ஞாயிறு, 27 ஜனவரி, 2013

கூடங்குளம் அணு உலையும் இந்திய மௌன (ஆ)சாமிகளும்


கூடங்குளம் அணு  உலை மிகவும் பாதுகாப்பானது என இனியன் குழு அறிக்கை கொடுத்தது.

இது போல நவீன விஞ்ஞானத்துடன் கூடிய எந்த ஒரு அணு உலையும் கிடையாது என சர்டிபிகேட் கொடுத்தார்  ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள்.

விமானத்தை விட்டு மோதினாலும் ஆபத்து வராது என 15 நாள் சாமி அறிக்கை கொடுத்தார்.

இவர்கள் சொன்ன கருத்துக்களை இந்திய தேசிய கட்சிகளும், சில தமிழக  கட்சிகளும் ஆதரித்தன. தினமலம், துக்ளக் போன்ற ஏடுகளும் பக்கம் பக்கமாக எழுதி தள்ளின.
நடுநிலையாளர்களும் அப்படியே நம்பினார்கள். எவன் செத்தால் நமக்கு என்ன? எப்படியாவது மின்சாரம் கொடுங்கள் என்ற சுயநலம் மக்களை ஆட்டிப்படைத்தது.

பணம் வாங்கி போராடுகிறார்கள் என குற்றச்சாட்டை கூறினார்கள் (இது வரை  நிரூபிக்கப்படவில்லை). உதயகுமாரை தூக்கிலிடுங்கள் என இளங்கோவன் போன்ற தீவிரவாதிகளும், பாரதிய ஜனதா தீவிரவாதிகளும் குரல் எழுப்பினார்கள்.

இப்போ விசயத்துக்கு வருவோம்.

கூடங்குளம் அணு உலையில் கசிவு ஏற்பட்டதாகவும்,
சில  தொழிலாளிகள் பாதிக்கப்பட்டதாகவும், 
தொழிலாளிகள் வேலை செய்ய வருவதற்கு அஞ்சுவதாகவும், தொழிலாளிகளுக்கு அதிக சம்பளம் தர அரசு முன்வருவதாகவும், 
இது பற்றி அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் எனவும்  அண்ணன் உதயகுமார் அவர்கள் குற்றம் சாட்டினார்.

முதலில் இதை அரசு தரப்பு மறுத்தது.
 
"கூடங்குளம் அணு உலையில் கசிவு இருந்தது. ஆனால் அதை சரிசெய்தாகி விட்டது" என்று மத்திய அமைச்சர் 15 நாள் சாமி இப்போது ஒத்துக்கொண்டுள்ளார்.
 
ஏற்கனவே அணு உலையிலிருந்து அதிரும்  சத்தத்துடன், கரும்புகை  வெளியானதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

இதையெல்லாம் அரசும், ஊடகங்களும் ஏன் மறைக்கின்றன?

அணு  உலை மிகவும் பாதுகாப்பானது  என அறிக்கை கொடுத்தவர்கள், அணு உலை ஆதரவாளர்கள்  எல்லாம் இப்போது எங்கே சென்றார்கள்??
 

அணு உலை அமைக்க மதிப்பிட்ட தொகையை விட 4000 கோடி  ஏன் அதிகமாக செலவிடப்பட்டது??

அணு உலை அமைக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக  ஏன் ஆனது? 

ரஷ்ய  அணு உலைகள் பாதுகாப்பற்றவை என ரஷ்ய நிறுவனங்களே சொல்லும்போது இந்தியா மட்டும் ஏன் ரஷ்யாவுக்கு வக்காலத்து வாங்குகிறது?
 ( Zio-Podolsk என்னும் ரஷ்ய நிறுவனம்  அணு உலையின் பாகங்களை தயாரித்து அனுப்புகிறது. இந்த நிறுவனம் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.)

மக்களுக்கு ஏன் பேரிடர் பயிற்சி அளிக்கப்படவில்லை? குறைந்தபட்சம் சாலைவசதிகள் கூட ஏன் செய்து தரப்படவில்லை?
 
உங்களது நோக்கம் மின்சாரம் மட்டுமே என்றால் "மக்கள் பாதுகாப்பு  பற்றி கவலை இல்லை" என்று  தைரியமாக சொல்லவேண்டியதுதானே??

அதைவிட்டு அணு உலை மிகவும் பாதுகாப்பானது என ஏன் திரும்ப திரும்ப பொய் சொல்லுகிறீர்கள்??

அய்யா கலாம் அளவுக்கு எனக்கு விஞ்ஞானம் தெரியாது. நான் படித்த அணு அறிவியல் வைத்து சொல்லுகிறேன். அணு உலை நம்மை விட நம் தலைமுறைகளை மிகவும் பாதிக்கும். எத்தனையோ மாற்று வழிகள் இருக்கையில் அணு உலைக்காக கோடி கோடியாக செலவழிப்பது சுத்த முட்டாள் தனம்.

சமர்பா குமரனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன:
"கண்ணத் தொறந்துக்கிட்டு பாழுங் கிணத்துக்குள்ள
குதிக்கச் சொல்லுறியளே நாராயணா
நாராயணா தம்பி நாராயணா"

 

கல்பாக்கம் அணு உலையால் மக்கள்/தொழிலாளிகள் எவரும் பாதிக்கப்படவில்லை, சாகவில்லை  என்று நம்பினால் நீயும் இந்தியனே!!

கூடங்குளம் அணு உலை கட்டமைப்பின்போது தொழிலாளிகள் எவரும் பாதிக்கப்படவில்லை, சாகவில்லை  என்று நம்பினால் நீயும் இந்தியனே!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக