திங்கள், 26 அக்டோபர், 2015

செயல்படாத பிரதமரும், செய்யப்படும் விளம்பரமும்


வெளிநாடுகளில் நிலநடுக்கம் வந்தால், வெள்ளப் பெருக்கு வந்தால், தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றால் அடுத்த சில நிமிடங்களில் இந்தியப் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு போடுகிறார். கிரிக்கெட் போட்டி, பக்கத்துக்கு நாட்டு தேர்தல் என அனைத்துக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போடுகிறார். 
 
அதன் மூலம் தன்னை ஒரு செயல்படும் பிரதமராகக்(Active PM) காட்டிக் கொள்கிறார். மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் இதனைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். நாட்டைக் காக்க ரட்சகர் வந்துவிட்டார் என நம்புகிறார்கள்.

ஆனால் ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டால், உபியில் மாட்டுக்கறி சாப்பிட்டவர் அடித்துக் கொல்லப்பட்டால்,
அரியானாவில் தலித் குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்டால், நாடு முழுக்க மதவாத பாசிஸ்டுகள் மதவெறிப் பேச்சுக்களை பேசும்போதிலும் பிரதமர் மோடி டிவிட்டரில் கூட வாயைத் திறப்பதில்லை.
மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் "இதுக்கெல்லாம் பிரதமர் பேச வேண்டுமா?' என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இதன்மூலம் ஒரு போலியான தேசபக்தி வளர்த்தெடுக்கப்படுகிறது. அதில் கூட வருத்தம் இல்லை.
ஆனால் மனிதம் சாகடிக்கப்படுகிறது.
"எவன் எங்கு செத்தால் நமக்கு என்ன? நாம 'டிஜிட்டல் இந்தியா' படத்தை ப்ரோபைல் படமா வச்சிட்டு அடுத்த வேலையைப் பார்த்துட்டு போவோம்" என்கிற மோசமான மனநிலை உருவாக்கப்படுகிறது. அதில்தான் வருத்தம்.

1 கருத்து:

  1. Dear Sir,
    You are exactly correct.
    I agree with you.
    We should tell this truth to all people.
    Modi and His Gang is doing Just a Drama.


    Izzath
    E-mail : aizzath@hotmail.com)

    பதிலளிநீக்கு