சனி, 23 மார்ச், 2013

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??


தமிழீழ விடுதலைக்காக தமிழகத்தில் மாணவர்கள் தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பித்து பொதுமக்கள், பணியாளர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.

ஆனால் இந்தியா அதே கள்ள மௌனம் சாதிக்கிறது. நடந்தது இனப்படுகொலை என்பதைக் கூட இந்தியாவால் தைரியமாக சொல்ல முடியவில்லை (இந்தியாவும் உடந்தைதானே!!). இந்தியா மீது தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். காங்கிரஸ், பிஜேபி மற்றும் பல இந்தியக் கட்சிகளும் தமிழர்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. தமிழகக் கட்சிகளும் கூட்டணி கணக்கில் இறங்கிவிட்டார்கள்.

 இந்நிலையில் இந்தியாவுக்கு கீழ்க்காணும் கோரிக்கைகளை வைக்கிறேன்.
இது ஏற்கனவே பலரும் வைத்ததுதான்.

1. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது. (புறக்கணிக்கப்போவதாக கனடா ஏற்கனவே அறிவித்துவிட்டது)

2. IPL கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது.

3. தமிழ்மண்ணிலிருந்து இலங்கைத் தூதரகம் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

4.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்  (ஏற்கனவே தமிழக அரசு விதித்துவிட்டது)

5. தமிழக மீனவர் மீதான தாக்குதல்களுக்காக இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். இனி தாக்குதல்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்யவேண்டும்..

Demands to Indian Government

1.India should not attend common wealth meeting to be held in genocidal srilanka.  (Canada already announced that they wont attend that meeting)


2. Srilankan players should not be allowed to play in IPL matches.

3. Genocidal Srilankan embassy should be removed from Tamilnadu

4. Indian Government should impose economical ban on Srilanka (Tamilnadu Govt already imposed economical ban on srilanka)

5. India should condemn Srilanka for its attacks on Tamilnadu fishermen.


நான்காவது கோரிக்கை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் மிக எளிதாக நிறைவேற்றப்படக்கூடிய  கோரிக்கைகளே!!

கிரிக்கெட்டை ஏன் புறக்கணிக்க வேண்டும் எனப் பலர் கேள்வி கேட்கக் கூடும்.
அவர்கள் இந்தப் பதிவை படித்துத் தெளிவாகுங்கள்.

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக