வெள்ளி, 28 நவம்பர், 2014

சாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி

திறமைக்கு மதிப்பில்லை.
SC/ST பிரிவினர் குறைந்த் மார்க் எடுத்தாலும் தேர்வாகி விடுகிறார்கள்.
சாதி இட ஒதுக்கீடுதான் சாதியை வளர்க்கிறது.

சாதி இட ஒதுக்கீடு பற்றி பேசும்போது முன்வைக்கப்படும் பொய்யான வாதங்கள் இவைதான்.
வெளிப்படையாக சொல்வதென்றால், நானும் அந்தக் கருத்தைத்தான் கொண்டிருந்தேன்.
ஆனால் அது பொய் என்று பின்னால் அறிந்து கொண்டேன்.

சாதி இட ஒதுக்கீடு என்பது SC/ST பிரிவுக்கு மட்டுமே உள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
BC, MBC, SC என அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது.

தமிழகத் தேர்வாணையத்தில் பல தேர்வுகள் எழுதி அதில் உள்ள கட்-ஆப் மதிப்பெண் பற்றி அறிந்ததால் சொல்கிறேன்.
அங்கு திறமை இருந்தால்தான் எவராக இருந்தாலும் தேர்வாக முடியும்.

உதாரணத்திற்கு குரூப்- 2 தேர்வை எடுத்துக் கொள்வோம்.
முதல்நிலைத் தெருவில் கட்-ஆப் மதிப்பெண்
BC - 152, MBC - 150, SC - 148, ST - 146 என்றுதான் இருக்கும்.

மதிப்பெண் அடிப்படையில்தான் திறமையை கணக்கிட்டால், தேர்வில் 130-க்கு மேல் பெறுகிற அனைவரும் திறமையானவர்களே!
அந்த அளவுக்கு தேர்வு கடினமாக இருக்கும். கணிதம் , இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொது அறிவு, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், இந்திய வரலாறு, தமிழ் வரலாறு, வணிகம் என பாடத் திட்டத்தை புரிந்து கொள்ளவே ஒரு வருடம் ஆகும்(முடிந்தால் கடந்த தேர்வு வினாத்தாளை வாங்கிப் பாருங்கள்)

அப்புறம் மெயின் தேர்வு. அதுக்கு பயந்துதான் நான் தேர்வு எழுதுவதையே நிறுத்திட்டேன்.
அதில் 1000 பெருக்கு 20 பேரை மட்டுமே அடுத்த சுற்றான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்.
அப்படியானால் மெயின் தேர்வு எவ்வளவு கடினமாக இருக்கும் என நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

அப்புறம் நேர்முகத் தேர்வு. அதில் நாலு பேரு  ரவுண்டு கட்டி  கேள்விகளைத் தொடுப்பார்கள்.

அவ்வளவையும் கடந்து வருகிறவன் எப்படி திறமை இல்லாதவனாக இருப்பான்?
தமிழகத் தேர்வாணையம் மட்டுமல்ல, மத்திய தேர்வாணையத்திலும் இதுதான் தேர்வுமுறை.

அனைவரும் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.
உங்க ஊரில் சாதி பார்த்துதானே சுடுகாடு கூட இருக்குது.
உங்க ஊரில் மட்டுமல்ல, எல்லா ஊரிலும் அப்படிதான் இருக்குது.
அதை முதலில் ஒழித்து ஒரு முன்னுதாரணத்தைக் காட்டினால் அடுத்த நிமிடமே 'சாதி இட ஒதுக்கீடு ஒழிப்பை' நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

குரூப்-2 தெருவில் பணியாணை பெற்ற, முதுநிலை பட்டத்தில் தங்க மெடல் வாங்கிய ஒருவரை போனவாரம் திண்டுக்கல்லில் சாதிவெறியர்கள் கொன்று கிணற்றில் வீசி விட்டார்கள். வேறுசாதிப் பெண்ணைக் காதலித்ததுதான் காரணம்.
'திறமையானவரை எதுக்குடா கொன்றீங்க?' என்று பலரும் கொதித்து எழுந்திருக்க வேண்டுமே!
இல்லையே! சாதி குறுக்கே நிற்குதே!
பாதி பேருக்கு இந்த செய்தியே தெரியாது. http://news.vikatan.com/article.php?module=news&aid=34947

இந்த லட்சணத்துல சாதி இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம்!

சாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி சாதியை ஒழிப்பதுதான்.


செவ்வாய், 25 நவம்பர், 2014

பிரபாகரன்60 - தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள்

தமிழீழ தேசியத் தலைவருக்கு வயது 60.


தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள்:

* "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."

* "சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை."

* "சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை."

* "போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை."

* “இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.”

* “நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள்.”

* ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்."

* "மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது

* "மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.”

* “நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம்
பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். ”

* "பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்."

* "ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுத பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்."


#Prabhakaran60

திங்கள், 24 நவம்பர், 2014

பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்

ஜெயலலிதா முதல்வராக வேண்டி கருங்குளம் கோவிலில் சிறப்பு பூஜை.
அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.

news: http://www.tutyonline.net/view/31_80239/20141123184920.html




எனக்கு ஒரு டவுட்டு.
இந்த யாக பூஜை-ல அப்படி என்ன மந்திரம் சொல்லுவாங்க?
இதுக்குன்னு தனியா மந்திரம் இருக்குதா?
இல்லை ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்துள்ள வழக்கமான சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்களா??
அறிந்தவர்கள் தெளிவுப்படுத்தலாம்.

எது எப்படியோ, பார்ப்பான் காட்டுல நல்ல மழை!!

இந்த மந்திரம் மண்ணாங்கட்டியெல்லாம் பொய் என்று நாம் சொன்னால் பார்ப்பானுக்குத்தான் முதலில் கோபம் வரவேண்டும்.
ஆனால் பார்ப்பான் அல்லாதவர்களுக்குத்தான் அதிக கோபம் வரும்.

"பூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும்" என நாம் கண்டிஷன் போட்டால் யாகம் செய்யுற தொழிலை(?) பார்ப்பான் விட்டுவிடுவான். :)

திங்கள், 17 நவம்பர், 2014

ரஜினிகாந்த் - ஒரு நல்ல தகப்பன்

லிங்கா பட ஆடியோ ரிலீசில் ரஜினி பேசியதான் ஒரு பகுதி:
"கோச்சடையான்  மூலமாக கொஞ்சம் பணத்தை இழந்தால்கூட, செளந்தர்யாவிற்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்தது. இனிமேல் வந்து அவங்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இருந்தாலே போதும்."

இதனை தமிழக மக்கள், குறிப்பாக ரஜினி கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகர்கள் நன்கு கவனிக்க வேண்டும்.

தான் சம்பாதித்த பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தன் மகள்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
இதில் எந்த தவறுமில்லை. அனைத்து தகப்பன்களும் சொல்லக் கூடிய ஒன்றே!
100% உண்மையான கருத்து.

ஆனால் தன் படத்தை முதல் நாளில் ஆயிரக் கணக்கில் டிக்கெட் விலை கொடுத்து பார்க்கும் ரசிகனுக்காக ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா?
ரசிகர்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் தியேட்டர் கட்டண கொள்ளைக்கு எதிராக பேசியிருக்க வேண்டுமே!

அதை விட்டுத் தொலையுங்க.
"கட்-அவுட், பேனர், போஸ்டர் என ஏம்ப்பா காசை வீணாக்குகிறீர்கள்?
போயி புள்ளை குட்டிகளைக் கவனியுங்கப்பா" என அறிவுரை சொல்லியிருக்கலாமே!

இதுவரை அறிவுரை சொன்னதில்லை.
இன்னும் சொல்லப் போவதில்லை.
(சொன்னாலும் அடிமைகள் காதில் அது விழப் போவதில்லை.
புகைப் பழக்கத்தை நிறுத்துமாறு ஒருமுறை வேண்டுகோள் விடுத்தார். அது வரவேற்புக்குரியது)

ரஜினிக்கு படம் தயாரிக்கத் துடிப்பவர்கள் ரஜினி என்னும் நடிகரின் திறமைக்காக அல்ல.
ரஜினி என்னும் பிம்பத்திற்க்குப் பின்னால் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
முதல்நாள் டிக்கெட்டிற்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராய் இருக்கும் ரசிகர்களை நம்பித்தான்.
அந்த ரசிகர்களை விரட்டி விட்டால் ஒரு தயாரிப்பாளரும் ரஜினியை வைத்து படம் தாயாரிக்க வர மாட்டார்கள்.

ஆக ரஜினியின் மகள்களுக்காக ரசிகர்களும், சினிமா அடிமைகளும் சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள்.
பல தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள்.

பணத்தை பாதுகாக்க மகளுக்கு அறிவுரை.
பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அரசியல், அது இதுன்னு ஆசை வார்த்தைகள்.

உண்மையில் ரஜினிகாந்த் நல்ல தகப்பன் மற்றும் மகா நடிகன்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

இப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் தடை கேட்பார்கள்..

நவம்பர் 2, 2014 அன்று கேரளாவில் பெருமளவில் இளைஞர்கள் ஒன்றுகூடி Kiss Of LOve என்னும் பெயரில் முத்தப் போராட்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியா முழுக்க பரவலாக பேசப்பட்டு உள்ளது.



அது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.

பேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/kissoflovekochi
 
அதற்கு எதிராக கலாச்சாரக் காவலர்கள் போராட்டம் செய்துள்ளார்கள்.
யார் இந்தக் கலாச்சாரக் காவலர்கள்?
வேறு யாருமில்லை.. மதத்தைக் கட்டி அழும் மத அடிப்படைவாதிகள்தான்.

கலாச்சாரம், கலாச்சாரம் என்று சொல்லுறாங்களே!
அது என்ன?
அது யாருக்கெல்லாம் உரியது?
எந்த விசயத்தில் எல்லாம் உள்ளது?
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக உள்ளதா?
இன்னும் பல கேள்விகள் உள்ளன. கலாச்சாரக் காவலர்கள் பதில் சொல்வதாகத் தெரியவில்லை.

இந்த மண்ணின் கலாச்சாரம் முக்கியம் என்கிறார்கள்.
பாரம்பரியத்தைக் கடைப்படிக்க வேண்டும் என்கிறார்கள்.

அப்படி இங்கு என்ன பாரம்பரியாக இருந்தது?
  • கீழ்சாதிப் பெண்கள் மார்பை மறைக்க தடை செய்தது,
  • கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்புக்குள் தள்ளிவிடுவது,
  • மனைவி மீது சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்க சொல்லி கற்பை நிரூபிக்க சொன்னது,
  • வேறு சாதி பையனை காதலித்த பெண்ணை பஞ்சாயத்து கூடி பாலியல் பலாத்காரம் செய்தது,
இன்னும் இதுபோன்ற அசிங்கங்கள்தான் இந்த மண்ணில் காலம்காலமாக இருந்தது.
அனைத்திற்கும் மேலாக தாழ்ந்த சாதிப் பெண்களின் மார்புக்கு வரி போட்ட கொடுமையும் இதே சமூகத்தில் நிகழ்ந்து உள்ளது.

இன்னும் இந்த மண்ணில் குடும்ப கவுரவத்தை காக்கிறோம், சாதிக்  கவுரவத்தை காக்கிறோம் என்னும் பெயரில் கொலைகள் நடக்கிறதே!!

இந்த கலாச்சாரத்திற்கு ‪#‎KissOfLove‬ கலாச்சாரம் எவ்வளவோ பரவாயில்லை.

முத்தப்புரட்சி என்பது திட்டமிட்டு நடத்த்தப்பட்ட ஒன்று அல்ல. அது புரட்சியாக நடத்தக்கூடிய ஒரு செயலும் அல்ல.
ஆனால் கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற வேகத்தில் செய்திருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க பேசப்படும் செய்தியாக மாற்றியதே பெரும் வெற்றி.

மாட்டு இறைச்சிக்கு எதிராக, ஜீன்ஸ் ஆடைக்கு எதிராக இந்த  கலாச்சாரக் காவலர்களின் கூச்சல் சற்று அதிகமா கேட்கிறது.

ஆடை, உணவு என தனிநபர் விசயங்களில் மூக்கை நுழைக்கும் சாதிய, மதவாத அடிப்படைவாதிகளும், கலாச்சாரக் காவலர்களும் கண்டிக்கப்பட வேண்டும்.

இப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் இவர்கள் தடை கேட்பார்கள்..

திங்கள், 3 நவம்பர், 2014

தமிழுக்கு இந்துத்துவ முலாம் பூசும் செயல்

நிகழ்வு 1: (ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஊறிய) பாஜக எம்பி தருண் விஜய் தமிழைப் பாராட்டியதால் அவருக்கு சென்னையில் பாராட்டு விழா.
(சமஸ்கிருத, இந்தி திணிப்பு நடக்கும்போது/நடந்தபோது இவர் காணாமல் போய்விடுவார்)

இது இந்துத்துவத்திற்கு தமிழ் முலாம் பூசும் செயல்.


தமிழை இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழியாக்க அவர் இருக்கும் பாஜகவோ, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ தயாரா? என்று தருண் விஜயிடம் கேட்டு சொல்லுங்கப்பா...


நிகழ்வு 2: ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ் முடிவு.

இது தமிழுக்கு இந்துத்துவ முலாம் பூசும் செயல்.

இரண்டிலும் அரசியல் லாபம் அடைவதும் ஆர்.எஸ்.எஸ்.
இரண்டாலும் பாதிக்கப்படப் போவது தமிழினம்.




கொல்லைப்புற வாசல் வழியாக கூட இந்துத்துவ இயக்கங்களால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
அதனால் தமிழைக்கொண்டு தமிழர்களை ஆரியமயப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

தமிழா! விழித்துக் கொள்!

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...", "யாதும் ஊரே யாவரும் கேளிர்.." என்பது தமிழனின் பண்பட்ட நாகரீகம்.

பிறப்பால் பிராமணன், சூத்திரன் என மனிதர்களைக் கூறு போடுவதும், பிற மதத்தினரை எதிரிகளாக சித்தரிக்கும் பிற்போக்கு சிந்தனையே இந்துத்துவம்.

எது சிறந்தது என்று உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.