செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மதம் மனிதனை மிருகமாக்கும்

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பற்றியும், வேடமணியும் பக்தர்கள் பற்றியும் தவறாக பேசியிருக்கிறார்கள் மோகன் சி லாசரஸ் தலைமையிலான அல்லேலூயா கோஷ்டியினர்.

அந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு தசரா திருவிழாவில் தன் விஷம அரசியலை விதைக்க  இந்துத்வ கும்பல் கிளம்பியிருக்கிறது.

மதம் மனிதனை மிருகமாக்கும்.



குலசேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து கடவுளாக வழிபட்டனர். முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள்.  அவ்வாறான அம்மனுக்கு இந்து அடையாளம் கொடுத்து அயோக்கியத்தனம் செய்கிறது இந்துத்துவ கும்பல்.

தன் முதுகில் உள்ள அழுக்கை துடைக்காமல் அடுத்தவனை குறை கூறுகிறது மோகன் சி லாசரஸ் கும்பல்.

source: http://tutyonline.in/node/9430

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா?

 பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார்.
இதே பதிவை பல சமயங்களில் இணையத்தில் பார்த்திருக்கிறேன்.
அந்தப் பதிவின் நோக்கம் என்னவென்றால் எப்படியாவது பெரியாரை சிறுமைப்படுத்த வேண்டும் என்பது தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

சமூக நீதிக்கும், மனிதனின் சிந்தனைக்கும் குறுக்கே மதமும் கடவுளும் வந்து நிற்பதால் நாத்திகத்தை முன்மொழிந்தார் பெரியார். அவ்வளவே!

அவரது கொள்கை சரியா? தவறா? என ஆராய்வதே சிறப்பு.
அதை விடுத்து பெரியார் மீது சேறு வாரி இறைத்து ஆனந்தம் காண்பது சிறப்பல்ல.


பதில் தெரியாமல் பெரியார் முழித்தார் என நடக்காத ஒன்றை எழுதி பரப்புகிறார்கள்.
ஆனால் பெரியார் கேட்ட பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்லாமால் சாதி, மத வெறியர்கள் ஒடுகிறார்களே!

பெரியாரை, தேவரை விடுங்க.
நான் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்காவது பதில் சொல்லுங்க.

  • விக்ரஹங்கள் கடவுளின் பிம்பம் என்கிறீர்கள். சிலைக்கு நெய், பால், மற்றும் உணவுப் பொருட்களை ஊற்றி வீணாக்குகிறார்களே!  அதற்கு என்ன விளக்கம்(சமாளிஃபிகே ஷன்) வைத்துள்ளீர்கள்?
  • அலகு குத்துதல், தீ மிதித்தல் ஆகியவற்றை செய்ய எந்தக் கடவுள் சொன்னான்?
  • விநாயகர் சிலையை கரைத்து கடல் வளத்தை மாசுபடுத்த எந்தக் கடவுள் சொன்னான்?
  • உன் மதம் பெருசு, என் மதம் பெருசு என்று தகராறு செய்ய எந்தக் கடவுள் சொன்னான்?
  • பார்ப்பான் அல்லாதவரோ, பெண்களோ கோவில் கருவறைக்குள் சென்றால் தீட்டு எந்த விளக்கெண்ணை கடவுள் சொன்னான்?

இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். எதற்கும் எந்த பதிலும் வரப்போவதில்லை

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற ஆராய்ச்சிக்குள் போக விரும்பவில்லை.
மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சமூகத்தில் மூடப் பழக்க வழக்கங்களும், சீர்கேடுகளும், பூசல்களும் உள்ளதா இல்லையா?
கண்டிப்பாக இருக்கிறது.,

அதனை எதிர்த்து எந்த ஆன்மீகவாதியும் பிரச்சாரம் செய்வதில்லை.
அதை முதல்ல செய்யுங்க பாஸ்.

அதை விடுத்து பெரியார் முழித்தாரா? பசும்பொன் தேவர் கேள்வி கேட்டாரா? என்ற தேவையற்ற விவாதத்தை நிறுத்துங்க பாஸ்...

நீங்களே அறிவுப்பூர்வமாக அணுகுங்க பாஸ்.
அறிவுப்பூர்வமாக அணுக தேவரும் பெரியாரும் தேவையில்லை. சிந்தித்தால் போதும்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

அதிமுக அசுர பலம் அடைகிறதோ?

தூத்துக்குடி மாநகராட்சி:

கடந்த 2011 உள்ளாட்சி தேர்தல் வாக்குகள்:

எல். சசிகலா புஷ்பா(அதிமுக) 65,050
எம். பொன் இனிதா(திமுக) 41,794
பாத்திமா பாபு (மதிமுக) 29,336
ச. ராஜேஸ்வரி (தேமுதிக) 7,407

2014 உள்ளாட்சி இடைத்தேர்தல்:
அந்தோணி கிரேஸி (அதிமுக) - 1,16,693
ஜெயலட்சுமி  (பாஜக கூட்டணி)  - 31708

//தேர்தல் தில்லாலங்கடி என்று சொல்லிட்டு நகர முடியவில்லை.
அதிமுக அசுர பலம் அடைகிறதோ என்கிற டவுட்டுதான் வருகிறது. :(

திமுகவினரும் இரட்டை இலையில் குத்திட்டாங்களோ!!

தங்களுக்கு மாபெரும் வாக்குவங்கி இருப்பதாக பகல் கனவு காணும் பாஜகவினருக்கு நல்ல பாடம். அந்த வகையில் சிறு மகிழ்ச்சியே!!  :)

வியாழன், 18 செப்டம்பர், 2014

காவிகளால் நாசமாகப் போகும் கல்வித்துறை


வகுப்பறை என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்.
அப்பேர்பட்ட வகுப்பறையும், கல்வியும் இன்று எப்படி உள்ளன?

தனியார்களின் வசம் சிக்கி சீரழிந்து வருகிறது.
ஒன்றாம் வகுப்புக்கே  லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுக்கும் அவல  நிலையில் வந்து நிற்கிறது.
மேற்படிப்பு படிக்க பணம் இல்லாமையால் மாணவிகள் தற்கொலை செய்த அவலம்  இதே தமிழ் மண்ணில் அரங்கேறியுள்ளது.
இருக்கிற அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் கழிப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் உள்ளன.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் பார்க்காமல் அதனை அறிவாகப் பார்த்து, தனியாரிடம் பணத்தை வாரி இறைக்க மக்கள் பழக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கல்வித்துறையில் பல அவலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இதனை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின்னர்  கல்வித்துறையில் செய்த சில புரட்சிகளைப் (?) பார்ப்போம்.

  • பள்ளிகளில் செத்தமொழி(சமஸ்கிருத) வார கொண்டாட்டம். 
  • குரு உத்சவ் என்னும் பெயரில் ஆசிரியர் தினம் 
  • ஆசிரியர் தினத்தில் மாணவர் முன்னர் தோன்றி, விளம்பரம் தேடிக் கொள்ளுதல்
  • தற்போது, இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிக்கை

இதுபோக 'இந்தியைத் திணிக்க வேண்டும்' என காவிக்குரல் கடுமையாக எழுகிறது.
குருகுலக் கல்விமுறையை கொண்டு வரவேண்டும் என ஒரு நீதிபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்ன அவலமும் உள்ளது.

எப்படியாவது கொல்லைப்புற வழியாக இந்தி, சமஸ்கிருதம் என ஆரியப் பண்பாட்டை புகுத்த துடிக்கிறார்கள் காவிகள். 


மேலும் வலைத்தளங்களில் கட்டாய இந்தி, பள்ளிக் கல்வியில் வேத பாடங்களை கட்டாயமாக்குதல்,  இந்தியா வரலாற்று ஆய்வு குழுவில் பார்ப்பன ஆதிக்கம் என பெரும் அச்சுறுத்தலைத் தருகிறது பாஜக அரசு.

கல்வியை சேவையாக வழங்குவது குறித்து சிந்திக்காமல்,
அறிவியல் ரீதியில் மாணவர்களைப் பலப்படுத்தும்
செயலை முன்னிறுத்தாமல்,
'ஹிந்தி, ஹிந்து, ஹிந்தியா' என தனது பிற்போக்கு இந்துத்வ அரசியலை மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு.


பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கையை மாநில அரசு உடனே முன்னெடுக்க வேண்டும்.
இல்லையேல் காவிகளின் கையில் சிக்கி கல்வித்துறை நாசமாகும்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

தந்தைபெரியார் 136 -ஆவது பிறந்தநாள்


''மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை?''

- கவிஞர் காசி ஆனந்தன்.
 
 
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.

-புரட்சிக்கவிஞர்.

 
படம்:  tamilmeetpu.blogspot.in

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பெரியார் என்னத்த கிழித்தார்?

நேற்று 'ஜீ தமிழ்'(ZEE Tamil) தொலைக்காட்சியில் 'நம்பிக்கை - மூட நம்பிக்கை' என்னும் தலைப்பில் பொதுமக்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

மூட நம்பிக்கைகளை சாடிய பலர் மிக அருமையாக தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர். அதிலும் குறிப்பாக   'மூடர் கூடம்' திரைப்படத்தின் இயக்குனர் நவீன் மிக அருமையாக பேசினார்.

நம்பிக்கை தரப்பில் பேசிய பலரும் சொதப்பினர். கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
ஒரு கட்டத்தில்  நம்பிக்கையின் பெயரால் தாங்கள் செய்வது தவறு என்று ஒப்பு கொண்டனர்.


அப்போது பேசிய சோதிடக்காரர் ஒருவர் 'பெரியார் செய்த போராட்டங்களுக்குப் பின்னர்தான் நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று சொல்லும் கூட்டம் பெருகி விட்டதாக' தான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சரி, இந்த சோதிடக்காரர் உள்ளிட்டோர் சொல்லும் நம்பிக்கையான விசயங்கள் என்ன?
கழுதைக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும்,
கணவனை இழந்த பெண் முகத்தில் முழித்தால் அபசகுணம்,
செவ்வாய் தோஷம், சனி தோஷம் என்று பொய் புரட்டுக்களை சொல்லும் சோதிடம்,
தீக்குழியில் இறங்கினால் தன்னம்பிக்கை கூடுமாம்..

மனிதனை சிந்திக்க விடாமல் 'முன்னோர் சொன்னார்கள்', 'பழைய பண்பாடு' என்று காட்டுமிராண்டியாகவே வைத்து தங்கள் வயிற்றுப் பிழைப்பை பார்க்க்கத் துடிக்கிறது ஒரு கூட்டம். 
(முன்னோர்கள் மரம் வைக்க சொன்னார்கள், ஏரி வெட்ட சொன்னார்கள். அதையெல்லாம் செய்யுங்கப்பா..)

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை தான் பெரியார் கிழி கிழின்னு கிழித்தார்.

குறிப்பு:
பெரியார் கருத்துக்களை நாத்திகர்கள் மட்டுமே செவிகோடுத்து கேட்க வேண்டும் என்கிற கட்டாயம் அல்ல.
நாத்திகம் என்பது மட்டுமே பெரியார் கொள்கையும் அல்ல.

வெள்ளி, 20 ஜூன், 2014

Stop the Hindi Imperialism! Treat all the languages equally

Dear Indian Govt and Hindi speaking people,

We are learning English as a secondary language to communicate with non-tamils.
Then what's the need of learning another language?? Why do try to impose Hindi on us?

If you wants Tamils to learn Hindi, why can't you learn Tamil which is an ancient and sweetest language??

Tamils didn't loose anything by boycotting Hindi.
You people didn't achieve anything great by accepting Hindi. But many of you lost your regional language.

There are many undeveloped states where Hindi was imposed.
When compared with those states, Tamilnadu is far better in education, employment, economy, etc.

If we want, we will learn 'n' number of languages. But don't try to impose any language on us.

Destroying the language is the fist step of destroying an ethnicity.
Don't try to do the experiment with Tamil ethnicity. Then India will be looking for a place in Chennai to locate its embassy.

Now it's #StopHindiImpositiion.
If you try to impose Hindi on us, we will  #AgainstHindi.





===
Some Tamils are thinking that Hindi will bring the people to better level.
Just think on why the Hindi speaking people are migrating to Tamilnadu for their employment?