வெள்ளி, 14 டிசம்பர், 2012

யாரெல்லாம் அணு உலையை ஆதரிக்கிறார்கள்?

1.அணு உலை, அணுக்கழிவு இவற்றின் ஆபத்து பற்றி சரியாக தெரியாதவர்கள். சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலைகள், நீர் அணைகள் இவற்றிலிருந்து பெரும் அளவில் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற உண்மை இவர்களுக்கு தெரியாது.

2.தினமலர் போன்ற ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்பி, தங்களுக்கு உலக அரசியல் தெரிந்தது போல காட்டிக்கொள்பவர்கள். கல்பாக்கம் அணு உலையால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி இவர்களுக்கு தெரியாது. தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாடு 4000MW விட அதிகம் . கூடங்குளத்திலிருந்து 300MW கூட கிடைக்காது என்ற உண்மை இவர்களுக்கு தெரியாது.

3.அப்துல்கலாம் சொல்வதே வேதவாக்கு என்று நம்பி மல்லாக்க படுத்து வல்லரசு கனவு காண்பவர்கள். போபாலில் என்ன நடந்தது என்று கூட இவர்களுக்கு தெரியாது.

4.தன் வீட்டுக்கு வெளிச்சம் வேண்டும். இதற்காக பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தாலும் பரவாயில்லை என்று கருதுபவர்கள். இன்னொரு இனப்படுகொலை நடந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள்.

5.சில ஓட்டுப்பொறுக்கி கட்சி தலைவர்கள் சொல்வதை அப்படியே கேட்கும் முட்டாள் தொண்டர்கள்.
இதுபோக வேறு பிரிவினர் இருந்தால் தெரிவிக்கவும்.
நீங்கள் யாரேனும் இந்த பிரிவுகளில் இருந்தால் தங்களை மாற்றிக்கொள்ளவும்.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக