திங்கள், 8 டிசம்பர், 2014

சமத்துவமாக வாழு, சமத்துவத்தோடு வாழ விடு

 'The angst of the Tamil brahmin: Live and let live' என்னும் தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.
தமிழ்நாட்டுல பார்ப்பனர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்று பத்ரி சேசாத்ரி என்பவர் அழுது புலம்பியுள்ளார்.
(நடிகன் டா!)

தமிழக கிரிக்கெட்டில் பார்ப்பான் ஆதிக்கம் இருக்குதுன்னு உண்மையை சொன்னால் இவருக்கு ஏன் கோவம் வருது?

சென்னையில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ள ப்ளாட் ஒன்றில் பல வீடுகளை பார்ப்பனர்கள் வாங்கியுள்ளார்கள்.
அது நமக்கு பிரச்சினை இல்லை. வாங்குவதும் விற்பதும் சொந்த விசயம்.
ஆனால் அங்கே கோடிக் கணக்கில் கொட்டி கொடுத்தாலும் பார்ப்பான் இல்லாதவருக்கு வீடு கிடையாதாம்!!
இங்கே ஒதுக்கப்படுவது யார்?

கோயம்பேடுல கருவாடு விற்க கூட தடை போடும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்துவது யார்?

சிதம்பரத்தில் தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமியை கோவிலுக்கு வெளியே தூக்கிப்போட்டு ரவுடித்தனம் செய்தது யார்?
தமிழையும் தமிழர்களையும் கோவிலை விட்டு வெளியேற்றியது யார்?

தமிழக அரசியலில் பார்ப்பனர்களே இல்லையாம்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க உள்ள பார்ப்பன அமைப்புகள் ஒன்றுக்கூடி தங்களின் அடியாளான மோடிக்கு ஆதரவு கொடுத்தீர்களே! பாஜக போட்டியிடாத இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தீர்களே! இதெல்லாம் அரசியலில் வராதா?

ஊடகத்துறையில் உங்க ஆதிக்கம்தானடே இருக்குது!! அதையெல்லாம் வசதியா மறந்துட்டீங்களே!

தனக்கு உள்ள சக்தியை வைத்து மோடியை பிராமணன் ஆக்குகிறேன் என்று பொறுக்கிசாமி சொன்னானே!
(அது என்ன சக்தி!)
தமிழர்களை ஒடுக்க பிராமணப் படை அமைப்பேன் என்றும் சொன்னானே!
அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? எத்தனை பார்ப்பனர்கள் அந்த திமிர்ப் பேச்சைக் கண்டித்தீர்கள்?


சிம்பதி(Sympathy) உருவாக்க என்னவெல்லாம் குட்டிக்கரணம் போடுகிறார் பத்ரி சேசாத்ரி!!

சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஒரு பார்ப்பான் சொன்னது:
"கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய பிராமணரைத் தவிர வேறு எவனுக்கு அருகதை இல்லை"

இதுதான் ஆதிக்கம், கொழுப்பு.
அதை முதல்ல நிறுத்துங்கடே!
அதற்குப் பின்னர் 'வாழு, வாழ விடு'ன்னு சமத்துவம் பேசலாம்.

குறிப்பு: பார்ப்பானையே குறை சொல்வதால் பிற சாதி வெறியர்கள் இன்பம் கொள்ள வேண்டாம்.
பார்ப்பானைப் போன்றே இன்ன பிற சாதி வெறியர்களும் ஆபத்தானவர்களே! புறக்கணிக்கப்பட வேண்டியவர்களே!

1 கருத்து: