அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜனவரி, 2016

சொர்க்கம், நரகம், நியாயத் தீர்ப்பு பற்றி சில கேள்விகள்.

மரணத்திற்குப் பின்னர் மறுபிறப்பு, நியாயத் தீர்ப்பு, சொர்க்கம், நரகம் பல நிலைகள் இருப்பதாக அனைத்து மதங்களும் சொல்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மதங்கள் இயங்குகின்றன.

கடவுள் எல்லோரையும் கேள்வி கேட்பார் என்கிறார்கள். இப்ப நம்ம டவுட்டுகள்..

1. ஒரு நபரிடம் சராசரியாக எத்தனை கேள்விகள் கேட்பார்? நடப்பது எல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். அப்புறம் எதுக்கு இந்த கேள்விகள்?

2. மனிதர்கள் மட்டும்தான் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்களா? இல்லை தாவரங்கள், விலங்குகளும் உண்டா?

3. எப்படி பார்த்தாலும் ஒரு நாளைக்கு நூறு நபர்களுக்கு அதிகமாக கேள்வி கேட்க முடியாதே!! பின்னர் எப்படி உலகில் இறக்கும் அனைத்து மனிதர்களையும் கேள்வி கேட்க முடியும்?

4. நாம் கடவுளிடம் எந்த மொழியில் பேச வேண்டும்? ஒருவேளை நமது மொழியில்தான் பேச வேண்டும் என்றால் நமது மொழி கடவுளுக்கு எப்படி புரியும்? ஏனென்றால் மொழியை படைத்தவர்கள் நாமாச்சே!

5. இப்படி கேள்வி கேட்டு தீர்ப்பு சொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்தால் வேறு நடப்புகளை கடவுள் கவனிக்க மாட்டாரா?

6. கடைசியா ஒரு டவுட்டு. கடவுள் தவறாக தீர்ப்பு சொன்னால் நாம் மேல்முறையீடு செய்ய முடியுமா?

ஆறு கேள்விகளுக்கும் முறையாக பதில் இருந்தால் கமென்ட் கொடுங்கள்.

திங்கள், 4 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு தொடர்பாக எனது பதிவுகள்


ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில மண்டைவீங்கிகளே!
ஹோலி என்னும் பண்டிகையால் நீர் மற்றும் நிலம் மாசுபடுகிறது. வருடா வருடம் பலர் உயிரிழக்கிறார்கள்.
ஹோலியைத் தடை செய்ய சொல்லுங்க.
அப்புறம் வந்து தமிழன்கிட்ட நொட்டுங்க..

வட இந்திய அரசியலுக்கு ஏற்ப ஆடுவதில் சில போலித் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும் வல்லவர்கள்.
நாளைக்கே பொங்கல் பண்டிகைக்கு இந்திய அரசு தடை போட்டாலும் அதனையும் வரவேற்பார்கள் இந்த அயோக்கியர்கள்.

 ****** 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எத்தனை முறை போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளீர்கள்? - ஒரு அறிவாளி நண்பரின் கேள்வி.
நம் பதில்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என நாம் கேட்கிறோம். அதற்காக நாம் அனைவரும் கட்டாயம் மணியைத் தூக்கிட்டு போயி அர்ச்சகராக வேண்டுமா??

என்னய்யா லாஜிக் பேசுறீங்க?? நல்லா யோசிச்சு வேற எதாவது காரணம் சொல்லுங்க..
வழக்கம் போல சாதி, முதலாளித்துவம் என வேற லெவல் காரணத்தை யோசியுங்க..


******* 

தமிழில் கெட்டவார்த்தைகள் இருப்பதால் தமிழ் காட்டுமிராண்டி மொழி.
அவன், அவர் என வேறுபாடுகள் இருப்பதால் தமிழ் வர்க்க வேறுபாடுகள் நிறைந்த மொழி.
இவ்வாறெல்லாம் புதுசு புதுசா கண்டுபிடித்து எழுதுவது சில அறிவாளிகளின் வழக்கம்.

அந்த அறிவாளிகள்தான் இப்போது ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்க துடிக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் வரை ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்காமல் இப்போது சாதிய அடையாளம் கொடுக்க என்ன தேவை வந்தது? என சிந்தித்துப் பாருங்கள். இந்த அயோக்கியர்களின் தமிழர் விரோத அரசியல் புரியும்.

****** 
"ஜல்லிக்கட்டு மாடுகளின் உடலமைப்பை பாருங்கள். பெரும் முதலாளிகளால் மட்டும்தான் இவ்வாறான மாடுகளை வளர்க்க முடியும்.." என்று கீற்று தளத்தில் கார்கி என்னும் போலிக் கம்யூனிஸ்ட் எழுதியிருந்தார்.

தலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
என்ன அருமையா கம்யூனிசம் படித்து வைத்துள்ளார்கள் இந்தப் போலிகள்!!
தமிழின அடையாளங்களை அழிப்பதும், இந்தியாவுக்கு முட்டுக் கொடுப்பதும்தான் இவர்களின் போலிப் புரட்சி!!

மாடு வளர்க்கிறவன், ஆடு வளர்க்கிறவன் எல்லாம் பெரும் முதலாளியாம்.
இவனுங்க லாஜிக்படி நாங்க எல்லாம் மாபெரும் முதலாளிகள்!! அவ்வ்வ்வ்...

பார்ப்பன ஆதிக்க, முதலாளித்துவ, ஊழல்மிகு கிரிக்கெட்டை தடை செய்ய சொல்லி ஒரு கட்டுரை எழுத சொன்னால் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு நகர்வார்கள் இவர்கள்.

******

சனி, 10 ஜனவரி, 2015

சென்னை புத்தகக் கண்காட்சி 2014: எனது அனுபவம்



சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புத்தகக் கண்காட்சி நடக்கும் திடலுக்கு நுழைந்தேன். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் ரொம்ப அதிகமாக இருந்தது. வெளியே உள்ள மேடையில் தோழர் நல்லக்கண்ணு உரையாற்றிக் கொண்டிருந்தார். மேடையில் அய்யா நெடுமாறன் அமர்ந்திருந்தார். ஏதோ புத்தக வெளியீடு போல..


புத்தகக் கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்து புத்தகங்களை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தேன். சிலவற்றை வாங்கிக் கொண்டேன்.

உள்ளே செல்ல செல்ல எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் தொடர்பான கடைகள். புத்தகக் கண்காட்சியா அல்லது ஆன்மீகக் கண்காட்சியா என்று டவுட்டு வந்துவிட்டது.. எங்கு திரும்பினாலும் சாமியார்கள் பற்றிய நூல்களே கண்ணில் படுகின்றன. மலிவு விலை குரான், மலிவு விலை பகவத் கீதை என விற்பனை செய்கிறார்கள். 

வாழும் அவதார புருஷர் பரமஹம்ச நித்தியானந்தாவின்  குழுவினர் இரு கடைகளை ஆக்கிரமித்துள்ளார்கள். உள்ளே அவதார புருஷரின் போட்டோ போட்டு மாலையும் போட்டுள்ளார்கள்.. இப்படித்தான் கடவுளர்கள் தோன்றினார்களோ!!

விடியல், விஜயா, உயிர்மை, கிழக்கு, டிஸ்கவரி, நியூ செஞ்சுரி, பெரியார் சுயமரியாதைப் பதிப்பகம், கீழைக்காற்று, நக்கீரன், விகடன் என பிரபலக் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. நானும் இக்கடைகளில்தான் அதிக நேரம் செலவழித்தேன்.
குறிப்பாக காலச்சுவடு பதிப்பகத்தில் அதிக கூட்டம். பெருமாள் முருகனின் நூல்கள் அதிகம் விற்பனை ஆகியிருக்கும். அவரும் உள்ளே அமர்ந்திருந்தார்.

சங்கர் பதிப்பகம் என்று ஒரு கடை இருந்தது.
நம்ம சவுக்கு சங்கர்தான் கடையை விரிச்சிட்டாரோ! என்று ஷாக் ஆயிட்டேன்..

காலச்சுவடு பதிப்பகத்தில் அக்கா தமிழ்நதி அவர்களைக் காண முடிந்தது. பேஸ்புக்கில் அருமையாக எழுதுபவர். வெளிநாட்டில் வசிக்கிறார். புத்தகக் கண்காட்சியையொட்டி இங்கு வந்திருக்கிறார். என்னை அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். அவங்களுக்கு என்னை தெரியல. :(

தமிழ்மண் பதிப்பகத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்:
பெரியவர் ஒருவர் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஒரு நூலை எடுத்து ஒரு சிறுமியிடம் காட்டி (பேத்தியாக இருக்கும்) ‘யாருன்னு தெரியுதா?.. தலைவர்.. தலைவர்ன்னு சொல்லு’ என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். சிறுமியும் தலையை ஆட்டிக்கொண்டே தலைவர் என்றாள். மிகவும் மகிழ்வாக இருந்தது. #பிரபாகரனிசம் 

நான் வாங்கிய நூல்களின் பட்டியல்:
பச்சை தமிழ்த்தேசியம் – சு.ப.உதயகுமாரன்
உணவு யுத்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
நலம் 360 – மருத்துவர்  கு.சிவராமன்
அர்த்தமுள்ள அந்தரங்கம் – மருத்துவர் ஷாலினி
சிறு விசயங்களின் கடவுள் – அருந்ததிராய்
தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததிராய்
மறுபக்கம் – பொன்னீலன்
ஊரும் சேரியும் – சித்தலிங்கையா
சாதியும் நானும் – பெருமாள் முருகன்
பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் – புலிகளின் வெளியீடு

‘மறுபக்கம்’ தவிர்த்து அனைத்தும் சிறு சிறு நூல்களே! அதனால் விரைவில் படித்து முடித்து விடலாம் என எண்ணுகிறேன்.
தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சம் போன்ற நூல்களையும், நக்சலைட் அஜிதாவின் வாழ்க்கைக் குறிப்பு நூலையும் சில நாட்களுக்கு முன்னர்தான் வாங்கினேன். ஒரு நூல் தவிர மற்றவை அப்படியே உள்ளன. பொறுமையா படிப்போம். 

வெள்ளி, 17 அக்டோபர், 2014

மணிப்பூர் சகோதரியுடன் சிறு உரையாடல்

பேருந்தில் அல்லது வேறு பொது இடங்களில் ஆண்கள் பக்கம் அமர நம்ம ஊரு பொண்ணுங்க ரொம்பவே யோசிப்பாங்க.

சகோதரன் அல்லது ஆண் நண்பர்களுடன் பெண்கள் வந்தால் அந்த சகோதரன் அல்லது ஆண் நண்பர் நாம் அருகில் அமருவார். அடுத்த அந்தப் பெண் அமருவார்.
இதுதான் பல இடங்களிலும் நாம் காணும் காட்சி.

நேற்று வேளச்சேரி - கிண்டி செல்லும் மினி பேருந்தில் இறுதி இருக்கையில் ஓரமாக அமர்ந்திருந்தேன்.

ஒரு வடகிழக்கு மாநில ஆணும் பெண்ணும் ஏறினார்கள்.

பெண் என் அருகில் அமர்ந்தார், அடுத்து அந்த ஆண் அமர்ந்தார். எனக்கு சற்று வியப்பு அளித்தது.

சமீபமாக வெளி மாநிலங்களில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது இனவெறி தாக்குதல், கேலிகள், பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன.

தமிழகத்திலும் ஆங்காங்கே கண்டிப்பாக நடக்கும்.
நேபாளி நிக்கி, சங்கி மங்கி என சந்தானம் ஒரு படத்தில் கேலி செய்திருப்பார்.
(நானும் அந்த வசனத்தை சில முறை உபயோகித்திருக்கிறேன். இப்போது நினைத்தால் எனக்கே ரொம்ப வருத்தமாக உள்ளது.)

இதுமாதிரியான கேலிகள், இனவாத பேச்சுக்கள் நம்ம ஊரிலும் இருக்கிறதா என அவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள எனக்கு விருப்பமாக இருந்தது.

அந்த சகோதரியிடம் பேசு கொடுக்க ஆரம்பித்தேன். (ஆங்கிலத்தில்தான்)

==
நான்: நீங்கே எங்கே இருந்து வரீங்க?

சகோதரி: மணிப்பூர்.

நான்: எத்தனை காலமாக இங்கே தமிழகத்தில் வசிக்கிறீர்கள்?

சகோதரி: ஒரு வருடம் ஆகுது.

நான்: உங்களை யாராவது கேலி செய்திருக்கிறார்களா?

சகோதரி: இல்லையே!

நான்: சமீபமாக வெளி மாநிலங்களில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது இனவெறி தாக்குதல், கேலிகள் தொடர்கிறதே! நீங்கள் தமிழகத்தில் ஒரு முறை கூட சந்தித்தது இல்லையா?

சகோதரி: அப்படியெல்லாம் இங்கே இல்லை.

நான்: Really?

சகோதரி: Yes.

நான்: Ok fine. thanks
==

அவர்கள் சொன்னது எவ்வளவு உண்மையென்று தெரியாது. ஆனால் உண்மையாகவே இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

சில மாதங்கள் முன்பு டெல்லியில் நீடோ தானியா என்னும் அருணாச்சல பிரதேஷ் மாணவர் அடித்தே கொலை செய்யப்பட்டார். அவரது தலைமுடி அமைப்பை வைத்து கேலி செய்ததே பிரச்சினையின் ஆரம்பம்.

நேற்று பெங்களூரில் கன்னடம் பேச மறுத்ததால் மணிப்பூர் மாணவர்கள் மீது தாக்குதல்.

இன்று டெல்லியில் மிசோரம் மாணவி கொலை.



வடகிழக்கு மாநில மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இவ்வாறு செய்திகள் வந்துகொண்டே உள்ளன.

இனரீதியான கேலி, கிண்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ் சினிமாக்களிலும் அவர்களை கேலி செய்வது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்

செவ்வாய், 7 அக்டோபர், 2014

வியாபாரம் ஒன்றே ஊடகங்களின் குறிக்கோள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்ர்கள் சிறை சென்ற செய்தியே பல ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.

சிறையில் யாரையும் ஜெயா சந்திக்கவில்லை என்பது பல ஊடகங்களின் செய்தி. கர்நாடக காவல்துறையும் அதனையே சொல்கிறது.
இந்நிலையில் நக்கீரன் தன் இதழ் தலைப்பு செய்தியாக எழுதியுள்ளது:
'அப்பாவையும் மகனையும் உடனே கைது செய்ய ஜெயா உத்தரவு'.
அதாவது கருணாவையும் அவரது மகன் ஸ்டாலினையும் கைது செய்ய ஜெயா உத்தரவாம்.

யாருக்கு உத்தரவு கொடுத்தார்?
எப்போது கொடுத்தார்?
எங்கே வைத்து கொடுத்தார்?
என எந்த தகவலும் நக்கீரன் சொல்லவில்லை.

அப்புறம் எதுக்கு இதுபோன்ற செய்தியை வெளியிட வேண்டும்?
திமுகவினரை ஆத்திரமடைய செய்வது தவிர இந்த செய்தியின் நோக்கம் வேறு எதுவாகவும் இருக்க வாய்ப்பில்லை.
நக்கீரனுக்கு இது போன்ற செய்திகள் புதிதல்ல.

அடுத்து சன் செய்திகள் சேனலுக்கு வருவோம்.

நேற்று சன் செய்திகள் சேனங்லில் ஃப்ளாஷ் ந்யூஸ் மற்றும் அதை ஒட்டிய விவாதத்தின் தலைப்பு:
"பெங்களூரில் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா?
தமிழகத்தில் கன்னடர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா? "

எவனோ ஒரு அதிமுக அடிமை கன்னடர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளான்.
இருமாநில காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து, அது போன்ற போஸ்டர்களை அகற்றிவிட்டனர்.

இங்கு வாழும் கன்னடன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.
அங்கு வாழும் தமிழன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.

ஆனால் நடுவே சில அரசியல் பொறுக்கிகள் தேவையற்ற சர்ச்சைகளை உண்டாக்குகிறார்கள்.

பொறுப்புடன் செயல்பட மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று யாராக்சும் சன் செய்திகளிடம் வந்து முறையிட்டானா?
சன் செய்திகள் ஃப்ளாஷ் செய்தியின் நோக்கம் என்ன?
அதிமுகவினரை வன்முறையாளர்களாக காட்டி தான் அரசியல் லாபத்தைப் பார்ப்பது.

ஊடகங்களே,
தங்களின் வியாபார லாப வெறிக்கு, அரசியல் வெறிக்கு தயவுசெய்து சமூகத்தில் குழப்பம் விளைவிக்காதீர்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தூத்துக்குடி வட்டார மொழியை நான் இழந்த கதை

தூத்துக்குடியில் மேற்படிப்பு படிக்கும்வரையில் நான் பேசும் தமிழில் ஆங்கிலக் கலப்பு அதிகம் இருக்காது.
ஏல, வால, போல, என்று சரளமாக தூத்துக்குடி தமிழ் பேசுவேன். தமிழின் சிறப்பான 'ழ' என்பதைக் கூட 'ல' என்று பேசியே பழக்கமாகி விட்டது.

'அவங்க சொல்லுவாங்க' என்பதை 'அவிய சொல்லுவாவ' என்றுதான் சொல்லுவேன்.

என்று கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தேனோ, அப்புறம் தூத்துக்குடி தமிழ் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.
பல மாவட்ட மாணவர்களும் படிக்கும் சென்னை கல்லூரிகளில் ஆங்கிலம் கலந்து பேசுவதையே ஒரு பெருமையாகக் கருதுகிறார்கள்.
வட்டார வழக்கில் பேசினால் அதிகம் கேலி செய்வார்கள்.

பசித்தால் 'வயிறு பசிக்கு' என்றுதான் எங்க ஊருல சொல்லுவாவ.
ஆனால் கல்லூரி விடுதியில் நான் 'வயிறு பசிக்கு' என்று சொல்லும்போதெல்லாம் கேலி செய்ய ஒரு கூட்டமே உண்டு.

கல்லூரியில் ஆசிரியரிடம் பேசும்போது சார், மிஸ், மேம் என கண்டதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
எங்க ஊர்ல அந்தப் பழக்கமே கிடையாது.
இங்கேயும் நான் அதையே தொடர்ந்ததால் நான் மரியாதைக் குறைவாக பேசுவதாகவும், திமிராக பேசுவதாகவும் சொன்ன ஆசிரியர்கள் உண்டு.

தூத்துக்குடி பாஷையில் பேசும்போது மிகவும் வேகமாக பேசுவேன். அது இங்கே பல நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புரிவதில்லை. அதனால் வேகத்தைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

கல்லூரியில் ஆங்கில வழியில் படித்ததால் சில ஆங்கில சொற்கள் நாவில் அடிக்கடி குடி கொண்டன.
அப்புறம் வேலை நிமித்தமாக ஆங்கிலத்தில் பேசுவதாலும், வேறு மாநிலங்களுக்கு சென்றதாலும் ஆங்கிலம் நிரந்தரக் குடி கொண்டது.

அதனால் தூத்துக்குடி வட்டார பாஷை முன்னர் போல வருவதில்லை. கால ஓட்டத்தில் காணாமல் போனது.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல அவ்வப்போது தூத்துக்குடி தமிழ் வாயில் வருவதுண்டு.

தற்போது ஒரு கட்டத்தில் யோசித்துப் பார்க்கையில் என் மீது எனக்கே சற்று வருத்தம்.
தூத்துக்குடி வட்டார பாஷையை இழந்தது கூட எனக்கு பெரும் வருத்தம் அல்ல. ஆனால் என் தமிழில் அதிக ஆங்கிலம் கலப்பு இருப்பது பெரும் வருத்தமாக உள்ளது.

படிப்படியா ஆங்கிலக் கலப்பை தவிர்க்க வேண்டுமென்பதே இந்த வருட புது ஆண்டு சபதம்.
இப்போது சற்று முன்னேற்றம் இருக்கிறது. பேஸ்புக், ப்ளாக்கர் ஆகியவற்றில் தமிழில் எழுவதும், தமிழ்  நூல்கள் படிப்பதுமே இதற்கு காரணம்.

வாழ்க தமிழ்!!

(நேற்று நீயா நானா நிகழ்ச்சி வட்டார மொழி வழக்கு குறித்து இருந்ததால் பழைய ஞாபகங்கள் வந்து சென்றன.)

புதன், 12 மார்ச், 2014

அவங்க 'ஸ்தோத்திரம்' சொல்லுவாங்க. நாம் 'ஓம், ஓம்' என்று சொல்லணும்

தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் முத்துநகர் தொடர்வண்டியில் ஏறி அமர்ந்தேன். வண்டியின் உள்ளே ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். அவர்களை வழியனுப்ப வந்திருந்த இருவர் வண்டிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். குடும்பத்தினருக்கு  அருகில் கிறிஸ்துவ கன்னியாஸ்திரி பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.

வண்டிக்கு வெளியே நின்றிருந்த நபர் என்னிடம் பேச ஆரம்பித்திருந்தார்..

அவர்: தம்பி, எங்கே போறீங்க??

நான்:சென்னைக்கு போகிறேன்.

அவர்: தம்பிக்கு எந்த ஊரு??

நான்: ஆத்தூர் பக்கத்துல **** கிராமம்.

அவர்: அட, அருமையான கிராமமாச்சே!!!  xxx, yyy போன்ற ஆட்களுக்கு அந்த ஊருதானே!!

நான்: ஆமாம்னே...

அவர்: அந்த பொம்பளையிடம் (கிறிஸ்துவ கன்னியாஸ்திரி)கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. இல்லைனா ட்ரெய்னிலேயே மதத்தை மாத்திடுவாங்க.. ஆமாம், நீங்க இந்துதானே??

நான்: எனக்கு இந்த சாதி, மதமெல்லாம் ஒரு விசயமே கிடையாது. நான் தமிழன்..

அவர்: என்ன தம்பி, இப்படி சொல்லுறீங்க!! அவங்களும் தமிழன்தான். ஆனால் கிறிஸ்து, ஸ்தோத்திரம் என்று சொல்லுறாங்க.. நாமளும் பதிலுக்கு 'ஓம், ஓம்' என்று சொல்லனும். கரெக்டுதானே!!

நான்: அவங்க பத்தி எனக்கு தெரியும்.. அவர்கள் போன்ற ஆட்களிடம் நான் அவ்வளவு பேசுவதில்லை.

அவர்: சரி தம்பி, யாருக்கு ஒட்டு போட போறீங்க??

நான்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் சரியில்லையே!! யாருக்காவது போடுவோம்..


அவர்: ஜோயல் (மதிமுக)க்கு வாய்ப்பு கொடுத்தால் போடுவீங்களா??


நான்: ஆமாம்னே, அவரு பரவாயில்லை. எல்லா பிரச்சினைக்கும் முன்வந்து போராடுறார்.. அவருக்கு போடலாம்..

அவர்: தம்பி ஒரு மாற்றத்தை விரும்புறீங்க போல,ரைட்டு, நடக்கட்டும்..
இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா தம்பி?  அந்த மூணு வேட்பாளருமே கையில பைபிளோடு அலைபவர்கள், தீவிர கிறிஸ்டியன்ஸ்..

நான்: (எங்க போனாலும் எப்படிய்யா கரெக்டா மதத்துல வந்து நிக்குறீங்க என்று எண்ணிக் கொண்டேன்) ஓ!! அப்படியா!!

விவாதம் சற்றுநேரம் தொடர்ந்தது.. வண்டியும் கிளம்பியது..
குடும்பத்தினருடன் "ஓம், ஓம்" என்று சொல்லி அவர் விடைபெற்றார். அதாவது அந்த கன்னியாஸ்திரியுடன் அலெர்ட்டா இருக்க சொல்வதற்காக அந்த "ஓம், ஓம்"சிக்னல் கொடுத்தார்.

"நல்லவேளை, சாதியை கேட்காமல் விட்டார்" என்கிற மகிழ்ச்சி  இருந்தது, "ஒருவேளை கிராமத்து பெயரை வைத்து சாதியை கணித்துக் கொண்டாரோ!! என்கிற ஐயமும் எனக்குள் எழுந்தது.

"தன் சாதியே உயர்ந்தது, தன் மதமே உயர்ந்தது, மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கணும்" என்கிற மோசமான மனநிலை இன்னும் நம் மக்களுக்குள் அப்படியே உள்ளது. :(

எம் முன்னோர்களை அடிமைப்படுத்தி, மார்பில் சீலை அணிய விடாமல் தடுத்தது இந்து மதத் திமிர்.
 கோவிலுக்குள் சூத்திரன் நுழைந்தால் தீட்டு என்று சொல்லி இன்றும் எம்மை அடிமைப்படுத்தும் மதம்  இந்து மதம்.
தமிழர்கள் கட்டிய கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழையும், தமிழரையும் அனுமதிக்காத மதம்  இந்து மதம்.

 இந்தக் கதையெல்லாம் அந்த நபருக்கு தெரிந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.. தெரிந்திருந்தால் தன்னை இந்து சொல்லி பெருமைப் பீத்தியிருக்க மாட்டார்..

எந்த மதமாக இருந்தாலும் நாலு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
சமுதாயத்தில் ஒரு மனிதனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.