வெள்ளி, 29 ஜனவரி, 2016

சொர்க்கம், நரகம், நியாயத் தீர்ப்பு பற்றி சில கேள்விகள்.

மரணத்திற்குப் பின்னர் மறுபிறப்பு, நியாயத் தீர்ப்பு, சொர்க்கம், நரகம் பல நிலைகள் இருப்பதாக அனைத்து மதங்களும் சொல்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மதங்கள் இயங்குகின்றன.

கடவுள் எல்லோரையும் கேள்வி கேட்பார் என்கிறார்கள். இப்ப நம்ம டவுட்டுகள்..

1. ஒரு நபரிடம் சராசரியாக எத்தனை கேள்விகள் கேட்பார்? நடப்பது எல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். அப்புறம் எதுக்கு இந்த கேள்விகள்?

2. மனிதர்கள் மட்டும்தான் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்களா? இல்லை தாவரங்கள், விலங்குகளும் உண்டா?

3. எப்படி பார்த்தாலும் ஒரு நாளைக்கு நூறு நபர்களுக்கு அதிகமாக கேள்வி கேட்க முடியாதே!! பின்னர் எப்படி உலகில் இறக்கும் அனைத்து மனிதர்களையும் கேள்வி கேட்க முடியும்?

4. நாம் கடவுளிடம் எந்த மொழியில் பேச வேண்டும்? ஒருவேளை நமது மொழியில்தான் பேச வேண்டும் என்றால் நமது மொழி கடவுளுக்கு எப்படி புரியும்? ஏனென்றால் மொழியை படைத்தவர்கள் நாமாச்சே!

5. இப்படி கேள்வி கேட்டு தீர்ப்பு சொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்தால் வேறு நடப்புகளை கடவுள் கவனிக்க மாட்டாரா?

6. கடைசியா ஒரு டவுட்டு. கடவுள் தவறாக தீர்ப்பு சொன்னால் நாம் மேல்முறையீடு செய்ய முடியுமா?

ஆறு கேள்விகளுக்கும் முறையாக பதில் இருந்தால் கமென்ட் கொடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக