மூட நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூட நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 நவம்பர், 2014

பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்

ஜெயலலிதா முதல்வராக வேண்டி கருங்குளம் கோவிலில் சிறப்பு பூஜை.
அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.

news: http://www.tutyonline.net/view/31_80239/20141123184920.html




எனக்கு ஒரு டவுட்டு.
இந்த யாக பூஜை-ல அப்படி என்ன மந்திரம் சொல்லுவாங்க?
இதுக்குன்னு தனியா மந்திரம் இருக்குதா?
இல்லை ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்துள்ள வழக்கமான சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்களா??
அறிந்தவர்கள் தெளிவுப்படுத்தலாம்.

எது எப்படியோ, பார்ப்பான் காட்டுல நல்ல மழை!!

இந்த மந்திரம் மண்ணாங்கட்டியெல்லாம் பொய் என்று நாம் சொன்னால் பார்ப்பானுக்குத்தான் முதலில் கோபம் வரவேண்டும்.
ஆனால் பார்ப்பான் அல்லாதவர்களுக்குத்தான் அதிக கோபம் வரும்.

"பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்" என நாம் கண்டிஷன் போட்டால் யாகம் செய்யுற தொழிலை(?) பார்ப்பான் விட்டுவிடுவான். :)

வியாழன், 9 அக்டோபர், 2014

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1

கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம்.
ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கினேன் ( https://www.nhm.in/shop/100-00-0000-238-3.html ) . விலை கொஞ்சம் அதிகம்தான்.

என் அந்தப் புத்தகம் வாங்கினேன்?
இந்துமதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அறிவுக்குப் பொருந்தாத கட்டுக்கதைகள், சாதியக் கட்டமைப்பு இவற்றை பற்றி விவாதிக்கும்போது 'கீதை படித்திருக்காயா?, ராமாயணம் படித்திருக்காயா? குறைந்தது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்திருக்காயா? என எதிர்கேள்விகள் வரும்.

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள விருப்பம்.
அதுபோக கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.



புத்தகம் வாங்கி 40 பக்கங்கள் படித்திருப்பேன்.
'எதுக்குடா இந்தப் புத்தகத்தை வாங்கினோம்' என்பது போல ஆகிவிட்டது.

* 40 பக்கத்தில் 5 திருக்குறள் வந்துவிட்டன.
"அதாவது, திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்...." என்பது போல ஆரம்பிக்கிறார். தமிழுக்கு இந்துச் சாயம் அடிக்கும் வேலையை கண்ணதாசன் செய்கிறார்.

* முற்பகல் செய்யின் பிற்பகல் விலையுமென்பது இந்துக்களின் பழமொழியாம்.
என்ன அழகாக மக்களை ஏமாற்றுகிறார்கள்!!

*  விதி-மதி, இன்பம்-துன்பம் என சிறுபிள்ளைத்தனமான, அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பல புத்தகத்தில் அதிகம் உள்ளன.

* பெண்கள் நிமிர்ந்து சென்றால் ஆண்களைக் கவர்ந்துவிடுவார்களாம். அதனால் குனிந்து போகச் சொல்கிறதாம் இந்துமதம்.
( பெண்கள் ஜீன்ஸ் அணிவது தொடர்பாக சமீபத்தில் பாடகர் ஜேசுதாஸ் சொன்னது கருத்து இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறது )

* அனுபவங்கள் மூலம் நாம் சில பாடங்களைக் கற்க முடியும்.
உதாரணம்: "பிறர்க்கு துன்பம் செய்தால் நாளை அந்த துன்பம் நமக்கும் வரக்கூடும்".
இதனை அனுபவம், வாழ்வியல் சிந்தனை, தத்துவம் என பல பெயர்களில் சொல்லலாம்.
ஆனால் அதற்கு மதச்சாயம் பூசி 'இந்து தர்மம்', 'விதி', 'முன்ஜென்ம பாவம்' என்கிற பெயர்களில் சொல்கிறார் கண்ணதாசன்.

* வள்ளுவர் ஓர் இந்து என்னும் மாபெரும் வரலாற்றுத் திரிப்பை பகுதி 8-இல் சொல்ல வருகிறார். அதனை நான் இன்னும் படிக்க வில்லை.
உலகின் மூத்த பொதுவுடைமையாளன் வள்ளுவனுக்கு இந்து அடையாளம் கொடுத்துதான் தன் இந்து (பிராமண) மதத்தை தூக்கி நிறுத்த வேண்டிய பரிதாப  நிலை கன்ணதாசனுக்கு!!

ஒரு புத்தகத்தை எடுத்தப்பின்னர் அதனை முழுவதும் படித்துவிட வேண்டும் என்பது என் நோக்கம்.

அதனால் வாசிப்பு தொடரும்,
அபத்தங்கள் தொடரும்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா?

 பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார்.
இதே பதிவை பல சமயங்களில் இணையத்தில் பார்த்திருக்கிறேன்.
அந்தப் பதிவின் நோக்கம் என்னவென்றால் எப்படியாவது பெரியாரை சிறுமைப்படுத்த வேண்டும் என்பது தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

சமூக நீதிக்கும், மனிதனின் சிந்தனைக்கும் குறுக்கே மதமும் கடவுளும் வந்து நிற்பதால் நாத்திகத்தை முன்மொழிந்தார் பெரியார். அவ்வளவே!

அவரது கொள்கை சரியா? தவறா? என ஆராய்வதே சிறப்பு.
அதை விடுத்து பெரியார் மீது சேறு வாரி இறைத்து ஆனந்தம் காண்பது சிறப்பல்ல.


பதில் தெரியாமல் பெரியார் முழித்தார் என நடக்காத ஒன்றை எழுதி பரப்புகிறார்கள்.
ஆனால் பெரியார் கேட்ட பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்லாமால் சாதி, மத வெறியர்கள் ஒடுகிறார்களே!

பெரியாரை, தேவரை விடுங்க.
நான் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்காவது பதில் சொல்லுங்க.

  • விக்ரஹங்கள் கடவுளின் பிம்பம் என்கிறீர்கள். சிலைக்கு நெய், பால், மற்றும் உணவுப் பொருட்களை ஊற்றி வீணாக்குகிறார்களே!  அதற்கு என்ன விளக்கம்(சமாளிஃபிகே ஷன்) வைத்துள்ளீர்கள்?
  • அலகு குத்துதல், தீ மிதித்தல் ஆகியவற்றை செய்ய எந்தக் கடவுள் சொன்னான்?
  • விநாயகர் சிலையை கரைத்து கடல் வளத்தை மாசுபடுத்த எந்தக் கடவுள் சொன்னான்?
  • உன் மதம் பெருசு, என் மதம் பெருசு என்று தகராறு செய்ய எந்தக் கடவுள் சொன்னான்?
  • பார்ப்பான் அல்லாதவரோ, பெண்களோ கோவில் கருவறைக்குள் சென்றால் தீட்டு எந்த விளக்கெண்ணை கடவுள் சொன்னான்?

இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். எதற்கும் எந்த பதிலும் வரப்போவதில்லை

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற ஆராய்ச்சிக்குள் போக விரும்பவில்லை.
மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சமூகத்தில் மூடப் பழக்க வழக்கங்களும், சீர்கேடுகளும், பூசல்களும் உள்ளதா இல்லையா?
கண்டிப்பாக இருக்கிறது.,

அதனை எதிர்த்து எந்த ஆன்மீகவாதியும் பிரச்சாரம் செய்வதில்லை.
அதை முதல்ல செய்யுங்க பாஸ்.

அதை விடுத்து பெரியார் முழித்தாரா? பசும்பொன் தேவர் கேள்வி கேட்டாரா? என்ற தேவையற்ற விவாதத்தை நிறுத்துங்க பாஸ்...

நீங்களே அறிவுப்பூர்வமாக அணுகுங்க பாஸ்.
அறிவுப்பூர்வமாக அணுக தேவரும் பெரியாரும் தேவையில்லை. சிந்தித்தால் போதும்

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பெரியார் என்னத்த கிழித்தார்?

நேற்று 'ஜீ தமிழ்'(ZEE Tamil) தொலைக்காட்சியில் 'நம்பிக்கை - மூட நம்பிக்கை' என்னும் தலைப்பில் பொதுமக்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

மூட நம்பிக்கைகளை சாடிய பலர் மிக அருமையாக தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர். அதிலும் குறிப்பாக   'மூடர் கூடம்' திரைப்படத்தின் இயக்குனர் நவீன் மிக அருமையாக பேசினார்.

நம்பிக்கை தரப்பில் பேசிய பலரும் சொதப்பினர். கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
ஒரு கட்டத்தில்  நம்பிக்கையின் பெயரால் தாங்கள் செய்வது தவறு என்று ஒப்பு கொண்டனர்.


அப்போது பேசிய சோதிடக்காரர் ஒருவர் 'பெரியார் செய்த போராட்டங்களுக்குப் பின்னர்தான் நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று சொல்லும் கூட்டம் பெருகி விட்டதாக' தான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சரி, இந்த சோதிடக்காரர் உள்ளிட்டோர் சொல்லும் நம்பிக்கையான விசயங்கள் என்ன?
கழுதைக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும்,
கணவனை இழந்த பெண் முகத்தில் முழித்தால் அபசகுணம்,
செவ்வாய் தோஷம், சனி தோஷம் என்று பொய் புரட்டுக்களை சொல்லும் சோதிடம்,
தீக்குழியில் இறங்கினால் தன்னம்பிக்கை கூடுமாம்..

மனிதனை சிந்திக்க விடாமல் 'முன்னோர் சொன்னார்கள்', 'பழைய பண்பாடு' என்று காட்டுமிராண்டியாகவே வைத்து தங்கள் வயிற்றுப் பிழைப்பை பார்க்க்கத் துடிக்கிறது ஒரு கூட்டம். 
(முன்னோர்கள் மரம் வைக்க சொன்னார்கள், ஏரி வெட்ட சொன்னார்கள். அதையெல்லாம் செய்யுங்கப்பா..)

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை தான் பெரியார் கிழி கிழின்னு கிழித்தார்.

குறிப்பு:
பெரியார் கருத்துக்களை நாத்திகர்கள் மட்டுமே செவிகோடுத்து கேட்க வேண்டும் என்கிற கட்டாயம் அல்ல.
நாத்திகம் என்பது மட்டுமே பெரியார் கொள்கையும் அல்ல.