சனி, 17 மே, 2014

தமிழக எம்பிக்களால் தமிழகத்திற்கு பயன் இல்லையா?


தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களால் எந்த பயனும் இல்லை என்று இணையத்தில் கருத்துக்கள் உலாவ ஆரம்பித்துள்ளன.
'டெண்டுல்கர் சதம் அடித்தும் டீம் தோல்வி' என்ற வகையில் அருமையான ஒப்பீடு வேற நடத்துகிறார்கள்.
அதாவது இந்திய அரசிடம் தமிழக அரசு  பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதை மறைமுகமாக கூறுகிறார்கள்.


அப்படியான நண்பர்கள் முதலில் இந்திய அரசியலமைப்பை படித்து விட்டு வரவும்.
* மாநிலங்களுக்கு பாராபாட்சம் இல்லாமல் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
* மாநில அரசின் உரிமைகளில் தலையிடக் கூடாது.
* பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும்போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் 
என ஆயிரத்தெட்டு விதிகள் இருக்குது..

ஆனால் நடுவண் அரசினை ஆட்சி செய்பவர்கள்  இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு தங்கள் ஆட்சி அல்லது கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். சலுகைகளை அள்ளி வீசுகிறார்கள். அதன் மூலம் அந்த மாநிலங்களில் தங்கள் கட்சியை வலுவாக காலூன்ற செய்கிறார்கள்.

தங்களுக்கு வாக்குவங்கி இல்லாத மாநிலங்கள் அல்லது தங்கள் ஆட்சி இல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகிறார்கள்.

தமிழக்திற்கு உரிய அளவில் மண்ணெண்ணை வழங்காமை, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தை வழங்காமை, குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் நடந்தேறியது.
அதன் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக முதல்வர் குற்றம் சாட்டியது பலருக்கும்  நினைவு இருக்கலாம்.

இந்நிலையில் "பாஜக ஆளுகிற மாநிலங்கள் மற்றும்  பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் மட்டுமே பயனடையும்" என்கிற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்  சிலர்.
அதாவது இந்திய போலி ஜனநாயகத்தை ஒத்துக் கொள்கிறார்கள்.
மாநில சுயாட்சி என்கிற கொள்கையை  இந்திய ஒன்றிய நடுவண் அரசு விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள்.
"நம்ம மாநிலத்திலும் பாஜக ஜெயித்திருக்கலாமே!" என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்.

அது தவறான பார்வை.
கூட்டணி இருக்குதோ இல்லையோ நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
எம்பிக்கள் கோரிக்கை வைக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் எம்பிக்கள் தாராளமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வர வேண்டும்.
அல்லது மாநில அரசின் வழியாக நடுவண் அரசுக்கு செல்லும் நிதிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

இதெல்லாம் இந்த எம்பிக்களால் சாத்தியமில்லை. இனப்படுகொலை அரங்கேறியபோதும் பதவியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவர்கள்தான் நம்ம எம்பிக்கள்.
( ஆந்திராவை பிரிக்கிறோம் என்று நடுவண் அரசு அறிவித்தவுடன் சீமாந்திரா பகுதியை சார்ந்த  எம்பிக்கள், அமைச்சர்கள்  அனைவரும் ராஜினாமா செய்தார்கள். அதில் ஒருவர் ஒருபடி மேலே போயி தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தார். )

அதிமுக எம்பிக்கள் உத்தமர்கள் கிடையாது. அதற்காக தமிழகத்தில் தேசியக் கட்சிகளை காலூன்ற செய்தால் தமிழகம் நாசமாகப் போகும்.

குஜராத்தி மோடி உத்திரப்பிரதேசத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அதுபோல தேசியக் கட்சிகளில் பலரும் வெவ்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அவ்வாறு தமிழகத்திலும் கண்டவனும் வந்து போட்டியிட்டு ஜெயிக்கும் நிலை வரக் கூடும்.மாநில உரிமைகள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.மொத்தத்தில் அரசியல் நாசமாய் போகும்.
அதனால் தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்பது மாநில நலனுக்கு நல்லது.

ஒரு தேசிய கட்சியால் தமிழகம் அனுபவித்த கொடுமைகளை உணருங்கள்.

ஒரு தேசியக் கட்சியை அழிக்கவே இத்தனை காலங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் இன்னொரு தேசியக் கட்சியை காலூன்ற செய்யும் தவறை செய்யாதீர் மக்களே!!

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்திய தேசியக் கட்சிகள் மற்றும் மதவாதக் கட்சிகளைப் புறக்கணித்து நாம் சாதனை படைத்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள்.

மாநில சுயாட்சி கோரிக்கையை வலுப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுறது, நடுவண் அரசிடம் பொறுக்கித் தின்பது பற்றி எண்ணிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் பறிபோகும்.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தூத்துக்குடி தேர்தல் கள நிலவரம்

ஆறுமுனைப் போட்டியால் தூத்துக்குடி தேர்தல் களம் அனல் பறக்கிறது.

மின்சாரத் தட்டுப்பாடு, ஸ்டெர்லைட், அணு உலை ஆகியவைதான் தூத்துக்குடி தொகுதியில்  முன்னணி பிரச்சினைகள்.

                                                      படத்தில்: ஜெயசிங்(அதிமுக),  ஜோயல் (மதிமுக), ஜெகன் (திமுக)

அதிமுக:

மின்சார தட்டுப்பாடு பிரச்சினையால்  ஆளும் கட்சியான அதிமுகவின் நிலைமை பரிதாபம்.

தொகுதிக்கு அறிமுகமில்லாதவரை வேட்பாளரை நிறுத்தியது அதிமுகவுக்கு பின்னடைவு.

கூடங்குளம் பகுதி மக்களை அதிமுக அரசு ஒடுக்கியதை மீனவ மக்கள் மறக்க மாட்டார்கள். அதனால் மீனவர்களின் ஓட்டுகள் இம்முறை அதிமுகவுக்கு கிடைப்பது கடினம்.

அதுபோக அதிமுக அமைச்சர் சண்முகநாதனுக்கு எதிராக கட்சியில் பலர் செயல்படுகிறார்கள்.

குளத்தை ஆக்கிரமித்த அமைச்சர் சண்முகநாதன், அடாவடி மேயர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கிய  சின்னதுரையை மீண்டும் அதிமுகவில் சேர்த்தது, தூத்துக்குடி மாநகராட்சிப் பணிகள் முடங்கி கிடப்பது ஆகியவை அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

ஜெயாவின் வான்வழி பிரச்சாரம் அதிமுகவுக்கு கூடுதல் பின்னடைவு.

திமுக:

தனது இரண்டாவது அரசியல் வாரிசு ஜெகனை வெற்றி பெற செய்ய திமுக முன்னாள் அமைச்சர், கலைஞரின் முரட்டு பக்தன் பெரியசாமி தீயா வேலை செய்யுறார். அதிமுகவினரை விலைகொடுத்து வாங்குகிறாராம். அதனால் அதிமுக பிரச்சாரம் மந்தமாக உள்ளது. வேட்பாளர் ஜெகன் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்கிறார்.

காயல்பட்டிணம் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு பெரும்பலமாக இருக்கும்.

அந்நியமுதலீடு விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு வியாபாரிகளுக்கு எதிராக உள்ளதால் வியாபாரிகளின் வாக்குகளை திமுக பெறுவது கடினம்.

பெரியசாமி குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜெகனுக்கு வாக்களிக்க மக்கள் தயங்குவார்கள்.

அனிதா ராதாகிருஷ்ணன் கோஷ்டி, கனிமொழி கோஷ்டி, ராதிகாசெல்வி கோஷ்டி, தற்போதைய எம்பி ஜெயத்துரை கோஷ்டி என பல கோஷ்டிகள் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பின்னடைவு.


மதிமுக:
தூத்துக்குடி தொகுதி   பாஜகவுக்கு கிடைக்கும் என பாஜகவினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே இத்தொகுதியில் மதிமுகவினர் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீனவர் பிரச்சினை, அணு உலை எதிர்ப்பு, சுங்கசாவடி எதிர்ப்பு என மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கென்று தொகுதியில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மதிமுக மேயர் வேட்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு 30000 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக - 61000, பாஜக - 27000 வாக்குகளை வாங்கியிருந்தார்கள். இம்முறையும் இந்த வாக்குகள் நீடித்தால் ஜோயலின் வெற்றி உறுதி செய்யப்படும்.

காங்கிரஸ்:

வேட்பாளர் ஏபிசிவீ சண்முகம் அவர்களுக்கு தொகுதியில் நல்லபெயர் உள்ளது.

இவர்  தோல்வி அடைவது உறுதி. ஆனால் டெபாசிட் பெறும் அளவுக்கு கணிசமான வாக்குகளைப் பெறுவார்.


ஆம் ஆத்மி:

அண்ணன் புஷ்பராயன் அணு உலை எதிர்ப்பாளர்களின் வாக்குகளைப் பெறுவார்.

புன்னக்காயல், திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு, குலசை பகுதிகளில் அதிக வாக்குகள் பெறுவார். பிற பகுதிகளில் வாக்குகள் கிடைப்பது அரிது.


கம்யூனிஸ்ட்: கோவில்பட்டி பகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவார்.

இந்த ஆறுமுனைப் போட்டியால் வாக்குகள் நன்றாகப் பிரியும்.
வெற்றி பெறுபவர்  20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது என் கணிப்பு.

ஜெகனா? ஜோயலா? என்பதுதான் தற்போதைய நிலவரம்...

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மதவாத தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை என்னும் பெயரில் இந்த சமூகத்தில் மதவாதக் குப்பையை அள்ளி போட்டிருக்கிறது பாஜக.

அறிக்கையிலுள்ள சில விசயங்களை பார்ப்போம்.

ராமர் கோவில் கட்டப் போகிறார்களாம்.

//இருக்கிற கோவில்களை பராமரிப்பு செய்யாமல், ராமனுக்கு கோவில் கட்ட துடிப்பதன் நோக்கம் என்ன?
மனைவியை நெருப்பில் இறங்க சொல்லி கற்பை நிரூபிக்க சொன்ன ராமனுக்கு என்ன ***க்கு கோவில்??
(ராமாயணம் என்பதே கட்டுக்கதை.. அது வேற விடயம்)
அனைத்து இந்துக்களும் சமம் என்றால் பிராமணர் அல்லாதவர்கள் கோவில் அர்ச்சகர் ஆக முடியவில்லையே ஏன்?
சூத்திரனுக்கு கோவிலில் உரிமை கூட தர மாட்டாய்.. ஆனால் சூத்திரன் ஓட்டுக்கள் மட்டும் தேவைப்படுதோ!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை (370) நீக்கப் போகிறார்களாம்.
//காஷ்மீரில் காணாமல் போன பல இளைஞர்கள் நிலை , அதிகமான ராணுவ ஆக்கிரமிப்பு, ராணுவம் செய்யும் அட்டூழியங்கள் இவை எதுகுறித்தும் பேசாமல்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்கணுமாம்.. என்ன ஒரு அயோக்கியத்தனம்!!!

பசுக்களைக் கொல்வதை தடை செய்யப் போகிறார்களாம்.
//அப்படியே ஆடு வெட்ட தடை, கோழி குழம்பு தடை, மீன் பிடிக்க தடை என்ன அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே!!
லூசுப்பயலுக!!
பசியாலும், மழையாலும், வெயிலாலும் மனுசன் சாவுறான்.
அதை தடுக்க முடியாத அயோக்கிய அரசியல் கூட்டம் மாடு குறித்து பேசுது.
த்தூ!!!

பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்போகிறார்களாம்!!
இது குறித்து போதுமான  விவரம் எனக்கு தெரியல.
ஆனால் பல தேசிய இனங்கள்  வாழும் இந்திய ஒன்றியத்தில் பொது சிவில் சட்டம் என்பது ஏற்புடையதல்ல.
மாநில சுயாட்சியை ஏற்கனவே பறித்துவிட்டார்கள்..
இன்னும் என்னென்ன மாநில உரிமைகளை பறிக்கப் போகிறார்களோ!!



இந்த நான்கு விசயங்களும் பாஜகவினால் எழுதப்பட்டவை அல்ல.
மோடியை பிரதம வேட்பாளராக அறிவிக்க ஆர்எஸ்எஸ் என்னும் பிற்போக்கு கும்பல் விதித்த கட்டளைகள்.
இங்கே பார்க்க: http://indiatoday.intoday.in/story/narendra-modi-rss-rss-conditions-for-modi-bjp-pm-candidate-ayodhya/1/309155.html

இந்த கட்டளைகளைத்தான் தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாஜக.
மதத்தை தாண்டி பாஜக கும்பலால் சிந்திக்க முடியாது என்பதை அவர்களின் தேர்தல் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக என்னும் உண்மையை இனிமேலாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் இந்த பிற்போக்கு அரசியல் பிற மதத்தினருக்கு ஆபத்து என்பது சொல்வது சரியல்ல.
உழைக்கும் வர்க்க மக்கள் அனைவருக்கும் எதிரானது.


கோவில் கருவறை போராட்டம் நடத்தினால் முதல் ஆளாக வந்து எதிர்ப்பது பாஜக , இந்து முன்னணி போன்ற கும்பல்கள்தான்.
இவர்கள் பார்ப்பனருக்கு சேவை செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள்..
பார்ப்பனர் அல்லாதோருக்கு கோவிலில் உரிமை மறுப்பவர்கள்.
தமிழையும், தமிழனையும் கோவிலுக்குள் அனுமதிக்காத ஆதிக்க கூட்டத்திற்கு அடியாள் வேலை செய்பவர்கள்.
சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை ஆதரிப்பவர்கள்.
ஆனால் இந்து ராஷ்டிரா, ராம ராஜ்ஜியம் என்று பேசி உழைக்கும் வர்க்க மக்களுக்குள் மனதில்  மதவாதத்தை விதைப்பவர்கள்.

இந்துத்வ கும்பலைப் புறக்கணிப்போம்.

இந்து என்னும் அடையாளம் என் மீது திணிக்கப்பட்டிருப்பதால்  இந்துத்வ பிற்போக்கு அரசியலை எதிர்க்க வேண்டியது என் கடமையாகிறது.

கடமை தொடரும்....

புதன், 12 மார்ச், 2014

அவங்க 'ஸ்தோத்திரம்' சொல்லுவாங்க. நாம் 'ஓம், ஓம்' என்று சொல்லணும்

தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் முத்துநகர் தொடர்வண்டியில் ஏறி அமர்ந்தேன். வண்டியின் உள்ளே ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். அவர்களை வழியனுப்ப வந்திருந்த இருவர் வண்டிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். குடும்பத்தினருக்கு  அருகில் கிறிஸ்துவ கன்னியாஸ்திரி பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.

வண்டிக்கு வெளியே நின்றிருந்த நபர் என்னிடம் பேச ஆரம்பித்திருந்தார்..

அவர்: தம்பி, எங்கே போறீங்க??

நான்:சென்னைக்கு போகிறேன்.

அவர்: தம்பிக்கு எந்த ஊரு??

நான்: ஆத்தூர் பக்கத்துல **** கிராமம்.

அவர்: அட, அருமையான கிராமமாச்சே!!!  xxx, yyy போன்ற ஆட்களுக்கு அந்த ஊருதானே!!

நான்: ஆமாம்னே...

அவர்: அந்த பொம்பளையிடம் (கிறிஸ்துவ கன்னியாஸ்திரி)கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. இல்லைனா ட்ரெய்னிலேயே மதத்தை மாத்திடுவாங்க.. ஆமாம், நீங்க இந்துதானே??

நான்: எனக்கு இந்த சாதி, மதமெல்லாம் ஒரு விசயமே கிடையாது. நான் தமிழன்..

அவர்: என்ன தம்பி, இப்படி சொல்லுறீங்க!! அவங்களும் தமிழன்தான். ஆனால் கிறிஸ்து, ஸ்தோத்திரம் என்று சொல்லுறாங்க.. நாமளும் பதிலுக்கு 'ஓம், ஓம்' என்று சொல்லனும். கரெக்டுதானே!!

நான்: அவங்க பத்தி எனக்கு தெரியும்.. அவர்கள் போன்ற ஆட்களிடம் நான் அவ்வளவு பேசுவதில்லை.

அவர்: சரி தம்பி, யாருக்கு ஒட்டு போட போறீங்க??

நான்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் சரியில்லையே!! யாருக்காவது போடுவோம்..


அவர்: ஜோயல் (மதிமுக)க்கு வாய்ப்பு கொடுத்தால் போடுவீங்களா??


நான்: ஆமாம்னே, அவரு பரவாயில்லை. எல்லா பிரச்சினைக்கும் முன்வந்து போராடுறார்.. அவருக்கு போடலாம்..

அவர்: தம்பி ஒரு மாற்றத்தை விரும்புறீங்க போல,ரைட்டு, நடக்கட்டும்..
இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா தம்பி?  அந்த மூணு வேட்பாளருமே கையில பைபிளோடு அலைபவர்கள், தீவிர கிறிஸ்டியன்ஸ்..

நான்: (எங்க போனாலும் எப்படிய்யா கரெக்டா மதத்துல வந்து நிக்குறீங்க என்று எண்ணிக் கொண்டேன்) ஓ!! அப்படியா!!

விவாதம் சற்றுநேரம் தொடர்ந்தது.. வண்டியும் கிளம்பியது..
குடும்பத்தினருடன் "ஓம், ஓம்" என்று சொல்லி அவர் விடைபெற்றார். அதாவது அந்த கன்னியாஸ்திரியுடன் அலெர்ட்டா இருக்க சொல்வதற்காக அந்த "ஓம், ஓம்"சிக்னல் கொடுத்தார்.

"நல்லவேளை, சாதியை கேட்காமல் விட்டார்" என்கிற மகிழ்ச்சி  இருந்தது, "ஒருவேளை கிராமத்து பெயரை வைத்து சாதியை கணித்துக் கொண்டாரோ!! என்கிற ஐயமும் எனக்குள் எழுந்தது.

"தன் சாதியே உயர்ந்தது, தன் மதமே உயர்ந்தது, மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கணும்" என்கிற மோசமான மனநிலை இன்னும் நம் மக்களுக்குள் அப்படியே உள்ளது. :(

எம் முன்னோர்களை அடிமைப்படுத்தி, மார்பில் சீலை அணிய விடாமல் தடுத்தது இந்து மதத் திமிர்.
 கோவிலுக்குள் சூத்திரன் நுழைந்தால் தீட்டு என்று சொல்லி இன்றும் எம்மை அடிமைப்படுத்தும் மதம்  இந்து மதம்.
தமிழர்கள் கட்டிய கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழையும், தமிழரையும் அனுமதிக்காத மதம்  இந்து மதம்.

 இந்தக் கதையெல்லாம் அந்த நபருக்கு தெரிந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.. தெரிந்திருந்தால் தன்னை இந்து சொல்லி பெருமைப் பீத்தியிருக்க மாட்டார்..

எந்த மதமாக இருந்தாலும் நாலு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
சமுதாயத்தில் ஒரு மனிதனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

வியாழன், 16 ஜனவரி, 2014

இந்த காலத்துலயும் ஆரியம், பார்ப்பனியம் என்று பேசுறீங்களே!

தமிழகத்தில் உள்ள 49 ஆயிரம் இந்து ஆலயங்களையும் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் நடத்தும் டிரஸ்ட்டின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளேன். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன்.
- பொறுக்கி சுப்ரமணியசாமி



தமிழர்களின் சொத்துக்களை அவாள்  பெயரில் மாற்றி எழுதி ஆட்டைய போடப் போகிறோம் என்று வெளிப்படையா சொல்லுறான் சு.சாமி.
பார்ப்பனிய அடிமைகள் அனைவரும்  இந்த கருத்தை வழிமொழிவார்கள்.

'தயானந்த சரஸ்வதி சுவாமி யாரு?
அவர் பெயரில் ஏன் ட்ரஸ்ட்?
அதை நிர்வகிப்பது யாரு?' என்று எந்த இந்துவாவது கேள்வி கேட்பானா??
கண்டிப்பா மாட்டான். இவன்தான் அடிமையா இருந்து பழகிட்டானே!!

பார்ப்பனர் அல்லாதவர்களை அந்த 49 ஆயிரம்  ஆலயங்களில் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று எந்த இந்துவாவது சொல்வானா??
[ வீரமணி காரில் கல்லை தூக்கி ஏறிய பார்ப்பான் ஆணையிட்டால் அதை நல்லா செய்வான். அதையும் ஒளிந்து கிடந்தது செய்வான் ]

தான் அடிமையாக்கப் படுகிறோம் என்று கூட  தெரியாமல் இருக்கிறார்களே!!
இந்த லட்சணத்துல 'இந்த காலத்துலயும் ஆரியம், பார்ப்பனியம் என்று பேசுறீங்களே!' என்று நமக்கு அறிவுரை கொடுப்பார்கள் அடிமைகள்.

எவனோ உழைக்க, எவனோ அனுபவிக்கிறான்..

ஒரு பார்ப்பானாவது கோவில் உண்டியலில் காசு போடுறானா?? நிலத்தை எழுதி வைக்குறானா??
நீங்க எதுக்குல அங்கே போயி கொட்டுறீங்க?

அந்த லிஸ்டுல கண்டிப்பா திருச்செந்தூர் முருகன் கோவில் இருக்குமென நம்புகிறேன்.  :(
முருகனுக்கு அரோகரா!!

திங்கள், 13 ஜனவரி, 2014

வீரம் - எல்லையில்லா வன்முறை

வீரம் திரைப்படம் அப்படியிருக்கு, இப்படியிருக்கு என்று ஆளாளுக்கு இணையத்தில் எழுதினார்கள்..
ஆனால் அப்படி எதுவுமே இல்லை.. ஏமாற்றமே மிஞ்சியது.



அஜித்:
வெள்ளையும் சொள்ளையுமா பக்கா கிராமத்துக்காரராக வரார்.
ஆனால் வசன உச்சரிப்புகள் கிராமத்துக்காரர் போல இல்லை.
முதல்முறையாக படம் முழுக்க கிராமத்துக் கதாபாத்திரத்தில் வருகிறார்.
மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
வசனங்கள் ஒவ்வொன்றும்  அனல் பறக்கிறது.
சின்ன உதாரணம்: "சோறு போட்டவங்க எல்லாம் அம்மா, சொல்லிக் கொடுத்தவன் எல்லாம் அப்பா". 
ஆனால் தமன்னாவுடன் ரொமான்ஸ் பாடல் காட்சிகளில் மனுசனை பார்க்க முடியல.. வயது முதிர்ச்சி தெரிகிறது.
சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை இனி வரும் படங்களில் தவிர்த்து விடலாம்.
சண்டைக் காட்சிகளில் நாயடி, பேயடி அடிக்கிறார். அதிக ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
அந்த தொடர்வண்டி காட்சியில் நான் பயந்து போய்விட்டேன். (இந்த உச்சகட்ட ரிஸ்க் தவிர்க்கப்பட வேண்டும்)

தம்பிகள்:
தம்பிகள் நால்வரும் தம்பிகளாகவே வாழ்கிறார்கள்.
சந்தானத்துடன் சேர்ந்து அவ்வப்போது அடிக்கும் லூட்டிகளை ரசிக்கலாம்.
சென்டிமென்ட் காட்சிகளில் நல்லா நடித்திருக்கிறார்கள்.

தமன்னா:
படம் முழுக்க குடும்ப குத்துவிளக்காக வருகிறார்.
ஆனால் பாடல் காட்சிகளில் ஆடைக்கு தட்டுப்பாடு.

இயக்குனர் சிவா :
'நீ தேவன்னா நான் தேவன். நீ நாடார்னா நான் நாடார்...' என்று சாதி சமத்துவம் பேச முயற்சித்திருக்கிறார்.
அவருடைய பார்வையில் தயாரிப்பாளர் ரெட்டியாக தெரிந்திருக்கிறார் போல..
அதை விட்டுத் தொலையுங்க..
இன்னும் கோடரி தூக்கிட்டு அலையுற வில்லன்கள் எங்கே இருக்கிறார்கள்??
சண்டைக் காட்சிகளில் ஆந்திரா மசாலாவை அதிகமாக சேர்த்திருக்கிறார்.
பாடல் காட்சிகள் எடுக்கப் போகிறோம் என்று வெளிநாட்டிற்கு சென்று தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்..

சந்தானம்:
டபுள் மீனிங் இல்லாமல் ஒற்றை வரி வசனங்கள். இவர்தான் படத்தின் ப்ளஸ்.

அப்புக்குட்டி:
கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்..
அஜித்தின்  காலில் விழும் காட்சியில்  கண்கலங்க செய்துவிட்டார்.

தம்பி ராமையா:
நேஷனல் விருது பெற்ற திறமையான நடிகர் இந்த மாதிரியான சில்லறை கதாபாத்திரங்களை ஏற்று பெயரைக் கெடுத்துக் கொள்ள கூடாது

இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்:
இவரை தமிழ் சினிமா புறக்கணிப்பது நலம்.

ஒளிப்பதிவாளர் வெற்றி:
காட்சிகளை அருமையாக படம் பிடித்திருக்கிறார்.
இரண்டு ரொமான்ஸ் பாடல்களில் லொகேஷன் அருமையா இருக்கு (ஆனால் அஜித்-தமன்னா ரொமான்ஸை பார்க்க முடியலையே!!)

நடன இயக்குனர் யாருன்னு தெரியல.. அஜித்துக்கு நடனம் வராது..அதுக்காக இப்படியா!!!

கல்லூரிக்கு  தீ வைப்பது, குழந்தை கழுத்தில் அரிவாள் வைப்பது,
சிறைக்குள் இருப்பவன் ரவுடியிசம் செய்வது,
சம்பந்தமே இல்லாமல் காரை வெடிக்க செய்து பறக்க வைப்பது என படம் முழுக்க எல்லையில்லா  வன்முறை.

திரைக்கதை வேகமாக நகர்வதால் இறுதிவரை தியேட்டருக்குள் இருக்க முடிகிறது.

அஜித்துக்கு முற்றிலும் மாறுபட்ட திரைப்படம்.
தமிழ் திரையுலகிற்கு மற்றுமொரு படம்.

திங்கள், 23 செப்டம்பர், 2013

Modi, DONT ENTER into Tamilnadu

Let me introduce myself.
I was a hardcore fan of Modi and BJP few years ago.(I don't know why I had supported Modi).
I thought BJP is the alternative for Congress party which is corrupted and anti-Tamil.
But later I came to know that the agenda of BJP and Congress are same.
Yes. Both are against people.
They are just a servant to corporates and foreign companies.
Though BJP comes to power, there won't be much changes in India's internal and external affairs. (BJP head Rajnath said it)

Why I am against BJP? 

BJP is not a political party. It's a political wing of the communal RSS. RSS, VHP, Shiv Sena and many Hindutva forces want to oppress the minority people. They spreads communalism and violence.  


As we well know that president and prime minister candidate of BJP  are chosen by RSS.
It clearly shows that BJP is controlled by a communal organization.
How can they be secular? How can they be democratic?

Tamilnadu is not the place for Casteism and Communalism. We are Tamils living together. We don't want Hindutva forces inside Tamilnadu.


Its well known that Congress is against Tamils in many cases.What about BJP?
They took dual stands in many issues. There is no BJP in Tamilnadu.
They want to form it again by using Modi mantra. It won't work out.

Modi - a pseudo image:
Its well known Medias give cheap publicity to Modi.
And Modi's supporters spread fake news on the social networks.
All the Hindutva forces supports Modi to form Hindu Rashtira.
Many corporates support Modi for their purpose.
BJP wants to utilize the 'Anti-Congress' wave.

Modi  - Indian Rajapakse

Rajapakse killed Tamils.Modi killed Muslims.



Rajapakse encourages Buddhism to oppress Tamils. Modi and BJP encourages Hinduism to oppress all the minorities.

Buddhists demolished temples, Masjids, churches and all the Tamil identities.
Hindutva forces try to demolish all the minority identities (Tamils, Sikhs, Kashmiris, etc)

Modi plans to take part in BJP meeting to be held in Trichy, Tamilnadu on Sep 26, 2013.
I see many comments  around social networks  against Modi's visit to TN.
Some political groups and social activists are ready to show Black flag to Modi. 

Yesterday(Sep 22, 2013) Makkal Kalai Izhakkiya Kazhagam organized a meeting against Modi.
More than 3000 people took part in that meeting. A huge response from people.
Hats off to all the comrades who  organized that meeting
Some photos from the meeting are below:








Duing Modi's Karnataka Campaign, many protesters shouted slogans saying “Modi go back” and “Karnataka is not Gujarat”.

Now Tamils should say the same.

Modi go back” and “Tamilnadu is not Gujarat”.



Congress and BJP are the two sides of same coin.
Boycott both Congress and BJP