வியாழன், 14 மார்ச், 2013

விளம்பர நாயகி ஜெயலலிதா அம்மையார்

 கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அனைவரும் தன்னை பாராட்டும்படி, கூத்தாடிகளையும்  அழைத்து, பிரம்மாண்ட பாராட்டு விழாக்களை நடத்தி, அதை தன் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி ஆனந்த கூத்தாடினார் அப்போதைய முதல்வர்  பாராட்டுவிழா நாயகன் கருணாநிதி.

கருணாநிதிக்கு சற்றும் சளைத்தவரில்லை இப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இது பலரும் அறிந்ததே!
ஆட்சி முடிந்த ஒரு வருடத்தில் பல நாளிதழ்களிலும் 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை' என்று கோடிக்கணக்கில் விளம்பரம் செய்தார்  விளம்பர நாயகி ஜெயலலிதா


இப்போதைய விளம்பரம்:
சென்னை வண்டலூரில் ஏழு புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்போகிறார்கள். அப்படியே வனத்துறையின் சில கட்டிடங்களையும் திறந்துவைக்கப் போகிறார்களாம். இதற்கு எதுக்கு அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க அளவில் விளம்பரம்? 

எல்லாம் சரி. அதென்ன பிற மாநில பதிப்புகளிலும் விளம்பரம்? பிரதமர் பதவிக்கு அஸ்திவாரமோ?

நல்லவேளை ஆங்கில நாளிதழ்களிலும் தமிழில் இந்த விளம்பரம் வந்திருக்கிறது. அதனால் பிற மாநிலத்தவர் அதைக் கண்டுகொள்வதில்லை. ஒருவேளை ஆங்கிலத்தில் விளம்பரம் வந்திருந்தால் 'இதற்கெல்லாம் விளம்பரமா?' என்று காரித் துப்பியிருப்பார்கள்.

வேண்டுகோள்: தங்கள் பணத்தை செலவு செய்து தங்களின் விளம்பர ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். மக்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக