ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 நவம்பர், 2014

பிரபாகரன்60 - தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள்

தமிழீழ தேசியத் தலைவருக்கு வயது 60.


தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள்:

* "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."

* "சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை."

* "சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை."

* "போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை."

* “இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.”

* “நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள்.”

* ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்."

* "மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது

* "மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.”

* “நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம்
பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். ”

* "பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்."

* "ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுத பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்."


#Prabhakaran60

சனி, 23 மார்ச், 2013

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??


தமிழீழ விடுதலைக்காக தமிழகத்தில் மாணவர்கள் தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பித்து பொதுமக்கள், பணியாளர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.

ஆனால் இந்தியா அதே கள்ள மௌனம் சாதிக்கிறது. நடந்தது இனப்படுகொலை என்பதைக் கூட இந்தியாவால் தைரியமாக சொல்ல முடியவில்லை (இந்தியாவும் உடந்தைதானே!!). இந்தியா மீது தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். காங்கிரஸ், பிஜேபி மற்றும் பல இந்தியக் கட்சிகளும் தமிழர்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. தமிழகக் கட்சிகளும் கூட்டணி கணக்கில் இறங்கிவிட்டார்கள்.

 இந்நிலையில் இந்தியாவுக்கு கீழ்க்காணும் கோரிக்கைகளை வைக்கிறேன்.
இது ஏற்கனவே பலரும் வைத்ததுதான்.

1. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது. (புறக்கணிக்கப்போவதாக கனடா ஏற்கனவே அறிவித்துவிட்டது)

2. IPL கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது.

3. தமிழ்மண்ணிலிருந்து இலங்கைத் தூதரகம் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

4.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்  (ஏற்கனவே தமிழக அரசு விதித்துவிட்டது)

5. தமிழக மீனவர் மீதான தாக்குதல்களுக்காக இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். இனி தாக்குதல்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்யவேண்டும்..

Demands to Indian Government

1.India should not attend common wealth meeting to be held in genocidal srilanka.  (Canada already announced that they wont attend that meeting)


2. Srilankan players should not be allowed to play in IPL matches.

3. Genocidal Srilankan embassy should be removed from Tamilnadu

4. Indian Government should impose economical ban on Srilanka (Tamilnadu Govt already imposed economical ban on srilanka)

5. India should condemn Srilanka for its attacks on Tamilnadu fishermen.


நான்காவது கோரிக்கை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் மிக எளிதாக நிறைவேற்றப்படக்கூடிய  கோரிக்கைகளே!!

கிரிக்கெட்டை ஏன் புறக்கணிக்க வேண்டும் எனப் பலர் கேள்வி கேட்கக் கூடும்.
அவர்கள் இந்தப் பதிவை படித்துத் தெளிவாகுங்கள்.

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??

வெள்ளி, 15 மார்ச், 2013

அவசரம் - ஹைதராபாத் நண்பர்கள் கவனத்திற்கு

ஹைதராபாத் நண்பர்கள் கவனத்திற்கு,

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்  நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஹைதராபாத்  நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

தொடர்புக்கு:  
வடிவேல் - 9052624014

தயவுசெய்து இந்த பதிவை பகிருங்கள். தங்கள் இணையதளங்களில் பதிவு செய்யுங்கள். மிக அவசரம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

புதன், 13 மார்ச், 2013

உருப்படாத முட்டாள் கூட்டம்

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

தனி ஈழம், சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பு என உயர்ந்த குறிக்கோள்களுடன் மாணவ சமுதாயம் களத்தில் இறங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி.


இதில் விசேஷம் என்னவென்றால் இதுவரை எந்தவொரு இந்திய ஊடகங்களும் மாணவர்களின் இப்போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதுவும் மகிழ்ச்சியே! இந்திய ஊடகங்கள் ஏன் தமிழ்நாட்டு விசயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்?

தமிழ்நாட்டு ஊடகங்களும் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கவில்லை. செய்திகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். திரித்து வெளியிடுகிறார்கள்.

தமிழக அரசு பற்றி சொல்லவே தேவையில்லை. போராட்டத்தை அடக்க பாசிச செயல்களில் ஈடுபடுகிறது. (ஆத்தா! கருணாவை மேடையெல்லாம் காரித் துப்புகிறீர்களே! கடிதத்தை தவிர நீங்கள் கிழித்தது  என்ன? )

ஆனாலும் மாணவர்களின் போராட்டம் விரிவடைகிறது. இதற்கு இணையங்கள் பெரும் பக்கபலம்.

விசயத்துக்கு வருவோம்.
பல இணையங்களில் சில அதிமேதாவிகள் நஞ்சைக் கக்குகின்றன. இந்த அதிமேதாவிகள் தமிழர்கள்தானா? அல்லது சிங்களர்களா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது. 
எழுத்து வழக்கைப் பார்க்கும்போது நம்ம தமிழ்நாட்டில் உள்ள அதிமேதாவிகள்தான் என்று கருதுகிறேன்.

================================================================
அவர்கள் கக்கிய நஞ்சுகள் கீழே:

"இவர்கள் எல்லாம் நேற்று பிறந்து இன்று மாணவர்கள் ஆனவர்களா? இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபொலுதும் இவர்கள் மாணவர்களாக இருந்தவர்கள்தானே அப்போது போராட வேண்டியதுதானே. இன்று எங்கிருந்து இந்த திடீர் ஞானோதயம்."

அட கண்ணுங்களா.... பரிட்சை நெருங்குகிறது.... உங்க அப்பன் , ஆத்தா , கஷ்டப்பட்டு சம்பாதித்து, கல்லூரிக்கு அனுப்பினா, கேட்பார் பேச்ச கேட்டுட்டு இப்படி ஹாயா உண்ணாவிரதம் இருந்தா எப்படி? உங்களுக்கு உண்மையிலேயே இனஉணர்வு அல்லது, பச்சாதாபம் இருந்தா 4 வருடத்துக்கு முன்னால் அல்லவா போராடியிருக்க வேண்டும்...  

 இது போன்ற போராட்டங்களால் ஒரு விளைவும் ஏற்படாது..இவர்களுக்கு தெளிவான கோட்பாடுகள் இல்லாமல் உண்ணாவிரதம் இருப்பது யார் துண்டுதல் பெயரில்..  
 
முதல படிக்குற வழிய பாருங்க.. இந்த அரசியல்வதீங்க கூட சேராதீங்க  
நிறைவேற முடியாத ஒரு கோரிக்கை . இதற்கு ஒரு போராட்டம் தேவையா ? என்று சிந்திக்க வேண்டும். முடிவு எடுக்க வேண்டயது இலங்கை இந்தயாவில் போராடி என்ன பயன். படிப்பு வீனா போக நல்ல வழி.


தூண்டிவிட்ட சீமான் வைகோ நெடுமாறன் உதயகுமார் போன்றவர்களை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச்சொல்லுங்கள். அதுவே மாணவர்களாகிய நீங்கள் தமிழ் நாட்டுக்கு செய்யக்கூடிய அளப்பெரிய சேவையாகும்.

தமிழீழம் அமைவது இருக்கட்டும்.... முதலில உங்கள் தமிழ் நாட்டில இருக்கிற பிரச்சனைகளை தீர்க்க போராட்டம் நடத்துங்க...
 ===============================================================
இதுபோன்று பல நச்சுக்கருத்துகளை பரப்பி போராட்டத்தை மழுங்கடிக்கவே கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம். இந்தப் போராட்டம் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த போராட்டம் நடந்தாலும் அதை விமர்சிப்பதற்காக இப்படி  உருப்படாத முட்டாள் கூட்டம் கிளம்புகிறது.
ஒருசிலர் வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்கே தமிழன் நடுத்துற போராட்டத்தை அவமதிக்கிறார்கள்.

ஒருநாலாச்சும் போராட்டக் களத்திற்கு வருவார்களா? வரவேமாட்டார்கள். வராமல் இருந்தாலும் சரி, ஏன் தேவையற்றக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும்?? ஒரு கம்யுட்டரும் இணைய இணைப்பும்  வைத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு நச்சுக்கருத்துகளை பரப்புவதில் இந்தக் கூட்டத்திற்கு அப்படி என்ன ஆனந்தம்??

இந்தக் கூட்டத்திற்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.
இது இனத்திற்காக இனம் நடத்தும் போராட்டம்.
களத்திற்கு வா.
இல்லையேல் களத்திற்கு வந்தவர்களை ஆதரி.
பிடிக்கவில்லையென்றால் வந்து எதிர்ப்போராட்டம் நடத்து.
அதைவிட்டு தேவையில்லாமல்  நச்சுக்கருத்துகளை பரப்பாதே!
போராட்டத்தை மழுங்கடிக்கப் பார்க்காதே!!

"போராடாதவன் ஜடம்"- தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் 
           

திங்கள், 11 மார்ச், 2013

வியக்க வைக்கும் மாணவர்கள்

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மாணவ சக்தி ஒன்றுபட்டு எழுந்துள்ளது. தலைநகரில் லயோலா கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்த போராட்டம் தமிழகத்தின் பல இடங்களிலும் எழுச்சி பெற்று நடைபெறுகிறது.

இம்முறை மாணவர்கள் வெறும் உணர்வுடன் மட்டும் எழுச்சி கொள்ளவில்லை. தமிழீழம் தொடர்பான மாபெரும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கைகளுடன் களத்தில் உள்ளனர்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 9 கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைக்கிறார்கள்.
மிகவும் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ள கோரிக்கைகள்


இது மட்டுமில்லாமல் பல இடங்களில் தமிழர் விரோத சகுனி சு.சாமியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளதிலிருந்து மாணவர்களின் தெளிவானப் பார்வை புரிகிறது.

ஜனநாயகப்  போராட்டத்தை பாசிச முறையில் அடக்க நினைத்து போராட்டத்தை தமிழகத்தின் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்ற தமிழக பாசிச அரசுக்கு நன்றிகள் பல.

அனைத்து மாணவர்களுக்கும் எனது சிறிய வேண்டுகோள்:

போராட்டத்தில் அரசியல், வன்முறை கலந்திடாதவாறு  கவனமாக செயல்படுங்கள்.

தமிழீழம் தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்களிடம் முறையாக் கொண்டு சேருங்கள்.

களத்தில் சந்திப்போம்.

ஞாயிறு, 10 மார்ச், 2013

தமிழக அரசின் பாசிசம்

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி லயோலா கல்லூரி மாணவர்கள் நான்கு நாட்களாக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்திற்கு தமிழகமெங்கும் பெரும் ஆதரவு அலை வீசியது .

தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் வெடிக்கும் என்ற செய்தி உளவு துறை அறிந்து அதை எப்படியாவது நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது . அதனால் காவல்துறை அதிகாலை 1.30 மணி அளவில் போராட்ட அரங்கின் கதவுகளை உடைத்து உள் நுழைந்தது . வெளியே நூறு அடி சாலையை போக்குவரத்து எதுவும் செல்ல முடியாமல் முடக்கியது . காவல் துறை வாகனங்களை கொண்டு வந்து குவித்தது . அரங்கத்தில் உள்ளே இருந்த உணர்வாளர்களை களைத்து மாணவர்களை நெருங்க முயன்றது  

அப்போது அமைப்புகளை சேர்ந்த நபர்கள் காவல்துறையை கேள்வி கேட்டனர் . ஏன் எதற்காக உள்ளே வந்தீர்கள் . இது தனியார் திடல் தானே , நீங்கள் இங்கு எப்படி அத்து மீறி உள்ளே நுழைய முடியும் என்று கேள்வி எழுப்பினர் . அதற்கு காவல்துறை நாங்கள் கைது செய்யத்தான் வந்திருக்கிறோம் என்றனர் . 
 
உடனே தமிழ் அமைப்பினர் , கைது செய்வதற்கு ஆணை  (வாரன்ட்) இருக்கிறதா என்று கேள்வி  எழுப்பினர் . இருப்பினும் காவல்துறை அதை கண்டுகொள்ளவில்லை . மாணவர்களை நோக்கி முன்னேறியது . மாணவர்களை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு சங்கிலி அமைத்திருந்தனர் பிற மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் . காவல்துறை ஒவ்வொரு  அடுக்காக தடியடி  நடத்தி  மனித சங்கிலியை உடைத்து மாணவர்களை நெருங்கினர் .மாணவர் அனைவரையும் குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு போய் வாகனத்தில் ஏற்றினர் . பின்பு போராட்டக் காரர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர் . 

சுமார் 200 ஆதரவாளர்களை கைது செய்து அருகில் உள்ள சமூக கூடத்தில் அடைத்தது காவல்துறை . மாணவர்களை இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது . இவ்வாறு அராஜகமான முறையில் காவல்துறை ஒரு நியாயமான  போராட்டத்தை நசுக்கியது . 
 
செய்தி:  newsalai.com


போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் தான் கருணாநிதிக்கு சற்றும் இளைத்தவரல்ல என்பதை ஏற்கனவே கூடங்குளத்தில் நிரூபித்த பாசிச ஜெயா தற்போது லயோலா கல்லூரி மாணவர்கள் மீது காட்டியுள்ளார்.

எந்தப் பலத்தையும் தட்டிப்பார்க்கும் வல்லமை மாணவர் சக்திக்கு உள்ளது. சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்கள் தொடங்கியிருக்கின்ற உண்ணாநிலைப் போராட்டத்தின் அனல்,  வீச்சுப்பெற்று தமிழகம் எங்கும் பரவி இந்திய மத்திய அரசினை உலுப்பிப்பார்க்கவேண்டும். 

 இடையறாது தொடரும் தாய்த் தமிழகத்தின் மன உணர்வுகளை இனியும் அசண்டை செய்ய முடியாது என்கின்ற நிலையினை இந்திய மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
போராட்டங்களை நசுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கடந்து இலக்கை எட்டும்வரை வன்முறையற்ற வழியில் முழுமையான பலத்தினையும் ஒன்றுதிரட்டி மாணவர் சக்தி போராடவேண்டும்.

வியாழன், 7 மார்ச், 2013

தோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்

மக்களவையில் நேற்று  ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியதன ஒரு பகுதி:

"இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இந்தியா பழி சுமக்க நேரிடும். தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும் நிலை உருவாகும். "


'தனி நாடு '  என்பதுதான் தோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்.

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின்போது திமுக எம்.பி திருச்சி சிவா அவர்களும் இதே கருத்தை மறைமுகமாக வைத்தார். 'இலங்கை வேண்டுமா? தமிழகம் வேண்டுமா? என்பதை இந்தியா தீர்மானிக்கட்டும்' என்றார்.

ஒட்டுமொத்த தமிழர்களும் இலங்கையைக் கண்டிக்கிறார்கள்.
இனப்படுகொலைக்குத் தீர்வு வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா இலங்கையை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
சிலர் தீக்குளித்து இன்னுயிரை மாய்க்கிறார்கள்.

ஆனாலும் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
'இலங்கை நம் நட்பு நாடு. நாம் அவர்களை எதிர்க்க கூடாது'.
அதாவது இலங்கையை தனது மாநிலமாக பாவித்து பேசுகிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இடையில் பல இந்திய ஊடகங்கள், சு.சாமி போன்ற  அரசியல் தரகர்கள் தமிழர்களுக்கு எதிராக நிற்கிறார்கள். (கேடுகெட்ட தினமலர் இன்று  எப்படி கார்ட்டூன் போட்டுருக்கான்னு பாருங்க!!)

 இந்தியாவின் இரு அவைகளிலும் தமிழர் பிரச்சினை என்றாலே வட மாநில உறுப்பினர்கள் வெளியே காற்று வாங்க சென்று விடுகிறார்கள்.

அப்படியானால் தமிழன் என்ன செய்வது?
எப்படி இந்தியாவை ஆட்டம் காணச் செய்வது?

அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.
ஆம்! 'தனித் தமிழ்நாடு' கோஷம். இது வெற்றுக் கோஷம் அல்ல. நம் உரிமை.
அதை நாம் கையில் எடுக்கும் போது இந்திய வல்லாதிக்கம் நடுங்கும்.

கடிதம் எழுதி காலத்தைப் போக்குவது ஒட்டு வங்கி அரசியலுக்கு உதவுமே தவிர, தீர்வாகாது.

திருமாவின் இந்த கோஷம் தமிழக மக்களை சென்றடையாது. ஒருவேளை செல்லும்பட்சத்தில் தமிழக மக்கள் விழிப்புணர்வு ஏறுவார்கள். விழிப்புணர்வு பெற்றுவிட்டால் ஏமாற்று அரசியல் பண்ண முடியாதே!!!

திருமாவின் பேச்சை ஊடகங்கள் மறைக்கும். 'காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்' என திருமா தமிழில் ஆவேசமாகப் பேசியதை ஒளிபரப்பிய சன் டி.வி 'தனி நாடு' முழக்கத்தை கட் செய்து விட்டது. இதுதான் போலித் திராவிடம்!!

தோழர் திருமா மட்டும் இந்த ஆயுதத்தை எடுத்தால் போதாது. ஒட்டுமொத்த தமிழர்களும் ஓரணியில் திரண்டு  'தனித் தமிழ்நாடு' கோஷத்தை வலுவாக உயர்த்த வேண்டும்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.”- தமிழீழத் தேசியத் தலைவர்  பிரபாகரன் 

புதன், 6 மார்ச், 2013

மாண்புமிகு அய்யா கருணாநிதியே!

அய்யா கருணாநிதியே! 

மெரினாவில் படுத்துக்கொண்டு 'போர் முடிந்து விட்டது' என்றீர்கள்.

பின்னர் 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்றீர்கள்.

தீக்குளிப்பவர்கள் கடன் தொல்லை, குடும்பப் பிரச்சினைகளுக்காக தீக்குளிக்கிறார்கள் என்றீர்கள்.

ஆங்காங்கே கிளர்ச்சி செய்தவர்களை சிறையில் அடைத்தீர்கள்.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக தலைமைச்செயலாளர் மூலம் அறிக்கை அனுப்பி பல தலைவர்களை மிரட்டினீர்கள்.

தமிழக மீனவர்கள் பேராசை கொண்டவர்கள் என்றீர்கள்.

இனி ஈழம் சாத்தியமில்லை. அது பற்றி யாரும் பேசக்கூடாது என்றீர்கள்.

பின்னர் 'ஈழம் என் நிறைவேறாக் கனவு' என்று சொல்லி டெசோவைக்  கையில் எடுத்தீர்கள்.

டெசோ மாநாட்டில் ஈழம் பற்றி பேச மாட்டோம் என காங்கிரசுக்கு அடிபணிந்தீர்கள்

ஸ்டாலின் டெசோ தீர்மானத்தை ஐ.நா-வில் கொடுத்துவிட்டார்.
ஈழம் கிடைத்தாச்சு என்றீர்கள்.

நீங்கள் எல்லாம் கையில் துப்பாக்கி ஏந்தி போராடிக் கொண்டிருந்தீர்களா? என்று எம்மைக் கேள்விகேட்டு உம்  குற்றத்தை மறைக்கப் பார்க்கிறீர். (போராடியவர்கள் , முள்ளிவாய்க்கால்  கிளம்பியவர்கள் எல்லோரையும் ஏனய்யா  சிறையில் அடைத்தீர்கள்?)

அவர் மட்டும் யோக்கியமா என்று ஜெயா அம்மையாரைக் கைகாட்டுகிறீர் (நீங்கள் இரண்டு பேரும் ஒரே வகையினர்தான்).

கடைசியாக இப்போது சானல்4 கல்லம் மெக்ரெ வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் என்று அண்டப்புழுகு புழுகுகிறீர்கள்.

ஆக மொத்தத்தில் உங்கள் மீது விழுந்த கறையை நீக்கத்தான் பல போராட்டங்களே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. இளம்தலைமுறை உம்  பெயரைக் கேட்டாலே காரித் துப்புகிறது.


 குடும்ப நலனுக்காக ஒரு இன அழிப்பிற்குத் துணை போன உமக்கு வரலாற்றில்  'தமிழினத் துரோகி' என்னும் பெயர் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன அழுது புரண்டாலும் அப்பெயர் உம்மை விட்டு அகலாது.

சுதந்திரமான பன்னாட்டு விசாரணை மற்றும்  பொது வாக்கெடுப்பு  பற்றி வாயைத் திறக்காமல் திரும்பத்  திரும்ப 'போர்க்குற்ற விசாரணை', மறுவாழ்வு அளித்தல் என பேசுவதெல்லாம் இந்தியா, அமெரிக்காவின் பித்தலாட்டம். நீங்களும் அதற்குத் துணை போக வேண்டாம்.

ஈழத் தமிழர்களுக்கு உருப்படியாக ஏதாச்சும் செய்ய முயற்சி செய்யுங்கள். இல்லையேல் ஒதுங்கிக்கொண்டு தேர்தல் நிதி சேகரித்தல், கூட்டணி வியூகம் அமைத்தல், வேட்பாளர் தேர்வு செய்தல் என வரப்போகும்  தேர்தலுக்கு  தங்கள் பணிகளைத் தாயார் செய்யுங்கள்.

நன்றி 

செவ்வாய், 5 மார்ச், 2013

புலிக்கொடி ஏந்திய தி.மு.க தொண்டர்கள்

திமுக தலையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது 05.03.2013 அன்று நடைபெற்றது. பல திமுகவினர் புலிக்கொடிகளையும், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் படங்களையும்  தாங்கியவண்ணம் திரண்டுவந்து இப் போராட்டத்தில் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

அத்தோடு பாலச்சந்திரன் படங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் தாங்கி நின்றார்கள். பல்லாயிரக்கணக்காண மக்கள் திரண்ட இப் போராட்ட பேரணி, இலங்கை தூதரகம் நோக்கி நகர முயன்றது. இதனை தடுத்து நிறுத்த போலீசார்  படாத பாடு படவேண்டி இருந்தது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், என திமுகாவின் கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டது. புலிக்கொடியை ஏந்திவந்த பலர் கூடவே கொடூரமாகச் சித்தரிக்கப்பட்ட ராஜபக்ஷவின் படங்களையும் ஊர்வலமாகத் தாங்கிவந்தார்கள். 

 இறுதியில் புலிக்கொடியை உயர்த்திப் பிடித்தவாறு, மகிந்தரின் படத்துக்கு நெருப்பு மூட்டினார்கள். எரிந்தான் ராஜபக்ஷ என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. 

தமிழ் நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள், ஈழத் தமிழர் சார்பான போக்கை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரசுடன் கூட்டு வைத்திருப்பதால் திமுக இவ்விடையத்தில் , சற்று விலகியே நின்றதை கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல எமக்கு உணர்த்தி இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி, பாலச்சந்திரன் கொலை தொடர்பாக தமிழ் நாட்டில் தோன்றியுள்ள உணர்வலை, ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களை தமிழக மககள் நன்கு உணர்ந்துள்ளதை தற்போது எடுத்துக்காட்டியுள்ளது.




 நன்றி: அதிர்வு இணையம்
========================================================================
ஈழ  விவகாரத்தில் தி.மு.க மீது கடும்கோபம் உண்டு. அந்த கோபம் எல்லாம் ஒரு குடும்பத்தின் மீதுதானே தவிர, ஒட்டுமொத்த  தி.மு.க தொண்டர்கள் மீது கிடையாது. தி.மு.கவில் இருந்துகொண்டே ஈழ ஆதரவை மறைமுகமாக  கொடுத்த, ஈழ ஆதரவாளர்களுக்கு துணை புரிந்த பல  தி.மு.க தொண்டர்கள் உண்டு.

இந்த போராட்டம் அரசியல் ஆதாயமா?
காங்கிரசை விட்டு பிரிய நடத்தப்படும் நாடகமா?
அப்படியா? இப்படியா? என கேள்விக்கேட்டு பின்னோக்கி செல்ல நான் தயாரில்லை.

இலங்கையை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை பதிவு செய்தமைக்கு தி.மு.க தொண்டர்களுக்கு வாழ்த்துகள்.

இது போதாது. திரும்பத்  திரும்ப 'போர்க்குற்ற விசாரணை', மறுவாழ்வு அளித்தல் என பேசுவதெல்லாம் தீர்வே கிடையாது.

சுதந்திரமான பன்னாட்டு விசாரணையும், பொது வாக்கெடுப்பும் மட்டுமே தீர்வு. அதை உரக்கச் சொல்ல வேண்டும்.

வெள்ளி, 1 மார்ச், 2013

அழுகை மட்டுமே மிச்சம்.....


அது ஈழப்பிரச்சினை. நாம் தலையிடக்கூடாது என்கிறது மனிதாபிமானமற்ற ஒரு கூட்டம்.

எல்லாம் முடிந்துவிட்டது அவ்வளவுதான் என்று 
அடுத்த செய்திக்கு நகர்கிறார்கள் நடுநிலைப் போலிகள் .

இலங்கை நட்பு நாடு என்கிறான் டெல்லியில் ஒருவன்.

அதை கேட்டவுடன் எம்.பி பதவிகளை
தூக்கியெறிய   சொல்லாமல்
டெல்லியில் மாநாடு நடத்த செல்கிறார் மூத்த தலைவர்.

தமிழர் பிரச்சினை என்றாலே
கண்ணையும், காதையும் மூடிக்கொள்கிறார்களே!
பின்னர் அங்கு ஏன் மாநாடு??

தீர்மானமும், இலங்கை வீரர்களுக்கு தடையும் போட்டு விட்டு நல்லபிள்ளையாக நகர்கிறார் முதல்வர். இதுதான் தீர்வா??

எல்லாத்துக்கும் கருணாநிதிதான் காரணம்
என்று ஒருவரியில் கூறிவிட்டு
தங்கள் உணர்வை காண்பிக்கிறது இன்னொரு கூட்டம்.

வரும் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவோம்
என்று ஓட்டு அரசியல் பேசும் கூட்டம்.

ராஜீவ்காந்தியை  கொன்றதுதான் எல்லாத்துக்கும் காரணம்
என்று வரலாறு தெரியாமல் பேசும் மற்றொரு கூட்டம்.

இந்தியாவும் குற்றவாளி என்று சொன்னால்
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
என்கிறார்கள் பாரத மாதாவின் செல்லப்பிள்ளைகள்(வேறு மாநிலத்தவர்)

அமெரிக்கத் தீர்மானத்துக்கு
இந்தியா ஆதரவு அளிக்குமா என்று
ஏங்கிக் கிடக்கும் நாதியற்ற தமிழர் கூட்டம்!

எத்தனை போராட்டம் நடத்தினாலும்
நம்மைக் கண்டுகொள்ள யாருமில்லையே!

இப்படி பல கூட்டத்திற்கு மத்தியில்
இந்த அடிமைக்கு அழுகை மட்டுமே மிச்சம்!!

மன்னித்துவிடு பாலச்சந்திரா!!


செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

அரைவேக்காடு சு.சாமியும் மற்றும் சில இந்தியர்களும்


நேற்று NDTV-யில் தேசியத்தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டது தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்தது. இந்திய கம்யுனிஸ்ட் தோழர் டி.ராஜா, சானல்4 கல்லெம் மக்ரே,  ராஜபக்சேவின் நண்பன் சு.சாமி  மற்றும் சில இந்தியர்கள் பங்கேற்றிருந்தனர்.

சு.சாமி பற்றி சொல்லவே தேவையில்லை. ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என ஊளையிட்டவர். நேற்றும் அப்படித்தான் பேசினார். "போருக்கு பின்னர் இலங்கையில் மாபெரும் அமைதி நிலவுகிறது" என்றார்.

எது அமைதி?
முள்வேலிக்குள் ராணுவ பாதுகாப்புக்குள் சித்ரவதை அனுபவிப்பதுதான் அமைதியா?
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டனரே? அது அமைதியா?
கச்சத்தீவு பக்கம் போனாலே நம்ம மீனவர்களுக்கு அடி விழுதே! அது அமைதியா?
ராணுவத்தில் தமிழ் யுவதிகளை கட்டாயப்படுத்தி சேர்த்து சித்தரவதை செய்கிறார்களே? அது அமைதியா?
 தமிழர்களுக்கு எந்த சுய உரிமையும் கிடையாது என ராஜபக்சே கொக்கரிக்கிறானே? அது அமைதியா?

விவாதத்தில் இடம்பெற்ற பல இந்தியர்களும்  "புலிகள் தீவிரவாதிகள்" என்றார்கள். புலிகள் ஆயுதம் எடுப்பதற்கு முன்னரே இனப்படுகொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சூலைக்கலவரம் மாபெரும் சாட்சி. இது பல தமிழர்களுக்கு தெரியாதநிலையில், இந்தியன் எப்படி புரிந்து கொள்வான்?
.குட்டக்குட்ட குனிந்து கொண்டே தமிழர்கள்  இருக்க வேண்டும் என்கிறார்கள் இந்தியர்கள்.
"புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உண்மையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome) "- மாவீரன் முத்துக்குமாரின் மரண சாசனம்.

"செயவர்த்தனே உண்மையான பௌத்தவாதியாக இருந்திருந்தால் நாங்கள் ஆயுதம் எடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. ஆயுதப்போராட்டமாக இருந்தாலும் எங்களது லட்சியம் அரசியல்ரீதியான விடுதலையே!!" -தேசியத்தலைவர் பிரபாகரன்.

இலங்கை மக்களை புலிகள் தாக்கினார்கள் என்கிறார்கள் சில அரைவேக்காடுகள்.
ஈழம் விசயத்தில் சில போராளி குழுக்களை இந்திய உளவுப்பிரிவு தங்கள் வசப்படுத்திக்கொண்டு  குழப்பம் விளைவித்தது, இலங்கையின் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, தமிழ் தலைவர்களை கொன்றது மற்றும் பல மக்கள் விரோதச் செயல்களின் பின்னணியில் இந்தியா உள்ளது. ஆனால் பழி மட்டும் புலிகள் சுமக்க வேண்டும்! என்ன கொடுமை!

"முதலில் நாம் இந்தியர்கள், அப்புறம்தான் தமிழர்கள். இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்" என்கிறார் சு.சாமி. இந்தியாவை இந்து நாடாக்க துடிக்கும் மதவெறியன் சு.சாமி. இந்தியா என்ன செய்தாலும் தலையாட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் தமிழர்களுக்கு இல்லை. இனப்படுகொலையை நடத்தியதே இந்தியாதான் என்பது பல தமிழர்களுக்கு தெரியும்.




  விவாதத்தில் இடம்பெற்ற பலரும் திரும்ப திரும்ப 'இலங்கையில் நடைபெற்றது போர், மனித உரிமை மீறல்' என்று சாதாரணமாக முடித்துக் கொண்டார்கள். நம்மூரு டெசோ மாநாட்டிலும் இப்படித்தான் பேசினார்கள்.

இலங்கையில் நடைபெற்றது வெறுமென மனித உரிமை மீறல் மட்டும் அல்ல, மாபெரும்  இனப்படுகொலை. அப்படி சொல்ல யாரும் முன்வரவில்லை. அதுசரி காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இந்தியாவின் டவுசர் கிழியுமே!! அந்த பயமாக இருக்கலாம்.

வைகோ, திருமாவளவன், வேல்முருகன் மற்றும் பல தலைவர்களும் இலங்கையுடன் உள்ள உறவை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். இலங்கையுடன்  இந்தியாவுக்கு உள்ளது நல்லுறவு என்றால் உடனே முறித்துவிடலாம். ஆனால் இருப்பதோ கள்ள உறவு. கள்ள உறவில் சுகம் காண்கிறது இந்தியா.

"இந்தியாவின் போர் நியாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?"- என்று மாவீரன் முத்துக்குமார் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

இலங்கையும்  இந்தியாவும் இணைந்துதான் இனப்படுகொலையை நடத்தியது. அதை தடுத்து நிறுத்த ஐ.நா தவறியது. அதனால் இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்காது.
"நாம் இலங்கையை எதிர்த்தால் சீனாக்காரன் அங்கு கால்பதித்து விடுவான். அதனால் இலங்கையோடு அனுசரித்து போக வேண்டும்"- இந்திய பிரதமர். சிங்களன் என்ன கொடுமை செய்தாலும் தமிழர்கள் கண்ணை மூடிக் கொள்ள வேண்டும் என்கிறது இந்தியம்.



இலங்கையின் கோரமுகத்தை திரும்ப திரும்ப கிழிப்பதில் பயன் இல்லை.
இந்தியாவின் கோரமுகத்தையும், ஐ.நாவின் கோரமுகத்தையும் கிழித்தெறிய வேண்டும்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் படுகொலை

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வர் செல்வன் பாலச்சந்திரன் சிறீலங்காவின் இனஅழிப்பு படைகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதரங்களை பிரித்தானியாவின் பிரபல நாளேடான த இன்டிபென்டென்ற் வெளியிட்டுள்ளது.

இறுதியாக கிடைத்த ஆதாரங்களின் படி பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றது. கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள் ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை ஆராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது.


கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன் மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.

‘சுடப்பட்ட துப்பாக்கியின் குழல் வாய், பாலச்சந்திரன் நெஞ்சுக்கு மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே இருந்துள்ளது.
முதலாவது ரவை சுடப்பட்ட பின்னர், பின்புறமாக சாய்ந்து விழுந்த சிறுவன் மீது நான்கு தடவைகள் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர் கண்களோ, கைகளோ கட்டப்பட்டிருந்த நிலையில் சுடப்பட்டதற்கான தடயங்கள் இல்லை.

ஆனால், அவரது மெய்க்காவலர்கள் கண் முன்பாகவே இந்தப் படுகொலை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்’ என்று தடயவியல் ஆய்வு நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் தெரிவித்துள்ளார்.

நன்றி: paristamil.com

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ராஜபக்சே வருகை - கொதித்தெழுந்த தமிழகம் [புகைப்படத் தொகுப்பு]

பல லட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக மக்களின் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து தொடர்ந்தும் ராஜபக்சேவை அனுமதித்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழக வாழ்வுரிமை கட்சி தோழர் வேல்முருகன் தலைமையில்ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். கைது செய்ய திணறிய காவல்துறை !
 

கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் 
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் ஆர்பாட்டம்

புதுவை ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர்  ரயில் மறியல்
வடசென்னை கிழக்கு  தண்டையார்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில்  நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
  கோவையில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் நடத்திய போராட்டம் 
மதுரையில்  ராஜபக்ச உருவ பொம்மை எரிப்பு
 
மதுரையில் ஆதி தமிழர் பேரவையினர் நடத்திய போராட்டத்தின்போது, ராஜபக்சேவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
 ராஜபக்சே உருவ பொம்மையை தூக்கிலிட்டு எரித்தனர் இடிந்தகரை மக்கள்


 
தமிழர் எழுச்சி இயக்கம் சார்பாக ராஜபக்சே திருப்பது வருகையை எதிர்த்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்
  சென்னை விடுதியில் பறந்த சிங்கள கொடியை அகற்றிய தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள்

உலகத் தமிழ் அமைப்பின் இளையோர் அணி ஒருங்கிணைத்த போராட்டத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு அவர்கள் கல்லூரி வளாகத்தில் பதாதைகள் ஏந்தி ராஜபக்சேவிற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்பாட்டம்

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட சென்ற வைகோவின் தொண்டர் படை

டெசோ அமைப்பு சார்பாக திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கருப்பு உடையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் . இதில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், கி.வீரமணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 



ஓசூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டம்
கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம்

கோயம்புத்தூர் சந்திப்பில்  SDPI கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
ஆந்திர எல்லை புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் 30 பேர் மறியல் 

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்சே உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மக்கள் விடுதலைக் கட்சியினர் 50 பேர் முற்றுகையிட்டு போராட்டம்

சென்னையில் சட்டசபை வாயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏக்கள்  போராட்டம்

இவ்வாறு தமிழகத்தின் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

நியாயப்படி வாழ்த்து சொல்லக்கூடாது. ஏனெனில் இது ஒவ்வொரு தமிழனின் கடமை. ஆனாலும் இதற்காக நேரம் செலவிட்டு களத்திற்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்நேரத்தில் தமிழகத்தில் இல்லாமைக்கு வருத்தங்கள்.


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

"ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே புத்த பூமியில் கால் வைக்கக் கூடாது. "என்று முழங்கி தமிழர்களுக்கு ஆதரவளித்த பீகார் ஒபரா  தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங் அவர்களுக்கு நன்றி 

அப்புறம் இந்த தேமுதிகவும், அதிமுகவும் எங்கே போனாங்க?
அவங்க மக்களுக்காக குரல் கொடுக்க சட்டசபைக்கு போனாங்க.
சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் அடிதடி.
அதைக்கண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரசிப்பு!!

நன்றி: newsalai.com, tamil.oneindia.in

 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

போர்நெறி தவறாத தலைவன் பிரபாகரன் - உண்மைச் சம்பவங்கள்

விடுதலைப்புலிகள் மிகுந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகுந்தவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பல விடுதலைக் குழுக்கள் இருந்தபோதிலும் விடுதலைப்புலிகளை மட்டும் மக்கள் ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் அவர்களின் ஒழுக்கமும் லட்சியத்தில் விட்டுக்கொடுக்காத பண்பும்தான்.

தமிழகத்தில் புலிகள் பயிற்சி மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் கொளத்தூர் மணி அவர்களின் நண்பர் ஒருவர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். அவர் ஒரு வேதியியல் பொறியாளர். 'ஏவுகணைகளில் வேதியியல் மயக்க மருந்தை தடவி ஏவினால் எதிரிகள் மயக்கம் கொள்வார்கள். நாம் எளிதில் வென்று விடலாம்' என்று பிரபாகரனிடம் அவர் கூறினார். இதனைக் கேட்டு சினம் கொண்ட தலைவர் கூறியது: "நீங்கள் கூறிய முறை உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. உலகப் போர் நெறிகளை புலிகள் ஒருபோதும் தவறமாட்டார்கள்."


தமிழகத்திலிருந்து கடல் வழியாக ஆயுதங்களை எடுத்துச்செல்லும் பணியை தளபதி ரகு என்பவர் மேற்கொண்டிருந்தார். தமிழகத்தின் சாலைகளில் தமிழகக் காவல்துறை மிகுந்த சோதனை செய்து கொண்டிருந்தது. தங்களை மடக்கினால் ஆயுதங்களை பறிகொடுக்க நேரிடும் என்பதால் ஆம்புலன்ஸ் சின்னத்தை தன் வண்டியில் ஒட்டி காவல்துறை  சோதனையிலிருந்து தப்பித்தார் ரகு.

ஈழத்திற்கு சென்று தலைவரிடம் இதைப் பற்றித் தெரிவித்த போது கடும்கோபம் கொண்ட தலைவர் "ஆம்புலன்ஸ் சின்னம் ஒரு புனிதமான சின்னம். அதனை ஆயுதக் கடத்தலுக்கு பயன்படுத்திக் கொண்டது மிகத் தவறு. இது போன்ற சின்னங்களை எக்காலத்திலும் நாம் தவறாக பயன்படுத்தக்கூடாது. இதுவே முதலும் இறுதியுமாக இருக்கவேண்டும்' என்று கூறி தனது இயக்கத்தினரை எச்சரித்தார்.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எம் தலைவன் ஒரு மாபெரும் உதாரணம்.

நன்றி: 'பிரபாகரன்- தமிழர் எழுச்சியின் வடிவம்  நூல்'

வியாழன், 31 ஜனவரி, 2013

இந்திய ஆதிக்கமே! ஒழிந்து போ!

"சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?" - முத்துக்குமார்.

இப்போது  இந்தியா தனது  நரித்தனத்தை மீண்டும் அரங்கேற்ற உள்ளது.
கொலைபாதகன் ராஜபக்சேவை திரும்பத்திரும்ப இந்தியாவுக்கு வரவழைத்து, அவனுக்கு இந்தியாவில் எதிர்ப்பே கிடையாது என்று உலகுக்குச் சொல்ல, இந்திய அரசு வஞ்சகம் செய்கின்றது. ராஜபக்சேவை பீகாருக்கும், திருப்பதிக்கும் அழைத்து உபசரிக்க உள்ளது இந்திய ஆதிக்கம். இந்த செய்தியை ஊடகங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரியாவண்ணம் தன் நரித்தனத்தை மீண்டும் அரங்கேற்ற உள்ளது.
இப்படி நீதியின் வெளிச்சம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க, இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, நயவஞ்சகமான வேலையைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது. தன்னையும் பாதுகாத்து தன் நண்பன் இலங்கையையும் பாதுகாக்க துடிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

தற்போது, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் நிலைமை, கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம் ஆகும். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. தமிழர் தாயகமே, சிங்கள ராணுவ முகாம் ஆகிவிட்டது. மாவீரர் துயிலகங்களை இடித்து, ராணுவ முகாம் ஆக்கிவிட்டனர். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து, பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களின் மொழி, இன அடையாளமே இல்லாமல் அழிக்கின்ற கலாச்சாரப் படுகொலை நடக்கின்றது.

தற்போது, மனித உரிமை கவுன்சில் கூட்டம், மார்ச் மாதத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடக்க இருப்பதால், இந்திய அரசு துரோகத்தின் அடுத்த கட்டமாக, பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு இராஜபக்சே வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கின்றது. பிப்ரவரி 8 ஆம் தேதி, புத்த கயாவுக்கு ராஜபக்சே வரப்போவதாகவும், பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமாரைச் சந்திக்கப் போவதாகவும், இலங்கை அரசின் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்து உள்ளார்.

‘இராஜபக்சே பீகாருக்கும் சென்றும், ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் சென்றும் வழிபட்டதை உலகத்துக்குச் சொல்லுவதற்காக, திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு, இந்தத் துரோகத்திலும் அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று அய்யா வைகோ தெரிவித்துள்ளார். அதுதான் உண்மை.




திருப்பதிக்கு வரும் ராஜபக்சே வருகையை கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பிப்ரவரி 8 ம் தேதி, கருப்புக்கொடி அறப்போராட்டம் நடைபெறும் இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே வருகையை எதிர்த்தும், தமிழர் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து நரித்தனம் செய்யும் இந்திய ஆதிக்கத்தின் தலையில் இடியை இறக்கிட தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்.

புதன், 30 ஜனவரி, 2013

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழ்த்தேசியப்படை

 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி மாவீரர் நாள் கொண்டாடியதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் மட்டும்  விடுதலை செய்யப்படவில்லை, விடுதலை செய்யப்பட்டவர்களும் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக் கோரி நேற்று காலை 11 மணியளவில் இலங்கை துணை தூதரக முற்றுகை போராட்டம் லோயலா கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமானது. இதனையொட்டி அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தினை தோழர் தியாகு அவர்கள் தொடக்கி வைத்தார். பின்னர் கோசங்கள் எழுப்ப அதனுடன் சேர்ந்து இளைஞர்களும் கோசமிட்டனர்.



இந்த போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் , அமைப்புகள் கலந்து கொண்டன . தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் , தந்தை பெரியார் திராவிடக் கழகம், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் , மே 17 இயக்கம் , தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு மக்கள் கட்சி மற்றும் பல மாணவர் இயக்கங்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர் . போராட்டத்தில் பங்குபெற்ற சுமார் 100 பேரை காவல் துறை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது .

நன்றி: newsalai.com

வாருங்கள். 

கட்சி, சாதி, எல்லைகள் கடந்து தமிழராய் ஒன்றாவோம். நாம் பெரும் திரளாய் ஒன்று கூடி நடத்தும் போராட்டம் சர்வதேச அரங்கில் நடக்கும் நாடகங்களை உடைத்து தமிழீழ விடுதலையை உறுதி செய்யட்டும். 2009இல் நாம் செய்யத் தவறிய பொறுப்புகளை தற்போது செய்து முடிக்க ஆயிரமாய் அல்ல, லட்சங்களாய் அவரவர் இயக்க, கட்சி அடையாளங்களோடு தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.
நாம் வெல்வோம்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

துரோகத்தை தொடர்ந்து செய்யும் தி.மு.க

 இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 47 உறுப்பு நாடுகளின் தூதர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘டெசோ’ அமைப்பினர், அதற்கு முன் ஏற்பாடாக புதுடில்லிக்கு பயணமான நிலையில் அங்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ‘டெசோ’ தீர்மான அறிக்கையைக் கையளித்துள்ளனர்.

டெசோ அமைப்பினரால் கொடுக்கப்பட இருக்கிற கோரிக்கை மனுவில், இலங்கைத் தமிழர்கள் அமைதியாக வாழவும், இலங்கையில் "புனர்வாழ்வு" நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அரசியல் தீர்வு காணவும், ஜெனீவாவில் முன்மொழியப்பட்டு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசை நிர்பந்திக்குமாறு அந்த உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்ள இருப்பதாக தி.மு.க மேலும் கூறியுள்ளது.

இதே கருத்தைத்தான் மூன்று வருடங்களாக இலங்கையும் கூறி வருகிறது.

அது என்ன  "புனர்வாழ்வு"? ஏன் தொடர்ந்து துரோகம்??
ஈழத் தமிழர்கள் என்ன பிச்சை கேட்கிறார்களா? தாங்கள் இழந்த மண்ணை கேட்கிறார்கள். தங்கள் இன உரிமையை கேட்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் என்று சொல்லாமல் இலங்கைத் தமிழர்கள் என்று திரும்ப திரும்ப சொல்வதிலேயே தி.மு.க வின் போக்கு தெரிகிறது. சுதந்திர தமிழீழ கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்வதே டெசொவின் முழு நோக்கம்.
 இனப்படுகொலையையும், குற்றவாளிளையும் பற்றி வாயைத் திறப்பதே இல்லை.

நாற்பதாயிரம் பேர்தான் செத்தார்கள் என பொய்க்கணக்கு காட்டிய பிரணாப் முகர்ஜி ஒரு போர்க்குற்றவாளி. அவரிடம் அறிக்கை கொடுத்து என்ன பயன்? தமிழினத்துரோகி கருணாநிதி செய்த துரோகங்களை மறைக்க ஸ்டாலின் ரொம்ப கஷ்டப்படுறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து துணை போவது வருத்தம்.

ஈழத்தமிழர்களுக்கு தேவை வீடு அல்ல, சுதந்திர நாடு.


ஈழப்  பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஈழத் தமிழ் மக்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும்   ஐக்கிய நாடுகள் சபை பொது வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும். அது ஒன்றே நிரந்தரத் தீர்வு

தமிழினத்துரோகி கருணாநிதியே! அதற்கு துணைபோகும் துரோகக் கும்பலே! ஓட்டுப்பொறுக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதைவிட்டு மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.