வியாழன், 18 டிசம்பர், 2014

லிங்காவும், ஜனநாயக விரோதமும்

ஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் சில முட்டாள்களின் தொல்லை தாங்க முடியல..
படம் ஆயிரம் கோடி கலெக்ஷன், செம ஹிட், மாஸ் என கதை விடுகிறார்கள். (
ஒருவேளை அவர்களுக்கு  மட்டும் வேற படத்தைக் காட்டிவிட்டார்களோ!!)

அது எக்கேடும் கெட்டு போகட்டும்.
ஆனால் லிங்கா படத்தை விமர்சித்த சில பேஸ்புக் ஐடிகள், இணையங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இது முற்றிலும் ஜனநாயக விரோத செயல்.
படத்தை நூறு, இருநூறு கொடுத்து பார்க்கிறவன் விமர்சனம் பண்ணதான் செய்வான்.
விமர்சனம் வரக்கூடாது என்றால் படத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

லிங்கா பட தயாரிப்பாளர் அவர்களே,
இணையத்தில் படத்தை விமர்சிப்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தீங்களாமே!!
ஏன் ஆந்திரா, கேரள, கன்னட போலீசிடம் புகார் கொடுக்கவில்லை?
தமிழன் என்ன இளிச்சவாயனா??
தமிழனின் பணம் மட்டும் வேண்டும், ஆனால் தமிழன் நெகடிவ் விமர்சனம் வைக்க கூடாது. அப்படிதானே!!!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ரஜினிக்கு மேக்-ஆப் போட செலவழிச்ச பணம் மற்றும் நேரத்தில் இன்னொரு படத்தை எடுத்து முடித்திருக்கலாம்.

லிங்குசாமியா இருந்தாலும், லிங்காவாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்..
இப்ப, இந்த  பக்கத்தை முடக்குங்கள் பார்ப்போம்.

நடிகர் ரஜினிக்கு வேண்டுகோள்: அய்யா, உங்க வயதுக்கு ஏற்றபடி கதை தேர்வு செய்து நல்ல படம் கொடுக்க முயற்சி செய்யுங்க. சுத்தியிருப்பவர்கள், விசிலடிச்சான் குஞ்சுகளின் பேச்சைக் கேட்டு மொக்கைப் படத்தை ஏற்றுக் கொள்ளாதீர்..

செவ்வாய், 16 டிசம்பர், 2014

எல்லா குழந்தைகளும் குழந்தைகளே.. - சின்ன ஆதங்கம்

பள்ளி நிர்வாக சீர்கேட்டால் கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

முறையான மருத்துவ சிகிச்சையின்மையால் தர்மபுரியில் இறந்த குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்தினோம்.

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான பாலஸ்தீன குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

தாலிபான் தாக்குதலால் பலியான பாகிஸ்தான் குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்துகிறோம். 

உலகின் எந்த மூலையில் யார் இறந்தாலும் வருந்துகிறானே தமிழன்..

ஆனால் சிங்கள இனவெறி தாக்குதலால் பலியான ஈழத்துக் குழந்தைகளுக்காக நீங்கள் என் கண்ணீர் சிந்தவில்லை??
மனிதாபிமானிகளே! ஏன் கள்ள மௌனம் காத்‌தீர்கள்?

#ஆதங்கம்.



================

ஐ.எஸ்.ஐ.எஸ் காட்டுமிராண்டிகளின் தலை துண்டிப்பு பயங்கரவாதம், ஆஸ்திரேலியா உணவகத்தில் பயங்கரவாதம், பாகிஸ்தான் பள்ளியில் தாலிபான் தீவிரவாதிகளின் பயங்கரவாதம் என சமீபகாலமாக பயங்கரவாதம் கட்டுக்கடங்காமல் போகிறது.

தீவிரவாதத்தின் ஆணிவேரை அறிந்து முழுமையாக ஒழிக்க வேண்டும்.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழினவாதம் தொடர்பான கட்டுரைக்கு இந்தியவாத மகஇகவுக்கு பதில்

வினவு இணையதளம் தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள் என்னும் தலைப்பில் ஒரு நேர்காணல் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளிகளை தமிழகத்தை விட்டு வெளியேற தமிழினவாதிகள் சொல்வதாக கட்டுரை உள்ளது. (யார் அந்த தமிழினவாதிகள் என்று இறுதிவரைக்கும் கட்டுரையில் சொல்லவில்லை.)

இந்திய ரயில்வேயில் தமிழர்க்கு சம உரிமை இல்லை.
இந்திய பணி தேர்வுகளில் தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இந்தி ஆதிக்கம் அதிகம்  உள்ளது. இந்தி அல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
அதைப் பெற்றி நாம் பேசினால் 'தமிழினவாதமாம்'.
வெளிமாநில தொழிலாளிடம் சென்று சிண்டு முடியும் வேலை செய்யும் இவர்கள் செய்வது புரட்சியாம்.

அவர்களின் கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு:

வினவுக்கு புத்தி பேதலித்து விட்டதா??
வினவின் ரசிகனான எனக்கு இந்தக் கட்டுரை எரிச்சல் ஊட்டுகிறது.
வெளி மாநிலத்தவர் உள்ளே வரக் கூடாது என்று வினவிடம் சொன்னது யார்?
தமிழர்கள் இவ்வாறு சொல்வதாக வெளி மாநில நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்??
ஏன் இந்த சிண்டு முடியும் வேலை??

வேலைவாய்ப்பில் தமிழனுக்கு முன்னுரிமைக் கொடு என்றுதானே கேட்கிறோம்.
அதில் என்ன தவறு?
பல நாடுகளிலும் உள்ள நடைமுறைதானே!!

குறைந்த கூலிக்கு அழைத்துவரும் நபர்களை சென்று நேர்காணல் எடுக்கலாமே!
அவர்கள்தானே தமிழனையும், வெளிமாநில நண்பர்களையும் சுரண்டுகிறார்கள்.
அது குறித்த விழிப்புணர்வை வெளியாட்களுக்கு ஊட்டலாமே!
அவர்கள் கையிலும் சிவப்புக் கோடியைக் கொடுக்கலாமே!
அதை விடுத்து ஏன் இந்த சிண்டு முடியும் வேலை?

குறைந்த வேலைக்கு வெளியாட்கள் வருவதால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல, வெளியாட்கள்தான்.
அவர்களின் குடும்பம், குழந்தைகளின் படிப்பு எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது..
அவர்கள் தங்கள் ஊரிலேயே நிம்மதியா வாழ்வு வாழ வழிவகை செய்யல்லாமே!
வெளிமாநில நபர்கள் இங்கே வர என்ன காரணம்? அம்மாநிலங்களில் நிலவும் வறுமைதானே!
அதனை நீக்க என்ன வழி சொல்கிறீர்??
வெளிமாநிலங்களில் உள்ள சிவப்புக்கொடி ஆட்கள் என்ன செய்கிறார்கள்?
இல்லாத இந்தியாவுக்கான புரட்சிக்கு ஆள் சேர்க்கிறார்களா??

அளவுக்கு அதிகமான வெளியாட்கள் வரவால் தமிழ்நாட்டு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்களே! அதற்கு என்ன பதில் இருக்குது?

சீனாவில் வெளியாட்கள் வேலை பார்க்க அடையாள அட்டை வேண்டும்.
அதுவும் நிரந்தர வேலை கிடையாது. பல கட்டுப்பாடுகள் உள்ளன.
அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த சொல்லி உங்க சீனா பொதுவுடைமைவாதிகளிடம் சொல்லுங்க..

அது என்ன மாயமோ, மர்மமோ தெரியல.
தமிழன் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டால் வினவுக்கு வயித்தெரிச்சல்!!
ஒருவேளை இறுதிவரைக்கும் சாதி, மத சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது வெளியாட்களுக்கு புரியும்.
ஆனால் இதுபோன்ற சிண்டு முடியும் வேலையை வினவு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

திங்கள், 8 டிசம்பர், 2014

சமத்துவமாக வாழு, சமத்துவத்தோடு வாழ விடு

 'The angst of the Tamil brahmin: Live and let live' என்னும் தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.
தமிழ்நாட்டுல பார்ப்பனர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்று பத்ரி சேசாத்ரி என்பவர் அழுது புலம்பியுள்ளார்.
(நடிகன் டா!)

தமிழக கிரிக்கெட்டில் பார்ப்பான் ஆதிக்கம் இருக்குதுன்னு உண்மையை சொன்னால் இவருக்கு ஏன் கோவம் வருது?

சென்னையில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ள ப்ளாட் ஒன்றில் பல வீடுகளை பார்ப்பனர்கள் வாங்கியுள்ளார்கள்.
அது நமக்கு பிரச்சினை இல்லை. வாங்குவதும் விற்பதும் சொந்த விசயம்.
ஆனால் அங்கே கோடிக் கணக்கில் கொட்டி கொடுத்தாலும் பார்ப்பான் இல்லாதவருக்கு வீடு கிடையாதாம்!!
இங்கே ஒதுக்கப்படுவது யார்?

கோயம்பேடுல கருவாடு விற்க கூட தடை போடும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்துவது யார்?

சிதம்பரத்தில் தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமியை கோவிலுக்கு வெளியே தூக்கிப்போட்டு ரவுடித்தனம் செய்தது யார்?
தமிழையும் தமிழர்களையும் கோவிலை விட்டு வெளியேற்றியது யார்?

தமிழக அரசியலில் பார்ப்பனர்களே இல்லையாம்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க உள்ள பார்ப்பன அமைப்புகள் ஒன்றுக்கூடி தங்களின் அடியாளான மோடிக்கு ஆதரவு கொடுத்தீர்களே! பாஜக போட்டியிடாத இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தீர்களே! இதெல்லாம் அரசியலில் வராதா?

ஊடகத்துறையில் உங்க ஆதிக்கம்தானடே இருக்குது!! அதையெல்லாம் வசதியா மறந்துட்டீங்களே!

தனக்கு உள்ள சக்தியை வைத்து மோடியை பிராமணன் ஆக்குகிறேன் என்று பொறுக்கிசாமி சொன்னானே!
(அது என்ன சக்தி!)
தமிழர்களை ஒடுக்க பிராமணப் படை அமைப்பேன் என்றும் சொன்னானே!
அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? எத்தனை பார்ப்பனர்கள் அந்த திமிர்ப் பேச்சைக் கண்டித்தீர்கள்?


சிம்பதி(Sympathy) உருவாக்க என்னவெல்லாம் குட்டிக்கரணம் போடுகிறார் பத்ரி சேசாத்ரி!!

சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஒரு பார்ப்பான் சொன்னது:
"கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய பிராமணரைத் தவிர வேறு எவனுக்கு அருகதை இல்லை"

இதுதான் ஆதிக்கம், கொழுப்பு.
அதை முதல்ல நிறுத்துங்கடே!
அதற்குப் பின்னர் 'வாழு, வாழ விடு'ன்னு சமத்துவம் பேசலாம்.

குறிப்பு: பார்ப்பானையே குறை சொல்வதால் பிற சாதி வெறியர்கள் இன்பம் கொள்ள வேண்டாம்.
பார்ப்பானைப் போன்றே இன்ன பிற சாதி வெறியர்களும் ஆபத்தானவர்களே! புறக்கணிக்கப்பட வேண்டியவர்களே!

வெள்ளி, 5 டிசம்பர், 2014

பனையோலைக் கொழுக்கட்டை செய்யும் முறை

பனையோலைக் கொழுக்கட்டை சாப்பிட்டு நாலு வருடங்களுக்கும் மேலாகிறது.
சென்னையில் பனையோலையும் இல்லை, பனை மரமும் இல்லை.
இந்தக் கார்த்திகைக்கு (இன்று) எப்படியாவது சாப்பிட வேண்டும்,
ஊருல இருந்து பனையோலை வருகிறது.  :)


கொழுக்கட்டையை ஓலைக்குள் வைப்பது, ஓலையைக் கட்டுவது மட்டுமே எனக்குத் தெரியும்.
ஆனாலும் சமையல் குறிப்பை(?) தோராயமாக எழுதுகிறேன்.

தேவையானவை: பச்சரிசி, பொடியாக்கப்பட்ட கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது பொடியாக்கப்பட்ட மண்டை வெல்லம், வறுத்த சிறுபருப்பு.
இவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
(அதிக தண்ணீர் சேர்த்தால் ஓலைக்குள் சரியாக வைக்க முடியாது. வைத்தாலும் வெப்பத்தில் இளகிவிடும்.அப்புறம் கொழுக்கட்டை கிடைக்காது. கூழ்தான் கிடைக்கும்
)
பின்னர் படத்தில் உள்ளபடி பனை ஓலைகளை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஓலைகளுக்கு நடுவில் மாவை வைத்து மற்றொரு ஓலைத்துண்டால் மூடிக் கொள்ளவேண்டும்.
இரண்டையும் ஒரு ஓலை நாற்றால் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மண்பானைக்குள் சிறிது நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
(அளவு சரியாக தெரியவில்லை.)
நாம் கட்டிய பனை ஓலைத் துண்டுகளை வரிசையாக பானைக்குள் அடுக்கிக் கொள்ள வேண்டும்.
கீழ்ப்பகுதியில் மாவு இல்லாத பனை ஓலை துண்டுகளையும் போடுவார்கள் (அதிக வெப்பத்தால் கொழுக்கட்டை கருகிவிடக் கூடாதுல்ல.. ).
பானையை நன்கு மூடி விட வேண்டும்.

அடுப்பைப் பற்ற வைத்து தண்ணீரைக் கொதிக்க செய்ய வேண்டும்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அடுப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உடனே திறந்து விடாமல் அடுப்பிலேயே பானையை வைத்துக் கொள்ள வேண்டும்.
சில நிமிடங்கள் கழித்து பானையைத் திறந்து, பனை ஓலையை அகற்றி கொழுக்கட்டையை உண்ணலாம்.
வாசமும் சுவையும் அருமையாக இருக்கும்.

புதன், 3 டிசம்பர், 2014

பாபர் மசூதி விவகாரம்: என்னதான் தீர்வு?

"டிசம்பர் 6"

இந்துத்துவ மத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.
மத நல்லிணக்கத்திற்கு பெரும் களங்கம் விளைவிக்கப்பட்ட நாள்.
காவிகளின் கடப்பாரையால் தகர்க்கப்பட்டது செங்கல் சிமெண்டால் கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல, மனிதர்களின் உணர்வுகளும்தான்.



ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முழுக்க ஒருவிதமான பதட்டமான சூழ்நிலை உருவாகிறது.
பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், திரையரங்குகள் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் காவல்துறை மற்றும் துணை ராணுவம் குவிக்கப்படுகிறது.
பெருமளவில் சோதனை நடத்தப்படுகிறது.
தேவையற்ற பீதிக்கு மக்கள் ஆளாகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த துயர சம்பவத்தை கொண்டாடும் காவி கும்பல்களும் சமூகத்தில் ஊடுருவி குழப்பம் விளைவிக்கிறார்கள்.

இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவனுக்கு நீதி வழங்காமல் இன்னும் எத்தனை வருடங்களுக்கு காலம் தாழ்த்துவது?
தீர்வு நோக்கி இந்திய ஒன்றியத்திலுள்ள மக்கள் அனைவரும் எப்போது சிந்திக்கப் போகிறார்கள்?

"மசூதியை இடிப்பிற்கு மூலகாரணமாய் இருந்தவர்களை சிறைக்கு அனுப்புவதும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்டி எழுப்புவதும் தவிர வேறு எதுவும் தீர்வாகாது."
இஸ்லாமியர் அல்லாத மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தப் பணியை செய்ய முன்வர வேண்டும்.
அதுவே இந்திய மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும்.


இன்னொரு விசயம்.
பாபர் வெளிநாட்டுக்காரன், பாபர் மசூதி இந்திய அவமானச் சின்னம் என்று காவிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்தியாவிலுள்ள பல பல்கலைக்கழகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அணைகள், கோட்டைகள் என பலவும் வெளிநாட்டுக்காரன் கட்டியதுதான்.
அதையும் அவமானச் சின்னம் என்று சொல்வீர்களா?
காவிகளே! எப்போது சிந்திக்கப் போகிறீர்கள்?
உங்கள் மதவாத்திற்கு இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குவீர்கள்??

காவிகளின் கூச்சல் ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில் வாளேந்திய வம்சம், யாருக்கும் அஞ்சமாட்டோம்  என்று பக்கம் பக்கமாக வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
வசனம் பேசினால் தீர்வு/நியாயம் கிடைத்து விடும் என்று யார் சொல்லி கொடுத்தார் என்று தெரியல.
அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுங்கள்.
ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முன்வாருங்கள்.