வியாழன், 17 ஜனவரி, 2013

மூன்றாகப் பிரியும் ஆந்திரா மாநிலம்

ஆந்திரா மாநிலம் என்பது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
தெலங்கானா 
ராயலசீமா 
ஆந்திரா (கடற்கரை பகுதி)

இவற்றில் ராயலசீமா, ஆந்திரா (கடற்கரை பகுதி) ஆகியவை சென்னை மாகாணத்தில் உள்ளடங்கி இருந்த பகுதிகள். மொழிவாரிப் பிரிவினைக்குப் பிறகு  சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டவை.



தெலங்கானா என்பது நிஜாம்களால் ஆளப்பட்ட 'ஹைதராபாத் மாநிலம்'.(http://en.wikipedia.org/wiki/Hyderabad_state)
( ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் ஹைதராபாத் உள்ளடங்க மறுத்தது வரலாறு)

1956-இல் ஹைதராபாத்தின் சில பகுதிகள் மும்பை மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஹைதராபாத்தில் வசித்த தெலுங்கர் அல்லாதவர்கள் மும்பை மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு குடியேறினர்.

மீதமுள்ள பகுதிதான் தெலங்கானா. அப்பகுதி மக்களின் விருப்பமில்லாமல் தெலங்கானா ஆந்திரா மாநிலத்துடன்[ராயலசீமா, ஆந்திரா (கடற்கரை பகுதி)]
இணைக்கப்பட்டது. இதை செய்தவர் ஜவகர்லால் நேரு. மக்கள் தொடர்ந்து தெலங்கானாவை மட்டும் விரும்பினால் ஐந்து வருடங்களுக்கு பின்னர் பிரிக்கப்படும் என போலி வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தெலங்கானா தனி மாநில போராட்டம் 1969-இல் இருந்து தொடர்கிறது

ஒன்றுபட்ட ஆந்திராவில் தெலங்கானா பகுதிதான் நிலப்பரப்பில் பெரியது.
கிட்டத்தட்ட 45 சதவிகிதம்.பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள், இயற்கை வளங்களை தெலங்கானா பகுதி கொண்டுள்ளது.

 தெலங்கானா பகுதி வளங்களை மட்டும்  இதர பகுதியினர் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திவிட்டு தெலங்கானா மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக இங்குள்ள நண்பர்கள் சொல்லுகிறார்கள். அதிலும் குறிப்பாக ராயலசீமா அரசியல்வாதிகளின் ஆதிக்கம்  மிக அதிகமாக உள்ளதாம்.

இவ்வாறாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்து ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பது அரை நூற்றாண்டுகால கோரிக்கை. 


இதற்கான போராட்டங்கள் நாட்டையே உலுக்கியவை. தெலுங்கானா தனி மாநிலம் கோரி உயிரை மாய்த்தவர்கள் ஏராளம்! இதைத் தொடர்ந்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து ஆராய கிருஷ்ணா கமிஷன் அமைக்கப்பட்டது. (http://en.wikipedia.org/wiki/Telangana_movement)
தெலுங்கா ராஷ்டிரிய சமிதி(TRS) கட்சிதான் தொடர்ந்து தெலுங்கானாவுக்கு குரல் கொடுத்து வருகிறது.

தெலுங்கா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யுனிஸ்ட், தெலுங்கு தேசம் ஆகிய  கட்சிகள் தனி தெலுங்கானாவை ஆதரிக்கின்றன.

ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும்  பிரதான கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை நடுநிலை வகித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.

மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன்(MIM), மார்ச்சிஸ்ட் கம்யுனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனி தெலுங்கானா அமைவதை  எதிர்க்கின்றன.
 
தெலுங்கானா விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர். தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு வாக்களித்தால் ஹைதராபாத்துக்கு போக பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்று சொன்னவர். அதேபோல் தெலுங்கானாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கோஷம் போட்டு பதாகை ஏந்தியவர் ஜெகன்மோகன்.





கடந்த டிசம்பர் மாதத்தில் தெலுங்கானா அமைவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
தெலுங்கானா பற்றிய இறுதி முடிவை வருகின்ற 28-ஆம் தேதி அறிவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

'ஜெய் தெலுங்கானா'  கோஷம் வெற்றி பெறப் போகிறது. தெலுங்கானா தனி மாநிலம் அமைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இதற்கிடையில் ராயலசீமா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி 'ஜெய் ராயலசீமா' என்கிற புது கோஷம் எழுந்துள்ளது.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/rps-will-fight-for-rayalaseema/article4318203.ece

ஏற்கனவே ஆந்திராப்பகுதியை மட்டும் தனியாக பிரிக்கக் கோரி 1972 ஆம் ஆண்டில் 'ஜெய் ஆந்திரா' கோஷம் எழுப்பப்பட்டு பின்னர் வலுவிழந்தது.

ஆக மொத்தம் தெலுங்கானா,  ராயலசீமா, ஆந்திரா என மூன்று மாநிலங்கள் உருவாகும் நிலை உள்ளது.

என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பிரிவினை தேவையற்றது என்றே கருதுகிறேன்.  ஒரு மொழி பேசும் ஓர் இன மக்கள் பிரிந்து இருப்பது நல்லது அல்ல.
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்  என்பது போல  இந்தப் பிரிவினையால் அரசியல்வாதிகள் பயன் பெறுவார்கள். எப்படியானாலும் மூன்று மாநிலங்களும் தன்னை எதிர்க்க மாட்டார்கள் என்பதால்  போலி இந்திய தேசியமும் பயன்பெறும்.

இந்தியா என்பது பல இனத்து மக்களால் ஒன்றுபட்டு கட்டமைக்கப்பட்ட இயற்கை தேசம் அல்ல.
ஆட்சியாளர்களின் வசதிக்கேற்ப பல இனத்து மக்களை அடிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட செயற்கை தேசம்.


அதற்கு ஆந்திர மாநில  பிரிவினை ஓர் உதாரணம்

2 கருத்துகள்: