வைகோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைகோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ராஜபக்சே வருகை - கொதித்தெழுந்த தமிழகம் [புகைப்படத் தொகுப்பு]

பல லட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக மக்களின் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து தொடர்ந்தும் ராஜபக்சேவை அனுமதித்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழக வாழ்வுரிமை கட்சி தோழர் வேல்முருகன் தலைமையில்ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். கைது செய்ய திணறிய காவல்துறை !
 

கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் 
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் ஆர்பாட்டம்

புதுவை ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர்  ரயில் மறியல்
வடசென்னை கிழக்கு  தண்டையார்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில்  நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
  கோவையில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் நடத்திய போராட்டம் 
மதுரையில்  ராஜபக்ச உருவ பொம்மை எரிப்பு
 
மதுரையில் ஆதி தமிழர் பேரவையினர் நடத்திய போராட்டத்தின்போது, ராஜபக்சேவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
 ராஜபக்சே உருவ பொம்மையை தூக்கிலிட்டு எரித்தனர் இடிந்தகரை மக்கள்


 
தமிழர் எழுச்சி இயக்கம் சார்பாக ராஜபக்சே திருப்பது வருகையை எதிர்த்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்
  சென்னை விடுதியில் பறந்த சிங்கள கொடியை அகற்றிய தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள்

உலகத் தமிழ் அமைப்பின் இளையோர் அணி ஒருங்கிணைத்த போராட்டத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு அவர்கள் கல்லூரி வளாகத்தில் பதாதைகள் ஏந்தி ராஜபக்சேவிற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்பாட்டம்

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட சென்ற வைகோவின் தொண்டர் படை

டெசோ அமைப்பு சார்பாக திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கருப்பு உடையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் . இதில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், கி.வீரமணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 



ஓசூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டம்
கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம்

கோயம்புத்தூர் சந்திப்பில்  SDPI கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
ஆந்திர எல்லை புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் 30 பேர் மறியல் 

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்சே உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மக்கள் விடுதலைக் கட்சியினர் 50 பேர் முற்றுகையிட்டு போராட்டம்

சென்னையில் சட்டசபை வாயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏக்கள்  போராட்டம்

இவ்வாறு தமிழகத்தின் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

நியாயப்படி வாழ்த்து சொல்லக்கூடாது. ஏனெனில் இது ஒவ்வொரு தமிழனின் கடமை. ஆனாலும் இதற்காக நேரம் செலவிட்டு களத்திற்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்நேரத்தில் தமிழகத்தில் இல்லாமைக்கு வருத்தங்கள்.


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

"ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே புத்த பூமியில் கால் வைக்கக் கூடாது. "என்று முழங்கி தமிழர்களுக்கு ஆதரவளித்த பீகார் ஒபரா  தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங் அவர்களுக்கு நன்றி 

அப்புறம் இந்த தேமுதிகவும், அதிமுகவும் எங்கே போனாங்க?
அவங்க மக்களுக்காக குரல் கொடுக்க சட்டசபைக்கு போனாங்க.
சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் அடிதடி.
அதைக்கண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரசிப்பு!!

நன்றி: newsalai.com, tamil.oneindia.in

 

வெள்ளி, 14 டிசம்பர், 2012

மது அரக்கனை ஒழிக்க புறப்பட்ட அய்யா வைகோவும் அதை விமர்சிக்கும் அரக்கர்களும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.

உவரியில் துவங்கிய நடைபயணம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் வழியாகச் சென்று வரும் 25ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. இந்த பயணத்தின்போது வைகோ உள்ளிட்டோர் வழிநெடுகிலும் உள்ள கிராமங்கள், நகரங்களில் மதுவிலக்கு குறித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

ஒரு நாளைக்கு 25 கிமீ தூரம் நடக்கும் வைகோ 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறார். மேலும் மக்களுக்கு பூரண மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்குகிறார்.

இந்நிலையில் வரும் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மதிமுகவினர் அந்தந்த ஊர்களில் மதுவிலக்கு குறித்த பிரச்சார அட்டைகளை ஏந்தி நடைபயணம் செல்கின்றனர்.

மது பழக்கம் இல்லாத இளைஞர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வைகோவுடன் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல இணையதளங்களில் இதுகுறித்து சிலர் மிக மோசமாக விமர்சிக்கின்றனர்.

விமர்சனங்களும் எனது பதில்களும்:

வைகோ அவர்கள் இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தார்?
பதில்: வைகோ எங்கும் செல்லவில்லை. இங்கேயேதான் இருந்து தமிழர் நலனுக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார். அவர் ஆரம்பத்திலிருந்தே மது ஒழிப்பை மேடைகளில் முழங்கி வருகிறார். தாங்கள் மது ஒழிப்புக்காக இதுவரை என்ன செய்தீர்கள்? அல்லது இந்த கேள்வியை கருணாநிதியை நோக்கியோ, ஜெயாவை நோக்கியோ கேட்க வேண்டியதுதானே?? நல்லது செய்யுங்கள். அல்லது நல்லது செய்பவர்களை ஆதரியுங்கள். வெட்டி விமர்சனம் செய்யாதீர்கள்

ஒட்டுக்களை பெறத்தான் இந்த மது ஒழிப்பு போராட்டம்
பதில்: முற்றிலும் பொய். ஒருவேளை ஓட்டுக்காக அவர் இந்த போராட்டத்தை செய்தாலும் அதில் என்ன தவறு? அவர் இலவசத்தை கொடுத்து ஒட்டு கேட்கவில்லையே!! சாதியை சொல்லி ஒட்டு கேட்கவில்லையே!

அவருக்கு வேறு வேலை இல்லை. அதான் இந்த நடைபயணம்
பதில்: இந்த விமர்சனத்தை வைப்பவர்கள் மாபெரும் சுகபோக அடிமைகள். தன் சமூகத்தை பற்றி கவலை இல்லாதவர்கள். திண்ணை அரசியல் பேசுபவர்கள். இவர்களுக்கு ஒரே கேள்வி: தங்கள் மகன்/மகள் மதுக்கடை வாசலில் நின்றால் அதை பொறுத்துக் கொள்வீர்களா?

"மது பழக்கம் உடையவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுங்கள்" என்று முழங்க இங்கு வேறு எந்த தலைவரும் உண்டா?

வைகோ அவர்களின் இந்த போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள். இதை போராட்டம் என்று சொல்வதை விட "மது ஒழிப்பு புரட்சி" என்றுதான் சொல்ல வேண்டும்.

மது ஒழிப்போம். நல்லதொரு தமிழ்ச்சமூகம் அமைப்போம்

வேறு விமர்சனங்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள். நன்றி