புதன், 13 மார்ச், 2013

உருப்படாத முட்டாள் கூட்டம்

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

தனி ஈழம், சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பு என உயர்ந்த குறிக்கோள்களுடன் மாணவ சமுதாயம் களத்தில் இறங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி.


இதில் விசேஷம் என்னவென்றால் இதுவரை எந்தவொரு இந்திய ஊடகங்களும் மாணவர்களின் இப்போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதுவும் மகிழ்ச்சியே! இந்திய ஊடகங்கள் ஏன் தமிழ்நாட்டு விசயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்?

தமிழ்நாட்டு ஊடகங்களும் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கவில்லை. செய்திகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். திரித்து வெளியிடுகிறார்கள்.

தமிழக அரசு பற்றி சொல்லவே தேவையில்லை. போராட்டத்தை அடக்க பாசிச செயல்களில் ஈடுபடுகிறது. (ஆத்தா! கருணாவை மேடையெல்லாம் காரித் துப்புகிறீர்களே! கடிதத்தை தவிர நீங்கள் கிழித்தது  என்ன? )

ஆனாலும் மாணவர்களின் போராட்டம் விரிவடைகிறது. இதற்கு இணையங்கள் பெரும் பக்கபலம்.

விசயத்துக்கு வருவோம்.
பல இணையங்களில் சில அதிமேதாவிகள் நஞ்சைக் கக்குகின்றன. இந்த அதிமேதாவிகள் தமிழர்கள்தானா? அல்லது சிங்களர்களா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது. 
எழுத்து வழக்கைப் பார்க்கும்போது நம்ம தமிழ்நாட்டில் உள்ள அதிமேதாவிகள்தான் என்று கருதுகிறேன்.

================================================================
அவர்கள் கக்கிய நஞ்சுகள் கீழே:

"இவர்கள் எல்லாம் நேற்று பிறந்து இன்று மாணவர்கள் ஆனவர்களா? இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபொலுதும் இவர்கள் மாணவர்களாக இருந்தவர்கள்தானே அப்போது போராட வேண்டியதுதானே. இன்று எங்கிருந்து இந்த திடீர் ஞானோதயம்."

அட கண்ணுங்களா.... பரிட்சை நெருங்குகிறது.... உங்க அப்பன் , ஆத்தா , கஷ்டப்பட்டு சம்பாதித்து, கல்லூரிக்கு அனுப்பினா, கேட்பார் பேச்ச கேட்டுட்டு இப்படி ஹாயா உண்ணாவிரதம் இருந்தா எப்படி? உங்களுக்கு உண்மையிலேயே இனஉணர்வு அல்லது, பச்சாதாபம் இருந்தா 4 வருடத்துக்கு முன்னால் அல்லவா போராடியிருக்க வேண்டும்...  

 இது போன்ற போராட்டங்களால் ஒரு விளைவும் ஏற்படாது..இவர்களுக்கு தெளிவான கோட்பாடுகள் இல்லாமல் உண்ணாவிரதம் இருப்பது யார் துண்டுதல் பெயரில்..  
 
முதல படிக்குற வழிய பாருங்க.. இந்த அரசியல்வதீங்க கூட சேராதீங்க  
நிறைவேற முடியாத ஒரு கோரிக்கை . இதற்கு ஒரு போராட்டம் தேவையா ? என்று சிந்திக்க வேண்டும். முடிவு எடுக்க வேண்டயது இலங்கை இந்தயாவில் போராடி என்ன பயன். படிப்பு வீனா போக நல்ல வழி.


தூண்டிவிட்ட சீமான் வைகோ நெடுமாறன் உதயகுமார் போன்றவர்களை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச்சொல்லுங்கள். அதுவே மாணவர்களாகிய நீங்கள் தமிழ் நாட்டுக்கு செய்யக்கூடிய அளப்பெரிய சேவையாகும்.

தமிழீழம் அமைவது இருக்கட்டும்.... முதலில உங்கள் தமிழ் நாட்டில இருக்கிற பிரச்சனைகளை தீர்க்க போராட்டம் நடத்துங்க...
 ===============================================================
இதுபோன்று பல நச்சுக்கருத்துகளை பரப்பி போராட்டத்தை மழுங்கடிக்கவே கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம். இந்தப் போராட்டம் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த போராட்டம் நடந்தாலும் அதை விமர்சிப்பதற்காக இப்படி  உருப்படாத முட்டாள் கூட்டம் கிளம்புகிறது.
ஒருசிலர் வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்கே தமிழன் நடுத்துற போராட்டத்தை அவமதிக்கிறார்கள்.

ஒருநாலாச்சும் போராட்டக் களத்திற்கு வருவார்களா? வரவேமாட்டார்கள். வராமல் இருந்தாலும் சரி, ஏன் தேவையற்றக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும்?? ஒரு கம்யுட்டரும் இணைய இணைப்பும்  வைத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு நச்சுக்கருத்துகளை பரப்புவதில் இந்தக் கூட்டத்திற்கு அப்படி என்ன ஆனந்தம்??

இந்தக் கூட்டத்திற்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.
இது இனத்திற்காக இனம் நடத்தும் போராட்டம்.
களத்திற்கு வா.
இல்லையேல் களத்திற்கு வந்தவர்களை ஆதரி.
பிடிக்கவில்லையென்றால் வந்து எதிர்ப்போராட்டம் நடத்து.
அதைவிட்டு தேவையில்லாமல்  நச்சுக்கருத்துகளை பரப்பாதே!
போராட்டத்தை மழுங்கடிக்கப் பார்க்காதே!!

"போராடாதவன் ஜடம்"- தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் 
           

5 கருத்துகள்:

  1. வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் எனும் கூட்டம்
    அவன் இருந்தும் பிணமாவான்
    இவன் இறந்தும் விதையாவான்

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. உங்களது கருத்துக்கு சாதகமான கருத்துக்களை மட்டும் தான் வெளியிடுவீர்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக இல்லை. முதலில் பின்னூட்டங்கள் வெளிப்படையாக இருந்தன.
      யாரோ ஒருவர் ஆபாசமாகவும் தேவையற்ற பின்னூட்டங்களும் தொடர்ந்து இட்டு வருகிறார். அதைத் தடுக்கத்தான் 'After Approval' முறையை தேர்வு செய்தேன்,.

      நீக்கு