தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 மே, 2018

ஆபரேஷன் நமோ

கடந்த நாடாளுமன்றத்தேர்தல்(2014) நடக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னரே "மோடி அலை" என்னும் மாயத்தை திட்டமிட்டு உருவாக்கினார்கள். குஜராத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல சித்தரித்தார். "குஜராத் ஒளிர்கிறது", "vibrant குஜராத்" என ஏதேதோ பேசினார்கள்.

சரி, இதெல்லாம் இந்தியா முழுக்க அனைத்து இடங்களிலும் எப்படி போய் சேர்ந்தது?
சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் மூலமாக பொய் செய்திகளைப் பரப்பினார்கள். போட்டோஷாப், மார்பிங் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டன.
நானும் ஆரம்பத்தில் இந்த கதைகளை நம்பினேன். நம்பவைக்கப்பட்டேன்.

கடந்த நாலு வருடத்தில் என்ன நடந்தது?
விலைவாசி குறைந்ததா? இல்லை.
பெட்ரோல், டீசல் விலை குறைந்ததா? இல்லை.
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டனவா? இல்லை.
விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டதா? இல்லை.
இங்கே எதுவும் நடக்கவில்லை.

ஆனால் என்ன நடந்தது?
முதலாளிகளுக்கு அதிக கடன் தள்ளுபடிகள் செய்யப்பட்டன.
மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
பல உதாரணங்களை சொல்ல முடியும்.
என்ன சாப்பிட வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் என்னும் ஒரு மதவாதக் கும்பல் தீர்மானிக்கும் நிலை உள்ளது.
மாட்டுக்கறி உண்டதற்காக கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டது.
இந்துத்துவமும், இந்தியும் திணிக்கப்படுகின்றன. பெரும் பாசிசத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. எதிர்த்து கேள்வி எழுப்பியோர் ஒடுக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். நீதிமன்றம், சிபிஐ, வருமானவரித்துறை அனைத்தையும் தன் நலனுக்காக பாஜக பயன்படுத்தியது.

எப்படி தடுத்து நிறுத்துவது?
அவர்கள் சென்ற அதே வழியில்தான் நாமும் அவர்களை வீழ்த்த முடியும்.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றை பாசிச எதிர்ப்புக்காக பயன்படுத்துவீர். சொந்தக்காரன் என்ன நினைப்பான்? கூட வேலை செய்றவன் என்ன நினைப்பான்? போன்ற தயக்கங்களை விட்டொழியுங்கள். ஏனெனில் பாஜக ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் இப்படியெல்லாம் நினைப்பதே இல்லை. மோடி ஆதரவு நிலைப்பாடு எடுப்பவர்களிடம் ஆரோக்கியமான  விவாதம் செய்யுங்கள். உண்மையான ஆதாரங்களோடு விளக்குங்கள். மோடி(பாசிச) எதிர்ப்பை வலுப்படுத்துங்கள்.

சரி, என்னதான் தீர்வு?
நிச்சயமாக காங்கிரஸ் தீர்வு  கிடையாது. மாநில சுயாட்சியே தீர்வு.
இந்தியா முழுவதும் உள்ள  மாநிலக் கட்சிகளை வலுப்படுத்தி அதிகாரத்தைப் பகிர்வதே தீர்வு. அப்போதுதான் மாநில உரிமைகளைக் காக்க முடியும். மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்க முடியும்.

”ஆபரேஷன் நமோ"வில் தங்களை இணைத்துக் கொள்வீர்.
மோடி ஆட்சியின் அவலங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களிடம் எடுத்து செல்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இப்போது நாம் விட்டால் நம் தலையில் நாமே மண் அள்ளிப்போட்டது போல ஆகிவிடும்.
2019 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. ஒருவேளை மீண்டும் பாஜக பெரும்பான்மையோடு  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அதற்கு அடுத்த வருடங்களில் தேர்தலே இல்லாத நிலை ஏற்படும். சர்வாதிகாரத்தின் கீழ் வாழ நேரிடும்.
சிந்தித்து செயல்படுவீர்

வியாழன், 4 ஜனவரி, 2018

வரலாறு தெரிய வேண்டும் என்பதெல்லாம் ஓர் அரசியல் தகுதியா?

"ரஜினிக்குத்  தமிழர் வரலாறு தெரியுமா? பூலித்தேவனைப் பற்றித் தெரியுமா? தீரன் சின்னமலை பற்றித் தெரியுமா?..." என தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

உடனே பத்ரி சேசாத்திரிக்கு கோபம் வந்துவிட்டது. அவரும் ரஜினியின் "ஆன்மீக" வழியில் செல்லும் நபராச்சே!
(பாபர் மசூதி இடிப்பின்போது பெரும்  மகிழ்ச்சியில்  இருந்த 'ஆன்மீக'வாதிதான் இந்த சேசாத்திரி.)

"வரலாறு தெரிந்து என்ன செய்யப் போகிறார்? இதெல்லாம் ஒரு தகுதியா? ஓபிஎஸ்க்கு வரலாறு  தெரியுமா?..." என எதிர் கேள்வி எழுப்பியிருந்தார் பத்ரி.

மேலோட்டமாக யோசித்தால் பத்ரி கூறுவது சரிதானே எனத் தோன்றும். ஆனால் முற்றிலும் தவறு.

மேலும் அவரது கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.
வரலாறு தெரியாத காரணத்தினால்தான் ஓபிஎஸ் போன்றோரை இந்துத்துவக்/பிராமணக்  கும்பல் தங்களின் அடிமையாகப்  பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.

வரலாற்றை மறந்த காரணத்தினால்தான் விடுதலைப் போராளிகளை, பெருமைமிக்க அடையாளங்களை சாதியக் கும்பல்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டன.
தற்போது இந்துத்துவக் கும்பலும் அந்தப் பணியைத்தான் செய்கின்றன. மருது ஜெயந்தி கொண்டாடுவது, தீரன் சின்னமலைக்கு விழா எடுப்பது என பல செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதனை எதிர்கொண்டு முறியடிக்க அரசியல் செய்ய வேண்டும். அதற்கு வரலாற்றுப் பார்வை வேண்டும்.
ஆகவே இங்கு அரசியலில் இருப்போருக்கு வரலாற்றுப் பார்வை கட்டாயம் இருக்க  வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்த எதிர்வினைகள்

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறத் துவங்கும்போது மக்களை அரசியல் நீக்கம் செய்ய சிலக் கோமாளிகள் களத்தில் இறக்கப்படுவது இயல்புதான்.



***************

மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு மக்களே  போராடுவதுதான்   உண்மையான அரசியல். இந்த அரசியல் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆனால் போராட்டமே வேண்டாம் என்கிறார் ரஜினி.
"நல்லா வாழு, நல்லதே நினை" என ஆன்மீக சொற்பொழிவு கொடுப்பதுதான் ரஜினியின் அரசியல்.

****************

சாமானியன்: ஐயா, எங்க ஊருல தண்ணீர், சாலை வசதி இல்லைங்க. ரொம்ப கஷ்டப்படுறோம்.

ரஜினி: நிம்மதியா தியானம் பண்ணுங்க. நல்லதையே நினைங்க. நல்லதே நடக்கும்.

சாமானியன்: ???

****************

யாரும் அரசியல் பேச வேண்டாம்.
விமர்சனங்கள் வைக்க வேண்டாம்.
அறிக்கைகள், போராட்டங்கள் வேண்டாம்.
ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம்.
தேர்தலில் சந்திப்போம்...

// இதைதான் சொல்லுறார் ரஜினி.
விஜயகாந்தை விட மோசமா இருக்கு...

*************

போராட்டத்தினால்தான் ஜல்லிக்கட்டு காப்பாற்றப்பட்டது.
போராட்டத்தினால்தான் காவிரி, முல்லைப்பெரியாறு உரிமைகள் தக்கவைக்கப்பட்டன.
போராட்டத்தினால்தான் ராஜீவ் மரண வழக்கில் நிருபராதிகள் தூக்கு நிறுத்தப்பட்டது.
போராட்டத்தினால்தான் மதுக்கடைகள் மூடல் நடந்தது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
போராடாமல் இங்கே எதுவும் நடக்காது.

ஆனால் போராட்டம் செய்பவர்களை மிகவும் ஏளனமாகப் பேசுகிறார் மேட்டுக்குடி ரஜினி.

************

"இந்த ஜனநாயக நாட்டுல யார் வேண்டுமானாலும்...." என குரூப் வாதிடுகிறது...
:) :)

மராட்டியத்திலும் கர்நாடகாவிலும் ஜனநாயகம் கிடையாதா.. அங்கெல்லாம் தேர்தல்ல நிக்க முடியாதா?
தமிழ்நாடேதான் வேணுமா ரசினிக்கு???

************

நேரே தேர்தலுக்கு வந்து முதல்வர் ஆவதுதான் ரஜினியின்  கொள்கை..

இன்னும் மூணரை வருசம் இருக்கு..
அதுக்குள்ளே இன்னிக்கு பேசினதை அவரே மறக்க வாய்ப்பு உண்டு

*************

கொள்கையை கேட்டால் தலையே சுத்துதான் ரஜினிக்கு..
என்ன ஒரு ஆணவப் பேச்சு!
இன்னும் என்னென்னவோ கேள்விகள் வரும்.  அதுக்கு நெஞ்சு வலி வருமோ!!

***********
தமிழர் எழுச்சியோடு துவங்கிய 2017 வருடம்
ஒரு கோமாளி பற்றிய அரசியல் விவாதத்தோடு முடிகிறது..
**********