வெள்ளி, 14 டிசம்பர், 2012

மது அரக்கனை ஒழிக்க புறப்பட்ட அய்யா வைகோவும் அதை விமர்சிக்கும் அரக்கர்களும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.

உவரியில் துவங்கிய நடைபயணம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் வழியாகச் சென்று வரும் 25ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. இந்த பயணத்தின்போது வைகோ உள்ளிட்டோர் வழிநெடுகிலும் உள்ள கிராமங்கள், நகரங்களில் மதுவிலக்கு குறித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

ஒரு நாளைக்கு 25 கிமீ தூரம் நடக்கும் வைகோ 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறார். மேலும் மக்களுக்கு பூரண மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்குகிறார்.

இந்நிலையில் வரும் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மதிமுகவினர் அந்தந்த ஊர்களில் மதுவிலக்கு குறித்த பிரச்சார அட்டைகளை ஏந்தி நடைபயணம் செல்கின்றனர்.

மது பழக்கம் இல்லாத இளைஞர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வைகோவுடன் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல இணையதளங்களில் இதுகுறித்து சிலர் மிக மோசமாக விமர்சிக்கின்றனர்.

விமர்சனங்களும் எனது பதில்களும்:

வைகோ அவர்கள் இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தார்?
பதில்: வைகோ எங்கும் செல்லவில்லை. இங்கேயேதான் இருந்து தமிழர் நலனுக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார். அவர் ஆரம்பத்திலிருந்தே மது ஒழிப்பை மேடைகளில் முழங்கி வருகிறார். தாங்கள் மது ஒழிப்புக்காக இதுவரை என்ன செய்தீர்கள்? அல்லது இந்த கேள்வியை கருணாநிதியை நோக்கியோ, ஜெயாவை நோக்கியோ கேட்க வேண்டியதுதானே?? நல்லது செய்யுங்கள். அல்லது நல்லது செய்பவர்களை ஆதரியுங்கள். வெட்டி விமர்சனம் செய்யாதீர்கள்

ஒட்டுக்களை பெறத்தான் இந்த மது ஒழிப்பு போராட்டம்
பதில்: முற்றிலும் பொய். ஒருவேளை ஓட்டுக்காக அவர் இந்த போராட்டத்தை செய்தாலும் அதில் என்ன தவறு? அவர் இலவசத்தை கொடுத்து ஒட்டு கேட்கவில்லையே!! சாதியை சொல்லி ஒட்டு கேட்கவில்லையே!

அவருக்கு வேறு வேலை இல்லை. அதான் இந்த நடைபயணம்
பதில்: இந்த விமர்சனத்தை வைப்பவர்கள் மாபெரும் சுகபோக அடிமைகள். தன் சமூகத்தை பற்றி கவலை இல்லாதவர்கள். திண்ணை அரசியல் பேசுபவர்கள். இவர்களுக்கு ஒரே கேள்வி: தங்கள் மகன்/மகள் மதுக்கடை வாசலில் நின்றால் அதை பொறுத்துக் கொள்வீர்களா?

"மது பழக்கம் உடையவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுங்கள்" என்று முழங்க இங்கு வேறு எந்த தலைவரும் உண்டா?

வைகோ அவர்களின் இந்த போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள். இதை போராட்டம் என்று சொல்வதை விட "மது ஒழிப்பு புரட்சி" என்றுதான் சொல்ல வேண்டும்.

மது ஒழிப்போம். நல்லதொரு தமிழ்ச்சமூகம் அமைப்போம்

வேறு விமர்சனங்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள். நன்றி

8 கருத்துகள்:

  1. Appreciate your Feedback about Annan. VAIKO. Wish you all the best.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பிளக்கை www.tamilmanam.net தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு