சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 டிசம்பர், 2014

லிங்காவும், ஜனநாயக விரோதமும்

ஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் சில முட்டாள்களின் தொல்லை தாங்க முடியல..
படம் ஆயிரம் கோடி கலெக்ஷன், செம ஹிட், மாஸ் என கதை விடுகிறார்கள். (
ஒருவேளை அவர்களுக்கு  மட்டும் வேற படத்தைக் காட்டிவிட்டார்களோ!!)

அது எக்கேடும் கெட்டு போகட்டும்.
ஆனால் லிங்கா படத்தை விமர்சித்த சில பேஸ்புக் ஐடிகள், இணையங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இது முற்றிலும் ஜனநாயக விரோத செயல்.
படத்தை நூறு, இருநூறு கொடுத்து பார்க்கிறவன் விமர்சனம் பண்ணதான் செய்வான்.
விமர்சனம் வரக்கூடாது என்றால் படத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

லிங்கா பட தயாரிப்பாளர் அவர்களே,
இணையத்தில் படத்தை விமர்சிப்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தீங்களாமே!!
ஏன் ஆந்திரா, கேரள, கன்னட போலீசிடம் புகார் கொடுக்கவில்லை?
தமிழன் என்ன இளிச்சவாயனா??
தமிழனின் பணம் மட்டும் வேண்டும், ஆனால் தமிழன் நெகடிவ் விமர்சனம் வைக்க கூடாது. அப்படிதானே!!!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ரஜினிக்கு மேக்-ஆப் போட செலவழிச்ச பணம் மற்றும் நேரத்தில் இன்னொரு படத்தை எடுத்து முடித்திருக்கலாம்.

லிங்குசாமியா இருந்தாலும், லிங்காவாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்..
இப்ப, இந்த  பக்கத்தை முடக்குங்கள் பார்ப்போம்.

நடிகர் ரஜினிக்கு வேண்டுகோள்: அய்யா, உங்க வயதுக்கு ஏற்றபடி கதை தேர்வு செய்து நல்ல படம் கொடுக்க முயற்சி செய்யுங்க. சுத்தியிருப்பவர்கள், விசிலடிச்சான் குஞ்சுகளின் பேச்சைக் கேட்டு மொக்கைப் படத்தை ஏற்றுக் கொள்ளாதீர்..

திங்கள், 17 நவம்பர், 2014

ரஜினிகாந்த் - ஒரு நல்ல தகப்பன்

லிங்கா பட ஆடியோ ரிலீசில் ரஜினி பேசியதான் ஒரு பகுதி:
"கோச்சடையான்  மூலமாக கொஞ்சம் பணத்தை இழந்தால்கூட, செளந்தர்யாவிற்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்தது. இனிமேல் வந்து அவங்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இருந்தாலே போதும்."

இதனை தமிழக மக்கள், குறிப்பாக ரஜினி கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகர்கள் நன்கு கவனிக்க வேண்டும்.

தான் சம்பாதித்த பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தன் மகள்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
இதில் எந்த தவறுமில்லை. அனைத்து தகப்பன்களும் சொல்லக் கூடிய ஒன்றே!
100% உண்மையான கருத்து.

ஆனால் தன் படத்தை முதல் நாளில் ஆயிரக் கணக்கில் டிக்கெட் விலை கொடுத்து பார்க்கும் ரசிகனுக்காக ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா?
ரசிகர்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் தியேட்டர் கட்டண கொள்ளைக்கு எதிராக பேசியிருக்க வேண்டுமே!

அதை விட்டுத் தொலையுங்க.
"கட்-அவுட், பேனர், போஸ்டர் என ஏம்ப்பா காசை வீணாக்குகிறீர்கள்?
போயி புள்ளை குட்டிகளைக் கவனியுங்கப்பா" என அறிவுரை சொல்லியிருக்கலாமே!

இதுவரை அறிவுரை சொன்னதில்லை.
இன்னும் சொல்லப் போவதில்லை.
(சொன்னாலும் அடிமைகள் காதில் அது விழப் போவதில்லை.
புகைப் பழக்கத்தை நிறுத்துமாறு ஒருமுறை வேண்டுகோள் விடுத்தார். அது வரவேற்புக்குரியது)

ரஜினிக்கு படம் தயாரிக்கத் துடிப்பவர்கள் ரஜினி என்னும் நடிகரின் திறமைக்காக அல்ல.
ரஜினி என்னும் பிம்பத்திற்க்குப் பின்னால் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
முதல்நாள் டிக்கெட்டிற்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராய் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
அந்த ரசிகர்களை விரட்டி விட்டால் ஒரு தயாரிப்பாளரும் ரஜினியை வைத்து படம் தாயாரிக்க வர மாட்டார்கள்.

ஆக ரஜினியின் மகள்களுக்காக ரசிகர்களும், சினிமா அடிமைகளும் சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள்.
பல தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள்.

பணத்தை பாதுகாக்க மகளுக்கு அறிவுரை.
பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அரசியல், அது இதுன்னு ஆசை வார்த்தைகள்.

உண்மையில் ரஜினிகாந்த் நல்ல தகப்பன் மற்றும் மகா நடிகன்.