திங்கள், 1 பிப்ரவரி, 2016

சுபவீ-க்கு சில கேள்விகள்

அருந்ததியர்களில் இதுவரை சட்டமன்ற வேட்பாளர்களாக எத்தனை பேரை நிறுத்தியுள்ளீர்கள்? - என்று தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நோக்கி சுபவீ  கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரிய கட்சியான திமுகவை நோக்கி கேட்க வேண்டிய கேள்வியை பத்து சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சிறிய கட்சியான விசிக நோக்கி எழுப்பியிருக்கிறார் சுபவீ.

இப்ப நாமும் சுபவீயிடம் சில கேள்விகள்  கேட்போம்.

1. திமுக கூட்டணியில் இருந்த எத்தனை பொது தொகுதிகளை விசிகவுக்கு திமுக கொடுத்தது?

2. அருந்ததியர் தமிழகத்தில் எங்கு ஒடுக்கப்பட்டாலும் அதனை எதிர்த்து சிறுத்தைகள் களத்தில் நிற்கிறார்கள்.. திமுக என்ன செய்து கொண்டிருந்தது??

3. எத்தனை அருந்ததியர்கள் திமுகவில் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள் ?

4. எத்தனை அருந்ததியர்களுக்கு இதுவரை திமுகவில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது??

இந்த கேள்விகளுக்கு சுபவீ அவர்கள் பதில் வேண்டும்...

விசிக கட்சி - அருந்ததியர் இடையே பகை மூட்டும் விதத்தில் சுபவீ செயல்படுகிறார். பிரித்தாளும் போக்கை ஆரியர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார் போல சுபவீ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக