திங்கள், 26 அக்டோபர், 2015

செயல்படாத பிரதமரும், செய்யப்படும் விளம்பரமும்


வெளிநாடுகளில் நிலநடுக்கம் வந்தால், வெள்ளப் பெருக்கு வந்தால், தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றால் அடுத்த சில நிமிடங்களில் இந்தியப் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு போடுகிறார். கிரிக்கெட் போட்டி, பக்கத்துக்கு நாட்டு தேர்தல் என அனைத்துக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போடுகிறார். 
 
அதன் மூலம் தன்னை ஒரு செயல்படும் பிரதமராகக்(Active PM) காட்டிக் கொள்கிறார். மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் இதனைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். நாட்டைக் காக்க ரட்சகர் வந்துவிட்டார் என நம்புகிறார்கள்.

ஆனால் ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டால், உபியில் மாட்டுக்கறி சாப்பிட்டவர் அடித்துக் கொல்லப்பட்டால்,
அரியானாவில் தலித் குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்டால், நாடு முழுக்க மதவாத பாசிஸ்டுகள் மதவெறிப் பேச்சுக்களை பேசும்போதிலும் பிரதமர் மோடி டிவிட்டரில் கூட வாயைத் திறப்பதில்லை.
மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் "இதுக்கெல்லாம் பிரதமர் பேச வேண்டுமா?' என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இதன்மூலம் ஒரு போலியான தேசபக்தி வளர்த்தெடுக்கப்படுகிறது. அதில் கூட வருத்தம் இல்லை.
ஆனால் மனிதம் சாகடிக்கப்படுகிறது.
"எவன் எங்கு செத்தால் நமக்கு என்ன? நாம 'டிஜிட்டல் இந்தியா' படத்தை ப்ரோபைல் படமா வச்சிட்டு அடுத்த வேலையைப் பார்த்துட்டு போவோம்" என்கிற மோசமான மனநிலை உருவாக்கப்படுகிறது. அதில்தான் வருத்தம்.

புதன், 14 அக்டோபர், 2015

ரவீந்திரநாத் தாகூரும் நம்மூரு எழுத்தாளர்களும்

1915-இல் ரவீந்திரநாத் தாகூருக்கு பிரிட்டன் அரசால் "நைட்வுட்"(Knightwood) என்னும் பட்டம்/விருது வழக்கப்படுகிறது.

அதே பிரிட்டன் ஏகாதிபத்தியம் 1919-இல் ஜாலியன்வாலாபாக்கில் இந்தியர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது.
உடனே தனக்கு அளிக்கப்பட்ட விருதை பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் மூஞ்சியில் வீசி எறிந்தார் ரவீந்திரநாத் தாகூர்.

"விருதை திரும்ப வழங்குவது என்பது அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம்" என்பது இலக்கியத்துறையில் நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூருக்கு தெரிந்திருந்தது.

ஆனால் இங்கே உள்ள சில லோக்கல் எழுத்தாளர்களுக்குப் புரியாமல் போனது எந்த வியப்புமில்லை. நியாயத்தின் பக்கம் நின்றுப் பேசாமல் பொதுப்புத்தியைப் குளிர வைக்கப் பேசும் இவர்களிடம் வேறு என்னத்த எதிர்ப்பார்க்க முடியும்??

இந்தப் போராட்ட வடிவத்தைக் கேலி செய்யும் ஜெயமோகன்களும், அபிலாஷ்களும் வேறு போராட்ட வடிவங்களை சொல்லித் தந்து இந்த சமூகத்திற்கு வழிகாட்டுவார்களாக!!!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சாதி எதிர்ப்பு என்பதை ஒரு கட்சி எதிர்ப்பாக மட்டும் மாற்றி பேசும் மலிவான அரசியல் வேண்டாம்

சாதி, மத விவாகரங்களில் கட்டுரை எழுதுகையில் அதிகக் கவனம் தேவை.
கீற்றில் வெளியான இந்தக் கட்டுரையின் ஒரு கருத்து சற்று உறுத்தலாக இருந்தது.
http://keetru.com/…/2014-03-08-12…/29007-2015-08-19-14-17-34


அன்புமணி கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.கவினர் தலித்துகளுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டு, தலித் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வந்ததாக கட்டுரை ஆசிரியர் கூறியிருக்கிறார்.
ஆனால் தாக்குதலை முன்னின்று நடத்தியதாக திராவிடக் கட்சியினர் பெயர்களை அடுக்கியுள்ளார். எது உண்மை???
இவர் குறிப்பட்ட திராவிடக் கட்சிக்காரார்கள் எல்லாம் பாமகவில் ஐக்கியமாகிவிட்டார்களா?
இல்லையேல் வன்னியர் என்றாலே பாமகவை சார்ந்தவர்தான் என்று முன்முடிவுக்கு வந்துவிட்டாரா??

சாதி அரசியல் செய்யும் ராமதாஸ் வன்னிய மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்..
ஆனால் இம்மாதிரியான பதிவுகள் வன்னியர்களை ராமதாஸ் பாக்கம் கொண்டுபோய் நிறுத்தும். ராமதாசின் வியூகமும்/விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும்.

சாதி எதிர்ப்பு என்பதை ஒரு கட்சி எதிர்ப்பாக மட்டும் மாற்றி பேசும் மலிவான அரசியல் வேண்டாம்.
சாதிவெறி என்பது இங்கே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது

வெள்ளி, 1 மே, 2015

திராவிடப் போலிகளை அம்பலப்படுத்துவோம்

திராவிடம் பேசும் சில பிழைப்புவாதிகளின் (அனைவரும் அல்ல) மடைமாற்றும் அரசியல், பிழைப்புவாத அரசியல் பற்றி  நிறையபேசுவோம்..வாருங்கள்..

* இருபது தமிழர்கள் படுகொலைக்கு திக, திமுக  சார்பில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை.. கிருஷ்ணகிரியில் தலித் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட விசயத்தை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இந்த இரு விசய பின்னணியை ஆராய்ந்தால் திக யாருக்கான அமைப்பு என்று தெரிந்து விடும்.
இந்த இரு விசயங்களில் பார்ப்பான் ஈடுபட்டிருந்தால் திக போராட வந்திருக்கும்.. அதிமுக ஈடுபட்டிருந்தால் திமுக போராட வந்திருக்கும்.. இதுதான் திராவிட அரசியல்..

* விஜயகாந்துக்கு அறிவுரை கொடுப்பது போல திமுக-விஜயகாந்த் கூட்டணிக்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார் வீரமணி. மோடியை பெரியாருடன் ஒப்பிட்டபோது விஜயகாந்துக்கு எதிராக திராவிட அமைப்புகள் எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை.. அதுவே ஒரு வடநாட்டான் பேசியிருந்தால் இங்கே கூச்சல் போட்டிருப்பார்கள் . ஆனால் பொறுக்கித் தின்ன இப்போது விஜயகாந்தும் தேவைப் படுகிறாரே!! அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க..

* வே.மதிமாறன் என்னும் நபருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.. மேடையில் பேரா.அன்பழகனை வைத்துக் கொண்டு 'அடுத்து திமுக ஆட்சிதான்' என்று பேசுகிறார்.. இப்படி பொறுக்கித் தின்பதற்கு எதுக்கு விருது??
பாரதி, வள்ளுவன் என அனைவரிடம் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டினால் முற்போக்கு.. அதுவே பெரியாரின் பிழைகளை சுட்டிக் காட்டினால் உடனே பார்ப்பனிய அடிமை, சாதிவெறியன் என பட்டம் கொடுத்துவிடுவார்கள் பெரியார் திடல் பக்தர்கள்.

* தருமபுரி சேரி சூறையாடலில் ஈடுபட்டவர்களில் அதிகம் பேர் திமுகவினர். மதிமுக, தேமுதிக கட்சியினரும் உண்டு. ஆனால் அந்தக் கட்சியினர் எந்த நடவடிக்கையாவது எடுத்தார்களா?? இல்லவே இல்லை.. மிக நுட்பமாக வன்னியர்-பறையர் பிரச்சினையாக மாற்றினர். (ராமதாசின் செயல்களும் அப்படிதான் இருந்தது. அவரும் அதைதான் விரும்பியிருப்பார்..).

* ராமதாசும் அவர் மகனும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு தமிழ்த்தேசிய அடையாளம் கொடுத்து தமிழ்த்தேசியம் என்றாலே சாதிதான் என்று கேலி செய்கிறார்கள்.

* சாதி நிகழ்வுகளில் பங்கேற்கும் திராவிடக் கட்சிகள் பற்றி திராவிடம் பேசுகிறவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?? உடனே ஒரு வேதவாக்கு சொல்லுவார்கள் "ஓட்டு அரசியல் என்றாலே சந்தர்ப்பவாதம்" என்று. அது சரிப்பா, அந்த சந்தர்ப்பவாதிகளை பற்றிப் பேசாமல் எப்படி அய்யா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள்??  "அனைத்துக் கட்சிப் பெயரிலும் திராவிடம் இருக்கிறது.அதனால்திராவிடத்தைவீழ்த்தமுடியாது"என்கிறார் கி.வீரமணி.அப்ப மட்டும் திராவிடக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொள்கிறீர்கள்.. அவர்களின் சாதி சார்பை ஏனய்யா மூடி மறைக்கிறீர்கள்??

* திராவிடக் கட்சிக்காரர்கள்தான் தமிழகத்தில் பாதி இருக்கிறார்கள். இவர்கள் சாதி ஒழிப்பை மேற்கொண்டிருந்தால் சாதி இந்நேரம் ஒழிந்திருக்குமே!! ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஆனால் சாதி ஒழிப்பு போராளிகள் போல வேஷம் போடுவார்கள். (இந்த வேஷம் போடுற வித்தை தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியவில்லை.. )

* திராவிடக் கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அம்பேத்கர் ஏன் இன்னும் கூண்டுக்குள் இருக்கிறார்?? இதையெல்லாம் பற்றி பேசாமல் சாதி ஒழிப்பு நாடகம் போடுகிறார்கள்.

* அண்மையில் திக-திவிக-தபெதிக உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலையை கருணாநிதி ஆலோசனையின் பேரில் சுபவீ மேற்கொண்டிருக்கிறார்.. ஆனால் கோவை ராமகிருஷ்ணன் (தபெதிக) நழுவிக் கொண்டார்.. அவருக்கு வாழ்த்துகள்..

* முருகனை முப்பாட்டன் என்றுகூறி  சீமான் வேல் ஏந்தினால் சுபவீ பக்கம் பக்கமாக கட்டுரை  எழுதுகிறார். கேலி செய்கிறார்.ஆனால் பார்ப்பான் ராமானுஜர் பற்றி  தொடர் எழுதப் போகிறாராம் கலைஞர்.. திராவிடம் பேசுகிறவர்கள் அனைவரும் நவத்துவாரங்களையும் மூடிக் கொண்டு இருப்பதை கவனித்தீர்களா!! இவ்வளவுதான்யா பார்ப்பனிய எதிர்ப்பு..

* "இந்திய தேசிய கீதத்தில் திராவிடம் என்னும் சொல் இருக்கிறது. அதனால் திராவிடத்தை வீழ்த்த முடியாது" என்கிறார் கலைஞர்.

" தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் ஏன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்?" என்கிறார் சுபவீ.. 
பார்ப்பனிய இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போட திராணி இல்லாத திக கும்பல் தமிழ்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது.. அப்புறம் எதுக்குப்பா தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறீர்கள்? வடநாட்டு பக்கம் போயிட வேண்டியதுதானே!! ஆக திராவிடத்தை வளர்க்கிறோம் என்னும் பெயரில் இந்தியத்தைதான் வளர்க்கிறார்கள்..


* "ஓட்டு அரசியலில் அடித்துக் கொள்ளுங்கள். ஆனால் திராவிடத்தைக் காத்திட ஒன்று சேருங்கள்" என அதிமுக, திமுகவுக்கு அழைப்பு விடுக்கிறார் அய்யா வைகோ.
திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவின் கொள்கை.
அதிமுக எதிர்ப்பு என்பது திமுகவின் கொள்கை. நடுவுல எங்கிருந்து வந்தது திராவிடம்? அய்யா வைகோதான் இதுக்கு பதில் சொல்லணும்.

இதையெல்லாம் அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியவாதிகள் சாதிய அபிமானிகளாக இருப்பதால் திராவிடப்  பிழைப்புவாதிகளை  தீவிரமாக எதிர்க்க முடியவில்லை.. சம்பந்தமே இல்லாமல் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்..

பின் குறிப்பு: கட்டுரை படித்துவிட்டு எனக்கும் பார்ப்பனிய அடிமை, சாதி வெறியன் பட்டம் கொடுத்தால் மகிழ்ச்சியே!!

பெரியார் ஆதரித்தது தமிழ்த்தேசியம், வீரமணி ஆதரிப்பது இந்திய தேசியம்.

பெரியார் தன் இயக்க நாளிதழுக்கு "விடுதலை" என்று பெயர் வைத்தார். அது தமிழ்த்தேசிய விடுதலையைக் கருத்தில் கொண்டுதான்.. அத்தோடு "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வாசகத்தையும் இணைத்திருந்தார்..

அதே போல குடியரசு என்கிற பெயரும் "தமிழ்தேசியக் குடியரசைக்" கருத்தில் கொண்டுதான்..

ஆனால் "தமிழ்நாடு தமிழருக்கே" என்னும் முழக்கத்தை நாளிதழிலிருந்து நீக்கிவிட்டு , பொது ஊடகத்தில் "தமிழ்த்தேசிய வியாதிகள்" என்று சொல்லும் அளவுக்கு கி.வீரமணிக்கு துணிச்சல் எவ்வாறு வந்தது?

இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடாமல், தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடும் வீரமணி கும்பலுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?? என்ன (&^^&$&^க்கு 'தமிழர் தலைவர்' என்கிற அடைமொழி'???

இந்தியாவுக்கு‬ முட்டு கொடுத்து திராவிடம் பேசுகிறவர் எவராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கலாம்.. ஏனெனில் அது கண்டிப்பாக பிழைப்புவாதமாகத்தான் இருக்கும்..

பார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?? #டவுட்டு

"பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான்" என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா!!
"பார்ப்பான் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான்" என்று எழுத வேண்டியதுதானே!!

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க??

அடுத்து, தமிழன் என்றாலே பார்ப்பானும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்றுதான் சொல்லுறீங்க..
அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?
சாதிய தலைவர் அல்லது பார்ப்பனிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியதுதானே!!

‪#‎டவுட்டு‬

வியாழன், 5 மார்ச், 2015

திராவிடத்தின் பதட்டம்

திராவிட இயக்கத்தை வீழ்த்திவிட முடியாது என சில மாதங்களாக வைகோவும் கருணாநிதியும் மாறிமாறி அறிக்கை விடுவது காமெடியாக இருக்கிறது. அவர்களின் பீதியும் தெரிகிறது.

சாதி ஒழிப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று சாதி ஒழிப்பு பேசினார்கள்?

மதவாத எதிர்ப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று மதவாத எதிர்ப்பு பேசினார்கள்?
இப்படி கேட்டுக்கொண்டே போகலாம்.

இவர்கள் சொல்வதைப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத் தடை விதித்த ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழகத்தின் ஆகப்பெரும் திராவிடத் தலைவர்.


கருணாதியின் திராவிடத்தை 'முதலமைச்சு திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
விஜயகாந்தின் திராவிடத்தை 'போலித் திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
கருணாநிதியையும் விஜயகாந்தையும் திராவிட இயக்க தலைவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.


(பெரியார் திடலில் விஜயகாந்திற்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறதே! உண்மையா?)

ஆனால் போலித் தமிழ்த்தேசியம், முதலமைச்சு தமிழ்த்தேசியம் போன்ற வார்த்தைகள் இயல்பாக உதிக்கிறார்கள் திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள்.
தெருவுக்கு நாலு பெரு இருக்கிறபோதே இந்த பதட்டம் என்றால், நாளை தெரு முழுக்க தமிழ்த்தேசியவாதிகள் நிறைந்துவிட்டால்????