திங்கள், 11 பிப்ரவரி, 2013

உமர் அப்துல்லாவின் கொலைவெறி!

ராஜீவ்காந்தி, பியாந்த் சிங் கொலையாளிகள் வரிசையாக தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிலையில், அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கிலிட்டது ஏன் என காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.


அப்சல் குருவை குறிவைத்து தூக்கில் போடவில்லை என்பதை காஷ்மீர் இளைஞர்களுக்கும், உலகத்தாருக்கும் நிருபிக்க வேண்டிய கடமை நீதித்துறைக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. ராஜீவ்காந்தி மற்றும் பியாந்த் சிங் கொலையாளிகளின் தூக்கு தண்டனை குறித்து பாஜ தலைவர்கள் மவுனமாக இருப்பது ஏன்? இவ்வாறு உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் சொல்வது எப்படி இருக்குது தெரியுமா: "என் வீட்டில் மட்டும் எழவு விழுந்து விட்டதே! ஊரில் மத்தவன் எல்லாம் நல்லா இருக்குறானே!!" என்று வன்மத்தோடு புலம்புவது போல உள்ளது.

அப்சல் குரு தூக்கு விசயத்தில் இந்தியாவின் பாசிசம் வெளிப்பட்டுள்ளது என்பது அறிந்ததே! சட்டம் தன் கடமையை சரிவர செய்யவில்லை என்பதும் அறிந்ததே! கண்டிப்பாக அது கண்டனத்துக்குரியதே!

அதற்காக பரிகாரமாக இன்னும் உயிர்களை எடுக்க வேண்டும் என சொல்வது எப்படி நியாயம் ஆகும்? அதுவும் மக்களை,ஊடகங்களை, பாஜக ஆகியவற்றை   உசுப்பேற்றி விடுவது என்ன காரியம்??

உமர் அப்துல்லா மட்டும் இந்த கொலைவெறி பிடித்து அலையவில்லை. Times Now, CNN IBN போன்ற ஊடகங்களும் இதே கொலைவெறியில் மக்களை உசுப்பேற்றும் பணியில் இறங்கியுள்ளன.

ராஜீவ் கொலை விசாரணையில் உள்ள பல ஓட்டைகளை ஏன் இந்திய ஏகாதிபத்தியம் மூடி மறைக்கிறது? அதை பற்றி  உமர் அப்துல்லாவும், ஊடகங்களும் ஏன் வாய் திறப்பதில்லை? பாராளுமன்ற தாக்குதல் வழக்கிலும் பல சர்ச்சைகள் உள்ளனவே! அதை பற்றியும் ஏன் வாய் திறப்பதில்லை?

"இந்திய ஏகாதிபத்தியம் முக்கிய குற்றவாளிகளை கொன்றோ, (தப்பிக்கவோ) விட்டுவிட்டு அப்பாவிகளை உள்ளே தள்ளி உண்மைகளை மறைத்துவிடும் என்பதே இந்த வழக்குகள் நமக்களிக்கும் சேதி போலும்." - இக்பால் செல்வன்

5 கருத்துகள்:

  1. சகோ.குருநாதன் ....

    உமர் அப்துல்லாவின் இந்த கேள்வி அனைவரின் உள்ளத்திலும் எழுந்தே உள்ளது..! அதற்காக இது கொலை வெறியாகாது..! பல பேரு வரிசையாக ஆசிரியரின் அடிக்காக வரிசையில் நிற்கும் போது இடையிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு சமூக மாணவர்களை மட்டும் அடித்தால் , அந்த ஆசிரியரின் யோக்கியதை என்னவாக இருக்கும்..? இந்த இடத்தில நாம் மற்றவர்கள் எல்லாம் இருக்கையில் ஏன் இப்படி இடையில் இருந்து குறிப்பாக ஒரு சமய மாணவர்களை மட்டும் குறிப்பாக அடிக்கிறீர்கள் என்று கேட்டால் அது எப்படி அடுத்தவரையும் அடிக்க சொல்வது போன்றதாகும்....!

    இங்கு ராஜீவ் வழக்கு பிரபலமாக இருப்பதால் அதை கூறியிருக்கலாம்..மற்றபடி 2001 முன் எத்தனையோ மரணதண்டனைகள் நிலுவையில் உள்ளது தானே..! 2000 ல் தர்மபுரி பேருந்து எரிப்பு ,வேளாண் கல்லூரி மாணவிகள் மூவரை பலி கொண்ட பஸ் எரிப்பு வழக்கில் இன்னும் தூக்கு வழங்கப்பட வில்லையே..??

    இன்னும் சொல்ல போனால் இந்த கேள்வி ஒவ்வொரு நன் மக்களின் உள்ளத்திலும் வரவேண்டும் ..! பத்து வருசமா இல்லாத அவசரம் இப்போது மட்டும் ஏன்..? நிச்சயம் இது கடைந்தெடுத்த அயோக்கிய தனம்..! முஸ்லிம்களை மட்டும் தூக்கிட்டு சங்பரிவாரங்களை திருப்தி படுத்த நடத்தும் சதி...! இதில் இ.செ சிந்தனையுடன் குருநாதனும் ஒன்றாகி விடக்கூடாது என்பதே நம் அவா..!!!

    நன்றி !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூவரையும் தூக்கிலிட்டு அரசியலற்றத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது மறைமுகமாக கொலைக்கு தூண்டுதல் ஆகும்.
      அயோக்கியத்தனத்தை கண்டிக்க வேண்டும்.
      அதே நேரத்தில் பிற உயிர்களையும் எடுக்க வேண்டும் என்பது தவறே!

      நீக்கு
    2. ஒரு சமய மாணவர்களை மட்டும் குறிப்பாக அடிக்கிறீர்கள் என்று கேட்டால் அது எப்படி அடுத்தவரையும் அடிக்க சொல்வது போன்றதாகும்....!

      //தோழர், இங்கே உமர் அப்துல்லா அப்படி கேட்கவில்லை. ராஜீவ்காந்தி, பியாந்த் சிங் கொலையாளிகளை தூக்கிலிட்டு அரசியலற்றத் தன்மையை நிரூபிக்க கோருகிறார் .

      நீக்கு
  2. இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்.?

    தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம். யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம். பெண்களை கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் .

    புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் .

    இன்னும், இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் .

    யாரும் கேட்க மாட்டார்கள் .

    இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது .

    CLICK >>>>>
    காஷ்மீர். காஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. காஷ்மீரிகளின் வார்த்தைகளில்….


    .

    பதிலளிநீக்கு