திங்கள், 17 நவம்பர், 2014

ரஜினிகாந்த் - ஒரு நல்ல தகப்பன்

லிங்கா பட ஆடியோ ரிலீசில் ரஜினி பேசியதான் ஒரு பகுதி:
"கோச்சடையான்  மூலமாக கொஞ்சம் பணத்தை இழந்தால்கூட, செளந்தர்யாவிற்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்தது. இனிமேல் வந்து அவங்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இருந்தாலே போதும்."

இதனை தமிழக மக்கள், குறிப்பாக ரஜினி கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகர்கள் நன்கு கவனிக்க வேண்டும்.

தான் சம்பாதித்த பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தன் மகள்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
இதில் எந்த தவறுமில்லை. அனைத்து தகப்பன்களும் சொல்லக் கூடிய ஒன்றே!
100% உண்மையான கருத்து.

ஆனால் தன் படத்தை முதல் நாளில் ஆயிரக் கணக்கில் டிக்கெட் விலை கொடுத்து பார்க்கும் ரசிகனுக்காக ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா?
ரசிகர்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் தியேட்டர் கட்டண கொள்ளைக்கு எதிராக பேசியிருக்க வேண்டுமே!

அதை விட்டுத் தொலையுங்க.
"கட்-அவுட், பேனர், போஸ்டர் என ஏம்ப்பா காசை வீணாக்குகிறீர்கள்?
போயி புள்ளை குட்டிகளைக் கவனியுங்கப்பா" என அறிவுரை சொல்லியிருக்கலாமே!

இதுவரை அறிவுரை சொன்னதில்லை.
இன்னும் சொல்லப் போவதில்லை.
(சொன்னாலும் அடிமைகள் காதில் அது விழப் போவதில்லை.
புகைப் பழக்கத்தை நிறுத்துமாறு ஒருமுறை வேண்டுகோள் விடுத்தார். அது வரவேற்புக்குரியது)

ரஜினிக்கு படம் தயாரிக்கத் துடிப்பவர்கள் ரஜினி என்னும் நடிகரின் திறமைக்காக அல்ல.
ரஜினி என்னும் பிம்பத்திற்க்குப் பின்னால் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
முதல்நாள் டிக்கெட்டிற்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராய் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
அந்த ரசிகர்களை விரட்டி விட்டால் ஒரு தயாரிப்பாளரும் ரஜினியை வைத்து படம் தாயாரிக்க வர மாட்டார்கள்.

ஆக ரஜினியின் மகள்களுக்காக ரசிகர்களும், சினிமா அடிமைகளும் சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள்.
பல தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள்.

பணத்தை பாதுகாக்க மகளுக்கு அறிவுரை.
பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அரசியல், அது இதுன்னு ஆசை வார்த்தைகள்.

உண்மையில் ரஜினிகாந்த் நல்ல தகப்பன் மற்றும் மகா நடிகன்.

2 கருத்துகள்: