வியாழன், 24 டிசம்பர், 2015

பெரியாரோடு முற்றிலும் முரண்படும் இடம்

#டிசம்பர்25‬ 
 ‪#‎கீழவெண்மணிப்‬ படுகொலை

சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் அயோக்கியனால் தஞ்சை மண்ணில் 44 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.

பெரியாரோடு நான் முற்றிலும் முரண்படும் இடமும் இதுதான். இறுதிவரையில் நாயுடுவை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் கம்யூனிஸ்டுகளை வசைபாடுவதில் குறியாய் இருந்திருக்கிறார் பெரியார்.

திராவிட அமைப்புகள் ஏன் இந்தப் படுகொலையை அனுசரிப்பதில்லை? என்கிற காரணத்தை யாரேனும் சொல்லுங்க.. தஞ்சை மண்ணில் உதித்த செங்கொடி புரட்சியை ஒடுக்கியதில் திமுக கண்ணீர்த்துளிகளுக்கு பெரும்பங்கு உண்டு..

பாட புத்தகத்தில் வரலாறாகப் பதியப்பட்டு சாதி மற்றும் முதலாளித்துவத்தின் ஆபத்து குறித்து விளக்கப்படவேண்டிய நிகழ்வு கீழ்வெண்மணிப் படுகொலை. அப்படியான ஒரு நிகழ்வை தமிழர்களுக்கு தெரியாத வண்ணம் செய்துவிட்டார்கள் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும்.

‎சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் கூட்டாளிகள் திமுகவும், மூப்பனாரும்...

உலகமே திரும்பிப் பார்த்த நிகழ்வு 'கீழவெண்மணிப் படுகொலை'. ஆனால் உள்ளூரு தமிழனுக்கு  தெரியாமல் மறக்கடிக்கப்பட்டது.. தமிழன் வரலாறு எவ்வளவு மோசமாக இருக்குது பாருங்க..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பார்ப்பான் அதை செய்தான், இதை செய்தான் என பார்ப்பானுக்கு  எதிராக அட்டைக்கத்தி வீசுபவர்கள் நாயுடுவின் சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி பற்றி எங்கேயும் பேசுவதில்லை..
தமிழா! நீ பேசு!! செவிட்டுக் காதுகள் கிழியும் வரை பேசு!

பின்குறிப்பு: நாயுடுவை போட்டுத் தள்ளியதில் தி.க தோழர்களும் உண்டு.

#உண்மை உறங்காது.

சனி, 12 டிசம்பர், 2015

குப்பை அள்ளும் தொழிலாளி எவ்விதத்தில் குறைந்து போனார்?

வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு கிரிக்கெட் அணி  வருகை புரியும்போது விமான நிலையத்திலும், ஓட்டலிலும் மாலை மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்..

அதே போல வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் பணிக்காக சென்றால் உண்ணும் உணவு, பேருந்து வசதி, தங்குமிடம் என அனைத்தையும் மிகுந்து தரத்துடன் அளிப்பார்கள். சிறப்பு ஊதியமும் கொடுப்பார்கள்.


சென்னை  வெள்ளத்தின் விளைவாக குவிந்த குப்பைகளை அள்ள  வெளி மாவட்டங்களிலிருந்து  துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்திருக்கிறது அரசு. அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் அழைத்து வந்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன். எங்கள் பகுதியில் சில பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 ஆனால் அவர்களுக்கான தங்குமிடம், உணவு, குப்பை அள்ளும் கருவிகள், பாதுகாப்பு உறைகள் எவையும் முறையாக வழங்கப்படவில்லை. அவர்களுக்கான சிறப்பு ஊதியம் எவ்வளவு வழங்கப்பட்டது என தெரியவில்லை. மிகவும் குறைவாகத்தான் வழங்கியிருப்பார்கள்.
அந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களா? என்பதும் தெரியவில்லை.

ஒரு கிரிக்கெட் வீரரை விடவும், ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரை விடவும் எந்த விதத்தில் குறைந்து போனார் துப்புரவு தொழிலாளி?

குப்பை குவிகிறது என அரசைக் குறை சொல்லும் நாம் இந்த தொழிலாளர்கள் பற்றி சிந்திப்பதுண்டா? மக்கள் அவரவர் தெருவை சுத்தம் செய்து கொள்வோம் என்கிற மனப்பக்குவமும் நமக்கு வருவதில்லை. சில தன்னார்வ குழுக்களும், அரசியல் கட்சிகளும் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது பாராட்டத்தக்கது.

இந்த ஏற்றத்தாழ்வுக்கான காரணம் என்ன? இதனைப் போக்க என்ன வழி? என்பவை பற்றி அறியாமல் ஓட்டு அரசியலின் வழியாக தீர்வு கண்டுவிடலாம் என்கிற நினைப்பில்  இந்த சமுதாயம் ஓட்டு  அரசியல் நோக்கி நகர்கிறது.

சனி, 5 டிசம்பர், 2015

பாபர் மசூதியைக் கட்டியெழுப்ப இந்துக்களே முன்வாருங்கள்...

#டிசம்பர்6 #பாபர்மசூதி இடிப்பு நாள் தொடர்பாக பேஸ்புக்கில் பதிந்த பதிவு:

மசூதியை இடித்து மனிதத்தை நொறுக்கியவர்கள் ராமனைத் தூக்கிக்கொண்டு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆயத்தமாகிறார்கள்..
மசூதியை பறிகொடுத்தவர்கள், அதனைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லாமல் வெள்ள நிவாரணப் பணியில் இரவும் பகலுமாக களத்தில் உள்ளார்கள்.





மீண்டும் கட்டியெழுப்பப்படும் பாபர் மசூதியில் முதல் செங்கல்லும், இறுதி செங்கல்லும் இந்துக்களின் பங்களிப்பாக, அதுவும் தமிழ் மண்ணிலிருந்து இருக்க வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு உண்டு..

 *****************

"பாபர் மசூதிக்கு முன் அங்க என்ன இருந்தது? ராமர் கோவில்லா? ஆம் எனில் அதை இடித்து யார்? நீ அவர்களை பற்றி பேசாசது ஏன்?" என்று ஒரு நண்பர் கேள்வி எழுப்பிருந்தார்.. 
அவருக்கு எழுதிய சிறு பதில் பின்வருமாறு:

It's a big story.

அங்கே மொகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்ட மசூதி மட்டுமே இருந்தது... இந்தியா முழுக்க அவர்கள் கட்டிய மசூதிகளும் கோட்டைகளும் இன்றும் பல உள்ளன.. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற புராணக் கதையோடு இவர்கள் தொடர்புபடுத்திக்கொண்டு அங்கே ராமர் கோவில் இருந்ததாக சொல்லி ஒரு சிலையைக் கொண்டு உள்ளே வைத்து விட்டார்கள்... இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்து ஆட்களைத் திரட்டி டிசம்பர் ஆறாம் நாள் இடித்துவிட்டார்கள்.. இந்து-முஸ்லிம் ஒற்றுமையே இருக்க கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் இடிக்கப்பட்டது.. இதில் பங்கேற்ற சிலர் மனம் திருந்தி ஒப்புதல் வாக்குமூலம் கூட அளித்துள்ளார்கள்..

பாபர் வெளிநாட்டுக்காரர், பாபர் மசூதி நாட்டின் அவமானம் என்கிற பிரச்சாரமும் செய்கிறார்கள்.. செங்கோட்டை, தாஜ்மஹால், செயின்ட் ஜார்ஜ் கோட்டை என பலவும் மொகலாய, ஆங்கிலேய மன்னர்களால் கட்டப்பட்டவையே! அதில் ஏதேனும் ஒன்றில் கை வைத்திருக்கலாமே!! அவ்வாறு செய்ய வில்லை. மசூதியை இடித்தால் மட்டுமே ஒரு பதட்டத்தை தொடர்ந்து நீடிக்கச் செய்ய முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் நன்கு அறிந்திருந்தார்கள்..

அந்த இடத்தில மசூதி கட்டப்படுவதன் மூலம் நீதி வழங்கப்படும். இதனால் இந்து-முஸ்லிம் ஒற்றுமை கூடுமே தவிர எந்த வகையிலும் இந்துக்களுக்கு எந்த தீங்கும், நட்டமும் இல்லை. சவூதி அரேபியாவில் இந்துக் கோவில் கட்ட அந்நாட்டு அரசு நிலம் ஒதுக்குகிறது.. மதவெறி இல்லாத இந்துக்கள் எந்த வகையிலும் பாபர் மசூதிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் தொடர்ச்சியான பொய் பிரச்சாரத்தால் பாபர் மசூதி பற்றி இந்துக்கள் அவ்வளவு பேசுவதில்லை...

அங்கே ராமர் கோவிலுக்குப் பக்கத்தில் பெரிய மாரியம்மன் கோவில் எழுப்ப வேண்டும் என நாம, அதாவது இந்து மதத்தை தழுவிய தமிழர்கள் கோரிக்கை வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... அதுதான் இந்துத்வ அரசியல். அவர்களைப் பொறுத்த வரையில் ராமனை ஒரு தேசிய ஹீரோவாக்கி 'இந்து ராஷ்டிரம்' என்னும் அரசியலை முன்னெடுப்பதே குறிக்கோள்.. இதில் ஆன்மீகம், பக்தி எதுவும் இல்லை.

இந்து பக்கமோ, முஸ்லிம் பக்கமோ இன்று யோசித்தால் இந்தப் பிரச்சினைக்கு எந்த தீர்வும் கிடைக்காது. குழப்பம்தான் வரும். நீதியின் பக்கம் நிற்க வேண்டும்.


சனி, 21 நவம்பர், 2015

பேஸ்புக்கின் பிரச்சாரம் தீவிரவாதத்திற்கு எதிராகவா? அரசப் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவா?

சில நண்பர்கள் மூவண்ணத்தில் வாட்டர்மார்க் அடித்த புகைப்படத்தை ப்ரோபைல் படமாக வைத்திருக்கிறார்கள். சில நாட்கள் கழித்து பேஸ்புக் வந்ததால் என்ன காரணம் என்று தெரியவில்லை. டிஜிட்டல் இந்தியா மாதிரி வேறு ஏதேனும் திட்டம் வந்து விட்டதோ என்று எண்ணினேன்.
அப்புறம்தான் தெரிந்தது அது பிரான்ஸ் நாட்டின் கொடியின் வண்ணம் என்று.





இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன.

* இனி எங்கெல்லாம் குண்டு வெடிக்குதோ, அந்தந்த நாடுகளின் கொடியை ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா? அதன் மூலம் தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியுமா?

* தீவிரவாதத்திற்கு மதம், இனம், நாடு என எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் தீவிரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் ஒரு நாட்டின் தேசிய அடையாளத்தை ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

* தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்யாமல் போலி தேசபக்தியையும், அரச பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும் செயலுக்கு பேஸ்புக் உடந்தை போகிறதா?.

* பிரான்ஸ் அரசின் பயங்கரவாதத்தால் சிரியாவில் கொல்லப்படும் அப்பாவிகளுக்காக நான் சிரியாவின் கொடியை எனது ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா?

* சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் பள்ளிக்குழந்தைகளை தீவிரவாதிகள் கொண்டபோது பாகிஸ்தான் கொடியை முகப்பு படமாக வைக்க சொல்லி பேஸ்புக் பிரச்சாரம் செய்ததா?
 

ரொம்ப குழப்பமா இருக்கு.. உருப்படியான பதில் இருந்தா சொல்லுங்க மக்களே!!

நிதிஷ்குமாருக்கு வக்காலத்து வாங்கும் சுப.வீ

தொலைக்காட்சி விவாதங்களில் பீகார் பற்றிய பேச்சு வரும்போது நிதிஷ்குமாரை இந்துத்வ எதிர்ப்பாளராக காட்ட அதிகம் முயற்சி செய்கிறார் அய்யா சுப.வீரபாண்டியன்.

குஜராத் கலவரத்தை ஆதரித்தது, பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது, மோடியை வளர்ச்சி நாயகனாக பீகாரில் காட்டியது, பீகாரில் பாஜக காலூன்ற வழிவகை செய்தது என அவரின் இந்துத்வ சார்பு பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பின்னர்தான் பாஜக கூடாரத்திலிருந்து வெளிவந்தார் நிதிஷ். ஆக அவர் மோடி எதிர்ப்பாளர்தான் தவிர பாஜக எதிர்ப்பாளரோ, இந்துத்வ எதிர்ப்பாளரோ அல்ல.

நிதிஷ்குமார் போலத்தான் நம்மூரு திராவிடக் கட்சிகளும் இந்துத்வ எதிர்ப்பு என்கிற பெயரில் அட்டைக்கத்தி வீசுவார்கள். ஆனால் திரைக்குப் பின்னால் பாஜகவுடன் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

திராவிடக் கட்சிகளின் இந்த போலித்தனத்தை மூடி மறைக்கத்தான் நிதிஷுக்கு வக்காலத்து வாங்குகிறார் சுப.வீ.
எக்காலத்திலும் பாஜகவை எதிர்த்து வரும் லாலுபிரசாத் தான் பாராட்டப்படவேண்டியவர், நிதிஷ் அல்ல.

திங்கள், 26 அக்டோபர், 2015

செயல்படாத பிரதமரும், செய்யப்படும் விளம்பரமும்


வெளிநாடுகளில் நிலநடுக்கம் வந்தால், வெள்ளப் பெருக்கு வந்தால், தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றால் அடுத்த சில நிமிடங்களில் இந்தியப் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு போடுகிறார். கிரிக்கெட் போட்டி, பக்கத்துக்கு நாட்டு தேர்தல் என அனைத்துக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போடுகிறார். 
 
அதன் மூலம் தன்னை ஒரு செயல்படும் பிரதமராகக்(Active PM) காட்டிக் கொள்கிறார். மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் இதனைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். நாட்டைக் காக்க ரட்சகர் வந்துவிட்டார் என நம்புகிறார்கள்.

ஆனால் ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டால், உபியில் மாட்டுக்கறி சாப்பிட்டவர் அடித்துக் கொல்லப்பட்டால்,
அரியானாவில் தலித் குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்டால், நாடு முழுக்க மதவாத பாசிஸ்டுகள் மதவெறிப் பேச்சுக்களை பேசும்போதிலும் பிரதமர் மோடி டிவிட்டரில் கூட வாயைத் திறப்பதில்லை.
மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் "இதுக்கெல்லாம் பிரதமர் பேச வேண்டுமா?' என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இதன்மூலம் ஒரு போலியான தேசபக்தி வளர்த்தெடுக்கப்படுகிறது. அதில் கூட வருத்தம் இல்லை.
ஆனால் மனிதம் சாகடிக்கப்படுகிறது.
"எவன் எங்கு செத்தால் நமக்கு என்ன? நாம 'டிஜிட்டல் இந்தியா' படத்தை ப்ரோபைல் படமா வச்சிட்டு அடுத்த வேலையைப் பார்த்துட்டு போவோம்" என்கிற மோசமான மனநிலை உருவாக்கப்படுகிறது. அதில்தான் வருத்தம்.

புதன், 14 அக்டோபர், 2015

ரவீந்திரநாத் தாகூரும் நம்மூரு எழுத்தாளர்களும்

1915-இல் ரவீந்திரநாத் தாகூருக்கு பிரிட்டன் அரசால் "நைட்வுட்"(Knightwood) என்னும் பட்டம்/விருது வழக்கப்படுகிறது.

அதே பிரிட்டன் ஏகாதிபத்தியம் 1919-இல் ஜாலியன்வாலாபாக்கில் இந்தியர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது.
உடனே தனக்கு அளிக்கப்பட்ட விருதை பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் மூஞ்சியில் வீசி எறிந்தார் ரவீந்திரநாத் தாகூர்.

"விருதை திரும்ப வழங்குவது என்பது அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம்" என்பது இலக்கியத்துறையில் நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூருக்கு தெரிந்திருந்தது.

ஆனால் இங்கே உள்ள சில லோக்கல் எழுத்தாளர்களுக்குப் புரியாமல் போனது எந்த வியப்புமில்லை. நியாயத்தின் பக்கம் நின்றுப் பேசாமல் பொதுப்புத்தியைப் குளிர வைக்கப் பேசும் இவர்களிடம் வேறு என்னத்த எதிர்ப்பார்க்க முடியும்??

இந்தப் போராட்ட வடிவத்தைக் கேலி செய்யும் ஜெயமோகன்களும், அபிலாஷ்களும் வேறு போராட்ட வடிவங்களை சொல்லித் தந்து இந்த சமூகத்திற்கு வழிகாட்டுவார்களாக!!!