தேசியத் தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசியத் தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 மார்ச், 2013

புலிக்கொடி ஏந்திய தி.மு.க தொண்டர்கள்

திமுக தலையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது 05.03.2013 அன்று நடைபெற்றது. பல திமுகவினர் புலிக்கொடிகளையும், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் படங்களையும்  தாங்கியவண்ணம் திரண்டுவந்து இப் போராட்டத்தில் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

அத்தோடு பாலச்சந்திரன் படங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் தாங்கி நின்றார்கள். பல்லாயிரக்கணக்காண மக்கள் திரண்ட இப் போராட்ட பேரணி, இலங்கை தூதரகம் நோக்கி நகர முயன்றது. இதனை தடுத்து நிறுத்த போலீசார்  படாத பாடு படவேண்டி இருந்தது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், என திமுகாவின் கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டது. புலிக்கொடியை ஏந்திவந்த பலர் கூடவே கொடூரமாகச் சித்தரிக்கப்பட்ட ராஜபக்ஷவின் படங்களையும் ஊர்வலமாகத் தாங்கிவந்தார்கள். 

 இறுதியில் புலிக்கொடியை உயர்த்திப் பிடித்தவாறு, மகிந்தரின் படத்துக்கு நெருப்பு மூட்டினார்கள். எரிந்தான் ராஜபக்ஷ என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. 

தமிழ் நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள், ஈழத் தமிழர் சார்பான போக்கை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரசுடன் கூட்டு வைத்திருப்பதால் திமுக இவ்விடையத்தில் , சற்று விலகியே நின்றதை கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல எமக்கு உணர்த்தி இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி, பாலச்சந்திரன் கொலை தொடர்பாக தமிழ் நாட்டில் தோன்றியுள்ள உணர்வலை, ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களை தமிழக மககள் நன்கு உணர்ந்துள்ளதை தற்போது எடுத்துக்காட்டியுள்ளது.




 நன்றி: அதிர்வு இணையம்
========================================================================
ஈழ  விவகாரத்தில் தி.மு.க மீது கடும்கோபம் உண்டு. அந்த கோபம் எல்லாம் ஒரு குடும்பத்தின் மீதுதானே தவிர, ஒட்டுமொத்த  தி.மு.க தொண்டர்கள் மீது கிடையாது. தி.மு.கவில் இருந்துகொண்டே ஈழ ஆதரவை மறைமுகமாக  கொடுத்த, ஈழ ஆதரவாளர்களுக்கு துணை புரிந்த பல  தி.மு.க தொண்டர்கள் உண்டு.

இந்த போராட்டம் அரசியல் ஆதாயமா?
காங்கிரசை விட்டு பிரிய நடத்தப்படும் நாடகமா?
அப்படியா? இப்படியா? என கேள்விக்கேட்டு பின்னோக்கி செல்ல நான் தயாரில்லை.

இலங்கையை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை பதிவு செய்தமைக்கு தி.மு.க தொண்டர்களுக்கு வாழ்த்துகள்.

இது போதாது. திரும்பத்  திரும்ப 'போர்க்குற்ற விசாரணை', மறுவாழ்வு அளித்தல் என பேசுவதெல்லாம் தீர்வே கிடையாது.

சுதந்திரமான பன்னாட்டு விசாரணையும், பொது வாக்கெடுப்பும் மட்டுமே தீர்வு. அதை உரக்கச் சொல்ல வேண்டும்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

போர்நெறி தவறாத தலைவன் பிரபாகரன் - உண்மைச் சம்பவங்கள்

விடுதலைப்புலிகள் மிகுந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகுந்தவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பல விடுதலைக் குழுக்கள் இருந்தபோதிலும் விடுதலைப்புலிகளை மட்டும் மக்கள் ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் அவர்களின் ஒழுக்கமும் லட்சியத்தில் விட்டுக்கொடுக்காத பண்பும்தான்.

தமிழகத்தில் புலிகள் பயிற்சி மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் கொளத்தூர் மணி அவர்களின் நண்பர் ஒருவர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். அவர் ஒரு வேதியியல் பொறியாளர். 'ஏவுகணைகளில் வேதியியல் மயக்க மருந்தை தடவி ஏவினால் எதிரிகள் மயக்கம் கொள்வார்கள். நாம் எளிதில் வென்று விடலாம்' என்று பிரபாகரனிடம் அவர் கூறினார். இதனைக் கேட்டு சினம் கொண்ட தலைவர் கூறியது: "நீங்கள் கூறிய முறை உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. உலகப் போர் நெறிகளை புலிகள் ஒருபோதும் தவறமாட்டார்கள்."


தமிழகத்திலிருந்து கடல் வழியாக ஆயுதங்களை எடுத்துச்செல்லும் பணியை தளபதி ரகு என்பவர் மேற்கொண்டிருந்தார். தமிழகத்தின் சாலைகளில் தமிழகக் காவல்துறை மிகுந்த சோதனை செய்து கொண்டிருந்தது. தங்களை மடக்கினால் ஆயுதங்களை பறிகொடுக்க நேரிடும் என்பதால் ஆம்புலன்ஸ் சின்னத்தை தன் வண்டியில் ஒட்டி காவல்துறை  சோதனையிலிருந்து தப்பித்தார் ரகு.

ஈழத்திற்கு சென்று தலைவரிடம் இதைப் பற்றித் தெரிவித்த போது கடும்கோபம் கொண்ட தலைவர் "ஆம்புலன்ஸ் சின்னம் ஒரு புனிதமான சின்னம். அதனை ஆயுதக் கடத்தலுக்கு பயன்படுத்திக் கொண்டது மிகத் தவறு. இது போன்ற சின்னங்களை எக்காலத்திலும் நாம் தவறாக பயன்படுத்தக்கூடாது. இதுவே முதலும் இறுதியுமாக இருக்கவேண்டும்' என்று கூறி தனது இயக்கத்தினரை எச்சரித்தார்.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எம் தலைவன் ஒரு மாபெரும் உதாரணம்.

நன்றி: 'பிரபாகரன்- தமிழர் எழுச்சியின் வடிவம்  நூல்'

வியாழன், 20 டிசம்பர், 2012

நான் வாங்கிய வேத நூல்

அலுவலகத்தில் Facebook தடை செய்யப்பட்டு விட்டது.
தமிழ் தொலைக்காட்சிகளும் பார்க்க முடியவில்லை.
தமிழ் இதழ்களும் இங்கு அவ்வளவு கிடைப்பதில்லை.

அதனால் ஏதாவது ஒரு தமிழ்ப் புத்தகம் வாங்க முடிவு செய்தேன்.

புத்தகம் வாங்க வேண்டும்.
திரும்பத் திரும்ப படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.
நம்மை சோர்வடைய செய்யக்கூடாது.

இப்படி ஒரு புத்தகம் எதுவாக இருக்கும்??

உடனே என் நினைவில் வந்தது "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்" என்னும் நூல். அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய எழுச்சி நூல்.

இணையதளத்தில் பதிவு செய்து வாங்கி விட்டேன்.

தலைவர் புகழ் பாடுவது, பெருமை பேசுவது மட்டும்  என் பணி  அல்ல.

ஓர் இனத்தின்  சுதந்திர போராட்டத்தினை முற்றிலுமாக அறிந்து, அதை வெளியுலகிற்கு எடுத்துச்செல்ல செண்டும்.
எதிரிகளையும், துரோகிகளையும் அடையாளம் காட்ட வேண்டும்.

அதற்கு  இந்த நூல் நல்ல துணையாக இருக்கும்.


இந்த நூலினை பார்த்தவுடன் இரு தெலுங்கு நண்பர்கள் "Guru, Are you going to be a Tamil Tiger?? [என்ன குரு,  தமிழ்  புலியாக போறீங்களா?]" என்று ஏளனம் செய்தார்கள்.

ஏன் நம்ம ஊரில் உள்ள நண்பர்களே "இப்படி இருந்தால் பொண்ணு தரமாட்டார்கள்" என்று கூட சொல்லியிருக்கிறார்கள்.

பலரும் ஈழப்போராட்டத்தை 'ஓர் ஆயுதப்போராட்டம்' என ஒரு வரியில் சொல்லிவிட்டு முடித்து விடுகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் விடுதலைப்போராட்டம் என்பது பலருக்கு தெரியவில்லை.

அது சரி, சுக போக அடிமைகளாக வாழ்ந்து பழகி விட்டோம். பின்னர் எப்படி விடுதலை பற்றி யோசிக்க முடியும்..


பிரபாகரனிசம் என்பது ஆயுதம் தூக்குவதையோ, வன்முறையையோ ஊக்குவிக்காது.
மாறாக அது போராட்டக்குணத்தினை வளர்க்கும்.


"போராடாதவன் ஜடம்" - தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் 

இந்த நூலினை கையில் வாங்கியவுடன் ஏதோ ஒரு வேத நூல் என் கையில் இருப்பதை போல ஓர் உணர்வு. மேலோட்டமாக படித்து பார்த்தேன். மிக அருமையாக தொகுத்துள்ளார் அய்யா நெடுமாறன் அவர்கள். அய்யாவுக்கு மிக்க நன்றி.