக்கினால் நலம்.

//இந்திய தேசியம் பேசுகிறவனையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்லீப்பர் செல் என்றும், இந்துத்துவவாதி என்றும் ஓரங்கட்டுகிறார்கள். //
இது தவறான அணுகுமுறைதான். சிலர் ஆர்வக்கோளாறில் செய்வதை நான் கவனித்திருக்கிறேன். இது உணர்ச்சிவேகத்தின் வெளிப்பாடுதான்.
தவிர்க்கப்பட வேண்டியது.

//முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். நமக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல் எழுப்பலாம். போராடி பெற்றுக் கொள்ளலாம். //
எப்படி போராடுவது என்பதை விளக்கினால் இன்னும் நலம். 
தமிழர்களாக ஒன்றுபட்டுத்தான் போராடனும். அப்படி ஒன்றுபடுவதையே  இனவாதம், பிரிவினைவாதம் என்கிறீர்களே!
ஒன்றுபட்டுதான் நிற்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் நிருபராதிகளை விடுவிக்க முடியவில்லையே!
காவிரி உரிமையை மீட்க முடியவில்லையே! பாலாற்றில் அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே! மக்கள்விரோத பாராளுமன்ற தீர்மானங்களை தடுத்து நிறுத்த முடியவில்லையே!
என்ன செய்தால் தமிழர்களின் உரிமைகளை மீட்க முடியும் என்பதையும் தாங்கள் சொல்லியாக வேண்டும். அப்படி இல்லாமல் தனித் தமிழ்நாடு கோரிக்கையை அரைவேக்காட்டுத்தனம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காஷ்மீரிகள் மீதான இனப்படுகொலைக்கு என்ன நீதி? ஆக்கிரமிப்பு ராணுவத்தை எப்படி அகற்றுவது? விடுதலை ஒன்றுதான் தீர்வு.

//இந்த நாட்டில் ஆயிரம் குறைகள் உண்டு. அத்தனை குறைகளோடும் அத்தனை சிக்கல்களோடும் இந்த தேசத்தை மனதார நேசிக்கிறேன்.//
சிறுவயதில் இருந்து இந்திய தேசிய உணர்வு ஊட்டப்படுவதால்தான் இப்படி சொல்ல முடிகிறது. நானும் அதனை கடந்து வந்தவன்தான்.
நான் தமிழ்த்தேசியவாதியாக மாறக் காரணம் இந்தியப் பேரினவாதம் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள்தான். 
"பிரச்சினைகள் ஓர் ஓரமாக இருக்கட்டும், நாம் தேசிய கீதத்தை ரசிப்போம், தேசியக் கோடிக்கு வணக்கம் செலுத்துவோம்" என்பதே ஒருவகையில் மக்கள் விரோத நிலைப்பாடுதான்.
"தமிழனைக் கொல்லும் சிங்கள ராணுவம் மீது எப்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்யப் போவீர்கள்?" என இந்தியப் பேரரசை நோக்கி கேள்வி கேட்பதில் தவறு ஏதும் இல்லையே!

"சரி, தனித் தமிழ்நாடு தவிர வேறு தீர்வு இல்லையா?" என்று நீங்கள் கேட்கக் கூடும்.
கண்டிப்பாக உண்டு. அதனையும் விவாதிக்கலாம்.
அதிகாரப் பரவலாக்கல் என்கிற தீர்வு உண்டு. மத்தியப் பட்டியலில் சில துறைகளை ஒதுக்கிவிட்டு, முழு அதிகாரத்தையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதுதான்.
பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை, வேளாண் கொள்கை  என அனைத்தையும் மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும்.
அப்படி செய்தால் இந்திய ஒன்றியம் தாக்குப் பிடிக்க வாய்ப்புகள் உண்டு.
மணிகண்டன் போன்றவர்கள் அதனை வழிமொழிவார்களா?

அதெல்லாம் ஒரு போதும் சாத்தியம் ஆகாது, ஆகவே விடுதலை ஒன்றே தீர்வு என்கிற தமிழ்த்தேசிய அரசியல் என்கிற ஒன்றை என்னைப் போன்ற சிலர் முன்வைக்கிறோம்.
அதனை விவாதிக்க வேண்டுமேயொழிய, அரைவேக்காட்டுத்தனம், முரட்டுத்தனம் என ஒதுக்கக் கூடாது.
தொடர்ந்து விவாதிப்போம். நன்றி 

பின்குறிப்பு: பாகிஸ்தானிலிருந்து பலோசிஸ்தான் விடுதலை அடைய விரும்புகிறது. இந்திய அரசும் மறைமுக ஆதரவு கொடுக்க ஆரம்பித்துள்ளது என்பது தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

வியாழன், 3 மார்ச், 2016

வெறுப்பரசியலின் களம் தமிழ்நாடு


இந்து மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் அண்ணன் சீமானை சந்தித்துள்ளார்கள்.. உடனே நம்ம ஆட்கள் அந்தப் போட்டோவை தூக்கிட்டு வந்துவிட்டார்கள். இந்துத்வ கைக்கூலி, ஆர்.எஸ்.எஸ் அடியாள் என பல கதைகளை எழுதுகிறார்கள்.

முன்பு மோடியை திருமா சந்தித்த போதும், துக்ளக் விழாவில் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசியபோதும் இப்படித்தான் சேறு வாரி இறைத்தார்கள்.

மாற்றுக்கருத்து உடையவர்களை மனிதர்களாக கூட மதிக்கக் கூடாது என்கிற அளவுக்கு வளர்ந்துள்ள பாசிசத்தின் வெளிப்பாடுதான் இது. காவி பாசிசத்திற்கு சற்றும் குறைவில்லாதது இந்தப் பாசிசம்.

ஆனால் இது போன்ற ஆட்கள் சில நேரம் அதிக நாகரீகத்துடன் பதிவும் போடுவார்கள். அத்வானியும் சோனியாவும் அருகருகே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 'இந்த மாதிரி நாகரீக அரசியல் தமிழகத்தில் வராதா!!' என் உச்சுக்கொட்டுவார்கள்.

ரொம்ப முரணான இப்படியான ஆட்களை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை..

காவி அரசியலில் மூழ்கியுள்ள அர்ஜுன் சம்பத் வகையறாக்களை மீட்பது முற்போக்கா??
அல்லது மேலும் மேலும் காவி சகதிக்குள் அவர்களை அழுத்துவது முற்போக்கா?? என்பதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்.

சனி, 27 பிப்ரவரி, 2016

பிராமணரா? பார்ப்பனரா? ஆரியரா?


'பார்ப்பனர் என்பது தங்களின் சாதியைக் குறிக்கும் பெயர். பிராமணர்களைத் திட்ட ஏன் அந்தப் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள்?' என அடிக்கடி ஒரு கேள்வியை முன்வைக்கிறார் நண்பர் கௌதம்.

பார்ப்பனர் என்பதன் பெயர்க்காரணம் என்ன? ஏன் அப்பெயர் வந்தது? யார் முதலில் பயன்படுத்தியது? என சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒருமுறை சுபவீ அவர்கள் தன் பேட்டியில் 'பார்ப்பனர் என்பது இழிவான பெயர் அல்ல.. ஜாதகம் பார்க்கிறான், ஜோதிடம் பார்க்கிறான். அதனால் பார்ப்பான் என பெயர் வந்தது' என்றார். நானும் அதனை நம்பிவிட்டேன்.
ஆனால் ஜாதகம் மற்றும் ஜோதிடம் பார்ப்பதை பிராமணர் அல்லாதவர்களும் செய்கிறார்களே! அவர்களையும் 'பார்ப்பான்' என்று அழைக்கவேண்டுமா?

'பிராமணர் என்றால் உயர்ந்தவன் என்று பொருள். அதனால் சுயமரியாதை கருதி அப்பெயரை உச்சரிக்கக் கூடாது' என்பதுதான் என் நிலைப்பாடு.

பிராமணர் என்னும் பெயரால் அவாள் ஆதிக்கம் செலுத்தும்போது 'பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்போம்' என்றுதானே நாம் எதிர்க்குரல் எழுப்ப வேண்டும்? அல்லது 'ஆரிய ஆதிக்கம்' என்று கூட சொல்லலாமே? ஆரியருக்கு எதிர்ச்சொல் திராவிடர் என்று சொல்பவர்கள் ஆரியர்(அ)பிராமணர் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தாமல் 'பார்ப்பனர்' என்னும் வாரத்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்?

"அவன் நம்மைத் திட்டல, வேறு யாரோ பார்ப்பானாம். அவனைத்தான் திட்டுகிறான்" என்பதுதானே பிராமணர்களின் மனநிலையாக இருக்கக் கூடும்.
இதனால் பிராமணர் என்னும் பெயர் புனிதப்படுத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்.

ஒரே குழப்பமாக இருக்கு.
இதுகுறித்து நன்கு விவரம் அறிந்த திராவிட இயக்க நண்பர்கள் பதில் அறிந்தால் சொல்லவும்.

சனி, 13 பிப்ரவரி, 2016

இனப்படுகொலை கூட்டணிக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நண்பர்களுக்காக

நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்க குஜராத் முஸ்லிம் படுகொலையையும், பாபர் மசூதி இடிப்பையும் அதிகம் பேசினோம்.
இந்த சம்பவங்கள் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு மக்களிடம் ஓரளவு பலனும் கிடைத்தது.

இந்த தேர்தலிலும், தேர்தலுக்கும் பின்னரும் "பாஜக எதிர்ப்பு" என்று வருகையில் அந்த சம்பங்களை பேசித்தான் ஆக வேண்டும்.

"குஜராத்தையும் பாபர் மசூதியையும் இங்கே தமிழ்நாட்டில் ஏன் பேசுறீங்க?" என ஹிந்துத்வ சிந்தனை உள்ளவர்களும், அரசியல் பார்வை இல்லாதவர்களும் கேட்பதுண்டு..

இப்போது அதே வரிசையில் திமுக-காங்கிரஸ் இனப்படுகொலை கூட்டணிக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்.
"ஈழப் படுகொலையை இங்கே ஏன் பேசுறீங்க?" என கேள்வி கேட்கிறார்கள்..


இங்கே இருந்துதான் ஆயுதம் கொடுத்தார்கள். இங்கே அதிகாரத்தில் இருந்தவர்கள்தான் தமிழகத்தில் அடக்குமுறை ஏவினார்கள்.
இங்கே பேசாமல் வேற எங்கே போயி பேசுறது??

"தனது மகளே திருடினாலும் கையை வெட்டுவேன்" என குர்ஆனில் யாரோ சொன்னதாக அடிக்கடி பதிவுகள் போட்டால் மட்டும் போதாது மக்கா..
அதன்படி நடக்கவும் பழகனும்..

வெறும் ஓட்டு அரசியலுக்காக, இனப்படுகொலை செய்த அயோக்கியர்களுக்கு துணை போவோம் என்றுநீங்கள் சொல்வது சரியென்றால் ஹிந்துத்வ அரசியல் சிந்தனை கொண்டவர்களின் செயல்பாடுகளும் சரியென்று ஆகிவிடுமே!!

வெள்ளி, 29 ஜனவரி, 2016

இந்தியப் பெருச்சாளிகளும், தமிழக அடிமைகளும்

கல்வி' என்பது இந்திய  அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியலில் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட மத்திய அரசு கையில் உள்ளது. கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது/மறுப்பது என எல்லாம் மத்திய அரசு கையில்தான் உள்ளது..

அப்படி இருக்கையில் விழுப்புரம் யோகா கல்லூரியில் மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதிரானி. மாநில அரசைக் கைகாட்டி தப்ப முயற்சிக்கிறார்.

மாநில அரசுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்றால் இந்திய அரசு தயாரித்து வரும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் திணிக்க மாட்டோம் என ஸ்மிருதிரானி சொல்வாரா? இங்குள்ள சி.பி.எஸ்.இ (கல்வி)வியாபார நிறுவனங்களை மாநில அரசு தடை செய்தால் ஏற்றுக் கொள்வாரா?
மாநில அரசின் எந்த நடவடிக்கையிலும் இனி மத்திய அரசு தலையிடாது என்று சொல்வாரா?


"இந்தியா முழுக்க மது உள்ளது, ஆகவே தமிழகத்தில் மட்டும் மதுவை தடை செய்ய முடியாது' என நம்மூர் அமைச்சர் அடிமைகள் சொல்வதுண்டு.
"இந்தியா முழுக்க 50% இட ஒதுக்கீடுதான் அனுமதி. தமிழகத்தில் மட்டும் 69% இட ஒதுக்கீடு எதற்கு?' என உச்சநீதிமன்றம் கேட்கிறது.

இப்படியாக தமிழக அடிமைகளைக் காட்டி இந்திய பெருச்சாளிகள் தப்புவதும், இந்தியப் பெருச்சாளிகளை கைகட்டி தமிழக அடிமைகள் தப்பிக்கும் போக்கும்தான் நடைபெறுகிறது..

இந்தியாவில் இருந்து தமிழகம் விடுதலை பெறுவதே தீர்வு.

புதன், 27 ஜனவரி, 2016

மக்கள் நலக் கூட்டணி அடுத்து என்ன செய்ய வேண்டும்?

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திமுக-அதிமுக அல்லாத மூன்றாம் அணி வலுவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் ஆகிய கட்சியினர் கூட்டணி அமைத்துள்ளார்கள்..





எப்படியேனும் கூட்டணியை உடைத்து விடலாம் என்பதில் திமுகவுக்கு அதிக ஆர்வம் இருந்தது.
இந்தக் கூட்டணியால் வாக்குகள் சிதறி தங்களுக்கு சாதகமாக அமையும் என அதிமுக எண்ணுகிறது..
பாமக, பாஜக போன்ற கட்சிகளும் தங்களின் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள்..

ஒரு வழியாக "மக்கள் நலக் கூட்டணி" என்கிற பெயர் பெரும்பாலான மக்களிடம் சென்று அடைந்து விட்டது.
இனி அடுத்து  என்ன செய்ய வேண்டும்??

1. விஜயகாந்த் தங்கள் அணிக்கு வர வேண்டும் என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்..

2. தேர்தலுக்கு முன்னரே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது சட்டத்திற்கு முரணானது. ஆனாலும் அனைத்து கட்சிகளும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துகிறார்கள்.
அவ்வகையில் அனைத்து தரப்பு மக்களாலும், குறிப்பாக இளைய தலைமுறையினால் அதிகம் ஈர்க்கப்பட்ட தோழர் நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.

3. விரைவில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்து தங்களின் சின்னங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
ஏனென்றால் இன்னும் இரட்டை இலை, உதயசூரியன் தவிர வேறு சின்னங்களை அறியாத மக்கள் பலர் உள்ளனர்.

4. ஊடக பலமோ, பெரு முதலாளிகளின் பலமோ மக்கள் நலக் கூட்டணிக்கு கிடையாது.
அதனால் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் திமுக மற்றும் அதிமுகவை மிஞ்ச முடியாது. மதுரை மாநாட்டு செய்திகளையே இருட்டடிப்பு செய்து விட்டார்கள்..
அதனால் தொண்டர்களை வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வலியுறுத்த வேண்டும்.. இணையதளப் பிரச்சாரம் மட்டுமே உதவாது.

5. அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்..
இல்லையேல் அதிமுகவின் பி டீம், திமுகவின் பி டீம் என்கிற தேவையற்ற விமர்சனங்கள் வரக் கூடும்...

அதிமுக மற்றும் திமுகவை மோதிப் பாருங்கள். வாழ்த்துகள்..
என்னதான் நடக்குன்னு ஒருகை பார்த்திடுவோம்.. :)

வெற்றியோ, தோல்வியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அதிமுக மற்றும் திமுகவை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தி நல்லதோர் அரசியலை முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை அடுத்த தலைமுறையினருக்கு ஊட்டுங்கள்.

திங்கள், 4 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு தொடர்பாக எனது பதிவுகள்


ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில மண்டைவீங்கிகளே!
ஹோலி என்னும் பண்டிகையால் நீர் மற்றும் நிலம் மாசுபடுகிறது. வருடா வருடம் பலர் உயிரிழக்கிறார்கள்.
ஹோலியைத் தடை செய்ய சொல்லுங்க.
அப்புறம் வந்து தமிழன்கிட்ட நொட்டுங்க..

வட இந்திய அரசியலுக்கு ஏற்ப ஆடுவதில் சில போலித் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும் வல்லவர்கள்.
நாளைக்கே பொங்கல் பண்டிகைக்கு இந்திய அரசு தடை போட்டாலும் அதனையும் வரவேற்பார்கள் இந்த அயோக்கியர்கள்.

 ****** 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எத்தனை முறை போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளீர்கள்? - ஒரு அறிவாளி நண்பரின் கேள்வி.
நம் பதில்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என நாம் கேட்கிறோம். அதற்காக நாம் அனைவரும் கட்டாயம் மணியைத் தூக்கிட்டு போயி அர்ச்சகராக வேண்டுமா??

என்னய்யா லாஜிக் பேசுறீங்க?? நல்லா யோசிச்சு வேற எதாவது காரணம் சொல்லுங்க..
வழக்கம் போல சாதி, முதலாளித்துவம் என வேற லெவல் காரணத்தை யோசியுங்க..


******* 

தமிழில் கெட்டவார்த்தைகள் இருப்பதால் தமிழ் காட்டுமிராண்டி மொழி.
அவன், அவர் என வேறுபாடுகள் இருப்பதால் தமிழ் வர்க்க வேறுபாடுகள் நிறைந்த மொழி.
இவ்வாறெல்லாம் புதுசு புதுசா கண்டுபிடித்து எழுதுவது சில அறிவாளிகளின் வழக்கம்.

அந்த அறிவாளிகள்தான் இப்போது ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்க துடிக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் வரை ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்காமல் இப்போது சாதிய அடையாளம் கொடுக்க என்ன தேவை வந்தது? என சிந்தித்துப் பாருங்கள். இந்த அயோக்கியர்களின் தமிழர் விரோத அரசியல் புரியும்.

****** 
"ஜல்லிக்கட்டு மாடுகளின் உடலமைப்பை பாருங்கள். பெரும் முதலாளிகளால் மட்டும்தான் இவ்வாறான மாடுகளை வளர்க்க முடியும்.." என்று கீற்று தளத்தில் கார்கி என்னும் போலிக் கம்யூனிஸ்ட் எழுதியிருந்தார்.

தலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
என்ன அருமையா கம்யூனிசம் படித்து வைத்துள்ளார்கள் இந்தப் போலிகள்!!
தமிழின அடையாளங்களை அழிப்பதும், இந்தியாவுக்கு முட்டுக் கொடுப்பதும்தான் இவர்களின் போலிப் புரட்சி!!

மாடு வளர்க்கிறவன், ஆடு வளர்க்கிறவன் எல்லாம் பெரும் முதலாளியாம்.
இவனுங்க லாஜிக்படி நாங்க எல்லாம் மாபெரும் முதலாளிகள்!! அவ்வ்வ்வ்...

பார்ப்பன ஆதிக்க, முதலாளித்துவ, ஊழல்மிகு கிரிக்கெட்டை தடை செய்ய சொல்லி ஒரு கட்டுரை எழுத சொன்னால் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு நகர்வார்கள் இவர்கள்.

******

வியாழன், 24 டிசம்பர், 2015

பெரியாரோடு முற்றிலும் முரண்படும் இடம்

#டிசம்பர்25‬ 
 ‪#‎கீழவெண்மணிப்‬ படுகொலை

சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் அயோக்கியனால் தஞ்சை மண்ணில் 44 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.

பெரியாரோடு நான் முற்றிலும் முரண்படும் இடமும் இதுதான். இறுதிவரையில் நாயுடுவை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் கம்யூனிஸ்டுகளை வசைபாடுவதில் குறியாய் இருந்திருக்கிறார் பெரியார்.

திராவிட அமைப்புகள் ஏன் இந்தப் படுகொலையை அனுசரிப்பதில்லை? என்கிற காரணத்தை யாரேனும் சொல்லுங்க.. தஞ்சை மண்ணில் உதித்த செங்கொடி புரட்சியை ஒடுக்கியதில் திமுக கண்ணீர்த்துளிகளுக்கு பெரும்பங்கு உண்டு..

பாட புத்தகத்தில் வரலாறாகப் பதியப்பட்டு சாதி மற்றும் முதலாளித்துவத்தின் ஆபத்து குறித்து விளக்கப்படவேண்டிய நிகழ்வு கீழ்வெண்மணிப் படுகொலை. அப்படியான ஒரு நிகழ்வை தமிழர்களுக்கு தெரியாத வண்ணம் செய்துவிட்டார்கள் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும்.

‎சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் கூட்டாளிகள் திமுகவும், மூப்பனாரும்...

உலகமே திரும்பிப் பார்த்த நிகழ்வு 'கீழவெண்மணிப் படுகொலை'. ஆனால் உள்ளூரு தமிழனுக்கு  தெரியாமல் மறக்கடிக்கப்பட்டது.. தமிழன் வரலாறு எவ்வளவு மோசமாக இருக்குது பாருங்க..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பார்ப்பான் அதை செய்தான், இதை செய்தான் என பார்ப்பானுக்கு  எதிராக அட்டைக்கத்தி வீசுபவர்கள் நாயுடுவின் சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி பற்றி எங்கேயும் பேசுவதில்லை..
தமிழா! நீ பேசு!! செவிட்டுக் காதுகள் கிழியும் வரை பேசு!

பின்குறிப்பு: நாயுடுவை போட்டுத் தள்ளியதில் தி.க தோழர்களும் உண்டு.

#உண்மை உறங்காது.

சனி, 12 டிசம்பர், 2015

குப்பை அள்ளும் தொழிலாளி எவ்விதத்தில் குறைந்து போனார்?

வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு கிரிக்கெட் அணி  வருகை புரியும்போது விமான நிலையத்திலும், ஓட்டலிலும் மாலை மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்..

அதே போல வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் பணிக்காக சென்றால் உண்ணும் உணவு, பேருந்து வசதி, தங்குமிடம் என அனைத்தையும் மிகுந்து தரத்துடன் அளிப்பார்கள். சிறப்பு ஊதியமும் கொடுப்பார்கள்.


சென்னை  வெள்ளத்தின் விளைவாக குவிந்த குப்பைகளை அள்ள  வெளி மாவட்டங்களிலிருந்து  துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்திருக்கிறது அரசு. அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் அழைத்து வந்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன். எங்கள் பகுதியில் சில பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 ஆனால் அவர்களுக்கான தங்குமிடம், உணவு, குப்பை அள்ளும் கருவிகள், பாதுகாப்பு உறைகள் எவையும் முறையாக வழங்கப்படவில்லை. அவர்களுக்கான சிறப்பு ஊதியம் எவ்வளவு வழங்கப்பட்டது என தெரியவில்லை. மிகவும் குறைவாகத்தான் வழங்கியிருப்பார்கள்.
அந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களா? என்பதும் தெரியவில்லை.

ஒரு கிரிக்கெட் வீரரை விடவும், ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரை விடவும் எந்த விதத்தில் குறைந்து போனார் துப்புரவு தொழிலாளி?

குப்பை குவிகிறது என அரசைக் குறை சொல்லும் நாம் இந்த தொழிலாளர்கள் பற்றி சிந்திப்பதுண்டா? மக்கள் அவரவர் தெருவை சுத்தம் செய்து கொள்வோம் என்கிற மனப்பக்குவமும் நமக்கு வருவதில்லை. சில தன்னார்வ குழுக்களும், அரசியல் கட்சிகளும் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது பாராட்டத்தக்கது.

இந்த ஏற்றத்தாழ்வுக்கான காரணம் என்ன? இதனைப் போக்க என்ன வழி? என்பவை பற்றி அறியாமல் ஓட்டு அரசியலின் வழியாக தீர்வு கண்டுவிடலாம் என்கிற நினைப்பில்  இந்த சமுதாயம் ஓட்டு  அரசியல் நோக்கி நகர்கிறது.

புதன், 14 அக்டோபர், 2015

ரவீந்திரநாத் தாகூரும் நம்மூரு எழுத்தாளர்களும்

1915-இல் ரவீந்திரநாத் தாகூருக்கு பிரிட்டன் அரசால் "நைட்வுட்"(Knightwood) என்னும் பட்டம்/விருது வழக்கப்படுகிறது.

அதே பிரிட்டன் ஏகாதிபத்தியம் 1919-இல் ஜாலியன்வாலாபாக்கில் இந்தியர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது.
உடனே தனக்கு அளிக்கப்பட்ட விருதை பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் மூஞ்சியில் வீசி எறிந்தார் ரவீந்திரநாத் தாகூர்.

"விருதை திரும்ப வழங்குவது என்பது அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம்" என்பது இலக்கியத்துறையில் நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூருக்கு தெரிந்திருந்தது.

ஆனால் இங்கே உள்ள சில லோக்கல் எழுத்தாளர்களுக்குப் புரியாமல் போனது எந்த வியப்புமில்லை. நியாயத்தின் பக்கம் நின்றுப் பேசாமல் பொதுப்புத்தியைப் குளிர வைக்கப் பேசும் இவர்களிடம் வேறு என்னத்த எதிர்ப்பார்க்க முடியும்??

இந்தப் போராட்ட வடிவத்தைக் கேலி செய்யும் ஜெயமோகன்களும், அபிலாஷ்களும் வேறு போராட்ட வடிவங்களை சொல்லித் தந்து இந்த சமூகத்திற்கு வழிகாட்டுவார்களாக!!!

வெள்ளி, 1 மே, 2015

திராவிடப் போலிகளை அம்பலப்படுத்துவோம்

திராவிடம் பேசும் சில பிழைப்புவாதிகளின் (அனைவரும் அல்ல) மடைமாற்றும் அரசியல், பிழைப்புவாத அரசியல் பற்றி  நிறையபேசுவோம்..வாருங்கள்..

* இருபது தமிழர்கள் படுகொலைக்கு திக, திமுக  சார்பில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை.. கிருஷ்ணகிரியில் தலித் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட விசயத்தை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இந்த இரு விசய பின்னணியை ஆராய்ந்தால் திக யாருக்கான அமைப்பு என்று தெரிந்து விடும்.
இந்த இரு விசயங்களில் பார்ப்பான் ஈடுபட்டிருந்தால் திக போராட வந்திருக்கும்.. அதிமுக ஈடுபட்டிருந்தால் திமுக போராட வந்திருக்கும்.. இதுதான் திராவிட அரசியல்..

* விஜயகாந்துக்கு அறிவுரை கொடுப்பது போல திமுக-விஜயகாந்த் கூட்டணிக்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார் வீரமணி. மோடியை பெரியாருடன் ஒப்பிட்டபோது விஜயகாந்துக்கு எதிராக திராவிட அமைப்புகள் எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை.. அதுவே ஒரு வடநாட்டான் பேசியிருந்தால் இங்கே கூச்சல் போட்டிருப்பார்கள் . ஆனால் பொறுக்கித் தின்ன இப்போது விஜயகாந்தும் தேவைப் படுகிறாரே!! அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க..

* வே.மதிமாறன் என்னும் நபருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.. மேடையில் பேரா.அன்பழகனை வைத்துக் கொண்டு 'அடுத்து திமுக ஆட்சிதான்' என்று பேசுகிறார்.. இப்படி பொறுக்கித் தின்பதற்கு எதுக்கு விருது??
பாரதி, வள்ளுவன் என அனைவரிடம் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டினால் முற்போக்கு.. அதுவே பெரியாரின் பிழைகளை சுட்டிக் காட்டினால் உடனே பார்ப்பனிய அடிமை, சாதிவெறியன் என பட்டம் கொடுத்துவிடுவார்கள் பெரியார் திடல் பக்தர்கள்.

* தருமபுரி சேரி சூறையாடலில் ஈடுபட்டவர்களில் அதிகம் பேர் திமுகவினர். மதிமுக, தேமுதிக கட்சியினரும் உண்டு. ஆனால் அந்தக் கட்சியினர் எந்த நடவடிக்கையாவது எடுத்தார்களா?? இல்லவே இல்லை.. மிக நுட்பமாக வன்னியர்-பறையர் பிரச்சினையாக மாற்றினர். (ராமதாசின் செயல்களும் அப்படிதான் இருந்தது. அவரும் அதைதான் விரும்பியிருப்பார்..).

* ராமதாசும் அவர் மகனும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு தமிழ்த்தேசிய அடையாளம் கொடுத்து தமிழ்த்தேசியம் என்றாலே சாதிதான் என்று கேலி செய்கிறார்கள்.

* சாதி நிகழ்வுகளில் பங்கேற்கும் திராவிடக் கட்சிகள் பற்றி திராவிடம் பேசுகிறவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?? உடனே ஒரு வேதவாக்கு சொல்லுவார்கள் "ஓட்டு அரசியல் என்றாலே சந்தர்ப்பவாதம்" என்று. அது சரிப்பா, அந்த சந்தர்ப்பவாதிகளை பற்றிப் பேசாமல் எப்படி அய்யா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள்??  "அனைத்துக் கட்சிப் பெயரிலும் திராவிடம் இருக்கிறது.அதனால்திராவிடத்தைவீழ்த்தமுடியாது"என்கிறார் கி.வீரமணி.அப்ப மட்டும் திராவிடக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொள்கிறீர்கள்.. அவர்களின் சாதி சார்பை ஏனய்யா மூடி மறைக்கிறீர்கள்??

* திராவிடக் கட்சிக்காரர்கள்தான் தமிழகத்தில் பாதி இருக்கிறார்கள். இவர்கள் சாதி ஒழிப்பை மேற்கொண்டிருந்தால் சாதி இந்நேரம் ஒழிந்திருக்குமே!! ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஆனால் சாதி ஒழிப்பு போராளிகள் போல வேஷம் போடுவார்கள். (இந்த வேஷம் போடுற வித்தை தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியவில்லை.. )

* திராவிடக் கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அம்பேத்கர் ஏன் இன்னும் கூண்டுக்குள் இருக்கிறார்?? இதையெல்லாம் பற்றி பேசாமல் சாதி ஒழிப்பு நாடகம் போடுகிறார்கள்.

* அண்மையில் திக-திவிக-தபெதிக உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலையை கருணாநிதி ஆலோசனையின் பேரில் சுபவீ மேற்கொண்டிருக்கிறார்.. ஆனால் கோவை ராமகிருஷ்ணன் (தபெதிக) நழுவிக் கொண்டார்.. அவருக்கு வாழ்த்துகள்..

* முருகனை முப்பாட்டன் என்றுகூறி  சீமான் வேல் ஏந்தினால் சுபவீ பக்கம் பக்கமாக கட்டுரை  எழுதுகிறார். கேலி செய்கிறார்.ஆனால் பார்ப்பான் ராமானுஜர் பற்றி  தொடர் எழுதப் போகிறாராம் கலைஞர்.. திராவிடம் பேசுகிறவர்கள் அனைவரும் நவத்துவாரங்களையும் மூடிக் கொண்டு இருப்பதை கவனித்தீர்களா!! இவ்வளவுதான்யா பார்ப்பனிய எதிர்ப்பு..

* "இந்திய தேசிய கீதத்தில் திராவிடம் என்னும் சொல் இருக்கிறது. அதனால் திராவிடத்தை வீழ்த்த முடியாது" என்கிறார் கலைஞர்.

" தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் ஏன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்?" என்கிறார் சுபவீ.. 
பார்ப்பனிய இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போட திராணி இல்லாத திக கும்பல் தமிழ்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது.. அப்புறம் எதுக்குப்பா தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறீர்கள்? வடநாட்டு பக்கம் போயிட வேண்டியதுதானே!! ஆக திராவிடத்தை வளர்க்கிறோம் என்னும் பெயரில் இந்தியத்தைதான் வளர்க்கிறார்கள்..


* "ஓட்டு அரசியலில் அடித்துக் கொள்ளுங்கள். ஆனால் திராவிடத்தைக் காத்திட ஒன்று சேருங்கள்" என அதிமுக, திமுகவுக்கு அழைப்பு விடுக்கிறார் அய்யா வைகோ.
திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவின் கொள்கை.
அதிமுக எதிர்ப்பு என்பது திமுகவின் கொள்கை. நடுவுல எங்கிருந்து வந்தது திராவிடம்? அய்யா வைகோதான் இதுக்கு பதில் சொல்லணும்.

இதையெல்லாம் அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியவாதிகள் சாதிய அபிமானிகளாக இருப்பதால் திராவிடப்  பிழைப்புவாதிகளை  தீவிரமாக எதிர்க்க முடியவில்லை.. சம்பந்தமே இல்லாமல் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்..

பின் குறிப்பு: கட்டுரை படித்துவிட்டு எனக்கும் பார்ப்பனிய அடிமை, சாதி வெறியன் பட்டம் கொடுத்தால் மகிழ்ச்சியே!!

வியாழன், 5 மார்ச், 2015

திராவிடத்தின் பதட்டம்

திராவிட இயக்கத்தை வீழ்த்திவிட முடியாது என சில மாதங்களாக வைகோவும் கருணாநிதியும் மாறிமாறி அறிக்கை விடுவது காமெடியாக இருக்கிறது. அவர்களின் பீதியும் தெரிகிறது.

சாதி ஒழிப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று சாதி ஒழிப்பு பேசினார்கள்?

மதவாத எதிர்ப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று மதவாத எதிர்ப்பு பேசினார்கள்?
இப்படி கேட்டுக்கொண்டே போகலாம்.

இவர்கள் சொல்வதைப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத் தடை விதித்த ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழகத்தின் ஆகப்பெரும் திராவிடத் தலைவர்.


கருணாதியின் திராவிடத்தை 'முதலமைச்சு திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
விஜயகாந்தின் திராவிடத்தை 'போலித் திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
கருணாநிதியையும் விஜயகாந்தையும் திராவிட இயக்க தலைவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.


(பெரியார் திடலில் விஜயகாந்திற்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறதே! உண்மையா?)

ஆனால் போலித் தமிழ்த்தேசியம், முதலமைச்சு தமிழ்த்தேசியம் போன்ற வார்த்தைகள் இயல்பாக உதிக்கிறார்கள் திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள்.
தெருவுக்கு நாலு பெரு இருக்கிறபோதே இந்த பதட்டம் என்றால், நாளை தெரு முழுக்க தமிழ்த்தேசியவாதிகள் நிறைந்துவிட்டால்????

சனி, 10 ஜனவரி, 2015

சென்னை புத்தகக் கண்காட்சி 2014: எனது அனுபவம்



சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புத்தகக் கண்காட்சி நடக்கும் திடலுக்கு நுழைந்தேன். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் ரொம்ப அதிகமாக இருந்தது. வெளியே உள்ள மேடையில் தோழர் நல்லக்கண்ணு உரையாற்றிக் கொண்டிருந்தார். மேடையில் அய்யா நெடுமாறன் அமர்ந்திருந்தார். ஏதோ புத்தக வெளியீடு போல..


புத்தகக் கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்து புத்தகங்களை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தேன். சிலவற்றை வாங்கிக் கொண்டேன்.

உள்ளே செல்ல செல்ல எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் தொடர்பான கடைகள். புத்தகக் கண்காட்சியா அல்லது ஆன்மீகக் கண்காட்சியா என்று டவுட்டு வந்துவிட்டது.. எங்கு திரும்பினாலும் சாமியார்கள் பற்றிய நூல்களே கண்ணில் படுகின்றன. மலிவு விலை குரான், மலிவு விலை பகவத் கீதை என விற்பனை செய்கிறார்கள். 

வாழும் அவதார புருஷர் பரமஹம்ச நித்தியானந்தாவின்  குழுவினர் இரு கடைகளை ஆக்கிரமித்துள்ளார்கள். உள்ளே அவதார புருஷரின் போட்டோ போட்டு மாலையும் போட்டுள்ளார்கள்.. இப்படித்தான் கடவுளர்கள் தோன்றினார்களோ!!

விடியல், விஜயா, உயிர்மை, கிழக்கு, டிஸ்கவரி, நியூ செஞ்சுரி, பெரியார் சுயமரியாதைப் பதிப்பகம், கீழைக்காற்று, நக்கீரன், விகடன் என பிரபலக் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. நானும் இக்கடைகளில்தான் அதிக நேரம் செலவழித்தேன்.
குறிப்பாக காலச்சுவடு பதிப்பகத்தில் அதிக கூட்டம். பெருமாள் முருகனின் நூல்கள் அதிகம் விற்பனை ஆகியிருக்கும். அவரும் உள்ளே அமர்ந்திருந்தார்.

சங்கர் பதிப்பகம் என்று ஒரு கடை இருந்தது.
நம்ம சவுக்கு சங்கர்தான் கடையை விரிச்சிட்டாரோ! என்று ஷாக் ஆயிட்டேன்..

காலச்சுவடு பதிப்பகத்தில் அக்கா தமிழ்நதி அவர்களைக் காண முடிந்தது. பேஸ்புக்கில் அருமையாக எழுதுபவர். வெளிநாட்டில் வசிக்கிறார். புத்தகக் கண்காட்சியையொட்டி இங்கு வந்திருக்கிறார். என்னை அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். அவங்களுக்கு என்னை தெரியல. :(

தமிழ்மண் பதிப்பகத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்:
பெரியவர் ஒருவர் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஒரு நூலை எடுத்து ஒரு சிறுமியிடம் காட்டி (பேத்தியாக இருக்கும்) ‘யாருன்னு தெரியுதா?.. தலைவர்.. தலைவர்ன்னு சொல்லு’ என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். சிறுமியும் தலையை ஆட்டிக்கொண்டே தலைவர் என்றாள். மிகவும் மகிழ்வாக இருந்தது. #பிரபாகரனிசம் 

நான் வாங்கிய நூல்களின் பட்டியல்:
பச்சை தமிழ்த்தேசியம் – சு.ப.உதயகுமாரன்
உணவு யுத்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
நலம் 360 – மருத்துவர்  கு.சிவராமன்
அர்த்தமுள்ள அந்தரங்கம் – மருத்துவர் ஷாலினி
சிறு விசயங்களின் கடவுள் – அருந்ததிராய்
தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததிராய்
மறுபக்கம் – பொன்னீலன்
ஊரும் சேரியும் – சித்தலிங்கையா
சாதியும் நானும் – பெருமாள் முருகன்
பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் – புலிகளின் வெளியீடு

‘மறுபக்கம்’ தவிர்த்து அனைத்தும் சிறு சிறு நூல்களே! அதனால் விரைவில் படித்து முடித்து விடலாம் என எண்ணுகிறேன்.
தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சம் போன்ற நூல்களையும், நக்சலைட் அஜிதாவின் வாழ்க்கைக் குறிப்பு நூலையும் சில நாட்களுக்கு முன்னர்தான் வாங்கினேன். ஒரு நூல் தவிர மற்றவை அப்படியே உள்ளன. பொறுமையா படிப்போம். 

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழினவாதம் தொடர்பான கட்டுரைக்கு இந்தியவாத மகஇகவுக்கு பதில்

வினவு இணையதளம் தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள் என்னும் தலைப்பில் ஒரு நேர்காணல் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளிகளை தமிழகத்தை விட்டு வெளியேற தமிழினவாதிகள் சொல்வதாக கட்டுரை உள்ளது. (யார் அந்த தமிழினவாதிகள் என்று இறுதிவரைக்கும் கட்டுரையில் சொல்லவில்லை.)

இந்திய ரயில்வேயில் தமிழர்க்கு சம உரிமை இல்லை.
இந்திய பணி தேர்வுகளில் தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இந்தி ஆதிக்கம் அதிகம்  உள்ளது. இந்தி அல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
அதைப் பெற்றி நாம் பேசினால் 'தமிழினவாதமாம்'.
வெளிமாநில தொழிலாளிடம் சென்று சிண்டு முடியும் வேலை செய்யும் இவர்கள் செய்வது புரட்சியாம்.

அவர்களின் கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு:

வினவுக்கு புத்தி பேதலித்து விட்டதா??
வினவின் ரசிகனான எனக்கு இந்தக் கட்டுரை எரிச்சல் ஊட்டுகிறது.
வெளி மாநிலத்தவர் உள்ளே வரக் கூடாது என்று வினவிடம் சொன்னது யார்?
தமிழர்கள் இவ்வாறு சொல்வதாக வெளி மாநில நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்??
ஏன் இந்த சிண்டு முடியும் வேலை??

வேலைவாய்ப்பில் தமிழனுக்கு முன்னுரிமைக் கொடு என்றுதானே கேட்கிறோம்.
அதில் என்ன தவறு?
பல நாடுகளிலும் உள்ள நடைமுறைதானே!!

குறைந்த கூலிக்கு அழைத்துவரும் நபர்களை சென்று நேர்காணல் எடுக்கலாமே!
அவர்கள்தானே தமிழனையும், வெளிமாநில நண்பர்களையும் சுரண்டுகிறார்கள்.
அது குறித்த விழிப்புணர்வை வெளியாட்களுக்கு ஊட்டலாமே!
அவர்கள் கையிலும் சிவப்புக் கோடியைக் கொடுக்கலாமே!
அதை விடுத்து ஏன் இந்த சிண்டு முடியும் வேலை?

குறைந்த வேலைக்கு வெளியாட்கள் வருவதால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல, வெளியாட்கள்தான்.
அவர்களின் குடும்பம், குழந்தைகளின் படிப்பு எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது..
அவர்கள் தங்கள் ஊரிலேயே நிம்மதியா வாழ்வு வாழ வழிவகை செய்யல்லாமே!
வெளிமாநில நபர்கள் இங்கே வர என்ன காரணம்? அம்மாநிலங்களில் நிலவும் வறுமைதானே!
அதனை நீக்க என்ன வழி சொல்கிறீர்??
வெளிமாநிலங்களில் உள்ள சிவப்புக்கொடி ஆட்கள் என்ன செய்கிறார்கள்?
இல்லாத இந்தியாவுக்கான புரட்சிக்கு ஆள் சேர்க்கிறார்களா??

அளவுக்கு அதிகமான வெளியாட்கள் வரவால் தமிழ்நாட்டு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்களே! அதற்கு என்ன பதில் இருக்குது?

சீனாவில் வெளியாட்கள் வேலை பார்க்க அடையாள அட்டை வேண்டும்.
அதுவும் நிரந்தர வேலை கிடையாது. பல கட்டுப்பாடுகள் உள்ளன.
அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த சொல்லி உங்க சீனா பொதுவுடைமைவாதிகளிடம் சொல்லுங்க..

அது என்ன மாயமோ, மர்மமோ தெரியல.
தமிழன் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டால் வினவுக்கு வயித்தெரிச்சல்!!
ஒருவேளை இறுதிவரைக்கும் சாதி, மத சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது வெளியாட்களுக்கு புரியும்.
ஆனால் இதுபோன்ற சிண்டு முடியும் வேலையை வினவு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

திங்கள், 8 டிசம்பர், 2014

சமத்துவமாக வாழு, சமத்துவத்தோடு வாழ விடு

 'The angst of the Tamil brahmin: Live and let live' என்னும் தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.
தமிழ்நாட்டுல பார்ப்பனர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்று பத்ரி சேசாத்ரி என்பவர் அழுது புலம்பியுள்ளார்.
(நடிகன் டா!)

தமிழக கிரிக்கெட்டில் பார்ப்பான் ஆதிக்கம் இருக்குதுன்னு உண்மையை சொன்னால் இவருக்கு ஏன் கோவம் வருது?

சென்னையில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ள ப்ளாட் ஒன்றில் பல வீடுகளை பார்ப்பனர்கள் வாங்கியுள்ளார்கள்.
அது நமக்கு பிரச்சினை இல்லை. வாங்குவதும் விற்பதும் சொந்த விசயம்.
ஆனால் அங்கே கோடிக் கணக்கில் கொட்டி கொடுத்தாலும் பார்ப்பான் இல்லாதவருக்கு வீடு கிடையாதாம்!!
இங்கே ஒதுக்கப்படுவது யார்?

கோயம்பேடுல கருவாடு விற்க கூட தடை போடும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்துவது யார்?

சிதம்பரத்தில் தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமியை கோவிலுக்கு வெளியே தூக்கிப்போட்டு ரவுடித்தனம் செய்தது யார்?
தமிழையும் தமிழர்களையும் கோவிலை விட்டு வெளியேற்றியது யார்?

தமிழக அரசியலில் பார்ப்பனர்களே இல்லையாம்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க உள்ள பார்ப்பன அமைப்புகள் ஒன்றுக்கூடி தங்களின் அடியாளான மோடிக்கு ஆதரவு கொடுத்தீர்களே! பாஜக போட்டியிடாத இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தீர்களே! இதெல்லாம் அரசியலில் வராதா?

ஊடகத்துறையில் உங்க ஆதிக்கம்தானடே இருக்குது!! அதையெல்லாம் வசதியா மறந்துட்டீங்களே!

தனக்கு உள்ள சக்தியை வைத்து மோடியை பிராமணன் ஆக்குகிறேன் என்று பொறுக்கிசாமி சொன்னானே!
(அது என்ன சக்தி!)
தமிழர்களை ஒடுக்க பிராமணப் படை அமைப்பேன் என்றும் சொன்னானே!
அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? எத்தனை பார்ப்பனர்கள் அந்த திமிர்ப் பேச்சைக் கண்டித்தீர்கள்?


சிம்பதி(Sympathy) உருவாக்க என்னவெல்லாம் குட்டிக்கரணம் போடுகிறார் பத்ரி சேசாத்ரி!!

சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஒரு பார்ப்பான் சொன்னது:
"கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய பிராமணரைத் தவிர வேறு எவனுக்கு அருகதை இல்லை"

இதுதான் ஆதிக்கம், கொழுப்பு.
அதை முதல்ல நிறுத்துங்கடே!
அதற்குப் பின்னர் 'வாழு, வாழ விடு'ன்னு சமத்துவம் பேசலாம்.

குறிப்பு: பார்ப்பானையே குறை சொல்வதால் பிற சாதி வெறியர்கள் இன்பம் கொள்ள வேண்டாம்.
பார்ப்பானைப் போன்றே இன்ன பிற சாதி வெறியர்களும் ஆபத்தானவர்களே! புறக்கணிக்கப்பட வேண்டியவர்களே!

வெள்ளி, 28 நவம்பர், 2014

சாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி

திறமைக்கு மதிப்பில்லை.
SC/ST பிரிவினர் குறைந்த் மார்க் எடுத்தாலும் தேர்வாகி விடுகிறார்கள்.
சாதி இட ஒதுக்கீடுதான் சாதியை வளர்க்கிறது.

சாதி இட ஒதுக்கீடு பற்றி பேசும்போது முன்வைக்கப்படும் பொய்யான வாதங்கள் இவைதான்.
வெளிப்படையாக சொல்வதென்றால், நானும் அந்தக் கருத்தைத்தான் கொண்டிருந்தேன்.
ஆனால் அது பொய் என்று பின்னால் அறிந்து கொண்டேன்.

சாதி இட ஒதுக்கீடு என்பது SC/ST பிரிவுக்கு மட்டுமே உள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
BC, MBC, SC என அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது.

தமிழகத் தேர்வாணையத்தில் பல தேர்வுகள் எழுதி அதில் உள்ள கட்-ஆப் மதிப்பெண் பற்றி அறிந்ததால் சொல்கிறேன்.
அங்கு திறமை இருந்தால்தான் எவராக இருந்தாலும் தேர்வாக முடியும்.

உதாரணத்திற்கு குரூப்- 2 தேர்வை எடுத்துக் கொள்வோம்.
முதல்நிலைத் தெருவில் கட்-ஆப் மதிப்பெண்
BC - 152, MBC - 150, SC - 148, ST - 146 என்றுதான் இருக்கும்.

மதிப்பெண் அடிப்படையில்தான் திறமையை கணக்கிட்டால், தேர்வில் 130-க்கு மேல் பெறுகிற அனைவரும் திறமையானவர்களே!
அந்த அளவுக்கு தேர்வு கடினமாக இருக்கும். கணிதம் , இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொது அறிவு, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், இந்திய வரலாறு, தமிழ் வரலாறு, வணிகம் என பாடத் திட்டத்தை புரிந்து கொள்ளவே ஒரு வருடம் ஆகும்(முடிந்தால் கடந்த தேர்வு வினாத்தாளை வாங்கிப் பாருங்கள்)

அப்புறம் மெயின் தேர்வு. அதுக்கு பயந்துதான் நான் தேர்வு எழுதுவதையே நிறுத்திட்டேன்.
அதில் 1000 பெருக்கு 20 பேரை மட்டுமே அடுத்த சுற்றான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்.
அப்படியானால் மெயின் தேர்வு எவ்வளவு கடினமாக இருக்கும் என நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

அப்புறம் நேர்முகத் தேர்வு. அதில் நாலு பேரு  ரவுண்டு கட்டி  கேள்விகளைத் தொடுப்பார்கள்.

அவ்வளவையும் கடந்து வருகிறவன் எப்படி திறமை இல்லாதவனாக இருப்பான்?
தமிழகத் தேர்வாணையம் மட்டுமல்ல, மத்திய தேர்வாணையத்திலும் இதுதான் தேர்வுமுறை.

அனைவரும் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.
உங்க ஊரில் சாதி பார்த்துதானே சுடுகாடு கூட இருக்குது.
உங்க ஊரில் மட்டுமல்ல, எல்லா ஊரிலும் அப்படிதான் இருக்குது.
அதை முதலில் ஒழித்து ஒரு முன்னுதாரணத்தைக் காட்டினால் அடுத்த நிமிடமே 'சாதி இட ஒதுக்கீடு ஒழிப்பை' நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

குரூப்-2 தெருவில் பணியாணை பெற்ற, முதுநிலை பட்டத்தில் தங்க மெடல் வாங்கிய ஒருவரை போனவாரம் திண்டுக்கல்லில் சாதிவெறியர்கள் கொன்று கிணற்றில் வீசி விட்டார்கள். வேறுசாதிப் பெண்ணைக் காதலித்ததுதான் காரணம்.
'திறமையானவரை எதுக்குடா கொன்றீங்க?' என்று பலரும் கொதித்து எழுந்திருக்க வேண்டுமே!
இல்லையே! சாதி குறுக்கே நிற்குதே!
பாதி பேருக்கு இந்த செய்தியே தெரியாது. http://news.vikatan.com/article.php?module=news&aid=34947

இந்த லட்சணத்துல சாதி இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம்!

சாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி சாதியை ஒழிப்பதுதான்.


திங்கள், 17 நவம்பர், 2014

ரஜினிகாந்த் - ஒரு நல்ல தகப்பன்

லிங்கா பட ஆடியோ ரிலீசில் ரஜினி பேசியதான் ஒரு பகுதி:
"கோச்சடையான்  மூலமாக கொஞ்சம் பணத்தை இழந்தால்கூட, செளந்தர்யாவிற்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்தது. இனிமேல் வந்து அவங்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இருந்தாலே போதும்."

இதனை தமிழக மக்கள், குறிப்பாக ரஜினி கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகர்கள் நன்கு கவனிக்க வேண்டும்.

தான் சம்பாதித்த பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தன் மகள்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
இதில் எந்த தவறுமில்லை. அனைத்து தகப்பன்களும் சொல்லக் கூடிய ஒன்றே!
100% உண்மையான கருத்து.

ஆனால் தன் படத்தை முதல் நாளில் ஆயிரக் கணக்கில் டிக்கெட் விலை கொடுத்து பார்க்கும் ரசிகனுக்காக ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா?
ரசிகர்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் தியேட்டர் கட்டண கொள்ளைக்கு எதிராக பேசியிருக்க வேண்டுமே!

அதை விட்டுத் தொலையுங்க.
"கட்-அவுட், பேனர், போஸ்டர் என ஏம்ப்பா காசை வீணாக்குகிறீர்கள்?
போயி புள்ளை குட்டிகளைக் கவனியுங்கப்பா" என அறிவுரை சொல்லியிருக்கலாமே!

இதுவரை அறிவுரை சொன்னதில்லை.
இன்னும் சொல்லப் போவதில்லை.
(சொன்னாலும் அடிமைகள் காதில் அது விழப் போவதில்லை.
புகைப் பழக்கத்தை நிறுத்துமாறு ஒருமுறை வேண்டுகோள் விடுத்தார். அது வரவேற்புக்குரியது)

ரஜினிக்கு படம் தயாரிக்கத் துடிப்பவர்கள் ரஜினி என்னும் நடிகரின் திறமைக்காக அல்ல.
ரஜினி என்னும் பிம்பத்திற்க்குப் பின்னால் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
முதல்நாள் டிக்கெட்டிற்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராய் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
அந்த ரசிகர்களை விரட்டி விட்டால் ஒரு தயாரிப்பாளரும் ரஜினியை வைத்து படம் தாயாரிக்க வர மாட்டார்கள்.

ஆக ரஜினியின் மகள்களுக்காக ரசிகர்களும், சினிமா அடிமைகளும் சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள்.
பல தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள்.

பணத்தை பாதுகாக்க மகளுக்கு அறிவுரை.
பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அரசியல், அது இதுன்னு ஆசை வார்த்தைகள்.

உண்மையில் ரஜினிகாந்த் நல்ல தகப்பன் மற்றும் மகா நடிகன்.

திங்கள், 20 அக்டோபர், 2014

ஆண்டப் பரம்பரையெல்லாம் அவாளின் காலடியில் சமத்தா அடங்கிடுவாள்...

நாடார் சாதி தாழ்த்தப்பட்ட சாதி, பல இன்னல்களை அனுபவித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் சொல்லியிருந்தார்கள்.

"அய்யகோ! அது எப்படி நாடாரை தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லலாம்.
நாங்கள் அப்படி கிடையாது. நாங்கள் உயர்சாதி" என்று கொந்தளித்தவர்களில் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒருவர்.


இப்போ இந்த படம் சொல்லும் செய்தி என்ன, மிஸ்டர்.பொன்னார் அவர்களே!

எந்தப் பதவியிலும் இல்லாத அயோக்கிய பார்ப்பான் மற்றொரு பார்ப்பானுக்கு (ஜெயேந்திரன்) இணையாக அமர்ந்து பேசலாம்.

மத்திய அமைச்சராக உள்ள பார்ப்பான் அல்லாதவர்(பொன்.ராதாகிருஷ்ணன்) பார்ப்பானுக்கு கீழே அமர்ந்துதான் பேச வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் உள்ள கோவிலுக்குள் பீகார் முதல்வர் (தலித்) வந்து சென்ற பின்னர், கோவிலைக் கழுவி விட்டதை இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சாதியைக் கட்டமைத்த பார்ப்பனியத்தையும்,
பார்ப்பனியத்துக்கு முட்டுக்கொடுக்கும் இந்துமத புராணங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.


ஆண்ட பரம்பரைக் கனவில் இன்பம் காணும் இடைநிலைச் சாதிகள் பற்றி இந்தக் கட்டுரையை படித்து புரிந்து கொள்ளுங்கள்

 

==
*நாடார் சாதிப் பெண்கள் மாராப்பை கூட மறைக்க விடாமல் சிறுமையையும் ,இழிவையும் தந்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*திருச்செந்தூர் முருகன் கோவில் பள்ளு ,பறையர்,சாணார் ,சக்கிலியர் நுழைய கூடாது என போர்டு வைத்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*இன்னமும் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் நாடார்கள் முகப்பு நுழைவு வாயில் வழியாக செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*சாணார்கள் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*விருதுநகர் மாவட்ட நாடார்கள் தங்களை சத்திரிய குலம் என அழைத்து கொண்டு,பூணூலும் அணிந்து கொண்டனர். அவர்கள் 'பூணூல்'அணிவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் சங்கராச்சாரியாரின் வர்க்கம் தானே .!

@Thymiah NA
==

செவ்வாய், 7 அக்டோபர், 2014

வியாபாரம் ஒன்றே ஊடகங்களின் குறிக்கோள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்ர்கள் சிறை சென்ற செய்தியே பல ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.

சிறையில் யாரையும் ஜெயா சந்திக்கவில்லை என்பது பல ஊடகங்களின் செய்தி. கர்நாடக காவல்துறையும் அதனையே சொல்கிறது.
இந்நிலையில் நக்கீரன் தன் இதழ் தலைப்பு செய்தியாக எழுதியுள்ளது:
'அப்பாவையும் மகனையும் உடனே கைது செய்ய ஜெயா உத்தரவு'.
அதாவது கருணாவையும் அவரது மகன் ஸ்டாலினையும் கைது செய்ய ஜெயா உத்தரவாம்.

யாருக்கு உத்தரவு கொடுத்தார்?
எப்போது கொடுத்தார்?
எங்கே வைத்து கொடுத்தார்?
என எந்த தகவலும் நக்கீரன் சொல்லவில்லை.

அப்புறம் எதுக்கு இதுபோன்ற செய்தியை வெளியிட வேண்டும்?
திமுகவினரை ஆத்திரமடைய செய்வது தவிர இந்த செய்தியின் நோக்கம் வேறு எதுவாகவும் இருக்க வாய்ப்பில்லை.
நக்கீரனுக்கு இது போன்ற செய்திகள் புதிதல்ல.

அடுத்து சன் செய்திகள் சேனலுக்கு வருவோம்.

நேற்று சன் செய்திகள் சேனங்லில் ஃப்ளாஷ் ந்யூஸ் மற்றும் அதை ஒட்டிய விவாதத்தின் தலைப்பு:
"பெங்களூரில் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா?
தமிழகத்தில் கன்னடர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா? "

எவனோ ஒரு அதிமுக அடிமை கன்னடர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளான்.
இருமாநில காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து, அது போன்ற போஸ்டர்களை அகற்றிவிட்டனர்.

இங்கு வாழும் கன்னடன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.
அங்கு வாழும் தமிழன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.

ஆனால் நடுவே சில அரசியல் பொறுக்கிகள் தேவையற்ற சர்ச்சைகளை உண்டாக்குகிறார்கள்.

பொறுப்புடன் செயல்பட மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று யாராக்சும் சன் செய்திகளிடம் வந்து முறையிட்டானா?
சன் செய்திகள் ஃப்ளாஷ் செய்தியின் நோக்கம் என்ன?
அதிமுகவினரை வன்முறையாளர்களாக காட்டி தான் அரசியல் லாபத்தைப் பார்ப்பது.

ஊடகங்களே,
தங்களின் வியாபார லாப வெறிக்கு, அரசியல் வெறிக்கு தயவுசெய்து சமூகத்தில் குழப்பம் விளைவிக்காதீர்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மதம் மனிதனை மிருகமாக்கும்

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பற்றியும், வேடமணியும் பக்தர்கள் பற்றியும் தவறாக பேசியிருக்கிறார்கள் மோகன் சி லாசரஸ் தலைமையிலான அல்லேலூயா கோஷ்டியினர்.

அந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு தசரா திருவிழாவில் தன் விஷம அரசியலை விதைக்க  இந்துத்வ கும்பல் கிளம்பியிருக்கிறது.

மதம் மனிதனை மிருகமாக்கும்.



குலசேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து கடவுளாக வழிபட்டனர். முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள்.  அவ்வாறான அம்மனுக்கு இந்து அடையாளம் கொடுத்து அயோக்கியத்தனம் செய்கிறது இந்துத்துவ கும்பல்.

தன் முதுகில் உள்ள அழுக்கை துடைக்காமல் அடுத்தவனை குறை கூறுகிறது மோகன் சி லாசரஸ் கும்பல்.

source: http://tutyonline.in/node/9430