வெள்ளி, 21 டிசம்பர், 2012

நாதியற்றுப் போனதடா என் தமிழ் இனம்

(source: http://www.indiaresists.com/koodankulam-jailed-idinthakarai-woman-dies-for-want-of-timely-treatment/)



கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் ரோஸ்லின் அவர்கள் மரணம் அடைந்த செய்தி மிக மன உளைச்சலைத் தருகிறது.

இந்த துன்பவியல் சம்பவத்திற்கு யார் காரணம்?

63 வயதில் நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்மணியை சிறையில் அடைத்து போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்காத தமிழக முதல்வரும் இந்திய அரசும் காரணம். இந்த உலகில் அனைவருக்கும் போராட உரிமை இருக்கும் பொது இடிந்தகரை பெண்ணுக்கு இல்லாமல் போனதா?

கூடங்குளம் வந்து மத்திய அரசின் அறிக்கையை வாசித்து சென்ற அய்யா அப்துல் கலாம் அவர்களே, நீங்கள் மெத்த படித்தவர்தானே! உங்களுக்கு கூட இது  தெரியாமல் போனதே!! உங்களை நம்பி வல்லரசு கனவு கண்டுகிட்டு இருக்கிறவன் நிலை ரொம்ப பரிதாபம்!!

பல மீடியாக்களில் இந்த செய்தி வரப்போவதில்லை. இங்கு இறந்தவர் ஒரு சாமானியப் பெண்தானே! அதுவும் தமிழச்சிதானே! பின்னர் எப்படி கண்டுகொள்வார்கள்?? மாறாக இந்த செய்தியை எப்படியெல்லாம் திரித்து எழுதப் போகிறார்களோ!!

டெல்லியில் ஒரு சகோதரி பாலியல் வன்முறைக்கு ஆளானபோது கண்டித்த தமிழர்களும் பல ஊடகங்களும் இப்போது கண்ணைக் கட்டிக்கொள்வார்கள்.

இந்தியா மீது போர் தொடுத்ததாக அந்த அம்மா மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. இந்த வயதில் அப்படி என்ன போர் செய்யமுடியும்? தெருவில் நின்று உங்கள் ஆதிக்கத்தை எதிர்த்து சில நிமிடங்கள் குரல் கொடுக்க முடியும். வேறு என்ன செய்ய முடியும்??


ஊரில் எங்கு எழவு விழுந்தாலும் எம் தமிழினம் வருந்தும்.
ஆனால் தமிழினத்தில் பல இழவுகள் விழுந்தும் அதைக் கண்டுகொள்வார் இல்லையே!!

"இந்த வயதில் ஏன் போராட்டக்களத்திற்கு சென்றார்" என்று தங்கள் நாக்குகளால் விஷத்தை உமிழ்வார்கள் பலர். அவர் சென்றது அவருக்காக இல்லை. உனக்காகவும், எனக்காகவும் நம் சந்ததிக்காகவும். அதற்கு கைமாறாக என்ன செய்யப்போகிறோம்??


"விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை"- என்று மாவீரன் முத்துக்குமார் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது.

1 கருத்து: