திங்கள், 4 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு தொடர்பாக எனது பதிவுகள்


ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில மண்டைவீங்கிகளே!
ஹோலி என்னும் பண்டிகையால் நீர் மற்றும் நிலம் மாசுபடுகிறது. வருடா வருடம் பலர் உயிரிழக்கிறார்கள்.
ஹோலியைத் தடை செய்ய சொல்லுங்க.
அப்புறம் வந்து தமிழன்கிட்ட நொட்டுங்க..

வட இந்திய அரசியலுக்கு ஏற்ப ஆடுவதில் சில போலித் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும் வல்லவர்கள்.
நாளைக்கே பொங்கல் பண்டிகைக்கு இந்திய அரசு தடை போட்டாலும் அதனையும் வரவேற்பார்கள் இந்த அயோக்கியர்கள்.

 ****** 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எத்தனை முறை போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளீர்கள்? - ஒரு அறிவாளி நண்பரின் கேள்வி.
நம் பதில்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என நாம் கேட்கிறோம். அதற்காக நாம் அனைவரும் கட்டாயம் மணியைத் தூக்கிட்டு போயி அர்ச்சகராக வேண்டுமா??

என்னய்யா லாஜிக் பேசுறீங்க?? நல்லா யோசிச்சு வேற எதாவது காரணம் சொல்லுங்க..
வழக்கம் போல சாதி, முதலாளித்துவம் என வேற லெவல் காரணத்தை யோசியுங்க..


******* 

தமிழில் கெட்டவார்த்தைகள் இருப்பதால் தமிழ் காட்டுமிராண்டி மொழி.
அவன், அவர் என வேறுபாடுகள் இருப்பதால் தமிழ் வர்க்க வேறுபாடுகள் நிறைந்த மொழி.
இவ்வாறெல்லாம் புதுசு புதுசா கண்டுபிடித்து எழுதுவது சில அறிவாளிகளின் வழக்கம்.

அந்த அறிவாளிகள்தான் இப்போது ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்க துடிக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் வரை ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்காமல் இப்போது சாதிய அடையாளம் கொடுக்க என்ன தேவை வந்தது? என சிந்தித்துப் பாருங்கள். இந்த அயோக்கியர்களின் தமிழர் விரோத அரசியல் புரியும்.

****** 
"ஜல்லிக்கட்டு மாடுகளின் உடலமைப்பை பாருங்கள். பெரும் முதலாளிகளால் மட்டும்தான் இவ்வாறான மாடுகளை வளர்க்க முடியும்.." என்று கீற்று தளத்தில் கார்கி என்னும் போலிக் கம்யூனிஸ்ட் எழுதியிருந்தார்.

தலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
என்ன அருமையா கம்யூனிசம் படித்து வைத்துள்ளார்கள் இந்தப் போலிகள்!!
தமிழின அடையாளங்களை அழிப்பதும், இந்தியாவுக்கு முட்டுக் கொடுப்பதும்தான் இவர்களின் போலிப் புரட்சி!!

மாடு வளர்க்கிறவன், ஆடு வளர்க்கிறவன் எல்லாம் பெரும் முதலாளியாம்.
இவனுங்க லாஜிக்படி நாங்க எல்லாம் மாபெரும் முதலாளிகள்!! அவ்வ்வ்வ்...

பார்ப்பன ஆதிக்க, முதலாளித்துவ, ஊழல்மிகு கிரிக்கெட்டை தடை செய்ய சொல்லி ஒரு கட்டுரை எழுத சொன்னால் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு நகர்வார்கள் இவர்கள்.

******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக