செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தீவிரவாதத்தின் ஆணிவேர்

ஒசாமாக்களையும் உசேன்களையும் உருவாக்கிவிடுவது,
பின்னர் 'தீவிரவாதத்தை அழிப்போம்' என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுவது,
போர் என்னும் பெயரில் அப்பாவிகளை கொன்றுகுவித்து விட்டு, எண்ணைய்க் கிணறுகளை தன் வசப்படுத்துவது,
அரபு நாடுகளின் ஆசியோடு அவர்கள் மண்ணில் தன் ஆதிக்கத்தை நிலைக்க செய்வது.
இதுதான் காலம்காலமாக அமெரிக்கா நடத்தும் செயல்.
(இன்னும் 10000 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். ஆப்கனில் அமெரிக்காக்காரனுக்கு என்ன புடுங்குற வேலை??)

தீவிரவாதத்தின் ஆணிவேரைத் தேட முயற்சித்தால் அந்த தேடல் அமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் சென்று முடிவடையும்.


இப்போது புதிதாக ஐஸிஸ்(ISIS) என்னும் மற்றொரு மனிதவிரோதக் கூட்டம் கிளம்பியிருக்கிறது.
( எங்கே இருந்து கிளம்பியதோ! )

ஷியா முஸ்லிம்கள், குர்து மற்றும் யாசிடி இன மக்களைக்(அவர்களும் முஸ்லிம்கள்) கொன்று குவித்தது.
ஊடகவியலாளர்களின் தலையை துண்டிக்கிறது.
(இதுல அல்லா ஹூ அக்பர் கோஷம் வேற.. ).
ஷியாக்களின் மசூதிகளையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் இடித்து நாசமாக்கியது.

அந்தக் காட்டுமிராண்டிகளை அழிக்க அமெரிக்கா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவும் இணையப் போவதாக ஒபாமாவுக்கு மோடி உறுதியளித்துள்ளதாக பொறுக்கி சுசாமி தெரிவித்துள்ளான்.

ஐஸிஸ் காட்டுமிராண்டிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அவர்களின் தோற்றம் மற்றும் பின்னணி குறித்தும், தீவிரவாதத்தில் அமெரிக்காவின் பங்கு என்னவென்பதும் விவாதிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் தீவிரவாதத்தை நிரந்தரமாக அழிக்க முடியாது.

3 கருத்துகள்:

  1. இப்பதிவின் முற்பகுதியை அப்படியே ஒற்றெடுத்து என் பதிவில் ஒரு பகுதியாகச் சேர்த்துள்ளேன். உங்கள் அனுமதி தேவை.

    தொடுப்பு கொடுப்பதற்காக பதிவிட்டு அதன் பின் அனுமதி கேட்கிறேன். தவறாக நினைக்காமல் அனுமதி கேட்கிறேன்.

    அனுமதியில்லையெனில் உடனே அப்பகுதியை எடுத்து விடுகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு