வெள்ளி, 1 மே, 2015

திராவிடப் போலிகளை அம்பலப்படுத்துவோம்

திராவிடம் பேசும் சில பிழைப்புவாதிகளின் (அனைவரும் அல்ல) மடைமாற்றும் அரசியல், பிழைப்புவாத அரசியல் பற்றி  நிறையபேசுவோம்..வாருங்கள்..

* இருபது தமிழர்கள் படுகொலைக்கு திக, திமுக  சார்பில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை.. கிருஷ்ணகிரியில் தலித் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட விசயத்தை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இந்த இரு விசய பின்னணியை ஆராய்ந்தால் திக யாருக்கான அமைப்பு என்று தெரிந்து விடும்.
இந்த இரு விசயங்களில் பார்ப்பான் ஈடுபட்டிருந்தால் திக போராட வந்திருக்கும்.. அதிமுக ஈடுபட்டிருந்தால் திமுக போராட வந்திருக்கும்.. இதுதான் திராவிட அரசியல்..

* விஜயகாந்துக்கு அறிவுரை கொடுப்பது போல திமுக-விஜயகாந்த் கூட்டணிக்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார் வீரமணி. மோடியை பெரியாருடன் ஒப்பிட்டபோது விஜயகாந்துக்கு எதிராக திராவிட அமைப்புகள் எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை.. அதுவே ஒரு வடநாட்டான் பேசியிருந்தால் இங்கே கூச்சல் போட்டிருப்பார்கள் . ஆனால் பொறுக்கித் தின்ன இப்போது விஜயகாந்தும் தேவைப் படுகிறாரே!! அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க..

* வே.மதிமாறன் என்னும் நபருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.. மேடையில் பேரா.அன்பழகனை வைத்துக் கொண்டு 'அடுத்து திமுக ஆட்சிதான்' என்று பேசுகிறார்.. இப்படி பொறுக்கித் தின்பதற்கு எதுக்கு விருது??
பாரதி, வள்ளுவன் என அனைவரிடம் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டினால் முற்போக்கு.. அதுவே பெரியாரின் பிழைகளை சுட்டிக் காட்டினால் உடனே பார்ப்பனிய அடிமை, சாதிவெறியன் என பட்டம் கொடுத்துவிடுவார்கள் பெரியார் திடல் பக்தர்கள்.

* தருமபுரி சேரி சூறையாடலில் ஈடுபட்டவர்களில் அதிகம் பேர் திமுகவினர். மதிமுக, தேமுதிக கட்சியினரும் உண்டு. ஆனால் அந்தக் கட்சியினர் எந்த நடவடிக்கையாவது எடுத்தார்களா?? இல்லவே இல்லை.. மிக நுட்பமாக வன்னியர்-பறையர் பிரச்சினையாக மாற்றினர். (ராமதாசின் செயல்களும் அப்படிதான் இருந்தது. அவரும் அதைதான் விரும்பியிருப்பார்..).

* ராமதாசும் அவர் மகனும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு தமிழ்த்தேசிய அடையாளம் கொடுத்து தமிழ்த்தேசியம் என்றாலே சாதிதான் என்று கேலி செய்கிறார்கள்.

* சாதி நிகழ்வுகளில் பங்கேற்கும் திராவிடக் கட்சிகள் பற்றி திராவிடம் பேசுகிறவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?? உடனே ஒரு வேதவாக்கு சொல்லுவார்கள் "ஓட்டு அரசியல் என்றாலே சந்தர்ப்பவாதம்" என்று. அது சரிப்பா, அந்த சந்தர்ப்பவாதிகளை பற்றிப் பேசாமல் எப்படி அய்யா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள்??  "அனைத்துக் கட்சிப் பெயரிலும் திராவிடம் இருக்கிறது.அதனால்திராவிடத்தைவீழ்த்தமுடியாது"என்கிறார் கி.வீரமணி.அப்ப மட்டும் திராவிடக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொள்கிறீர்கள்.. அவர்களின் சாதி சார்பை ஏனய்யா மூடி மறைக்கிறீர்கள்??

* திராவிடக் கட்சிக்காரர்கள்தான் தமிழகத்தில் பாதி இருக்கிறார்கள். இவர்கள் சாதி ஒழிப்பை மேற்கொண்டிருந்தால் சாதி இந்நேரம் ஒழிந்திருக்குமே!! ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஆனால் சாதி ஒழிப்பு போராளிகள் போல வேஷம் போடுவார்கள். (இந்த வேஷம் போடுற வித்தை தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியவில்லை.. )

* திராவிடக் கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அம்பேத்கர் ஏன் இன்னும் கூண்டுக்குள் இருக்கிறார்?? இதையெல்லாம் பற்றி பேசாமல் சாதி ஒழிப்பு நாடகம் போடுகிறார்கள்.

* அண்மையில் திக-திவிக-தபெதிக உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலையை கருணாநிதி ஆலோசனையின் பேரில் சுபவீ மேற்கொண்டிருக்கிறார்.. ஆனால் கோவை ராமகிருஷ்ணன் (தபெதிக) நழுவிக் கொண்டார்.. அவருக்கு வாழ்த்துகள்..

* முருகனை முப்பாட்டன் என்றுகூறி  சீமான் வேல் ஏந்தினால் சுபவீ பக்கம் பக்கமாக கட்டுரை  எழுதுகிறார். கேலி செய்கிறார்.ஆனால் பார்ப்பான் ராமானுஜர் பற்றி  தொடர் எழுதப் போகிறாராம் கலைஞர்.. திராவிடம் பேசுகிறவர்கள் அனைவரும் நவத்துவாரங்களையும் மூடிக் கொண்டு இருப்பதை கவனித்தீர்களா!! இவ்வளவுதான்யா பார்ப்பனிய எதிர்ப்பு..

* "இந்திய தேசிய கீதத்தில் திராவிடம் என்னும் சொல் இருக்கிறது. அதனால் திராவிடத்தை வீழ்த்த முடியாது" என்கிறார் கலைஞர்.

" தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் ஏன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்?" என்கிறார் சுபவீ.. 
பார்ப்பனிய இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போட திராணி இல்லாத திக கும்பல் தமிழ்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது.. அப்புறம் எதுக்குப்பா தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறீர்கள்? வடநாட்டு பக்கம் போயிட வேண்டியதுதானே!! ஆக திராவிடத்தை வளர்க்கிறோம் என்னும் பெயரில் இந்தியத்தைதான் வளர்க்கிறார்கள்..


* "ஓட்டு அரசியலில் அடித்துக் கொள்ளுங்கள். ஆனால் திராவிடத்தைக் காத்திட ஒன்று சேருங்கள்" என அதிமுக, திமுகவுக்கு அழைப்பு விடுக்கிறார் அய்யா வைகோ.
திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவின் கொள்கை.
அதிமுக எதிர்ப்பு என்பது திமுகவின் கொள்கை. நடுவுல எங்கிருந்து வந்தது திராவிடம்? அய்யா வைகோதான் இதுக்கு பதில் சொல்லணும்.

இதையெல்லாம் அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியவாதிகள் சாதிய அபிமானிகளாக இருப்பதால் திராவிடப்  பிழைப்புவாதிகளை  தீவிரமாக எதிர்க்க முடியவில்லை.. சம்பந்தமே இல்லாமல் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்..

பின் குறிப்பு: கட்டுரை படித்துவிட்டு எனக்கும் பார்ப்பனிய அடிமை, சாதி வெறியன் பட்டம் கொடுத்தால் மகிழ்ச்சியே!!

4 கருத்துகள்:

  1. பெயரில்லா1 மே, 2015 அன்று PM 10:31

    எல்லாமே அரசியல் தான். சர்வ தேசியம், இந்திய தேசியம், திராவிட தேசியம், தமிழ் தேசியம் அதையும் கடந்த மத தேசியம், ஜாதிய தேசியம் எனப் போய்க் கொண்டே இருக்கின்றது. எல்லாம் அரசியலில் மக்களின் வாக்குகளைச் சேகரிக்க ஏற்படுத்தப்பட்ட அடையாள அரசியலே.

    நான் ஒரு தமிழன், ஆனால் தமிழ்நாட்டுக்குள் என் ஜாதி கோரப்படுகின்றது, என் மதம் அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் தென்னிந்தியாவின் மற்ற இடங்களில் நான் ஒரு தமிழனே. ஆனால் வட இந்தியாவுக்கு போய்விட்டால் நான் ஒரு மதராசி, தென்னிந்தியன். அதுவே வெளிநாடுகளில் நான் ஒரு இந்தியன், தெற்காசியன் இவ்வாறு தான் அடையாளம் காணப்படுகின்றேன். எங்குமே நான் ஒரு மனிதன் எனப் பார்க்கப்படவில்லை. ஒருவேளை வேறு கிரகத்திற்குப் போனால் மனிதனாகப் பார்க்கப்படுவேனோ என்னவோ?

    தமிழ்நாட்டுக்கு திராவிட தேசியமும் வேண்டாம், தமிழ் தேசியமும் வேண்டாம். தமிழ்நாட்டுத் தேசியம் போதும், இந்தியாவிற்கு இந்து தேசியமும் வேண்டாம், ஆர்ய தேசியமும் வேண்டாம் இந்திய தேசியம் போதும். இதை உணர்ந்தால் சிக்கலே இல்லையே.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டேன் அப்படியே ! எனக்கும் இந்த திராவிடம் பேசுகிறவர்கள் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் வெறும் செய்தியாக இருக்கின்றன. தனித்தனியாக விரிவாக எழுதினால் நேர்த்தியான விமர்சனக் கட்டுரையாக வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கே பதில் சொல்ல மறுக்கிறார்கள் அல்லது சமாளிக்கிறார்கள்..
      விரிவா எழுதினால் மட்டும் பதில் சொல்லவா போகிறார்கள்?

      நீக்கு
  3. அண்ணே அப்பிடியே இந்த இணைய பகுத்தறிவு வியாதிகள பத்தியும் கொஞ்சம் விளாசுங்க

    பதிலளிநீக்கு