ISIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ISIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 நவம்பர், 2015

பேஸ்புக்கின் பிரச்சாரம் தீவிரவாதத்திற்கு எதிராகவா? அரசப் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவா?

சில நண்பர்கள் மூவண்ணத்தில் வாட்டர்மார்க் அடித்த புகைப்படத்தை ப்ரோபைல் படமாக வைத்திருக்கிறார்கள். சில நாட்கள் கழித்து பேஸ்புக் வந்ததால் என்ன காரணம் என்று தெரியவில்லை. டிஜிட்டல் இந்தியா மாதிரி வேறு ஏதேனும் திட்டம் வந்து விட்டதோ என்று எண்ணினேன்.
அப்புறம்தான் தெரிந்தது அது பிரான்ஸ் நாட்டின் கொடியின் வண்ணம் என்று.





இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன.

* இனி எங்கெல்லாம் குண்டு வெடிக்குதோ, அந்தந்த நாடுகளின் கொடியை ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா? அதன் மூலம் தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியுமா?

* தீவிரவாதத்திற்கு மதம், இனம், நாடு என எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் தீவிரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் ஒரு நாட்டின் தேசிய அடையாளத்தை ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

* தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்யாமல் போலி தேசபக்தியையும், அரச பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும் செயலுக்கு பேஸ்புக் உடந்தை போகிறதா?.

* பிரான்ஸ் அரசின் பயங்கரவாதத்தால் சிரியாவில் கொல்லப்படும் அப்பாவிகளுக்காக நான் சிரியாவின் கொடியை எனது ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா?

* சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் பள்ளிக்குழந்தைகளை தீவிரவாதிகள் கொண்டபோது பாகிஸ்தான் கொடியை முகப்பு படமாக வைக்க சொல்லி பேஸ்புக் பிரச்சாரம் செய்ததா?
 

ரொம்ப குழப்பமா இருக்கு.. உருப்படியான பதில் இருந்தா சொல்லுங்க மக்களே!!

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தீவிரவாதத்தின் ஆணிவேர்

ஒசாமாக்களையும் உசேன்களையும் உருவாக்கிவிடுவது,
பின்னர் 'தீவிரவாதத்தை அழிப்போம்' என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுவது,
போர் என்னும் பெயரில் அப்பாவிகளை கொன்றுகுவித்து விட்டு, எண்ணைய்க் கிணறுகளை தன் வசப்படுத்துவது,
அரபு நாடுகளின் ஆசியோடு அவர்கள் மண்ணில் தன் ஆதிக்கத்தை நிலைக்க செய்வது.
இதுதான் காலம்காலமாக அமெரிக்கா நடத்தும் செயல்.
(இன்னும் 10000 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். ஆப்கனில் அமெரிக்காக்காரனுக்கு என்ன புடுங்குற வேலை??)

தீவிரவாதத்தின் ஆணிவேரைத் தேட முயற்சித்தால் அந்த தேடல் அமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் சென்று முடிவடையும்.


இப்போது புதிதாக ஐஸிஸ்(ISIS) என்னும் மற்றொரு மனிதவிரோதக் கூட்டம் கிளம்பியிருக்கிறது.
( எங்கே இருந்து கிளம்பியதோ! )

ஷியா முஸ்லிம்கள், குர்து மற்றும் யாசிடி இன மக்களைக்(அவர்களும் முஸ்லிம்கள்) கொன்று குவித்தது.
ஊடகவியலாளர்களின் தலையை துண்டிக்கிறது.
(இதுல அல்லா ஹூ அக்பர் கோஷம் வேற.. ).
ஷியாக்களின் மசூதிகளையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் இடித்து நாசமாக்கியது.

அந்தக் காட்டுமிராண்டிகளை அழிக்க அமெரிக்கா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவும் இணையப் போவதாக ஒபாமாவுக்கு மோடி உறுதியளித்துள்ளதாக பொறுக்கி சுசாமி தெரிவித்துள்ளான்.

ஐஸிஸ் காட்டுமிராண்டிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அவர்களின் தோற்றம் மற்றும் பின்னணி குறித்தும், தீவிரவாதத்தில் அமெரிக்காவின் பங்கு என்னவென்பதும் விவாதிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் தீவிரவாதத்தை நிரந்தரமாக அழிக்க முடியாது.