பார்ப்பனியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பனியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 பிப்ரவரி, 2016

பிராமணரா? பார்ப்பனரா? ஆரியரா?


'பார்ப்பனர் என்பது தங்களின் சாதியைக் குறிக்கும் பெயர். பிராமணர்களைத் திட்ட ஏன் அந்தப் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள்?' என அடிக்கடி ஒரு கேள்வியை முன்வைக்கிறார் நண்பர் கௌதம்.

பார்ப்பனர் என்பதன் பெயர்க்காரணம் என்ன? ஏன் அப்பெயர் வந்தது? யார் முதலில் பயன்படுத்தியது? என சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒருமுறை சுபவீ அவர்கள் தன் பேட்டியில் 'பார்ப்பனர் என்பது இழிவான பெயர் அல்ல.. ஜாதகம் பார்க்கிறான், ஜோதிடம் பார்க்கிறான். அதனால் பார்ப்பான் என பெயர் வந்தது' என்றார். நானும் அதனை நம்பிவிட்டேன்.
ஆனால் ஜாதகம் மற்றும் ஜோதிடம் பார்ப்பதை பிராமணர் அல்லாதவர்களும் செய்கிறார்களே! அவர்களையும் 'பார்ப்பான்' என்று அழைக்கவேண்டுமா?

'பிராமணர் என்றால் உயர்ந்தவன் என்று பொருள். அதனால் சுயமரியாதை கருதி அப்பெயரை உச்சரிக்கக் கூடாது' என்பதுதான் என் நிலைப்பாடு.

பிராமணர் என்னும் பெயரால் அவாள் ஆதிக்கம் செலுத்தும்போது 'பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்போம்' என்றுதானே நாம் எதிர்க்குரல் எழுப்ப வேண்டும்? அல்லது 'ஆரிய ஆதிக்கம்' என்று கூட சொல்லலாமே? ஆரியருக்கு எதிர்ச்சொல் திராவிடர் என்று சொல்பவர்கள் ஆரியர்(அ)பிராமணர் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தாமல் 'பார்ப்பனர்' என்னும் வாரத்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்?

"அவன் நம்மைத் திட்டல, வேறு யாரோ பார்ப்பானாம். அவனைத்தான் திட்டுகிறான்" என்பதுதானே பிராமணர்களின் மனநிலையாக இருக்கக் கூடும்.
இதனால் பிராமணர் என்னும் பெயர் புனிதப்படுத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்.

ஒரே குழப்பமாக இருக்கு.
இதுகுறித்து நன்கு விவரம் அறிந்த திராவிட இயக்க நண்பர்கள் பதில் அறிந்தால் சொல்லவும்.

வெள்ளி, 1 மே, 2015

பார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?? #டவுட்டு

"பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான்" என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா!!
"பார்ப்பான் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான்" என்று எழுத வேண்டியதுதானே!!

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க??

அடுத்து, தமிழன் என்றாலே பார்ப்பானும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்றுதான் சொல்லுறீங்க..
அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?
சாதிய தலைவர் அல்லது பார்ப்பனிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியதுதானே!!

‪#‎டவுட்டு‬

செவ்வாய், 13 ஜனவரி, 2015

முடிவில்லாமல் தொடர்கிறது ஜெயமோகனின் புளுகல்

எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்சினை பற்றி எழுதும்போது சம்பந்தமே இல்லாமல் பெரியார் மீது அவதூறு வைத்துள்ளார் ஜெயமோகன்.
( பெரியார் இன்னும் அச்சுறுத்துகிறாரோ!! ).

இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக பெரியார் பாடுபட்டாராம்!
அவர்களின் சாதிப்பற்றைக் கைவிடும்படி கூறவில்லையாம்!!

இவ்வாறு புளுகுவது அவருக்கு புதிதில்லை. ஆனாலும் பெரியாருக்கு சற்றும் தொடர்பில்லாத பிரச்சினையில் அவரை ஏன்யா இழுக்குறீங்க!!
ஒருவகையில் இதுவும் நல்லதுதான். பெரியாரிசத்தை வாழ வைக்கும்.

மறுப்பு தெரிவித்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
அதில் கூறியவற்றை அப்படியே இங்கு பதிக்கிறேன்.

"என்ன அழகா புளுகுறீங்க!!
பார்ப்பனியம் என்றாலே பொய் புரட்டுதானே!

கடைசிவரைக்கும் சாதிவெறியர்களை நீங்கள் கண்டிக்கவில்லையே மிஸ்டர் ஜெயமோகன்!!

ஆனால் வன்னியர் மாநாட்டில் மேடையேறி சாதிக்கு எதிராக பேசினாரே பெரியார்!
சத்திரியன் என்றால் பார்ப்பானுக்கு அடிமை. அதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு என்றாரே!
அவர்தாம் பெரியார்! உங்களால் சொல்ல முடியுமா?

பெயரில்கூட சாதி இருக்க கூடாது என்று மக்களிடம் சொன்னாரே பெரியார்!
நீங்க சொன்னீகளா?? இல்லை வேறு பார்ப்பனர்கள் சொன்னார்களா??

சாதியை கட்டிக்காக்கும் புராணங்களையும், வருணாசிரமத்தையும் சமரசமில்லாமல் எதிர்த்தாரே பெரிரார்! உங்களால் முடியுமா??

வழிபாட்டு சமத்துவம் வேண்டி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த பெரியாரிஸ்டுகள் வந்தார்கள், வருவார்கள். நீங்கள் வருவீர்களா?

பார்ப்பான் எச்சி இலையில் சூத்திரனை உருளச் சொல்லுதய்யா உன் இந்து மதம்!
ஜெயேந்திரனுக்கு கால் கழுவி விட சொல்லுத்தய்யா உன் இந்து மதம்!
பெரியார் எதிர்த்தார். நீங்கள் என்ன செய்தீர்கள்?

சாதியால் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டால் நான் பார்ப்பனர் பக்கம் நிற்பேன் என்றாரே! அவர்தாம் பெரியார்!

இன்று சிலர் கொழுப்பெடுத்து சாதித் திமிர்ப் பிடித்து திரிந்தால் பெரியார் என்ன செய்வார்?
அவரை சாடுவதை விடுத்து சாதிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்க.
இந்த மாதிரி குட்டையைக் கிளப்புற வேலை வேண்டாம்.

பார்ப்பனியத்தை வீழ்த்தினால் சாதிக் கட்டமைப்பு வீழும் என பெரியார் எண்ணியிருக்கலாம்!
ஆனால் பாழாய்ப் போன இடைநிலை சாதிகள் இன்று பார்ப்பனியத்தைக் கையில் எடுத்து திரிகின்றன."
 picture: Cartoonist bala
==
இந்து மதத்திற்கும் அதிலுள்ள சாதிக் கட்டமைப்புக்கும் எதிராக கலகம் செய்த அய்யா வைகுண்டர், நாராயண குரு, வள்ளலார், புத்தர் எனப் பலரையும் லாவகமாக தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டீர்கள்!
ஆனால் பெரியார் மட்டும் இன்னும் கலகம் செய்து அச்சுறுத்துகிறார்!
அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெரியார் மீது சேறு வாரி இறைக்க காத்திருக்கிறது பார்ப்பனியம்.

கொய்யால! திமிருடன் சொல்லுவோம் இது 'பெரியார் மண்'.

திங்கள், 8 டிசம்பர், 2014

சமத்துவமாக வாழு, சமத்துவத்தோடு வாழ விடு

 'The angst of the Tamil brahmin: Live and let live' என்னும் தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.
தமிழ்நாட்டுல பார்ப்பனர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்று பத்ரி சேசாத்ரி என்பவர் அழுது புலம்பியுள்ளார்.
(நடிகன் டா!)

தமிழக கிரிக்கெட்டில் பார்ப்பான் ஆதிக்கம் இருக்குதுன்னு உண்மையை சொன்னால் இவருக்கு ஏன் கோவம் வருது?

சென்னையில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ள ப்ளாட் ஒன்றில் பல வீடுகளை பார்ப்பனர்கள் வாங்கியுள்ளார்கள்.
அது நமக்கு பிரச்சினை இல்லை. வாங்குவதும் விற்பதும் சொந்த விசயம்.
ஆனால் அங்கே கோடிக் கணக்கில் கொட்டி கொடுத்தாலும் பார்ப்பான் இல்லாதவருக்கு வீடு கிடையாதாம்!!
இங்கே ஒதுக்கப்படுவது யார்?

கோயம்பேடுல கருவாடு விற்க கூட தடை போடும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்துவது யார்?

சிதம்பரத்தில் தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமியை கோவிலுக்கு வெளியே தூக்கிப்போட்டு ரவுடித்தனம் செய்தது யார்?
தமிழையும் தமிழர்களையும் கோவிலை விட்டு வெளியேற்றியது யார்?

தமிழக அரசியலில் பார்ப்பனர்களே இல்லையாம்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க உள்ள பார்ப்பன அமைப்புகள் ஒன்றுக்கூடி தங்களின் அடியாளான மோடிக்கு ஆதரவு கொடுத்தீர்களே! பாஜக போட்டியிடாத இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தீர்களே! இதெல்லாம் அரசியலில் வராதா?

ஊடகத்துறையில் உங்க ஆதிக்கம்தானடே இருக்குது!! அதையெல்லாம் வசதியா மறந்துட்டீங்களே!

தனக்கு உள்ள சக்தியை வைத்து மோடியை பிராமணன் ஆக்குகிறேன் என்று பொறுக்கிசாமி சொன்னானே!
(அது என்ன சக்தி!)
தமிழர்களை ஒடுக்க பிராமணப் படை அமைப்பேன் என்றும் சொன்னானே!
அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? எத்தனை பார்ப்பனர்கள் அந்த திமிர்ப் பேச்சைக் கண்டித்தீர்கள்?


சிம்பதி(Sympathy) உருவாக்க என்னவெல்லாம் குட்டிக்கரணம் போடுகிறார் பத்ரி சேசாத்ரி!!

சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஒரு பார்ப்பான் சொன்னது:
"கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய பிராமணரைத் தவிர வேறு எவனுக்கு அருகதை இல்லை"

இதுதான் ஆதிக்கம், கொழுப்பு.
அதை முதல்ல நிறுத்துங்கடே!
அதற்குப் பின்னர் 'வாழு, வாழ விடு'ன்னு சமத்துவம் பேசலாம்.

குறிப்பு: பார்ப்பானையே குறை சொல்வதால் பிற சாதி வெறியர்கள் இன்பம் கொள்ள வேண்டாம்.
பார்ப்பானைப் போன்றே இன்ன பிற சாதி வெறியர்களும் ஆபத்தானவர்களே! புறக்கணிக்கப்பட வேண்டியவர்களே!

திங்கள், 24 நவம்பர், 2014

பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்

ஜெயலலிதா முதல்வராக வேண்டி கருங்குளம் கோவிலில் சிறப்பு பூஜை.
அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.

news: http://www.tutyonline.net/view/31_80239/20141123184920.html




எனக்கு ஒரு டவுட்டு.
இந்த யாக பூஜை-ல அப்படி என்ன மந்திரம் சொல்லுவாங்க?
இதுக்குன்னு தனியா மந்திரம் இருக்குதா?
இல்லை ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்துள்ள வழக்கமான சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்களா??
அறிந்தவர்கள் தெளிவுப்படுத்தலாம்.

எது எப்படியோ, பார்ப்பான் காட்டுல நல்ல மழை!!

இந்த மந்திரம் மண்ணாங்கட்டியெல்லாம் பொய் என்று நாம் சொன்னால் பார்ப்பானுக்குத்தான் முதலில் கோபம் வரவேண்டும்.
ஆனால் பார்ப்பான் அல்லாதவர்களுக்குத்தான் அதிக கோபம் வரும்.

"பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்" என நாம் கண்டிஷன் போட்டால் யாகம் செய்யுற தொழிலை(?) பார்ப்பான் விட்டுவிடுவான். :)

திங்கள், 20 அக்டோபர், 2014

ஆண்டப் பரம்பரையெல்லாம் அவாளின் காலடியில் சமத்தா அடங்கிடுவாள்...

நாடார் சாதி தாழ்த்தப்பட்ட சாதி, பல இன்னல்களை அனுபவித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் சொல்லியிருந்தார்கள்.

"அய்யகோ! அது எப்படி நாடாரை தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லலாம்.
நாங்கள் அப்படி கிடையாது. நாங்கள் உயர்சாதி" என்று கொந்தளித்தவர்களில் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒருவர்.


இப்போ இந்த படம் சொல்லும் செய்தி என்ன, மிஸ்டர்.பொன்னார் அவர்களே!

எந்தப் பதவியிலும் இல்லாத அயோக்கிய பார்ப்பான் மற்றொரு பார்ப்பானுக்கு (ஜெயேந்திரன்) இணையாக அமர்ந்து பேசலாம்.

மத்திய அமைச்சராக உள்ள பார்ப்பான் அல்லாதவர்(பொன்.ராதாகிருஷ்ணன்) பார்ப்பானுக்கு கீழே அமர்ந்துதான் பேச வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் உள்ள கோவிலுக்குள் பீகார் முதல்வர் (தலித்) வந்து சென்ற பின்னர், கோவிலைக் கழுவி விட்டதை இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சாதியைக் கட்டமைத்த பார்ப்பனியத்தையும்,
பார்ப்பனியத்துக்கு முட்டுக்கொடுக்கும் இந்துமத புராணங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.


ஆண்ட பரம்பரைக் கனவில் இன்பம் காணும் இடைநிலைச் சாதிகள் பற்றி இந்தக் கட்டுரையை படித்து புரிந்து கொள்ளுங்கள்

 

==
*நாடார் சாதிப் பெண்கள் மாராப்பை கூட மறைக்க விடாமல் சிறுமையையும் ,இழிவையும் தந்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*திருச்செந்தூர் முருகன் கோவில் பள்ளு ,பறையர்,சாணார் ,சக்கிலியர் நுழைய கூடாது என போர்டு வைத்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*இன்னமும் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் நாடார்கள் முகப்பு நுழைவு வாயில் வழியாக செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*சாணார்கள் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*விருதுநகர் மாவட்ட நாடார்கள் தங்களை சத்திரிய குலம் என அழைத்து கொண்டு,பூணூலும் அணிந்து கொண்டனர். அவர்கள் 'பூணூல்'அணிவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் சங்கராச்சாரியாரின் வர்க்கம் தானே .!

@Thymiah NA
==

வியாழன், 16 ஜனவரி, 2014

இந்த காலத்துலயும் ஆரியம், பார்ப்பனியம் என்று பேசுறீங்களே!

தமிழகத்தில் உள்ள 49 ஆயிரம் இந்து ஆலயங்களையும் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் நடத்தும் டிரஸ்ட்டின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளேன். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன்.
- பொறுக்கி சுப்ரமணியசாமி



தமிழர்களின் சொத்துக்களை அவாள்  பெயரில் மாற்றி எழுதி ஆட்டைய போடப் போகிறோம் என்று வெளிப்படையா சொல்லுறான் சு.சாமி.
பார்ப்பனிய அடிமைகள் அனைவரும்  இந்த கருத்தை வழிமொழிவார்கள்.

'தயானந்த சரஸ்வதி சுவாமி யாரு?
அவர் பெயரில் ஏன் ட்ரஸ்ட்?
அதை நிர்வகிப்பது யாரு?' என்று எந்த இந்துவாவது கேள்வி கேட்பானா??
கண்டிப்பா மாட்டான். இவன்தான் அடிமையா இருந்து பழகிட்டானே!!

பார்ப்பனர் அல்லாதவர்களை அந்த 49 ஆயிரம்  ஆலயங்களில் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று எந்த இந்துவாவது சொல்வானா??
[ வீரமணி காரில் கல்லை தூக்கி ஏறிய பார்ப்பான் ஆணையிட்டால் அதை நல்லா செய்வான். அதையும் ஒளிந்து கிடந்தது செய்வான் ]

தான் அடிமையாக்கப் படுகிறோம் என்று கூட  தெரியாமல் இருக்கிறார்களே!!
இந்த லட்சணத்துல 'இந்த காலத்துலயும் ஆரியம், பார்ப்பனியம் என்று பேசுறீங்களே!' என்று நமக்கு அறிவுரை கொடுப்பார்கள் அடிமைகள்.

எவனோ உழைக்க, எவனோ அனுபவிக்கிறான்..

ஒரு பார்ப்பானாவது கோவில் உண்டியலில் காசு போடுறானா?? நிலத்தை எழுதி வைக்குறானா??
நீங்க எதுக்குல அங்கே போயி கொட்டுறீங்க?

அந்த லிஸ்டுல கண்டிப்பா திருச்செந்தூர் முருகன் கோவில் இருக்குமென நம்புகிறேன்.  :(
முருகனுக்கு அரோகரா!!